Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் மீண்டும் தனது பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்படும் சலுகைகள் பலவற்றை அரசாங்கம் குறைத்துள்ளமை குறிப்பிடத்க்கது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைழய 60ஆக அரசாங்கம் குறைத்துள்ளது.

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் மகிந்த | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் மீண்டும் தனது பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்படும் சலுகைகள் பலவற்றை அரசாங்கம் குறைத்துள்ளமை குறிப்பிடத்க்கது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைழய 60ஆக அரசாங்கம் குறைத்துள்ளது.

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் மகிந்த | Virakesari.lk

புலிகள் இல்லை மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது

புலிகள் இருக்கிறார்கள்..பயங்கரவாதச் சட்டம் தேவை....இலங்கை எங்கு போகிறது

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள் இருந்தால் நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள் ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் அரசாங்கம் வலியுறுத்தல்

25 JAN, 2025 | 05:29 PM
image
 

(எம்.மனோசித்ரா)

மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். 

மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடல் மற்றும் எழுச்சி தொடர்பான தகவல்கள் அவர் வசம் காணப்படுமாயின் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை (25)  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பினை அதிகரிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கு நாட்டில் சிறந்தவொரு வழக்காக அமையும்.

நாட்டின் பாதுகாப்பு சபை கூட அறியாத தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரிடம் காணப்பட்டால் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவதே சிறந்ததாகும். அவை தேசிய பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையும்.

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சபைக்கு அப்பாற்பட்ட தகவல்கள் அவர்களிடம் காணப்பட்டால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 534 சதுர அடி மாளிகையிலேயே வசிக்கின்றார். ஒரு ஏக்கரும் 13 பேர்ச் கொண்ட இடமாகும். 

அது அரசாங்கத்தின் மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கமைய 3357 மில்லியன் ரூபா பெறுமதியுடையதாகும். விஜேராமமாவத்தையிலுள்ள அந்த இல்லம் 46 இலட்சம் மாதாந்த வாடகை பெறக்கூடியது என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இந்த இல்லத்தின் மீள்புனரமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 472.5 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ளது.

2021இல் 252 மில்லியன் ரூபாவும், 2022இல் 181.5 மில்லியன் ரூபாவும், 2023இல் 38.7 மில்லியன் ரூபாவும் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது. இந்த வீட்டில் மொத்த மதிப்பீட்டு பெறுமதியில் இந்த செலவும் சேர்க்கப்பட வேண்டும். தற்போதும் அரசாங்கம் என்ற ரீதியில் பாரியதொரு செலவை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. 

தொடர்ந்தும் இவ்வாறு அநாவசியமாக பாரியதொரு செலவை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் அரசியலமைப்பில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இல்லம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

நாமறிந்த அரசியலமைப்பில் அவ்வாறானதொரு விடயம் குறிப்பிடப்படவில்லை. சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களிடம் அரசியலமைப்பில் எந்த உறுப்புரையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கேட்க விரும்புகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/204879

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடுத்து எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுகிறது அரசு; நாமல் குற்றச்சாட்டு

நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுவதற்கே இந்த அரசாங்கம் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக குற்றம்சாட்டியுள்ளார்.

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில், அப்போது அங்கு விஜயம் செய்திருந்த நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் தான் என்றாலும், அதற்கான விலையை தனது சகோதரர் கொடுக்க வேண்டியிருந்தது என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

”ஏன் இதைச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்க வேண்டாம்.”

அதனை பிரதி பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள்.ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் செலவிட வேண்டிய நேரத்தை, அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதற்கு அரசாங்கம் பயன்படுத்துகிறது.

நெடுஞ்சாலை வழியாக பெலியத்த வரை வந்து அவரைக் கைது செய்தது வீண். எங்களை வர சொன்னால் நாங்கள் வருவோம் அல்லவா.எரிபொருளை நிரப்பிவிட்டு பெலியத்தவுக்குச் சென்றது வீண்தானே என்றார்.

https://thinakkural.lk/article/314912

  • கருத்துக்கள உறவுகள்

டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே என்னை பழிவாங்குகிறார்கள்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கவலை

உத்தியோகபூர்வ இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந் தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

இன்று பலர் கடந்த காலத்தை மறந்துவிட்டதாகக் கூறிய ராஜபக்ஷ தனது உத்தரவின் பேரில் செயல்பட்டு, விடுதலைப் புலிகள் நாட்டிற்கு ஏற்படுத்த முயன்ற பெரும் அழிவைத் தடுத்தவர்கள் முப்படைகளின் வீரமிக்க வீரர்கள் என்றும் கூறினார்.

மத்திய வங்கி குண்டு, தெஹிவளை ரயில் குண்டு, எயார் லங்கா குண்டுவெடிப்பு, மற்றும் கொழும்பு மீது விமானங்கள் மூலம் குண்டுவீச்சு. அந்த நேரத்தில் ஒவ்வொரு வாரமும் கிராமங்களுக்கு வீரர்களின் உடல்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் எத்தனை வந்தன என்பதை ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் நினைவு கூர்ந்தார்.

மேலும் முன்னாள் இந்தியத் தலைவர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச,

அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுத்தது தனது அரசாங்கம்தான் என்றும் மஹிந்த சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மிகவும் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்பை இழந்ததற்கு பொதுமக்களின் எதிர்வினையை வரவிருக்கும் தேர்தல்களில் அரசாங்கம் அறிய முடியும் என்றும் கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அல்லது உத்தியோகபூர்வ இல்லம் குறித்து ஒருபோதும் புகார் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/314947

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.