Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

china-3-300x211.jpg

சீனாவின் Three Gorges Dam அணையானது சுமார் 40,000 தொழிலாளர்களால் கட்டப்பட்டது. இந்த மெகா திட்டத்தின் பணிகள் 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய இந்த அணையை 2011ஆம் ஆண்டு, 31 மில்லியன் டாலர்கள் செலவில் சீனா கட்டியது.

2005ஆம் ஆண்டில், அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான நாசா, Three Gorges Dam-ன் மிகப்பெரிய நீரின் அழுத்தத்தால் உலகம் முன்பை விட சற்று தாழ்ந்துவிட்டது என்று கூறி உள்ளது. அதுமட்டுமின்றி, அணையில் ஏற்பட்ட மிகப்பெரிய நீர் அழுத்தம் பூமியின் இயக்கத்தின் வேகத்தை மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், நாளின் நீளமும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அணை சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சர்வதேச அரசியலிலும் உலகப் பொருளாதாரத்திலும் செல்வாக்கை செலுத்தவும் வழிநடத்தவும் சீனா செயல்படுத்திய பல பெரிய திட்டங்களில் இந்த அணையின் கட்டுமானமும் ஒன்றாகும். Three Gorges Dam பூமியின் நீரோட்டம் மற்றும் வடிவத்தையே மாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய நதி யாசி (Yasi). சீனாவின் மேற்குப் பகுதியில் மலைகளால் சூழப்பட்ட இந்த ஆறு கிட்டத்தட்ட முழு சீனாவிலும் பாய்ந்து தென் சீனக் கடலில் கலக்கிறது. 1911ல் பெய்த அதிகனமழை காரணமாக யாங்சே ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததாகவும், இந்த பயங்கர வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 2,00,000 பேர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.

1931ல், சீனாவில் மற்றொரு பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் விளைவுகள் இன்னும் மோசமாக இருந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 3 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். இதையடுத்து வெள்ளத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் வகையில், சீன அரசு இந்த விலையுயர்ந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.

இந்த அணையின் கட்டுமானத்தில் 2 கோடியே 80 லட்சம் யூரிக் மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில் இந்தளவு கான்கிரீட்டை ஒரு முறை ஊற்றினாலே, சுவிட்சர்லாந்து முழுவதும் இரண்டு அடி கான்கிரீட்டின் கீழ் மூழ்கிவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அணையில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைத்திருப்பதால் பூமி மெதுவாக சுழல ஆரம்பித்துள்ளது. 0.06 மைக்ரோ விநாடிகள் வேகம் குறைந்ததால், உலகளவில் நாளின் நீளம் 0.06 மைக்ரோ விநாடிகள் அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, சீனா இயற்கை பேரழிவு வெள்ளத்தை சமாளிக்க முடியும். அதே நேரத்தில், இந்த அணையின் மூலம் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வறட்சியை சமாளிக்க அவசியம் ஏற்படும் போது, சீனா இந்த அணையின் மூன்று நீர்த்தேக்கங்களை திறந்து விடுகிறது.

https://thinakkural.lk/article/314915

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய செய்தி தினக்குரலுக்கு இப்பதான் கண்ணில் பட்டுள்ளது! 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாலி said:

இது பழைய செய்தி தினக்குரலுக்கு இப்பதான் கண்ணில் பட்டுள்ளது! 

 

உண்மை தான் அண்ணை, யாழில் இணைக்கப்பட்டதா என ஒவ்வொரு சொற்களாக தேடியும் கிடைக்காததால் இணைத்தேன். எங்கோ வாசித்த நினைவும் உள்ளது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.