Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்;

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்ததாகவும் இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து, ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ளதால் மீனவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

https://thinakkural.lk/article/314941

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் மீது  இலங்கை கடற்படையினர்  துப்பாக்கி பிரயோகம்!

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்!

யாழ்-பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.

இதன்போது இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்தார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1418480

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு : இந்தியா கடும் கண்டனம்

Published By: DIGITAL DESK 3   28 JAN, 2025 | 05:15 PM

image
 

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை கைது செய்த போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை  மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, 13 மீனவர்களில் இருவருக்கு படுகாயங்களும் மூவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்திய துணைத்தூதவர் சாய் முரளி காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து, மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில்  இன்றையதினம்  புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விடயம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வாழ்வாதார பிரச்சினை என்பதால் மனிதாபிமான முறையில் மீனவர்களின் பிரச்சினையை கையாள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்விடயத்தில் இரு  அரசாங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/205144

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் தடை செய்யப்பட ரோலர் மீன் பிடியை கொண்டு வடகிழக்கு கடலில் அடாத்தாக மீன் பிடிப்பவர்களை தமிழக  மீனவர்கள் என்று அழைப்பதே பிழையானது. அவர்களை ரோலர் மீன் வள கொள்ளைகாரர்கள் என்று ஊடகங்கள் குறிப்பிட வேணும் .

ஏனென்றால் பலருக்கும் புரிவதில்லை தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையை கொண்டு அவர்களின்  சொந்த கடல் பகுதியையும் நாசம் பண்ணி கடைசியில் வடகிழக்கு மீன்கள் உருவாகும் கருவறை கண்ட மேடைகள் மீது ரோலிங் அடிப்பதால் வடகிழக்கு தமிழர்களின் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள் இப்படி சொத்தை நாசம் பண்ணுபவர்களை எப்படி அழைக்கவேணும் ?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு; புதுச்சேரி அமைச்சர் கடும் கண்டனம்

29 JAN, 2025 | 09:39 AM
image
 

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தது என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்மாணிக்கவேல், தினேஷ், கார்த்திசேன், செந்தமிழ் உள்ளிட்ட 13 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

கோடியக்கரைக்கு கு தென்கிழக்கு கடலில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்தாதாக கூறி படகை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த இரண்டு மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

படகின் உரிமையாளர் ஆனந்தவேலுவின் படகு ஏற்கனவே இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மற்றொரு புதிய விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி விசைப்படகை மீட்டு தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்றொரு படகிலிருந்த மீனவர் தாமரைச்செல்வன் இது குறித்து தெரிவித்த போது "இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் படகு ஒன்றின் மீது  துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதில் இரண்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இது குறித்த தகவலை தெரிவிக்க தாங்கள் கரை திரும்பியதாகவும், அப்போது இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்க முயற்சித்த போது அவர்கள் அந்த தகவலை ஏற்கவில்லை எனவும் மனக்குமுறலுடன் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தது என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இலங்கை கடற்படையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், “காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது துரதிஷ்டவசமானது, இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கதக்கது” என்றார். 

 

கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பது என்பது அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது, இது போன்று விவகாரங்களில் இலங்கை கடற்படை நடந்து கொள்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார்.

மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளார் மேலும் இலங்கை தூதரகத்தின் மூலம் 13 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். 

 

துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் லட்சுமி நாராயணன்..

இலங்கை கடற்பகுதியில் அத்து மீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்ய வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் கடலில் மீன் பிடிக்கும்போது தொடர்ந்து இலங்கை கடற்படை இதுபோன்று நடந்து கொள்வதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமுடன் மீன்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

https://www.virakesari.lk/article/205184

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு; கடும் கண்டனத்தை வெளியிட்ட இந்தியா!

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு; கடும் கண்டனத்தை வெளியிட்ட இந்தியா!

செவ்வாய்கிழமை (28) அதிகாலை 13 இந்திய மீனவர்கள் சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவுக்கு அருகேயுள்ள கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்ய முயன்றபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

காயமடைந்த மீனவர்கள் தற்சமயம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மூன்று மீனவர்களும் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளனர்.

மேலும், மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றர் என்றும் அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் தற்காலிக உயர்ஸ்தானிகரை வரவழைத்து, சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடமும் எழுப்பியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரக் கவலைகளை மனதில் கொண்டு, மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளை மனிதாபிமானமாக கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது.

எந்தச் சூழ்நிலையிலும் பலத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

4.jpg

1.jpg

இலங்கை கடற்படையின் அறிக்கை

2025 ஜனவரி 27, அன்று, யாழ்ப்பாணத்தின் வெல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஏராளமான இந்திய மீன்பிடிக் கப்பல்களை வடக்கு கடற்படைக் கட்டளை அவதானித்து.

அந்த கட்டளைக்கு சொந்தமான கடற்படையின் கப்பல்களை அனுப்புவதன் மூலம் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் எல்லையில் இருந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு குறித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு மீன் வளங்களை சேகரித்துக்கொண்டிருந்த பதின்மூன்று (13) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது செய்யவிருந்த போது, கடற்படையினரின் சட்ட உத்தரவை மீறியதாலும், மேலும் கலவரமான நடத்தையாலும் கடற்படைக் குழுவொன்று கப்பலில் ஏறியுள்ளது.

கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல், வழக்கமான பணிகளுக்கு இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக கையாண்டதால், இந்திய மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது, கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றது.

கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

கடற்படையினரால் இரு மீனவர்களுக்கும் அடிப்படை முதலுதவிகளை வழங்கியதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என யாழ்ப்பாணம் வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் எஞ்சிய பதினொரு (11) மீனவர்கள் இன்று (2025 ஜனவரி 28,) காலை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

https://athavannews.com/2025/1418632

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of fishing, boat, sail and text that says 'INDIA C INDIA T morning 志 COAST INDIAN GUARD INDIAN NAVY Puccep 31.01.2025. さL'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.