Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரிசியின் அரசியல்

எம்.எஸ்.எம்.ஐயூப்

தற்போது நாட்டில் நிலவும் அரிசி பிரச்சனை தமது காலத்தில் உருவானது அல்ல, அது நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுவது உண்மை ஆயினும் அதை தீர்ப்பது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சாதாரணமாக எந்த ரகத்திலாயினும் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 200 ரூபாவுக்கு குறைவாகவே இருந்தது. ஆனால் அத் தேர்தலுக்குப் பின்னர் சில சந்தர்ப்பங்களில் அவ்விலை 300 ரூபாவுக்கு மேலாகவும் அதிகரித்தது. சந்தையில் அரிசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடே இதற்குக் காரணமாகும்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாரிய மற்றும் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாலை உரிமையாளர்கள் போதிய அளவு அரிசியை சந்தைக்கு வழங்க இணக்கம் தெரிவித்தனர். அதற்கு முன்னர் 220 ரூபாவாக இருந்த நாட்டரிசியின் கட்டுப்பாட்டு விலையை 230 ரூபாவாக உயர்த்தவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அவ்வாறு போதிய அளவு அரிசியை சந்தைக்கு விடுவிக்கவில்லை. இதன் காரணமாக அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தது. எனினும் விலை ஏற்றத்தை தடுக்க முடியாமல் போய்விட்டது.

அனுர குமார பதவிக்கு வந்து ஒரு வாரத்தில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றால் இந்த தட்டுப்பாட்டுக்கு தற்போதைய அரசாங்கம் காரணம் அல்ல தான்.  ஆயினும் அரசாங்கமே இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். அதன் பிரகாரம் 70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் இறக்குமதிக்கான அனுமதி காலம் ஜனவரி 10 ஆம் திகதி முடிவடைந்த போது 168,000 தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. பற்றாக்குறையைப் பற்றிய போதிய தகவல்கள் இல்லாமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஒரு கிலோ கிராம் சுமார் 150 ரூபாவுக்கு சற்று குறைந்த விலைக்கே அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கு அரசாங்கம் 65 ரூபாய் இறக்குமதி வரி விதிக்கிறது. இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் சுமார் ஒரு மாதத்துக்குள் அரசாங்கம் 1,000 கோடி ரூபாய் வரியாக சம்பாதித்துள்ளது. தனியார் துறைக்கு 90 சதவீதமான அரிசியை இறக்குமதி செய்ய இடமளித்ததற்கான காரணமும் வரி வருமானமாக இருக்கலாம். ஏனெனில் அரிசி இறக்குமதிக்காக ஒரு அரச நிறுவனம் மற்றொரு அரச நிறுவனத்திற்கு வரி செலுத்துவதன் மூலம் அரச வருமானம் அதிகரிக்க போவதில்லை.

இவ்வாறு வரி விதிக்காமல் குறைந்த விலையில் அரிசி விநியோகம் செய்யாது அரசாங்கம் தட்டுப்பாட்டை பாவித்து இலாபத்தை தேடுவதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், குறைந்த விலைக்கு இறக்குமதி அரிசி விற்பனை செய்தால் மக்கள் அதனையே நாடுவார்கள் என்றும் அதன் மூலம் தேசிய அரிசியின் விலையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு தேசிய விவசாயி பாதிக்கப்படுவார்  என்று அரசாங்கம் வாதிடுகிறது.

இலங்கை மக்களின் வருடாந்த அரிசி பாவனை 24 இலட்சம் மெற்றிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் கடந்த வருடம் நாட்டில் 45 இலட்சம் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் கூறினார். தேசிய மக்கள் சக்தியின் சில தலைவர்களும் ஆரம்பத்தில் அவ்வாறே கூறினர். புதிய நிலைமகளை கவனிக்கும் போது அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், கையிருப்பு, விநியோகம் மற்றும் ஏற்படப் போகும் தட்டுப்பாடு அல்லது மிகை போன்ற விடயங்கள் தொடர்பாக முறையான தரவுகள் அரச நிறுவனங்களிடம் இல்லை என்பது தெரிகிறது.

கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுடன் நடத்திய நேர்காணல் ஒன்றின் போது ஜனாதிபதி அனுர குமாரவும் தரவுகள் இல்லாமை அரிசி பிரச்சனையை தீர்ப்பதில் பெரும் தடையாக இருப்பதாக கூறினார்.

கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரச நிதிக் குழுக் கூட்டம் (Committee on Public Finance - CoPF) கூடிய போதும் இந்த தரவுகள் பற்றிய பிரச்சினை எழுந்தது. கூட்டத்தை அடுத்து கருத்து தெரிவித்த அக்குழுவின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நாட்டில் மதிப்பீட்டைப் பார்க்கிலும் பத்து இலட்சம் தொன் அரிசி குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் பெருமளவில் நெல்லை விவசாயிகளிடம் இருந்து  கொள்வனவு செய்து ஒரு பகுதியை அடுத்த அறுவடை காலம் வரை பதுக்கி வைத்திருக்கிறார்கள், அந்த அறுவடை காலத்தில் அந்த நெல்லின் அரிசியை சந்தைப்படுத்தி அரிசி விலையை குறைத்து அதை காட்டி அவர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்கிறார்கள், அதன் பின்னர் அந்த நெல்லின் அரிசியை மீண்டும் பதுக்கி அரிசி விலையை ஏற்றுகிறார்கள் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தொன்று இருக்கிறது. இது சரியாக இருக்கலாம்.

அரசாங்கம் இதை முறியடிப்பதாக இருந்தால் அரசாங்கத்தின் கையிருப்பில் நெல் அல்லது அரிசி இருக்க வேண்டும். அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை பதுக்கி செயற்கையாக விலையை ஏற்றும் போது அரச நெல் சந்தைப்படுத்தும் சபையின் கையிருப்பில் உள்ள அரிசியை சந்தைப்படுத்தி அச்செயற்கை விலை ஏற்றத்தை முறியடிக்க வேண்டும் என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.

ஆயினும் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் நெல் சந்தைப்படுத்தும் சபை மூலம் நெல்லை கொள்வனவு செய்யாமல் நெல் மற்றும் அரிசி சந்தைகளை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்துள்ளனர். அதற்காக அவர்கள் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் சன்மானம் பெற்றிருக்கலாம். 

இப்போது பெரும் போக நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் நெல் உற்பத்தியில் 65 முதல் 70 சதவீதம் வரையிலான அரிசி உற்பத்தி பெரும்போகத்திலேயே இடம்பெறுகிறது. எனவே, அரசாங்கம் இப்போதே அரிசி உற்பத்தி களஞ்சியப்படுத்தல், கையிருப்பு விநியோகம் போன்றவற்றின் தரவுகளை தயாரித்து இவ்வருட இறுதியில் ஏற்படக் கூடிய தட்டுப்பாட்டை எதிர்நோக்க தயாராக வேண்டும். இவ்வாறு அந்த தகவல்களை முறையாக கையாளப் போவதாகவே அரசாங்கம் கூறியுள்ளது.

அதேபோல், நீண்ட காலமாக நாடெங்கிலும் கைவிடப்பட்டு இருந்த 200க்கு மேற்பட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் இராணுவத்தினரால் சுத்தப்படுத்தபட்டுள்ளன. ஆனால் நெல் சந்தைப்படுத்தும் சபையின் அரிசி கொள்வனவு இன்னும் ஆரம்பமாகவில்லை. நெல்லுக்கான உத்தரவாத விலை ஒன்றை நியமிக்குமாறு சில விவசாயிகள் கோரிய போதிலும் அரசாங்கம் அதையும் செய்யவில்லை.

உற்பத்தி செலவுக்கு அதன் மூன்றில் ஒன்றை சேர்த்தே உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் எனவும் அது சுமார் 130 ரூபாவாகும் என்றும் கமநல துறை பிரதி அமைச்சர்  நாமல் கருணாரத்ன கூறியிருந்தார். அது போதுமானதல்ல என்று விவசாய சங்கங்கள் அதை நிராகரித்தன.

இதற்கிடையே தனியார் ஆலை உரிமையாளர்கள் ஒரு கிலோ கிராம் நெல்லை 80, 90 ரூபாய் போன்ற குறைந்த விலைக்கே தற்போது கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர். என்றும் அரசாங்கம் உடனடியாக உத்தரவாத விலையை அறிவிக்க வேண்டும் என்றும் சில பகுதிகளில் விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், உத்தேச உத்தரவாத விலையான 130 ரூபாவுக்கு அதிகமாக தனியார் வர்த்தகர்கள் தற்போது நெல் கொள்வனவு செய்வதாகவும் எனவே உத்தரவாத விலையை உடனடியாக அறிவித்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பிரதி அமைச்சர் கூறுகிறார். அதாவது அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யாதா?

இதற்கிடையே அரிசி ஆலை உரிமையாளர்கள் கிலோ கிராம் 170 ரூபாவுக்கு நெல் கொள்வனவு செய்வதாகவும் அதற்கு குறைவாக அரசாங்கத்துக்கு நெல்லை விற்க முடியாது என்றும் மற்றொரு விவசாய சங்கம் கூறியிருந்தது. ஐந்து கிலோ கிராம் நெல்லில் மூன்று கிலோ கிராம் அரிசியை பெற முடியும் என்று விவசாய அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது. அதன் படி 170 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்தால் அரிசியின் விலை 285 ரூபாவாகும் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்துச் செலவுகளுடன் அரிசி விலை 300 ரூபாவை தாண்டுவதை தடுக்க முடியாது. 130 ரூபாவுக்கு நெல் கொள்வனவு செய்யப்பட்டால் கட்டுப்பாட்டு விலையான 230 ரூபாவுக்கு அரிசி சந்தைக்கு வர முடியும்.

மற்றொரு பிரச்சினை என்னவென்றால் அரசாங்கம் நெல்லுக்கு 130 ரூபாய் உத்தரவாத விலையை நியமித்து கொள்வனவு செய்தால் அரிசி ஆலை உரிமையாளர்கள் அதை விட சற்று அதிக விலைக்கு நெல் கொள்வனவு செய்வர். உத்தரவாத விலைக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் கூற முடியாது. எனவே, அரசாங்கத்தின் நெல் களஞ்சியப்படுத்தும் திட்டம் தோல்வி அடையலாம். மீண்டும் அரிசி சந்தை ஆலை உரிமையாளர்களின் கையில் சென்றடையலாம்.

அரசாங்கம் நீர்ப்பாசனங்களை பராமரிக்கிறது, மானிய விலையில் உரம் வழங்குகிறது, வெள்ளம் அல்லது வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டால் நஷ்ட ஈடு வழங்குகிறது, விவசாயக் கடன் வழங்குகிறது. ஆனால், விவசாயிகள் இலாபத்தை கருதி தனியார் துறையினருக்கு நெல்லை விற்க விரும்புகின்றனர். அதனால் பின்னர் அவர்களே சுரண்டப்படுகிறார்கள். அரிசி பாவனையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒரு இடியாப்ப சிக்கலாகும். 29.01.2025

image_650b9d7625.jpg

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரிசியின்-அரசியல்/91-351115

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.