Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

15 Feb, 2025 | 10:49 AM

image

யாழ்ப்பாணத்திற்கு  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  இன்று சனிக்கிழமை (15)  விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடி இருந்தார்.

யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தொடர்ந்து இன்று சனிக்கிழமை (15) மாலை, சுழிபுரம், ஏழாலை  மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை (16) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4__4_.jpg

4__5_.jpg

00__1_.jpg

00__2_.jpg

  •  


https://www.virakesari.lk/article/206729

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் பிரதமர் தெரிவிப்பு!

யாழ்.மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் பிரதமர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று பிரதமர் ஹரினி அமரசூரிய விஜயம் செய்துள்ளார்.

இதன்போது அவர்  கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடமும்,கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன்  கலந்துரையாடிய  தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

அத்தோடு, கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் அவர் பார்வையிட்டிருந்தார்.

இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு பாடசாலை அதிபரால் நினைவுப் பரிசொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது எல்லோருக்கும் தெரிந்த விடயம் எனவும், யாழ்ப்பாண மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, பாடசாலை கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், தனியார் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்ததுடன், கல்வியின் ஊடாக சிறந்த பிரஜைகளை உருவாக்க வேண்டும் எனவும், அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும், பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1421528

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரதமர் வருகை தந்த தொல்புரம் மேடை வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமேடை.

பிரதமர் வருகை தந்தபோது சிறிது நேரம் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு

புதிய இணைப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய சுழிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ். சுழிபுரம், வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு | Harini Amarasuriya Visit To Jaffna Hindu College

குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு 

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனையடுத்து இன்று மதியம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஆசிரியர் கலாசாலையில் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்த பின்னர் பிரதமர் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு | Harini Amarasuriya Visit To Jaffna Hindu College

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீபவானந்தராஜா, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் மற்றும் கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

வடக்கிற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இன்று (15) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்துக்கல்லூரி அதிபருடன் கலந்துரையாடிய அவர் பாடசாலை கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு (Kopay Teacher's College) விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் சந்திப்பு 

அதன் பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு | Harini Amarasuriya Visit To Jaffna Hindu College

மேலும் இன்று (15) மாலை, சுழிபுரம், ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

நாளை (16) கிளிநொச்சி (Kilinochchi) மற்றும் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டங்களுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/harini-amarasuriya-visit-to-jaffna-hindu-college-1739597077#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கபடாத வலி வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேள்வி கேட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பிரதமர் ஹரினி அமரசூரிய பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு ஏழாலை ஏழு கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் கூடிய குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான கபிலன் உள்ளிட்ட சிலர் உரையாற்றினர்.

இறுதியாக பிரதமர் ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் உரையாற்றினார்.

உரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமலாக்கப்பட்டோர் விவாகரம் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில் பிரதமர் உரையாற்றி விட்டு மேடையில் இருந்து இறங்கி மக்களை சந்திக்க அருகில் வந்தார்.

இதன்போது பிரதமரை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக பேச காத்திருந்த காணி உரிமையாளரொருவர் பலாலி பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பது தொடர்பாக தனது ஆதங்கத்தை பிரதமரிடம் நேரடியாக தெரிவித்தார்.

இதன்போது பிரதமர் ஏனையவர்களுடன் பேச சென்றபோது குறித்த காணி உரிமையாளர் உங்கள் அரசியலுக்காக எங்களை பயன்படுத்த வேண்டாம் என தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தெரிவித்தார்.

இதன்போது பிரதமரை சூழ்ந்திருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த காணி உரிமையாளரை அங்கிருந்து அகற்றியதுடன் அதனை காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பிரதமர் ஹரினி அமரசூரிய பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

https://www.samakalam.com/யாழ்ப்பாணத்தில்-பிரதமர்/

  • கருத்துக்கள உறவுகள்

479718887_595189813393746_91355798895830

அன்று பிரதமர்...

அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை

உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளையும் கல்வி அமைச்சரும்

பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இன்று பிரதமர்...

யாழ்ப்பாணம் வந்த பிரதமர் யாழ். இந்துக் கல்லூரியில்...

Anusha Nadarajah

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.