Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

நக்கீரன்

தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்!


தமிழீழத் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்தெறிய சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியம் கையில் எடுத்த ஆயுதம் சிங்களக் குடியேற்றமாகும்.

தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றுவதன் மூலம் வட-கிழக்கு மாகாணத்தின் குடித்தொகையில் படிப்படியான மாற்றத்தை ஏற்படுத்தஇ தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில்இ அவர்களது தந்தையும் – தாயும் மகிழ்ந்து குலாவி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண்ணில்-சிறுபான்மையர்கள் ஆக மாற்றுவதே சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்து வருகிறது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாகவே செந்தமிழ் மணம் கமழும் பட்டிப்பளை ஆறு கல்லோயா எனப் பெயர் மாற்றம் பெற்றது, அல்லை கந்தளாய், அல்ல-கந்தளாவ ஆக மாறியது, முதலிக்குளம் பதவியாக உருவெடுத்தது, தமிழீழத்தின் இதயபூமியான மணலாறு இரவோடு இரவாக வெலிஓயாவாக மறு அவதாரம் செய்தது.

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் நரிமூளையில் உருவாகிய நச்சுத் திட்டமே இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள். அவரே பட்டிப்பளை ஆறு கல்ஓயாவாக மாறியதன் சூத்திரதாரி.

ஐம்பதின் முற்பகுதியில் கல்லோயா ஆற்றுக்குக் குறுக்கே இங்கினியாகல என்ற இடத்தில் பாரிய அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு சேனநாயக்க சமுத்திரம் உருவாக்கப்பட்டது. 67.2 மில்லியன் டொலர் செலவில் அமெரிக்க கம்பனிகளின் உதவியுடன் கல்ஓயாவில் நிருர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாற்பது கொலனிகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் வயல் காணியும் ஒன்றரை ஏக்கர் மேட்டுநிலக் காணியும் வழங்கப்பட்டது. முதற் கட்டமாக இருபதாயிரத்திற்கும் மேலான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் எம் செந்தமிழ் நிலமான தென்தமிழீழம் எவ்வாறு மெல்ல மெல்ல சிங்களவரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டது என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அட்டவணை
கிழக்கு மாகாண மக்கள் தொகை (1881-1981)

சிங்களவர்

தமிழர் 

முஸ்லிம்கள்

ஆண்டு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

1881

5947

4.5

75408

61.35

43001

30.65

1891

7512

4.75

87701

61.55

51206

30.75

1901

8778

4.7

96296

57.5

62448

33.15

1911

6909

3.75

101181

56.2

70409

36.0

1921

8744

4.5

103551

53.5

75992

39.4

1946

23456

8.4

146059

52.3

109024

39.1

1953

46470

13.1

167898

47.3

135322

38.1

1963

109690

20.1

246120

45.1

185750

34.0

1971

148572

20.7

315560

43.9

248567

34.6

1981

243358

24.9

409451

41.9

315201

32.2

1881 ம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981 ஆம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881 ஆம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது.

இந்த வீழ்ச்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா, மதுறு ஓயா, திருகோணமலை மாவட்டத்தில் அல்லை-கந்தளாய், பதவியா (முதலிக்குளம்), யான் ஓயா போன்ற பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றியதே காரணமாகும். இவற்றிற்கும் மேலாக அரச அனுசரணையுடன் தமிழர்களது காணிகளிலும், கோவில் காணிகளிலும் சட்ட விரோதமாகச் சிங்களவர் குடியேறியதும் காரணமாகும்.

இந்தச் சிங்களக் குடியேற்றங்களில் எல்லாம் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தான குடியேற்றத் திட்டம் வெலிஓயா ஆகும்.

எண்பது முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 1988 ஆம் ஆண்டு அசுர வேகத்தில் முடுக்கி விடப்பட்டது. இதற்காக ஸ்ரீலங்காவின் முழு அரச இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.

1988ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 16ம் நாள் ஒரு சிறப்பு அரசதாள் மூலம் முல்லைத்தீவு மாவடத்தின் மணலாற்றுப் பிரதேசம் வெலிஓயாவாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அது மட்டும் அல்லாது ஸ்ரீலங்காவின் 26வது மாவட்டமாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராமங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலக் காலக்கெடுவுக்குள் அவர்களது வீடுவாசல்களில் இருந்து வெளியேறுமாறும், வெளியேறத் தவறினால் பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப் படுவார்கள் எனவும் சிங்கள இராணுவம் ஒலிபெருக்கி மூலம் மிரட்டியது. பின்வரும் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இந்த பலவந்த வெளியேற்றத்திற்கு உள்ளாக்கப் பட்டன.

வவுனியா மாவட்டம்

அரியக்குண்டசோலை   – 118
வெடிவைத்தகல்லு         –   89
ஏனையவை                      –  85

முல்லைத்தீவு மாவட்டம்

கொக்குத் தொடுவாய் கிராமசேவகர் பிரிவு

கொக்குத் தொடுவாய்  – 861
கருநாட்டுக்கேணி         – 370
ஏனையவை                    –   66

கொக்குளாய் கிராமசேவகர் பிரிவு

கொக்குளாய்               – 508
மரியமுனை                 –    04
முதத்துவாரம்             – 1004
ஆலடிக்குளம்             –      05
ஆறுமுகத்தான்குளம் –    69
நாயாறு                         –   465
தண்ணிமுறிப்பு           –   243
ஆண்டான்குளம்        –     49
குமுழமுனை               – 1164
புளியமுனை               –     16

வவுனியா வடக்கு கிராமசேவகர் பிரிவு

புதுக்குடியிருப்பு              – 351
காட்டுப்பூவரசங்குளம் –    91
கற்குளம்                          – 101
கோவில்புளியங்குளம் – 81
சொரியல்                        – 6448

இவற்றைவிட ஒவ்வொன்றும் 1000 ஏக்கர் கொண்ட பின்வரும் 14 குத்தகைக் காணிகளில் (99 ஆண்டுக் குத்தகை) குடியிருந்த தமிழ்க் குடும்பங்களும், பெரும்பாலும் மலையகத் தமிழ்க் குடும்பங்கள், வெளியேற்றப் பட்டன. இந்தக் காணிகள் சொந்தக்காரர்களால் பெரிய பொருட் செலவில் பண்படுத்தப் பட்டு அதில் கமம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1. றேடியோ கண்ணன்
2. டொலர் பாம்
3. ஆனந்தா றேடிங் கொம்பனி
4. செகசோதி அன்ட் கொம்பனி
5. எஸ். இராசரத்தினம்
6. எஸ். செல்லத்துரை
7. எஸ். அம்பலவாணர்
8. த.நடராசா
9. கென்ட் பாம்
10. சிலோன் தியேட்டர்
11. அரியகுண்டன்
12. கார்கோ போட் கொம்பனி
13. றெயில்வே குறூப்
14. போஸ்டல் குறூப்

குருவிக் கூட்டைக் கலைப்பதென்றாலே அது பாவம் என்று மனிதர்கள் நினைப்பதுண்டு. உணவு மறுப்பதை விட உறையுள் மறுப்பது பெரிய பாவமாகும். ஆனால் 13, 288 குடும்பங்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து மண்ணில் இருந்து துரத்தப்பட்டாhர்கள் என்றால், அதுவும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக துரத்தியடிக்கப்பட்டார்கள் என்றால் இதைவிடக் கொடுமை, மனிதவுரிமை மீறல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

ஆனால் சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியவாதிகள், அன்பு,  அகிம்சை, கருணை போதித்த புத்தரின் சீடர்கள் அந்தக் கொடுமையை எந்தவித துக்கமோ வெட்கமோ இன்றிச் செய்தார்கள்!

கல்ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தின் சூத்திரதாரி டி.எஸ். சேனநாயக்கா என்றால் வெலிஓயா மற்றும் மதுறு ஓயாக் குடியேற்றத் திட்டங்களின் சூத்திரதாரி அன்றைய விவசாய, துரித மகாவெலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசநாயக்கா ஆவார்.

அமைச்சர் காமினி திசநாயக்காவும் அவரது அமைச்சு அதிகாரிகளும் சேர்ந்து மிக இரகசியமாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் யான் ஓயா, மதுறு ஓயா, மணல் ஆறு போன்ற குடியேற்றத் திட்டங்களை எப்படி நடைமுறைப் படுத்தினார்கள் என்பதை துரித மகாவெலி சபை அதிகாரிகளில் ஒருவரான கேர்மன் குணரத்தின சண்டே ரைம்ஸ் (26-08-90) பத்திரிகையில் எழுதிய கட்டுரை மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். அவர் எழுதியிருந்ததாவது-
“All wars are fought for land…The plan for the settlement of people in Yan Oya and Malwathu Oya basins were worked out before the communal riots of 1983. Indeed the keenest minds in the Mahaweli, some of whom are holding top international positions were the architects of this plan. My role was that of an executor…

We conceived and implemented a plan which we thought would secure the territorial integrity of Sri Lanka for a long time. We moved a large group of 45,000 land-hungry (Sinhala) peasants into the Batticaloa and Polonnaruwa Districts of Maduru Oya delta. The second step was to make a similar human settlement in the Yan Oya basin. The third step was going to be a settlement of a number of people, opposed to Eelam, on the banks of the Malwathu Oya.

By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state…Yan Oya, if settled by non-separatists (Sinhala people), would have increased the population by about another 50,000. It would completely secure Trincomalee from the rebels…”

‘நிலத்தைப் பிடிக்கவே எல்லா யுத்தங்களும் மேற்கொள்ளப் படுகிறது……..யான் ஓயா மற்றும் மதுறு ஓயாப் பள்ளத்தாக்கில் (சிங்கள)க் குடியேற்றத்தை அமுல் படுத்துவதற்கு வேண்டிய திட்டம் 1983ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்கு முன்னரே தீட்டப் பட்டுவிட்டது. உண்மையில் இந்தத் திட்டத்தின் சிற்பிகள் மகாவலியில் பணியாற்றிய மெத்தப் படித்த அறிவாளிகள் ஆவர். இவர்கள் இப்போது அனைத்துலக மட்டத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றுகிறார்கள். இந்தத் திட்டத்தில் எனது பாத்திரம் அதனை நடைமுறைப் படுத்துவதே.

”இந்தத் திட்டத்தை நாம் சிந்தித்து நிறைவேற்றியதின் காரணம் ஸ்ரீலங்காவின் பிரதேச கட்டுமானத்தை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதே. மதுறு ஓயா பள்ளத்தாக்கை உள்ளடக்கிய மட்டக்களப்புக்கும் பொலநறுவைக்கும் நாங்கள் காணிக்கு அந்தரித்த 45,000 மக்களைக் கொண்டு சென்று குடியேற்றினோம். அடுத்ததாக இதேபோல் யான் ஓயாவில் (சிங்களவர்களை) குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம். மூன்றாவதாக ஈழத்துக்கு எதிரானவர்களை மல்வத்து ஓயாவின் கரைகளில் குடியேற்ற முடிவுசெய்தோம்.

‘மதுறு ஓயாவில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தனியரசுக்கு எதிரான ஒருதொகை மக்களை உருவாக்கினோம். யான் ஓயாவில் பிரிவினைக்கு எதிரானவர்களைவர்களை குடியேற்றுவதன் மூலம் மக்கள் தொகை 50,000 ஆகக் கூடியிருக்கும். இதன் மூலம் போராளிகளிடம் இருந்து திருகோணமலையை முற்றாகக் காப்பாற்றி விடலாம்.’

1988-89ல் வெலி ஓயாவில் முதல் கட்டமாக 3,364 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் கிறிமினல் குற்றவாளிகள் ஆவர். இரண்டாம் கட்டமாக 35,000 பேர் குடியமர்த்தப் பட்டார்கள். இந்தக் குடியேற்றங்களைப் பாதுகாக்க சிங்கள இராணுவ முகாம்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்டன. இதில் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜானக பேரராவின் சேவையை ‘மெச்சி’ தண்ணிமுறிப்பு ஜானகபுரவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு பிரிகேடியர் கிரான் கலன்கொட வெலிஓயாவின் கேந்திர முக்கியத்துவம்பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தது கவனிக்கத் தக்கது.

“Weli Oya is very important militarily. Our presence will not allow the North-East merger. Terrorists cannot win Eelam as long as we stay here. If we go, there will be a threat to Padavia, Kebitigollewa and eventually Anuradhapura.” (Sunday Observer – 22 February, 1998).

இப்போது 11 ஆண்டுகள் கழித்து வெலி ஓயாவில் உள்ள கென்ட் பாம், டொலர் பாம், சிலோன் தியேட்டர், கஜபாகுபுரம் உட்பட ஆறு பெரியதும் சின்னதுமான இராணுவ முகாம்கள் வி.புலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி அவர்களிடம் வீழ்ந்துள்ளன.

இதை எழுதும் போது ஜானகபுர இராணுமுகாம் வி.புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாகவும் அது எந்த நேரத்திலும் அவர்கள் கையில் விழலால் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வி.புலிகளின் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதலுக்குப் பயந்து சுமார் 9,000 சிங்களக் குடியேற்றவாசிகள் அண்மையில் உள்ள பதவியாவிற்கும், அனுராதபுரத்துக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். இந்த இடப்பெயர்வை ஒத்துக் கொண்ட சனாதிபதி சந்திரிகா அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எண்பதுகள்வரை சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் முடிக்குரிய வெற்றுக் காணிகளிலேயே பெரும்பாலும் இடம் பெற்றது. ஆனால் அதன்பின் தமிழர்களைத் துரத்திவிட்டு அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் சிங்களவர்களை குடியேற்றும் படலம் ஆரம்பமானது. மணலாறு அதில் ஒன்றாகும்.

வெலி ஓயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் இன்னொரு ‘சாதனை’யையும் ஸ்ரீலங்கா அரசு படைத்தது. வட தமிழீழத்துக்கும் தென் தமிழீழத்துக்கும் இடையிலான நிலத்தொடர்வை வெட்டியதே அந்தச் ‘சாதனை’யாகும். இதன் மூலம் தமிழர்களது தயாகக் கோட்பாட்டிற்று வேட்டு வைப்பதே சிங்கள அரசின் அரசியல் – இராணுவ நோக்கமாகும்.

வெலி ஓயாப் பிரதேசத்திலிருந்து சிங்களக் குடியேற்றமும் அந்தச் சிங்களக் குடியேற்றத்துக்கு காவலாகச் செயல்படும் இராணுவத்தையும் எங்கள் மண்ணிலிருந்து விரட்டி அடித்து தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீண்டும் முற்றாக மீட்டு எடுக்கப்பட வேண்டும். அந்த மீட்பு நாளே நமது வாழ்வின் திருநாள்.


எமது மரபுவழித் தாயகத்தை இழப்போமா? அல்லது போராடிப் மீழப் பெறுவோமா?

(நக்கீரன்)

தமிழீழத் திருநாட்டின் தலைநகரான திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் (2000)ஆண்டை அகிலவுலக சமாதான ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப் படுத்தியுள்ளது. இதனை ஒட்டி 87 உலக நாடுகளின் நகரங்கள் சமாதான நகரங்களாக யூனெஸ்கோ முன்மொழிந்துள்ளது.

உருசியாவின் மொஸ்கவ், வியட்நாமின் ஹனோய், யப்பானின் ஹிரோசிமா, ,ஸ்ரேலின் ஜெரூசலம், லெபனாவின் பெயிரூட் போன்று தமிழீழத்தில் திருகோணமலை சமாதான நகரமாக யூநெஸ்கோவினால் முன்மொழியப் பட்டுள்ளது.

திருகோணமலை நகரின் சமாதான துவக்க விழா போன வாரம் மிகவும் ‘கோலாகலமாகக்’ கொண்டாடப்பட்டுள்ளது.

அன்புவழிபுரம் சந்தியில் எழுதப்பட்ட அலங்கார வளைவை தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர திரை நீக்கம் செய்து வைத்திருக்கிறார். அத்தோடு திருமலைக் கடற்கரையில் அமைச்சர் மங்கள சமரவீர ‘சமாதான நகர் நினைவுச் சின்னம்’ ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.

சமாதான நகர் துவக்கவிழா திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் நடந்தேறியிருக்கிறது. இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர திருகோணமலையை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஆரம்பக்கட்டமாக யப்பான் உதவியுடன் திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கென 150 மில்லியன் (15கோடி) ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

‘இலங்கையில் மூன்று இனங்கள் வாழும் திருகோணமலை சமாதான நகரமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. எமது அரசாங்கம் நிரந்தர சமாதானத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு உறுதியுடன் உழைத்து வருகிறது. திருகோணமலை இலங்கையில் சமாதானத்தைப் பேணும் ‘மாதிரி’ நகரமாக மாறும். இலங்கையின் வர்த்தக நகராக திருகோணமலை நகரம் அபிவிருத்தி செய்யப்படும்” இப்படி அமைச்சர் மங்கள சமரவீர வயிற்றுப் பிள்ளை கீழே நழுவி விழுமாறு அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

சனாதிபதி சங்திரிகா குமாரணதுங்கா இந்த துவக்க விழாவையொட்டி ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வட-கிழக்கு மாகாண ஆளுநர் அசோகா ஜெயவர்த்தன வாசித்தார். அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது –

‘திருகோணமலையை சமாதான நகராகப் பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறது. அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.”

திருகோணமலை நகரை சமாதான நகராகப் பிரகடனப் படுத்த யூனெஸ்கோ உண்மையாக தன்பாட்டில் முன்வந்திருந்தால்; இந்த யோசனையை முன்மொழிந்த அந்த அமைப்பின் அதிகாரிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு இருந்திருக்க வேண்டும்.

காரணம் திருகோணமலை நகரம் சமாதானத்தைக் கண்டு, அதன் காற்றைச் சுவாசித்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிறது.

திட்டமிட்ட- இடைவிடாத சிங்களக் குடியேற்றம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மையராக இருந்த சிங்களவர் இன்று பெரும்பான்மையராகவும் பெரும்பான்மையராக இருந்த தமிழர் சிறுபான்மையராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு இன்றுவரை திருமலை மாவட்டத்துக்கு தமிழர் ஒருவர் அரசாங்க அதிபராக நியமனம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. பரங்கியர் ஒருவர் அரசாங்க அதிபராக இருந்திருக்கிறார். ஆனால் தமிழர் ஒருவர் இதுவரை இருக்கவில்லை. அரசாங்க அதிபர் பதவி மட்டுமல்ல காணிப் பங்கீட்டுக்குப் பொறுப்பாவுள்ள மாவட்ட காணி அதிகாரி (District Land Office) பதவியும் அன்று தொடக்கம் இன்றுவரை சிங்களவராலேயே நிரப்பப்பட்டு வந்திருக்கிறது.

இவை ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இந்த மாவட்டத்தை சிங்கள மயப்படுத்துவதற்கு வசதியாக திட்டமிட்டே பின்பற்றப்பட்டு வரும் பேரினவாதக் கொள்கையாகும்.

வட- கிழக்கு ஆளுநர் பதவியை முன்னைய காமினி பொன்சேகா இராஜினாமா செய்த போது அவரது இடத்துக்கு இன்றைய மேஜர் ஜெனரல் அசோகாவை சந்திரிகா அரசு அவசர அவசரமாக நியமித்தது.

தனது இராணுவப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற 48 மணித்தியாலங்களுக்குள் அசோகா ஜெயவர்த்தனா வட- கிழக்கு ஆளுனராகப் பதவியேற்றார்.

வட- கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழி பேசுவோரே இன்றும் பெரும்பான்மையராக இருக்கிறார்கள். எனவே ஒரு தமிழர் ஆளுனராக நியமிக்கப் படுவதே நியாயமாகும். ஒத்துழைப்புத் தமிழர்களில் ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தியிருக்கலாம். ஒத்துழைப்புத் தமிழர் மீதும் சந்திரிகா அரசுக்கு நம்பிக்கையில்லா விட்டால் குறைந்த பட்சம் ஒரு முஸ்லீமை ஆவது ஆளுநராக நியமித்திருக்கலாம். ஆனால் சிங்கள அரசு ஒருபோதும் அப்படிச் செய்யாது. அப்படிச் செய்வது அதன் எழுதப்படாத அல்லது பிரகடனப் படுத்தப் படாத இனவாதக் கொள்கைக்கு முரணாக இருக்கும்.

மாறி மாறி ஆட்சிக் கதிரையைப் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்குள் அரசியல் மட்டத்தில் அடிபட்டுக் கொண்டாலும் வட-கிழக்கு மாகாணத்தில் தமிழருக்குச் சொந்தமான பூமியில் சிங்களவரைக் குடியேற்றி அதனைச் சிங்கள மயப்படுத்த பெரும்பாடுபட்டு வருகின்றன. இதில் சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பிடத் தக்க வெற்றியும் கண்டுள்ளார்கள்.

ஐ.தே.கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த இரண்டு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தங்களுக்குள் குத்துப் பட்டு வெட்டுப் பட்டாலும் தமிழ் மண்ணில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடுவதைப் பொறுத்தளவில் இந்த இரண்டு கட்சிகளும் அண்ணன் – தம்பிபோல் ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்பதற்கு எடுத்துக் காட்டு அம்பாரையில் சென்ற வாரம் நடந்து முடிந்த கல்லோயாத் திட்ட பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டமாகும்.

இந்தப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அரசியலில் கீரியும் – பாம்பும் போல் சண்டை போடும் நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சரும் துணைப் பாதுகாப்பு அமைச்சருமான அநுருத்த இரத்வத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே மேடையில் இராம-இலட்சுமணர் போல் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.

வட-கிழக்கு மாகாணத்திலும், குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றங்களை குடித் தொகை கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1881ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் எண்ணி 935 சிங்களவரே வதித்து வந்தார்கள். இது மொத்த விழுக்காட்டில் 4.2. ஆனால் ஒரு நூற்றாண்டு கழித்து அதாவது 1981 ஆம் ஆண்டு சிங்களவர்களது தொகை 86,341 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த விழுக்காட்டில் 33. 6. பின்வரும் அட்டவணை இந்தத் தலைகீழ் மாற்றத்தை தெளிவாகக் காட்டுகிறது.
அட்டவணை 1
திருகோணமலை மாவட்ட மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981)  

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்கள்

ஆண்டு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

1881

935

4.2

14394

64.8

5746

25.9

1891

1109

4.3

17117

66.4

6426

25.0

1901

1203

4.2

17069

60.0

8258

29.0

1911

1138

3.8

17233

57.9

9714

32.6

1921

1501

4.4

18586

54.5

12846

37.7

1946

11606

15.3

33795

44.5

23219

30.6

1953

15296

18.2

37517

44.7

28616

34.1

1963

40950

29.6

54050

39.1

42560

30.8

1971

54744

29.1

71749

38.1

59924

31.8

1981

86341

33.6

93510

36.4

74403

29.0

 

கிழக்கு மாகாண  மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981)  

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்கள்

ஆண்டு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

1881

5947

4.50

75408

61.35

43001

30.65

1891

7512

4.75

87701

61.55

51206

30.75

1901

8778

4.70

96296

57.50

62448

33.15

1911

6909

3.75

101181

56.20

70409

36.0

1921

8744

4.50

103551

53.50

75992

39.4

1946

23456

8.40

146059

52.30

109024

39.1

1953

46470

13.10

167898

47.30

135322

38.1

1963

109690

20.10

246120

45.10

185750

34.0

1971

148572

20.70

315560

43.90

248567

34.6

1981

243358

24.90

409451

41.90

315201

32.2

 1881 ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981ம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881ம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது.

இந்த வீழ்ச்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா (பட்டிப்பளை ஆறு), மதுறு ஓயா, திருகோணமலையில் அல்லை-கந்தளாய், பதவியா (முதலிக்குளம்) போன்ற பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றியதே காரணமாகும். இவற்றிற்கும் மேலாக அரச அனுசரணையுடன் தமிழர்களது காணிகளிலும், கோவில் காணிகளிலும் சட்ட விரோதமாகச் சிங்களவர் குடியேறியதும் காரணமாகும்.

1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடிசன கணிப்பீடு எடுக்கப் படவில்லை. 2001ல் குடிவரவு கணிப்பீடு எடுக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதன்போது தமிழர்களது எண்ணிக்கையும் விழுக்காடும் இனக் கலவரங்கள், புலப்பெயர்வுகள், இடப்பெயர்வுகள் காரணமாக பெருமளவு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம்.

திருகோணமலையை தமிழர்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்பது சிங்கள பேரினவாத அரசுகளின் நீண்ட காலத் திட்டமாகும். ஐம்பதுக் கடைசிகளில் திருகோணமலையை அண்டிய பகுதிகளில் ஸ்ரீமாபுர, அக்போபுர குடியேற்றக் கிராமங்கள் உருவாகிவிட்டன. ‘சம்பந்தர் புரம்’ என்ற பெயரில் தமிழ் மீனவர் வீடமைப்புத் திட்டத்தில் குடியிருந்த தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொலைசெய்து எஞ்சியவர்களை கலைத்துவிட்டு அதில் வலோத்காரமாக குடியேறியுள்ளார்கள். இதே போல் இந்து ஆலயங்களின் தீர்த்தத் திருவிழா நடைபெறும் தீர்த்தக் கடற்கரைப் பிரதேசமும் தமிழ் மீனவர்கள் கரைவலை மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தி வந்த ‘உயர்ந்த பாடு’ கடற்கரைப் பகுதியும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில் திருகோணமலை கீரித்தோட்டப் பகுதியில் திருமலை நகரசபையால் 60 இலட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பொதுச் சந்தை சிங்கள இராணுவம், சிங்கள வர்த்தகர்கள் இவர்களது எதிர்ப்பால் மூடப்பட்டுக் கிடக்கிறது. திருமலையில் வர்த்தகம், குறிப்பாக மீன், மரக்கறி வியாபாரம் நூறு விழுக்காடு சிங்களவர்கள் கையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனப்படுத்தி அதனை ஒரு வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் மேலும் அங்குள்ள சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே சந்திரிகா அரசின் அந்தரங்க நோக்கமும் திட்டமுமாகும்.

‘திருகோணமலையை சமாதான நகராக பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறோம். அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு’ என்று சனாதிபதி பேசியிருப்பதன் அர்த்தம் திருகோணமலையை கைப்பற்றுவதில் அரசாங்கம் வெற்றிபெறும் அதில் தனக்கு நம்பிக்கையுண்டு என்பதுதான்.

நமது மரபுவழித் தாயகத்தின் பெரும்பகுதியை நாம் இழந்து விட்டோம். கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை சிங்களக் குடியேற்றத்திற்குப் பறிகொடுத்து விட்டோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1961 இல் அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டதும், இதே காலகட்டத்தில் அம்பாரைத் தேர்தல் தொகுதியும் (1960) சேருவில தேர்தல் தொகுதியும் (1977) சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டதும் அதனை உறுதி செய்கிறது.

திருகோணமலை நகரம் சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டதை நாம் போர்ப் பிரகடனமாகவே அர்த்தம் கொள்ளல் வேண்டும்.

முடிவாக எமது மரபுவழித் தாயகத்தை சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு நிரந்தரமாக இழப்போமா? அல்லது போராடி அதை மீழப் பெறுவோமா?

https://nakkeran.com/index.php/2018/06/13/manarl-aru-the-heartland-of-tamil-homeland/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.