Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

20 FEB, 2025 | 11:51 AM

image

துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்  அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்

daily mirror

இலங்கையில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் 2025ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக 6 வயது சிறுமி 9 வயது சிறுவன் உட்பட 11 உயிர்கள் பலிகொல்லப்பட்டுள்ள நிலையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அழுத்தத்தின் கீழ் அதிகாரிகள் உள்ளனர்.

ஆறுவயது சிறுமி, 9 வயது சிறுவன், பாதாள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ ஆகியோர் உயிரிழந்த சம்பவங்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக இல்லை என்ற இந்த அதிகரித்துவரும் நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த வருடம் மாத்திரம் நாட்டில் 14 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திட்டமிட்ட குற்;றச்செயல்களி;ல் ஈடுபடும் கும்பல்களை சேர்ந்தவர்களின் நடவடிக்கையே இது என பலர் கருதுகின்றனர்.

சமீபத்தைய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மிதேனியவிலும் கொழும்பிலும் இடம்பெற்றுள்ளன மிதேனியாவில் 39 வயது நபரும் அவரது மகளும் மகனும் இனந்தெரியாத நபர் ஒருவர் இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் உயிரிழந்தனர்.

கடவத்தை சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவனும் சிறுமியும் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர் கஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே என தெரிவித்துள்ள பொலிஸார் இவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பில் பாதள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று காலை துணிச்சலான விதத்தில் இந்த கொலை இடம்பெற்றது. சட்டத்தரணிபோன்று வேடமணிந்த ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

thumb_hkhk.jpg

இந்த சம்பவங்கள் பலவற்றிற்கு போதைப்பொருள் வர்த்தகமே காரணம் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். குற்றச்செயல்கள் அதிகரிப்பினால் திணறிக்கொண்டிருக்கும் பல நாடுகள் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன என தெரிவித்த அந்த பொலிஸ் அதிகாரி  இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துவருவதால் இலங்கையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை உருவாகியுள்ளது என தெரிவித்தார்.

அதிகரித்துவரும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு மறைமுக புலனாய்வாளர்களை பயன்படுத்துதல் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் அவசியமாக உள்ளதாக தெரிவித்த அவர் ஒரு குழுவால் மாத்திரம் இதற்கு தீர்வை காணமுடியாது என குறிப்பிட்டார்.

இந்த குற்றகும்பல்களிற்கு எதிரான போராட்டத்திற்கு சட்டஅமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து எங்களிற்கு முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்ட அவர் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் குற்றவாளிகள் தொடர்ந்து செயற்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை இலக்குவைத்து முன்னைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றியளித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூட்டு சம்பவங்களிற்காக தேடப்பட்ட பல தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சில துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து சம்பவங்களும் ஒரே பாணியிலேயே இடம்பெறுகின்றன. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இது தொடரும் என தெரிவித்த அந்த அதிகாரி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை தடுத்துவைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறைகள் அவசியம். அவ்வாறான பொறிமுறை இல்லாவிட்டால் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விடுதலையாவார்கள் என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் குற்றவாளிகளை இலக்குவைத்து பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை வன்முறை மிக்க மோதல்கள் இடம்பெற்றன சந்தேகநபர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இதற்கு சில குழுக்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டன.

யுக்திய நடவடிக்கையை ஆரம்பித்திருந்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கடும் பலத்தை பயன்படுத்துவதை நியாயப்படுத்தியிருந்தார். குற்றவாளிகளை கொலை செய்வதுஒரு பாவமல்ல என தெரிவித்திருந்த அவர் நாட்டின் பாதுகாப்பிற்காக செயற்படுவதற்கு அதிகாரிகள் தயங்ககூடாது என குறிப்பிட்டிருந்தார்.

போதைப்பொருள் குழுக்கள் மற்றும் பாதளஉலக குழுக்களை ஒழிப்பதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட படையணிகள் தேவை என்பது தெளிவாகியுள்ளது.

பாரம்பரிய கலாச்சார கூறுகளை கருத்தில் கொள்ளும்போது இந்த வகையான குற்றங்களை கையாள்வது மிகவும் கடினமான விடயம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிகரித்துவரும் குற்றங்களை கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் எதிர்கால நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பி;ன் ஆறு பொலிஸ் நிலையங்களில் விசேட அதிரடிப்படையினரை நிறுத்திவைப்பதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட குற்றங்கள் போதைப்பொருள் குற்றங்களை கையாள்வதற்கு உலகின்பல நாடுகளில் விசேட படையணிகள் உள்ள போதிலும், இலங்கையில் அவ்வாறான படைப்பிரிவொன்று இல்லாதமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/207171

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.