Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்

February 26, 2025

image

06. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளது.

எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
’33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்’ என்று குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த சாந்தன் விடுவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து நோய்வாய்ப்பட்டிருந்தார்.

பின்னர் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி காலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

www.ilakku.org
No image preview

சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் | February 26, 2025

06. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம்

February 28, 2025 11:41 am

சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம்

மறைந்த சாந்தனின் ஓராண்டில் துயிலாலயம் இன்று காலை  எள்ளங்குளம்  இந்து மயானத்தில் அவரை புதைத்த இடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் சாந்தன் உயிரிழந்தார்.

அவரின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தாயக மண்ணில் விதைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் துயிலாலயம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/the-dedication-of-the-temple-to-santhan/

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20250228-WA0033.jpg?resize=750%2C375

சாந்தன் உயிரிழந்து ஓராண்டு – எள்ளங்குளம் மயானத்தில் துயிலுமில்லம் திறப்பு.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த சாந்தன் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு கடந்தள்ள நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் அன்னாரின் துயிலுமில்லம் அவரது தயாரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதாகி சுமார் 32 வருடங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவர் அடக்கம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம், எள்ளங்குளம் மயானத்தில், அவரது துயிலுமில்லம் இன்று பொது மக்கள் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டது.

சாந்தனின் குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சாந்தன் துயிலாயம் அன்னாரின், தாயாரால் இன்று காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சாந்தனின் விடுதலைக்காக அவரது குடும்பத்தினர் 33 வருடங்களாக தொடர்ச்சியாக போராடி வந்தனர்.

சிறையில் இருந்து விடுதலையான பின்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை, மீள இலங்கைக்கு அழைத்து வர அவரது குடும்பத்தினர் சுமார் ஒன்றரை வருட காலமாக போராடினார்கள்.

தமிழ் அரசியல் வாதிகள் பலரும் இந்த விடயத்தில் பாரமுகமாக செயற்பட்ட நிலையில், நோய்வாய்ப்பட்டு இறந்த சாந்தனின் உடலே இறுதியாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

IMG-20250228-WA0006.jpg?resize=600%2C338

IMG-20250228-WA0026.jpg?resize=600%2C338

IMG-20250228-WA0010.jpg?resize=600%2C338

IMG-20250228-WA0032.jpg?resize=600%2C338

IMG-20250228-WA0034.jpg?resize=600%2C338

IMG-20250228-WA0033-1.jpg?resize=600%2C3

https://athavannews.com/2025/1423515

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.