Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-38.jpg?resize=750%2C375&ssl=

கல்முனையில் சந்தேகிக்கப்படும் தீவிரவாதக் குழு; விசாரணைகள் தீவிரம்!

கிழக்கின் கல்முனைப் பகுதியில் உருவாகியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தீவிரவாதக் குழு குறித்து புலனாய்வு அமைப்புகளும் பாதுகாப்புப் படையினரும் தற்போது விசாரணை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்தக் குழு தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் விவரங்களை வெளிக்கொணர அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

அந்தக் குழு அடையாளம் காணப்பட்டதா, தடை செய்யப்பட்டதா அல்லது கைது செய்யப்பட்டதா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் இதன்போது பதிலளித்தார்.

“இந்த நேரத்தில், கிழக்கு மாகாணத்தில் செயல்படும் அத்தகைய குழு பற்றிய தகவல்களை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம். புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த விடயத்தை சரிபார்த்து விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். பாதுகாப்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்பதை இப்போது நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று அமைச்சர் கூறினார்.

https://athavannews.com/2025/1423977

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் அடிப்படைவாதம்” என்ற கூற்றினூடாக இஸ்லாமியர்களை முடக்க முயற்சி

editorenglishMarch 6, 2025

பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம். இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு  முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என  ஸ்ரீ  லங்கா முஸ்லிம்  காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (05/03/2025)  இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்…

கிழக்கில் அடிப்படைவாதம்  என்ற கூற்றின் ஊடாக  எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள்  முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். இவ்வாறான கூற்றுக்களை கொண்டு  பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே  இந்தக்கூற்றின்  உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சரவை பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயம் தேசிய பத்திரிகைகளில் பிரதான செய்தியாக, புதன்கிழமை (05/03/2025)  வெளிவந்துள்ளன.

குறிப்பாக, கல்முனை பகுதிகளில்  மத அமைப்புக்களினால்   பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்காக  பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் அதன் காரணமாக உளவுத்துறையினர் கண்காணிப்புக்களை அதிகரிக்க  வேண்டியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தக் கூற்றினால் எமது பிரதேச மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்றார்..

கூற்றுக்களில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அமைப்புக்களின் பெயர்கள் எதுவும்  குறிப்பிடப்படவில்லை.கல்முனை  ஜும்மா பள்ளிவாசல்,  பள்ளிவாசல் சம்மேளனம்,   ஜம் இய்யதுல் உலமா சபை   உட்பட இஸ்லாமிய  அமைப்புகள் உட்பட இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதம் தொடர்பான விசாரணைகளுக்கும்,   தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளனர் என்றார்.

இவ்வாறான அடிப்படைவாதப் போக்குகள் உள்ள குழுக்களின் பின்னணியையும், அவர்களுக்கு  யார் நிதி வழங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள எமது மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே புலனாய்வு விசாரணைகள் சட்டத்துக்கு அமைவாக  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..

இதற்கு முன்னரும் முஸ்லிம் சமூகம்  பல விடயங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்தும் உரிய அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படாதவில்லை. இதனால் சஹ்ரானின் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன . இன்னொரு சஹ்ரானின் சம்பவம் இந்த நாட்டில் இனி ஒருபோதும் இடம்  பெறக் கூடாது என்றார்.

கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீய  சக்திகள்  முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும்.    அதிகாரபூர்மற்ற அறிவிப்புக்கள்   வீண்  அச்சம்  மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறான பொதுவான கூற்றுக்களினால்  சமூகத்தில்  இஸ்லாமிய அடிப்படைவாதம்  செயல்படுகிறது என்ற பழைய   தவறான அபிப்பிராயம் மீண்டும் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கிழக்கில் அடிப்படைவாதம் என்ற அமைச்சர்களின் கூற்றுக்களை தெளிவுப்படுத்தி  அரசாங்கம் பொதுவான  நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். புலனாய்வு தகவல்களின் அடிப்படையில்   எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பதையும்  அறிந்து  கொள்ள விரும்புகிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.

https://globaltamilnews.net/2025/212750/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.