Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் தீவு ; சூழல் அடிப்படையில் மிகவும் முக்கியமான உணர்வுபூர்வமான பகுதியை பாதுகாப்பது அவசியம் - சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் தீவு ; சூழல் அடிப்படையில் மிகவும் முக்கியமான உணர்வுபூர்வமான பகுதியை பாதுகாப்பது அவசியம் - சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

03 Apr, 2025 | 11:34 AM

image

காற்றாலை மின் திட்டங்கள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டால், சூழலிற்கும், உள்ளுர் மக்களின் சமூக பொருளாதார நலன்களிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகளை  அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என சூழல்;  பாதுகாப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மன்னார் தீவு 126.5 சதுரகிலோமீற்றர் அளவு பகுதியை கொண்டது,அதனை சுற்றி பாதுகாக்கப்பட்ட பல பகுதிகள் உள்ளன.மேலும் இங்கு சுமார் 70,000 மக்கள் வசிக்கின்றனர்,பிரதானமாக மீன்பிடித்தொழில் ஈடுபட்டுள்ளனர்.

சூழல் நீதிக்கான  நிலையம், வனவிலங்கு  மற்றும் இயற்கை  பாதுகாப்;பு சமூகம்.சூழல் பாதுகாப்பு மன்றம் உட்பட்;ட அமைப்புகள உத்தேச 250 மெகாவோட்  காற்றாலை மின் திட்டம் இந்த தீவில் அமைவதை   தடுக்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தன.

அதானிகிறீன்ஸ் எனேர்ஜி லிமிடட் இலங்கை முதலீட்டு சபைக்கு இந்த திட்டத்திலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து ,சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்;றத்தின் முன்னிலையில் இதனை அறிவித்ததை தொடர்ந்த  மனுக்களை சம்மந்தப்பட்ட தரப்பினர் விலக்கிக்கொண்டனர்.

மீள்சக்தியை  பிரதான சக்தியாக கொண்டு  நீண்டகால மின்உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தி;ன் திட்டத்தை மேற்குறிப்பிட்ட தரப்புகள் முழுமையாக வரவேற்கும் அதேவேளை மின்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான எந்த இடத்தை தெரிவு செய்வதற்கு முன்னர் மூலோபாய மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

486191559_1028036099187545_5499200086533

மன்னார் தீவின் முக்கியத்துவம்

மணல்மேடுகள்,கடல்புற்கள்,சேற்று உப்பு நிலம், பவளப்பறைகள்,உலர் மண்டல புதர்க்காடு,மற்றும்  வனதிணைக்களம் ஆகியவற்றால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகியன முக்கியமான சுற்றுசூழல் அமைப்பு  சேவைகளை வழங்குவதுடன்,அபூர்வமான, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களிறகு( இவற்றில் பல  சர்வதேச அளவில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளவை) பாதுகாப்பை அளிக்கின்றன.

மத்திய ஆசிய பறக்கும்பாதைக்குள் உள்ள வலசப்பறவைகளிற்கு முக்கியமான தளமாக சர்வதேச அளவில் மன்னார் தீவு  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.வருடாந்தம் 15 மில்லியன் வலசப்பறவைகள் வருகின்றன.

இலங்கையின் அமைவிடம் இலங்கையை உலகின்  மிக முக்கியமான பறவை வாழ்விடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

இலங்கை  வலசப்பறவைகள் பாதுகாப்பு தொடர்பான சமவாயத்தில் கைச்சாத்திட்டுள்ளது.இதன் மூலம் இதன் அதன் முக்கியத்துவத்தை  ஏற்றுக்கொண்டுள்ளது.

சூழல் விவகார  அமைச்சு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு மன்னார் தீவை சூழல் அடிப்படையில் உணர்வுபூர்வமான பகுதியாக இனம்கண்டுள்ளது.

52 காற்று விசையாழிகள்  220 மீற்றர் உயரத்தில்  இந்த தீவில் கட்டப்பட்டுள்ளமை இந்த பகுதியை பொறுத்தவரை அளவுகதிகமானது என்பதுடன்  பலவீனமான சுற்றுசூழலிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.

உள்ளுர் மக்களின்  சமூக பொருளாதார  தாக்கம்

இந்த உத்தேசதிட்டம்70,000 மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது,குறிப்பாக மீனவசமூகத்திற்கு பெரும் பாதிப்புகளை  ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே  மீனவசமூகத்தினை ஏற்கனவே கரைக்கு வெளியே தள்ளியுள்ளன என உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர், பாரம்பரிய மீன்பிடிமுறைகளில் தொடர்வதை கடினமான விடயமாக்கியுள்ளன.

46 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், தங்கள் எதிர்ப்புகளை மனுக்கள், மூலம் வெளியிட்டனர்,விசையாழி அதிர்வுகள் மீன்களை ஆழ்கடலை நோக்கி தள்ளிவிடும் என தெரிவித்தனர்.இது அவர்களது  வருமானத்திற்கு மாத்திரமல்ல பாதுகாப்பிற்கும் ஆபத்தான விடயம்.

மன்னாரில் காணப்படும் வெள்ளநிலைமைக்கும் இந்த விசையாழிகளே காரணம்.மேலும் பல விசையாழிகள் அமைக்கப்பட்டால், பல சமூகங்கள் வாழமுடியாத  பகுதியாக மன்னார் தீவு மாறும்.

சுற்றுசூழல் சுற்றுலா

சுற்றுசூழல் நிபுணர்கள் மன்னார் தீவில் சுற்றுசூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கவேண்டும் என பரப்புரை செய்கின்றனர்.சர்வதேச வலசப்பறவைகளின்  தளம் என்ற மன்னார் தீவின் முக்கியத்துவத்தை பயன்படுத்தவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அணுகுமுறை தீவின் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதேவேளை நிலையான வருமானத்தை கொண்டுவரும்.

சர்ச்சைக்குரிய காற்றாலை மின்திட்டம் போல அல்லாமல், சுற்றுச்சூழல் சுற்றுலா என்பது  சூழல் பாதுகாப்பு  மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின்  அர்ப்பணிப்புடன் தொடர்புபட்ட இணைந்த விடயமாகும்.

முன்னோக்கி நகருதல் -  மூலோபாய  திட்டமிடலிற்கான அழைப்பு

மன்னார் தீவை பாதுகாப்பது குறித்த அரசாங்கத்தின்  அர்ப்பணிப்பு,  சமநிலையான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றது.இது வலுசக்திதிட்டங்களால்  இலங்கையின் இயற்கை சூழல் மற்றும்  சமூக நலன் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்கின்றது.

சூழல் நீதிக்கான  நிலையம், வனவிலங்கு  மற்றும் இயற்கை  பாதுகாப்;பு சமூகம்.சூழல் பாதுகாப்பு மன்றம்  ரொகான் பெத்தியாகொட ஆகியோர் காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டத்திற்காக மன்னார்தீவிற்கு பதில் வேறு இடத்தை ஆராயவேண்டும்; வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முன்னைய அறிக்கைகளில்  காற்றாலை மின்திட்டத்தை அமைப்பதற்கு மன்னாரே மிகவும் பொருத்தமற்ற இடம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொறுப்புணர்வு  மீள்சக்தி திட்ட திட்டமிடல் சூழல் மற்றும் உள்ளுர் வாழ்வாதாரங்களை பலிகொடுக்காமல் பேண்தகு முன்னேற்றத்தை அடைவதற்கு   முக்கியமானது.

நாங்க்ள மீள்சக்தி திட்டங்களை உருவாக்கும்  அரசாங்கத்தின் முயற்சிகளை  முழுமையாக வரவேற்கின்றோம்.

அதேவேளை மன்னார் தீவை விட பொருத்தமான  இடங்களை  அரசாங்கம் ஆராயவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

காற்றாலை மின் திட்டங்கள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டால், சூழலிற்கும், உள்ளுர் மக்களின் சமூக பொருளாதார நலன்களிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகளை  அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

https://www.virakesari.lk/article/211004

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.