Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு!

adminApril 5, 2025

Up-Country.jpeg?fit=1170%2C658&ssl=1

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மலையக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டார்.

இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர்.

இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என இந்திய பிரதமர் தமது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

https://globaltamilnews.net/2025/214150/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வம்சாவளியினருக்கு கடல்கடந்த இந்தியப் பிரஜை அந்தஸ்த்தை கோரும் மனோ கணேசன் எம்.பி

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் சுலபமாகக் கடல்கடந்த இந்தியப் பிரஜை எனும் அந்தஸ்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 

அத்துடன், தங்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது என்பதுவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். 

நேற்றைய தினம் இந்தியப் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், 13ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்.

https://www.hirunews.lk/tamil/402208/இந்திய-வம்சாவளியினருக்கு-கடல்கடந்த-இந்தியப்-பிரஜை-அந்தஸ்த்தை-கோரும்-மனோ-கணேசன்-எம்-பி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.