Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

.அரசின் தாக்குதல்களிலிருந்து தமிழரைக் காப்பாற்றுங்கள்! ஆர்பர் அம்மையாரிடம் தமிழ்க் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Oct 27 7:15:00 2007

.அரசின் தாக்குதல்களிலிருந்து தமிழரைக் காப்பாற்றுங்கள்! ஆர்பர் அம்மையாரிடம் தமிழ்க் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள்

அரசின் தாக்குதல் நடவடிக்கையில் இருந்து இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையா ரிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத் துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, லூயிஸ் ஆர்பருக்கு அவசர மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதி லேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக் கப்பட்டிருக்கின்றது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

நீங்கள் அண்மையில் இலங்கைக்கு மேற் கொண்ட விஜயத்தின்போது இங்கு இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல் நடவடிக் கைகளை நன்கு அவதானித்திருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம்.

இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தும் அவற்றைக் கண்

காணிக்கும் நோக்கில் இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்று நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை நீங்கள் வலியுறுத்தினீர்கள்.

ஆனால், இலங்கை அரசு நீங்கள் விடுத்த இந்த வேண்டுகோளை முற்றாக நிராகரித்து விட்டது. அது குறித்து நாம் மிகுந்த கவலை யடைகிறோம்.

இந்த நிலையில் புலிகள் அநுராதபுர விமா னப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி னர். இத்தாக்குதல் அரசிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியதோடு இராணுவ ரீதியில் அரச தலைவர்களின் மன சமநிலைத் தன்மையை குழம்பச் செய்துள்ளது.

இதன் காரணமாக அரசு வடக்கில் மக் கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது கிபிர் விமா னங்கள் மூலம் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல் பல்குழல் மற் றும், ஷெல் தாக்குதல்களையும் நடத்துகின்றது.

இத்தாக்குதலால் கர்ப்பிணிப் பெண் மற்றும் கைக்குழந்தை உட்பட பல தமிழ் அப் பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அப் பகுதியில் மக்கள் இப்போது இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

அது மாத்திரமின்றி அநுராதபுரத் தாக் குதலில் உயிரிழந்த புலிகளின் சடலங் களைப் புலிகளிடம் கையளிக்காது அந்த உடல்களில் இருந்து ஆடைகளை அப்புறப் படுத்தி முழு நிர்வாணப்படுத்தி அவற்றை மக்களின் பார்வைக்கு அரசு வைத்துள்ளது.

அவ்வாறு நிர்வாணமாக்கப்பட்ட சடலங் களில் பெண் புலிகளின் உடல்களும் அடங்குகின்றன.

அரசின் இந்தச் செயற்பாடானது வழமை யான யுத்தச் செயற்பாட்டு முறைகளை மீறும் போக்காகும். அது மாத்திரமன்றி இது ஜெனிவா உடன்படிக்கைக்கு உட்பட்ட யுத்த நடைமுறைகளை மீறும் இந்த அரசின் நாகரிகமற்ற செயற்பாடாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலைமையானது இலங்கையில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய யுத்தம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது என்ற அச்சத்தைத் எம்மத்தியில் தோற்று வித்துள்ளது.

இலங்கை அரசின் கண்மூடித்தனமான எல்லைமீறிய கொடுங்கோண்மையான இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து இலங்கையில் உள்ள தமிழ்த் தேசத்தைக் காப்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத் திற்கு விளக்கி உரிய நடவடிக்கையை எடுக்கவைப்பது மிகவும் கட்டாயமானதாக வும், அவசரமானதாகவும் ஆகியுள்ளது.

ஆகவே, இந்த நடவடிக்கையை மிகத் துரிதமாக மேற்கொள்ளுமாறு நாம் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. (சி)

http://www.uthayan.com/

பிரியோசனமிருகாது ஆனால் மூக்கு உடக்கப்படும் போது இவர்களும் கதைக்க முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.