Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

29 APR, 2025 | 05:56 PM

image

(டேனியல் மாக்ரட் மேரி)

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பணம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால், கட்டுப்பாடின்றி அதிகமான பணம் உருவாக்கப்பட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை "பண அச்சிடல்" (Money Printing) என அழைக்கலாம். இது சில நேரங்களில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும்.

பணம் அச்சிடல் என்றால் என்ன? அதாவது, பண அச்சிடல் என்பது, ஒரு நாட்டின் மத்திய வங்கி புதிய பணத்தை உருவாக்கி அரசுக்கு அல்லது பொருளாதாரத்துக்கு வழங்கும் செயலாகும். 

moneys.jpg

பொதுவாக அரசு திறைசேரியில் பணம் குறையும்போது, அரசின் செலவுகளை நிரப்ப மத்திய வங்கியிடம் பணம் பெறும். மத்திய வங்கி, புது பணத்தை அச்சிட்டு அல்லது வேறு முறையில் பணத்தை கணக்கில் சேர்த்து, அரசுக்கு நிதியளிக்கிறது. இதுவே பண அச்சிடலாகும்.

இங்கு மத்திய வங்கி பணத்தை அச்சிட்டு அரசுக்கு வழங்குவதனால் பொருளாதார நெருக்கடி நிலையை ஏற்படும். அதே போல் பணம் அச்சிடப்படாமல் அரசு திறைசேரியின் பணம் நிறைவடைந்து மத்திய வங்கியின் கணக்கில் இருந்து அரசுக்கு பணம் வழங்கப்படும் போதும் பொருளாதார நெருக்கடி நிலைமை தோன்றும். இது நேரடியாக பண அச்சிடல் செயன்முறையை குறிக்காது. ஆனால் இந்த செயன்முறையும் ஒரு வகையில் பண அச்சிடலினால் தோன்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.

பணம் அச்சிடுவதால் ஏற்படும் விளைவுகளை குறித்து நோக்கினால், புதிதாக அதிக அளவில் பணம் உருவாக்கப்படும் போது, பொருள்களின் எண்ணிக்கை (supply) அதிகரிக்காமல் இருந்தால், அதன் விலை உயர்ந்துவிடும். இதனால் விலைவாசி அதிகரித்து தோல்விப் பொருளாதாரம் உருவாகும். சந்தை தோல்வி என்பது ஒரு தடையற்ற சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் போதுமான விநியோகம் இல்லாத பொருளாதார சூழ்நிலையைக் குறிக்கிறது.

மக்கள் பணத்தின் மதிப்பை நம்பவில்லை என்றால், அவர்கள் விரைவாக பணத்தை செலவழிக்கத் தொடங்குவர். இதன் விளைவாக பணத்தின் மதிப்பு (Currency Value) சரிந்துவிடும்.

இவை அனைத்தும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தில் நெருக்கடியை (Economic Crisis) உருவாக்கும். சில நேரங்களில் இது மிகை பண வீக்கம் (Hyperinflation) என்ற நிலைக்கே கொண்டு செல்லும். உதாரணமாக சிம்பாப்வே, வெனிசுவேலா போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.

economi.jpg

ஒரு அரசு திறைசேரியில் பணம் குறைவதால், கடன் எடுக்கும் நிலை உருவாகலாம். மத்திய வங்கி அரசின் கடனை வாங்கி புதிய பணத்தை வழங்கும் போது, நேரடியாக பண அச்சிடல் நடக்கும். இது ஒரு கட்டுப்பாடற்ற செயலாக மாறினால், பொருளாதாரம் மீது பெரும் அழுத்தம் ஏற்படும்.

பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க, பண அச்சிடலை கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சிக்கு துரித நடவடிக்கைகள் எடுப்பது மற்றும் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்குவது முக்கியம். மத்திய வங்கி பணத்தை சரியான முறையில் வெளியிட்டு, வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை வகுப்பது பொருளாதாரத்தை நிலைநிறுத்தும். இதனால், மக்கள் பணத்தைக் கையாளும் முறையில் நம்பிக்கை செலுத்தி, பொருளாதாரத்தை சீராக்க முடியும்.

பணம் அச்சிடுவது ஒரு சில நேரங்களில் அவசியமான தீர்வாக இருக்கலாம். ஆனால், அதை சிறந்த கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தவில்லை என்றால், அது பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். ஆகையால், பண அச்சிடல் என்பது ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் போல; அதைச் சரியாக கையாளுதல் அவசியமாகும்.

https://www.virakesari.lk/article/213255

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.