Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-131.jpg?resize=750%2C375&ssl

தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு நடந்த கதி!

தனது 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரச அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டிகே, குற்றவாளியின் வாக்களிக்கும் உரிமை உட்பட அவரது சிவில் உரிமைகளை இரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் ரூ. 20,000 அபராதம் விதித்தார்.

ஒரு அரசு அதிகாரியாக, குற்றவாளி தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படக்கூடிய பெண்ணிடமிருந்து பாலியல் இலஞ்சம் கேட்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் 2025 மார்ச் 31, அன்று நடந்தது.

அப்போது தேவையான நிதி உதவியை அங்கீகரிப்பதற்காக பாலியல் இலஞ்சம் கேட்டதாக அந்த அதிகாரி குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் அந்தப் பெண்ணை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார், அங்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

விரிவான விசாரணைக்குப் பின்னர், குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பினை அறிவித்தது.

இதன் மூலம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

https://athavannews.com/2025/1431447

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக நிதி பெறச் சென்ற தாய்; பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரி - நீதிமன்றம் அளித்த தீர்ப்பு! 

09 MAY, 2025 | 05:32 PM

image

திஸ்ஸமஹாராமவில் 7 வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதி உதவியைப் பெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்காக, மூன்று குழந்தைகளின் தாய் ஒருவரிடம் (வயது 30) பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு இன்று (9) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் இந்த தண்டனை 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், பிரதிவாதியின் வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2015 மார்ச் 31ஆம் திகதி  திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த, நோயால் பாதிக்கப்பட்ட தனது 7 வயது பிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசாங்கத்தின் நிதி உதவியைப் பெறுவதற்கான அனுமதி வேண்டிச் சென்ற தாயிடம், திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பாலியல்  இலஞ்சம் கோரியுள்ளார். 

இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம்  அந்த தாய் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பின்னர், அந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அந்த தாய், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரால் அழைத்துச் செல்லப்பட்டபோது, மடக்கிப் பிடித்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து,  சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வந்தது. 

இந்நிலையில் இன்று நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி  நிரூபிக்கப்பட்டது. 

அரச உத்தியோகத்தராக கடமையாற்றிக்கொண்டு பெண்ணிடம் சந்தேக நபர் பாலியல் இலஞ்சம் கோரியதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் குற்றத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, இலேசான தண்டனை விதிக்க முடியாது என்பதை கருத்திற்கொண்டு இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/214301

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.