Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விமானப் படைத்தள தாக்குதல் உணர்த்துவது என்ன?

Featured Replies

விமானப் படைத்தள தாக்குதல் உணர்த்துவது என்ன?

-சிவஒளி-

உலகிலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக விடுதலைப்புலிகளே உள்ளனர். அவர்களை போரின் மூலம் வெல்ல முடியாது என்று, இன மோதல்கள் தொடர்பான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெரார்ட் சாலியண்ட் கருத்து தெரிவித்திருந்தார். ஜெரார்ட் சாலியண்ட் ""கள யதார்த்தம் தெரியாமல் பேசியுள்ளார்' என்று அதற்குப் பதிலடியாக பேசினார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய.

இருவருடைய கருத்துக்களும் வெளிவந்து மூன்று நாட்களுக்குள் அநுராதபுர வானூர்தி தளத்தின் மீது விடுதலைப்புலிகள் வெற்றிகரமான இருவழி அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தி முடித்துவிட்டு அடுத்த பெரும் தாக்குதலுக்கான இறுதிக்கட்ட திட்டமிடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனடிப்படையில் பார்க்கும் போது, ஸ்ரீலங்காவினுடைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவா அல்லது ஜெரார்ட் சாலியண்டா களயதார்த்தம் தெரியாமல் பேசியுள்ளனர் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிட்டு, அநுராதபுர வானூர்தித் தளத்தின் மீதான எல்லாளன் நடவடிக்கையையும் அதன் போரியல் பரிமாண போக்கையும், விடுதலைப்புலிகளின் ""மௌன காப்பு' மற்றும் தாக்குதல் உணர்த்தும் சேதி போன்வற்றையும் கீழே நோக்குவோம்.

இலங்கைத் தீவில் ஸ்ரீலங்காப் படைகளுக்கு சொந்தமாக ஐந்து பிரதான வானூர்தி தளங்கள் இரத்மலானை, பலாலி, சீனன்குடா, கட்டுநாயக்கா, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன. இவற்றில் இரத்மலானை, கட்டுநாயக்கா ஆகிய வானூர்தித் தளங்கள் மேல் மாகாணத்திலமைந்துள்ளன. ஏனையவை வடகிழக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திலமைந்துள்ளன. இந்த வானூர்தித் தளங்கள் பரந்து இருப்பினும், மேற்கூறிய வானூர்தித் தளங்கள் ஐந்திலும் விடுதலைப்புலிகளின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் அனைத்து தாக்குதல்களும் ஊடுருவி தாக்குதல்களாகவே அமைந்துள்ளன. அந்த தாக்குதல்களை ஆராய்கின்ற போது, காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் தாக்குதல் திட்டங்களை விடுதலைப்புலிகள் மேற்கொள்வதையும் ஒவ்வொரு தாக்குதலின் பின்னரும் விடுதலைப்புலிகளின் படிநிலை வளர்ச்சியடைவதையும் காணமுடிகிறது.

வானூர்தி தளம் மீதான முதலாவது தாக்குதல் 1980 களின் நடுப்பகுதியில் இரத்மலானை வானூர்தித் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவ்ரோ வானூர்தியை குண்டுவைத்து தகர்த்ததுடன் ஆரம்பமானது. லெப்.கேணல். ராதாவே அந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாயகம் திரும்பியிருந்தார். அதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் வானூர்தி எதிர்ப்பு பிரிவுக்கு" ராதா வானூர்தி எதிர்ப்பு படையணி' என்ற பெயர் சூட்டப்பட்டது.

இரண்டாவது தாக்குதல் 1990 களின் ஆரம்பத்தில் பலாலி கூட்டுப்படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது. முற்று முழுதான வெற்றியை குறித்த தாக்குதல் அளிக்கவில்லையாயினும் பின்னர் இடம்பெற்ற வெற்றிகரமான தாக்குதல்களுக்கான சிறந்த அனுபவத்தை வழங்கியிருந்தது. 1991 இல் இடம்பெற்ற ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல் வெளிச் (ஆ.க.வெ.) சமரில் ஏற்பட்ட பின்னடைவினூடாகப் பெறப்பட்ட அனுபவம் விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு எப்படி வழிகோலியதோ, அதுபோன்ற ஒரு தாக்குதலாகவே பலாலி படைத்தளம் மீதான தாக்குதலும் அமைந்திருந்ததெனலாம். இந்த தாக்குதலில் கெனடி தலைமையிலான சுமார் 15 கரும்புலிகள் பங்குபற்றியதாக நம்பப்படுகிறது.

ஒரு தாக்குதலின் வெற்றியிலிருந்து பெறப்படும் அனுபவத்திலும் பார்க்க தோல்வியிலிருந்து கிடைக்கும் அனுபவங்கள் கனதியானவையும் பயன்மிக்கவையும் ஆகும். அதனை சரிவர பயன்படுத்துவதனூடாக தமது தரப்பின் எதிர்கால தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னெடுக்கமுடியும் என்பது சாத்தியமானது. இதனை விடுதலைப்புலிகள் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.

மூன்றாவது தாக்குதல் திருகோணமலையிலமைந்துள்ள சீனன்குடா விமானப் படைத்தளம் மீது 1997 மார்ச் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அந்த வெற்றிகரமான தாக்குதலின் மூலம் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் சில வானூர்திகள் பாரிய சேதத்திற்குள்ளாகின. அந்த தாக்குதலினூடாக ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சுமார் 125 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தது. அந்த தாக்குதலின் போதும் விமானப்படைக்கு ஏற்பட்ட இழப்பு கணிப்பிடப்பட்டவற்றிலும் பார்க்க அதிகமானது என அன்றைய எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி தெரிவித்திருந்தது. குறித்த தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் வித்தியாசமான உத்தியை கையாண்டார்கள். அதாவது, தமது அணிகள் வானூர்தி தளத்துக்குள் ஊடுருவ முன்னர் வானூர்தி தளம் மீது மோட்டார் குண்டு மழை பொழிந்தார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து படையினர் மீள்வதற்கிடையில், சுமார் 15 பேர் கொண்ட கரும்புலி அணி தனது பாய்ச்சலைக் காட்டியது. இதில் மேஜர் சிற்றம்பலம், கப்டன் நிவிதன், கப்டன் விஜயரூபன் ஆகிய போராளிகள் வீரச்சாவை அணைத்தார்கள் என அன்றைய காலப்பகுதியில் சண்டேரைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

வரலாற்று சிறப்புமிக்க தாக்குதல்களில் ஒன்றான நான்காவது தாக்குதல் கட்டுநாயக்கா வானூர்தி தளம் மீது மேற்கொள்ளப்பட்டது. 2001 ஜூலை 24 ஆம் திகதி அதிகாலை 3.50 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சுமார் இரு மணிநேரம் தீவிரமாக இடம்பெற்றது. இதனூடாக சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட இழப்பு ஸ்ரீலங்கா விமானப்படைக்கு ஏற்பட்டது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டு வரவும், உலகம் தமிழர்களின் போரியல் பலத்தை அறியவும் இந்த தாக்குதல் வழியமைத்தது. உலகத்தின் கண்களை திகைப்பில் ஆழ்த்தி, அன்றைய ஆட்சியாளர்களை நிலைகுலைய வைத்து, முப்படையையும், அதிர்ச்சியில் உறைய வைத்து, பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்த அந்த தாக்குதலை 700 ஏக்கர் நிலப்பரப்புக்குள் நின்றபடி சுமார் 15 போராளிகள் மேற்கொண்டிருந்தனர். இந்த கீர்த்தி மிகு தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்ட ஒரு மாவீரனின் தாய், குறித்த தாக்குதலுக்கான வேவு அணியில் பங்கு பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

""ரிவிரச', ""சத்ஜெய', ""எடிபல' இராணுவ நடவடிக்கைகளுக்கு பிற்பாடு, விடுதலைப்புலிகளின் கதை இன்னும் 4 மாதத்துக்குள் முடிவுக்கு வரப்போகிறது என கேணல் ரத்வத்தை காலவரையறை செய்ய, ஓயாத அலைகளாய் எழுந்த புலிகள் இறுதியில் சீனன்குடா வானூர்தி தளத்தில் அதிரடியை நிகழ்த்தினார்கள்.

வன்னிக்குள் புலிகளை துண்டாடி ஏ9 பாதையை படையினரின் போக்குவரத்திற்காக திறக்க முனைந்த ""ஜெயசிக்குறுவின்' முதுகெலும்பை முறித்து கட்டுநாயக்காவின் நெஞ்சில் ஏறி மிதித்து மக்களின் போக்குவரத்திற்காய் பாதையை திறந்துவிட்டனர் புலிகள்.

கிழக்கினை சிங்கள மயப்படுத்தும் நோக்குடன், அதனை ஆக்கிரமித்த பின் ""புலிகளை கிழக்கிலிருந்து முற்றாக விரட்டியடித்து, கிழக்கினை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து விட்டதாக' சிங்களம் கொக்கரித்த போது விடுதலைப்புலிகளின் சிறப்பு கரும்புலிகள் அதன் கழுத்தை நெரித்து கொட்டத்தை அடக்கியுள்ளனர்.

ஈகமும் வீரமும் தீவிரமும் நிறைந்த இந்த தாக்குதல் 2007 அக்டோபர் 22 ஆம் திகதி அதிகாலை 3.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இதில் 21 சிறப்பு கரும்புலிகள் வீரச்சாவை அணைத்துள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சியின் கணக்குப்படி 18 இற்கு மேற்பட்ட வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 660 கோடி ரூபா நஷ்டம் விமானப்படைக்கு ஏற்பட்டுள்ளது.

இறுதியாக கிடைத்த தகவலின்படி 21 வானூர்திகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் எதனையுமே விடுதலைப்புலிகளின் சிறப்பு கரும்புலிகள் விட்டு வைக்கவில்லை. அங்கிருந்த அனைத்து விமானங்களும் அழிக்கப்பட்ட பின்பு மறைவில் நிறுத்தப்பட்டிருந்த யு.ஏ.வி. உளவு விமானத்தை தேடிக்கண்டு பிடித்து அழிக்கும் நிலையில், புலிகளின் மேலாண்மை அந்த தாக்குதலில் நிலவியது. இதனை ஆழமாக அலசும் போது இந்த தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை ஆரம்பத்திலிருந்து தாக்குதல் மேற்கொள்வதற்கான இறுதி நிமிடம் வரை துல்லியமாக சேகரிக்கப்பட்டுள்ளது. அதனூடாகவே அதிகளவான வானூர்திகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நாளும் கணக்கிலெடுக்கப்பட்டுள்ளது. பலாலிக் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதலினூடாக முகமாலையிலிருந்து வன்னியை நோக்கி மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டதோ, அதேபோல் மன்னார் மாவட்டத்திலிருந்து வன்னியை நோக்கி மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் எல்லாளன் நடவடிக்கை மூலம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.