Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குதிரை ஓடிப் போனபின் சேணத்தை தேடுகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் இயக்கத்தினர் அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது ஏன் தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற கேள்விக்கு அரச தரப்பினர் கூறியது யாதெனில், புலிகள் இயக்கம் கிழக்கில் ஏற்பட்ட படுதோல்வியை மறைத்து தாம் பலமான நிலையிலேயே இருப்பதாக மக்களுக்கும் அரசுக்கும் காட்டுவதற்காகவே இவ்வாறு அநுராதபுரத்தில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பதே.

அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் முக்கியத்துவத்தை நோக்கினால், அது மிகப்பெரிய விமானப்படைப் பயிற்சி முகாமாகவும் (Airforce Training Center) முக்கியமான விமானப்படையின் ஆகாயப்பரப்பு காண்காணிப்புக் கேந்திர நிலையமாகவும் (Aerial Survaillance Center) வன்னிப் பிரதேச படை நடவடிக்கைகளுக்குமான அனைத்துத் தேவைகளையும் வழங்கும் நிலையமாகவும் (Logistic Base) கடற்படை நடவடிக்கைகளுக்காக கடற்கண்காணிப்பை மேற்கொள்ளும் கேந்திர நிலையமாகவும் (Maritime survaillance Center) இவ்வாறு நான்கு முக்கியத்துவங்களை உடையதாக விளங்குகின்றது.

வடக்கு, கிழக்கில் அனைத்து முப்படை நடவடிக்கைகளுக்கும் அத்தியாவசியமான கேந்திர நிலையமாகவும் விமானப்படைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் பிரதான முகாமாகவும் அநுராதபுரம் விமானப்படை முகாம் தொடர்கள் அமைந்திருப்பதை புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவினர் முன்னரே தெளிவாக அறிந்திருந்தனர். இவ்வாறு அநுராதபுரம் விமானப்படை முகாம் பற்றிய அனைத்து தகவல்களையும் புலிகள் இயக்கத்தினர் அறிந்திருந்தனர் என்பதை அவர்கள் மேற்கொண்டிருக்கும் தாக்குதல்களிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

இவ்வாறு விமானப்படைத் தளத்தில் ஏற்கனவே பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பாரதூரமான குறைபாடுகள் இருந்துள்ளன. அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டவர் ஜெற்விமானம் செலுத்துநர் ஒருவரே.

அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்திய உடனேயே பாதுகாப்பு அதிகாரிகள் செய்திருக்கவேண்டிய முக்கிய செயற்பாடு யாதெனில், அந்த முகாம்களிலிருக்கும் அனைத்து கையடக்கத் தொலைபேசிகளையும் தமது பொறுப்பில் எடுத்து 20 ஆம் திகதிக்கும் 22 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அநுராதபுரம் கையடக்கத் தொலைபேசி வலையமைப்பு மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்ட செய்திகள், தகவல்களையும் அவற்றைப் பரிமாறிய நபர்கள் விபரங்களையும் அறிந்து விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டியதே ஆகும். இந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியதன் முக்கிய காரணம் தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகள் இயக்கத்தினரிடம் இருந்த `வோக்கிரோக்கி' ஒன்றும் மற்றும் 13 கையடக்கத் தொலைபேசிகளும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதே. தாக்குதல்களுக்காக வந்த புலிகள் இயக்கத்தினர் தாக்குதலை மேற்கொள்ள முன்னர் மேற்படி தொலைபேசிகள், `வோக்கிடோக்கி' மூலம் தகவல்களைப் பரிமாறியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.

அத்துடன் தாக்குதலை மேற்கொண்ட கரும்புலிகள் அணியினர் விமானப்படையினர் அணிவது போன்று சீருடைகளுடனும் யுத்தத் தாக்கிகளை அழிக்கும் `லோ' எனப்படும் ஆயுதங்களுடனும் அநுராதபுரம் நகருக்குள் நுழைந்து நடமாடும்வரையில் பாதுகாப்பு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதே மக்கள் கிளப்பும் பாரதூரமான பிரச்சினையாகும். மற்றுமொரு துரதிர்ஷ்டமான சம்பவம் என்னவென்றால், வவுனியாவிலிருந்து அநுராதபுரத்துக்குப் பறந்துகொண்டிருந்த பெல் 212 வகை ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகும். இதிலிருந்து கிளப்பப்படும் மற்றுமொரு பிரச்சினை. இவ்வாறு எதிரியின் விமானத்தையும் விமானப்படை விமானம், ஹெலிகொப்டர்களையும் அடையாளம் காணும் எந்தவொரு கண்காணிப்பு முறையும் அநுராதபுரம் விமானத்தளத்தில் இல்லையா என்பதாகும். மேற்படி ஹெலிகொப்டர் இயந்திரக்கோளாறு காரணமாகவே விழுந்து நொருங்கியதாக அரச பாதுகாப்பு தரப்பில் கூறப்பட்டபோதும் அது சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் இயக்கத்தினரின் விமானங்கள் வவுனியா பிரதேசத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டபோது கொழும்பிலிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனே பிரதிபலிப்பைக் காட்டவில்லை. விமானம் அனுப்பப்பட்டு அது அநுராதபுரத்தை அடையும் முன்னரே புலிகள் இயக்கத்தினர் விமானப்படை முகாமுக்குள் புகுந்துவிட்டனர். எவ்வாறாயினும் விமானப்படை அதிகாரிகள் மின்னேரியாவிலிருந்தவாறு எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டரை அனுப்பியிருக்கலாம்.

புலிகளை அழிக்கவேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்றபோதும் விமானப்படையின் ஒரு பிரிவினர் அதை முடக்குவதற்கு முயன்று வருவது தெளிவாகியுள்ளது. புலிகள் இயக்கத்தினர் `சிலின்' வகை சிறிய விமானங்களில் வந்து குண்டுகளை வீசிவிட்டு செல்லும்வரை அவற்றை அழிக்க விமானப்படைக்கு எந்தவிதமான பதில் தாக்குதல் முறைகளோ கிடையாதா என்பதே மக்கள் தரப்பிலான கேள்வியாகும்.

தீவிர யுத்தச் சூழல் நிலவும் நிலையிலும் புலிகள் இயக்கம் தேசியத் தலைமைகளை முற்றாக அழிக்கத் திட்டமிட்டுச் செயற்படும் நிலையிலும் எதிரிக்கு எதிராக அல்லாது எதிரிக்குச் சாதகமாகக்கூடிய முறையில் மக்களினதும் படையினரினதும் சிந்தனைகளை வேறு திசைகளுக்குத் திருப்பும் சில செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது இந்த நாட்டில் இளைஞர், யுவதிகளிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் `சுப்பர் ஸ்டார்' நிகழ்ச்சித் திட்டங்கள்தான் இவை. புலிகள் இயக்கத் தலைவர் ஒரு தடவை `சிங்களவர்கள் இன்று நடப்பதை சில நிமிடங்களில் மறந்தவிடுவார்கள்' என்று கூறியிருந்தார். அவர் கூறியதுபோலவே தற்போது மேற்படி செயற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறே இதற்கு முன்னரும் பாதுகாப்புப் பிரிவினரையும் மக்களையும் திசைதிருப்பும் சில செயற்பாடுகள் நிகழ்ந்துள்ளன. அதாவது, புலிகளின் பலத்தைப்பற்றிய குறைவான கணிப்பை ஏற்படுத்தி படையினரை திசை திருப்பி உத்வேகத்தைக் குறைக்கும் வகையில் தகவல்கள் அண்மைக் காலங்களில் வெளியிடப்பட்டன. புலிகள் இயக்கம் குண்டுகள், ரவைகள் இல்லாத நிலையில் இருப்பதாகவும் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி விமானத் தாக்குதலில் இறந்துவிட்டதாகவும் கடற்புலிகள் பிரிவுத் தலைவர் சூசை இறந்துவிட்டதாகவும் பிரபாகரனுக்குப் பதில் பொட்டு அம்மான் புலிகள் இயக்கத்தலைவராகப் பொறுப்பெடுத்துள்ளதாகவும் அண்மைக் காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான தகவல்கள் பாதுகாப்பு படையினரைத் திசைதிருப்பும் நோக்கத்துடனேயே வெளியிடப்பட்டன. இவ்வாறு தவறான தகவல்கள் மூலம் திசைதிருப்பும் செயற்பாடுகளைப் புலிகள் இயக்கத்தின் தகவல் வலையமைப்பு (Dis information Unit) கொழும்பில் இயங்கிவருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அது தொடர்ந்து இயங்கி வருகிறது. தற்போது அநுராதபுரம் விமானப்படைத்தளம் தாக்குதல் பற்றி விசாரணை செய்ய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமானப்படைத்தளத் தாக்குதலின் பின்னரும் இவ்வாறு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்தக்குழு செய்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை.

அண்மையில் பிரிடிஷ் `ஸ்கொட்லான்யாட்" பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி இங்கு நிகழ்ந்த மாநாடு ஒன்றில் பங்குபற்றியபோது "பல சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பு படையினரின் இயலாமைக்குக் காரணம் குறித்து பாதுகாப்புப் பிரிவுகளில் அவற்றுக்கு ஏற்ற தகுதியுடைய படையினர் நியமிக்கப்படாமல் இருப்பதே" என்று கூறியிருந்தார். அநுராதபுரம் விமானப்படைத் தளத்தாக்குதல் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். குறைந்தது இப்படியான தாக்குதல்கள் படைமுகாமை எதிரிகளிடமிருந்து பாதுகாத்தல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களையாவது மேற்படி பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தது கிடையாதா என்று கேட்டவேண்டியுள்ளது. ஜேர்மன் படைமுகாம்களிலுள்ள பாதுகாப்புக் கம்பிவேலியை வெட்டி எதிரிகள் உள்ளே நுழைவதைச் சித்திரிக்கும் பல்வேறு யுத்தத் திரைப்படங்கள் இந்த நாட்டில் திரையிடப்பட்டு விட்டன.

புலிகள் இயக்கத்தினரும் அநுராதபுரம் விமானப்படைத்தளத்திலுள்ள கம்பிவேலியை வெட்டியே உள்ளே நுழைந்ததாகத் தெரியவந்துள்ளது. அந்தக் கம்பிவேலிக்கு அருகில் நிலக்கண்ணிகள் கூட புதைக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே நடமாட்டத்தைக் காட்டும் வீடியோ கமரா, உபகரணங்கள் கூட அங்கு இருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்தக் குறைபாடான நிலையில் குதிரை ஓடிப்போன பின் சேணத்தைத் தேடும் கொள்கையை விமானப்படை உயர் அதிகாரிகள் கடைப்பிடிப்பதையே தெளிவாகக் காணமுடிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான பாதுகாப்புக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான உடனடியான தீவிர கவனத்தைச் செலுத்த வேண்டும்.

திவயின விமர்சனப் பகுதி: 26-10-2007

எல்லாவிடயமும் உலகுக்குத் தெரிந்ததுதான். ஒன்றைத்தவிர. அதுதான் தாக்குதல் திட்டம். அது அறியப்படுவதற்கு முடியாது என்றே நான் நினைக்கின்றேன். சோணம் கூட இவர்களின் கைகளிலில்லை. எல்லாமே எரிந்த சாம்பர்தான். அதில் எதைத்தேடிப் பிடிப்பது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.