Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12 JUN, 2025 | 09:26 AM

image

(நமது நிருபர்)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வழக்குடன் தொடர்புபட்டதாக ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உள்ளடங்கலாக 10 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்ற ட்ரயல் அட்பாரில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட பலர் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ புலனாய்வுப்பிரிவில் பணியாற்றியவர்களாவர்.

இந்நிலையில் இவ்வழக்கில் பிரதான சாட்சியாளரான சுரேஷ்குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன அச்சுறுத்தியதாக சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் விசாரணைப்பிரிவின் தலைவர் நேற்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

ஷம்மி குமாரரத்னவின் தனிப்பட்ட கையடக்கத்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பலமுறை சுரேஷ்குமார் அச்சுறுத்தப்பட்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் விடயங்களைப் பரிசீலித்த திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஷம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

https://www.virakesari.lk/article/217221

  • கருத்துக்கள உறவுகள்

பிரகீத் எக்னெலிகொட வழக்கு – பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது

adminJune 11, 2025

Prageeth-Eknaligoda.jpg?fit=660%2C660&ss

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபா் இன்று
இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  நிலையில்  இந்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஜனவரி 24 அன்று கடத்தப்பட்டார் இது சம்பந்தமான  வழக்கு தொடர்பாக, சட்டமா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது அவர்களுக்கெதிரான  விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையிலேயே  இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் எக்னெலிகொட வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஸ் குமாா் என்பவரை  ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன பலமுறை மிரட்டியதாகவும் , பிரிகேடியாின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும்  பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் விசாரணை அதிகாரி முறையிட்டுள்ளாா்

அத்துடன் 2025 ஜூன் 6ஆம் திகதியன்று, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் அதே தொலைபேசி எண்ணிலிருந்து சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தநிலையில் சாட்சிகளை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் ஆராயப்பட்டு, சரிபார்க்கப்பட்டுள்ளதை விசாரணைப் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், நடந்து வரும் விசாரணைக்காக எதிர்வரும் 13 ஆம் திகதியன்று, நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் அவரை முன்னிலைப்படுத்துமாறும் திருகோணமலை நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது

https://globaltamilnews.net/2025/216668/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.