Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 JUN, 2025 | 07:18 PM

image

தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சனிக்கிழமை (14) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தமிழ் தாய்மார்களான எங்கள் போராட்ட பயணம் 3036 வது நாளாக, தொடர்கிறது.

எங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டுமென்ற தவிப்போடு மட்டுமன்றி, இனப்படுகொலையிலிருந்து எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்கவும், தமிழர் இறையாண்மைக்கு சர்வதேச ஆதரவைக் கோரவும், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒரு காலத்தில் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

அரசியல் தீர்வு ஒன்றுதேவை என யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கும் அதன் பின்னணியில் இருந்த பங்களிப்பாளர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம், வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வரை எந்த தீர்வும் இல்லை. எங்கள் கண்ணீர் மட்டும் தொடர்கிறது.

இன்று, அமைதிக்கு பதிலாக, இலங்கையின் வடகிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. புலனாய்வு அமைப்புகள் பொதுமக்கள் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்துகின்றன.

அதே நேரத்தில் அரசுடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் பாலியல் சுரண்டல் தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் அச்சுறுத்துகின்றன.

நாங்கள் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வது என்று தெரிகிறது. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும், தைரியத்தையும், சர்வதேச ஈடுபாட்டின் மூலம் இறையாண்மையைப் பெற்ற பிற ஒடுக்கப்பட்ட நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள எந்த முயற்சியையும் காட்டவில்லை.

அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுப்பேற்க வைக்கவோ அல்லது போருக்குப் பிறகு தமிழ் மக்கள் அனுபவித்த துரோகத்தை சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டவோ தவறிவிட்டனர்.

எனவே தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு தமிழரும் எழுந்து சர்வதேச ஈடுபாட்டைக் கோர வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

தமிழர் இறையாண்மை மட்டுமே தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், முழுக் குடிமக்களுக்கும் நிலையான அமைதியை கொண்டு வரும் என்றனர்.

IMG_20250614_124910.jpg

IMG_20250614_124502.jpg

IMG_20250614_124554.jpg

IMG_20250614_124813__1_.jpg

https://www.virakesari.lk/article/217475

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழருக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்தன, நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பல தமிழத்தலைவர்களுடன் உடன்படிக்கைகள் கைச்சசாத்திடப்பட்டன அவைகள் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டன, கிழித்தெறியப்பட்டன, வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டன. இதற்கு ஒவ்வொரு இனவாதியும் பிக்குகளும் விடுக்கும் அச்சுறுத்தல்கள், நினைவூட்டல்கள், முந்தைய வரலாறுகள் சாட்சி. அப்படியிருக்கும்போது போரின்போது மஹிந்த அரசாங்கம் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குமூலம், புலிகளை அழித்த பின்பே தமிழர்க்கு தீர்வு என நிபந்தனை வைத்தார். அப்போ, தமிழருக்கு அரசியல் பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அது ஏன், அளிக்கப்போகும் தீர்வை புலிகள் இருக்கும்போது அளித்திருக்கக்கூடாது? புலிகளும் அந்த தீர்வுக்காகவே போராடினர். ம்.... அத்தனை வருடங்களாக உடன்படிக்கை செய்து, தமிழ்த்தலைமைகளின் ஆதரவை பெறுவதும், பின் கிழித்தெறிவதும் கலவரங்களால் அடக்குவதும் வரலாறு. அதனால் இந்தப்போக்கு தொடர்வதையே சிங்களம் விரும்பியது. அதற்குமேல் தமிழ் தலைவர்கள் செல்ல முயலவில்லை, விரும்பவில்லை. இதனால் எதை காட்டி நம்மை அச்சுறுத்தினார்களோ அதை தமிழ் இளைஞர்கள் கையில் எடுத்து, திருப்பி அச்சுறுத்த தொடங்கினார்கள். ஆயுதத்தின் வலிமை சிங்களத்திற்கு தெரியும், அதன் அழிவை தமிழர் சந்தித்தனர், அந்த அழிவை சிங்களம் ஏற்று தோற்றுப்போக விரும்பவில்லை. அடிபணிந்து தீர்வை கொடுத்து முதுகு வளைந்து உழைக்க விரும்பவில்லை. அது, தன் போன்ற கருத்துள்ள, சுய கௌரவத்தை விற்ற தமிழரையே தனது ஆயுதமாக பயன்படுத்தி, அவர்களின் விடுதலைப்போரை பயங்கரமாக்கியது. எமது தமிழ் தலைமைகள் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அன்றும் தவறிவிட்டனர். ஏனெனில் புலிகள் பக்கம் அதிகாரம் போவதை அவர்களும் விரும்பவில்லை. அதனால் நாட்டை விட்டு ஓடி மறைந்தார்கள். மக்களோடு நிற்க, அவர்களை தேற்ற, அவர்களுக்காக பேச யாரும் முன்வரவில்லை, காணாமல் போய் விட்டனர். மக்கள், அவர்களை தம் தலைவர்களாக தெரிந்தெடுத்ததன் பயன் அது. அப்போது எந்த நாட்டிலிருந்து யாராவது பேச்சுவார்த்தைக்கு வரும்போதெல்லாம், தங்களுக்காக பேசும் மீட்பர்களாக மக்கள் நம்பினார்கள். அங்கே தங்களுக்காக அவர்களுடன் பேச யாரும் முன்வரவில்லை. ஏதேதோ காரணங்களை சொல்லி புலிகளை, மக்களை கொன்று குவித்தார்கள். நிறைவில் கோத்தா சொன்னா(ன்)ர் புலிகளை அழித்து வெற்றி கொண்டு விட்டோம், ஆதலால் தமிழருக்கு இனி தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் இங்கு வாழ விரும்பினால் வாழலாம், ஆனால் அரசியல் உரிமை எதுவும் கேட்க முடியாது. சரத் பொன்சேகா கூறினார், தமிழர் வந்தேறு குடிகள் என்றார். அதன் பொருள் என்ன? இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தது தமிழர், போத்துக்கேயர் ஆட்சிக்கு முன் தமது இராசதானி வைத்து ஆண்டனர் தமிழர், வந்தேறு குடிகளுடனா துட்ட கைமுனு போரிட்டான்? ஏன் இன்னும் நமது தலைமைகள் அடித்து பிடித்து தலைமைக்கு போராடுகிறார்கள்? பழைய ஏமாற்று வித்தைக்கு துணை போவதற்கே. சர்வதேசம் நமக்கு விடிவை தருவதென்றால் எப்போதோ தந்திருக்க முடியும். நமது தலைமைகள் இன்னும் சிங்களத்தை காட்டிக்கொடுக்க, மக்களை காப்பாற்ற விரும்பவில்லை. அதையே சம்பந்தரும் செய்து காட்டினார். இன்று தலைமை என்று சொல்ல யாரும் இல்லாமல் விட்டுச்சென்ற சம்பந்தரை, சர்வதேச ராஜ தந்திரி என்று சொல்வோர், அவரால் நுழைக்கப்பட்டவர்கள் கட்சியை அழிக்க. இதுதான் சம்பந்தர் தனது அரசியலில் சாதித்தது! மக்களை ஏன் என்று கேட்க யாருமில்லாமல் தெருக்களில் தம் உறைவுகளை தேடி கண்ணீரோடு அலைகின்ற்னர். அவர்களைசந்திக்க, அவர்களது துயரங்களை, இழப்புகளை கேட்க, ஆறுதல் சொல்ல, தேற்ற, விடை கொடுக்க விரும்பாத தலைவர்கள் வாக்குகளுக்காக பதவிகளுக்காகஅடிபடுகின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு

15 JUN, 2025 | 03:49 PM

image

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்  ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றுள்ளது. 

கிளிநொச்சியில் அவர்களது அலுவலகத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி கலந்து கொண்டு  குறித்த ஊடக சந்திப்பபை நடத்தியுள்ளார்

இவ் ஊடக சந்திப்பில்  காணாமல் ஆக்கப்பட்ட தங்களது  பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும்  அதற்கான நீதியை பெற்று தருவதற்கு இது இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.

அம்பாறை தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு அதன் தலைவிக்கு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அலுவலகத்தை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (16) காலை அம்பாறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடைபெறவுள்ள ஐநா கூட்டத் தொடரிலே தங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துவதுடன் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா பிரதிநிதியிடம் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் தொடுவாய் மன்னார் போன்ற புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும் என்றம் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/217528

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, satan said:

இலங்கையில் தமிழருக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்தன, நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பல தமிழத்தலைவர்களுடன் உடன்படிக்கைகள் கைச்சசாத்திடப்பட்டன அவைகள் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டன, கிழித்தெறியப்பட்டன, வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டன. இதற்கு ஒவ்வொரு இனவாதியும் பிக்குகளும் விடுக்கும் அச்சுறுத்தல்கள், நினைவூட்டல்கள், முந்தைய வரலாறுகள் சாட்சி. அப்படியிருக்கும்போது போரின்போது மஹிந்த அரசாங்கம் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குமூலம், புலிகளை அழித்த பின்பே தமிழர்க்கு தீர்வு என நிபந்தனை வைத்தார். அப்போ, தமிழருக்கு அரசியல் பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அது ஏன், அளிக்கப்போகும் தீர்வை புலிகள் இருக்கும்போது அளித்திருக்கக்கூடாது? புலிகளும் அந்த தீர்வுக்காகவே போராடினர். ம்.... அத்தனை வருடங்களாக உடன்படிக்கை செய்து, தமிழ்த்தலைமைகளின் ஆதரவை பெறுவதும், பின் கிழித்தெறிவதும் கலவரங்களால் அடக்குவதும் வரலாறு. அதனால் இந்தப்போக்கு தொடர்வதையே சிங்களம் விரும்பியது. அதற்குமேல் தமிழ் தலைவர்கள் செல்ல முயலவில்லை, விரும்பவில்லை. இதனால் எதை காட்டி நம்மை அச்சுறுத்தினார்களோ அதை தமிழ் இளைஞர்கள் கையில் எடுத்து, திருப்பி அச்சுறுத்த தொடங்கினார்கள். ஆயுதத்தின் வலிமை சிங்களத்திற்கு தெரியும், அதன் அழிவை தமிழர் சந்தித்தனர், அந்த அழிவை சிங்களம் ஏற்று தோற்றுப்போக விரும்பவில்லை. அடிபணிந்து தீர்வை கொடுத்து முதுகு வளைந்து உழைக்க விரும்பவில்லை. அது, தன் போன்ற கருத்துள்ள, சுய கௌரவத்தை விற்ற தமிழரையே தனது ஆயுதமாக பயன்படுத்தி, அவர்களின் விடுதலைப்போரை பயங்கரமாக்கியது. எமது தமிழ் தலைமைகள் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அன்றும் தவறிவிட்டனர். ஏனெனில் புலிகள் பக்கம் அதிகாரம் போவதை அவர்களும் விரும்பவில்லை. அதனால் நாட்டை விட்டு ஓடி மறைந்தார்கள். மக்களோடு நிற்க, அவர்களை தேற்ற, அவர்களுக்காக பேச யாரும் முன்வரவில்லை, காணாமல் போய் விட்டனர். மக்கள், அவர்களை தம் தலைவர்களாக தெரிந்தெடுத்ததன் பயன் அது. அப்போது எந்த நாட்டிலிருந்து யாராவது பேச்சுவார்த்தைக்கு வரும்போதெல்லாம், தங்களுக்காக பேசும் மீட்பர்களாக மக்கள் நம்பினார்கள். அங்கே தங்களுக்காக அவர்களுடன் பேச யாரும் முன்வரவில்லை. ஏதேதோ காரணங்களை சொல்லி புலிகளை, மக்களை கொன்று குவித்தார்கள். நிறைவில் கோத்தா சொன்னா(ன்)ர் புலிகளை அழித்து வெற்றி கொண்டு விட்டோம், ஆதலால் தமிழருக்கு இனி தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் இங்கு வாழ விரும்பினால் வாழலாம், ஆனால் அரசியல் உரிமை எதுவும் கேட்க முடியாது. சரத் பொன்சேகா கூறினார், தமிழர் வந்தேறு குடிகள் என்றார். அதன் பொருள் என்ன? இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தது தமிழர், போத்துக்கேயர் ஆட்சிக்கு முன் தமது இராசதானி வைத்து ஆண்டனர் தமிழர், வந்தேறு குடிகளுடனா துட்ட கைமுனு போரிட்டான்? ஏன் இன்னும் நமது தலைமைகள் அடித்து பிடித்து தலைமைக்கு போராடுகிறார்கள்? பழைய ஏமாற்று வித்தைக்கு துணை போவதற்கே. சர்வதேசம் நமக்கு விடிவை தருவதென்றால் எப்போதோ தந்திருக்க முடியும். நமது தலைமைகள் இன்னும் சிங்களத்தை காட்டிக்கொடுக்க, மக்களை காப்பாற்ற விரும்பவில்லை. அதையே சம்பந்தரும் செய்து காட்டினார். இன்று தலைமை என்று சொல்ல யாரும் இல்லாமல் விட்டுச்சென்ற சம்பந்தரை, சர்வதேச ராஜ தந்திரி என்று சொல்வோர், அவரால் நுழைக்கப்பட்டவர்கள் கட்சியை அழிக்க. இதுதான் சம்பந்தர் தனது அரசியலில் சாதித்தது! மக்களை ஏன் என்று கேட்க யாருமில்லாமல் தெருக்களில் தம் உறைவுகளை தேடி கண்ணீரோடு அலைகின்ற்னர். அவர்களைசந்திக்க, அவர்களது துயரங்களை, இழப்புகளை கேட்க, ஆறுதல் சொல்ல, தேற்ற, விடை கொடுக்க விரும்பாத தலைவர்கள் வாக்குகளுக்காக பதவிகளுக்காகஅடிபடுகின்றனர்.

மிக தெளிவான கருத்துக்கள்.👍

தமிழ் அரசியல்வாதிகள் தம் பதவிக்காக எந்த சாக்கடையிலும் இறங்குவார்கள்.

சிங்கள அரசியல்வாதிகள் கட்சி பேதம் மறந்து தம் இனத்திற்காக தோழோடு தோழ் நிற்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.