Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 58

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 58 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இலங்கையை ஆண்ட முதல் அரசி அனுலா [அனுலாதேவி]'

வட்டகாமினி மூன்று பிடகங்களையும் [திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும். பிடகம் என்பது கூடை அல்லது திரட்டு எனப்பொருள்படும். அதன்படி மூன்று வகையான போதனைத் திரட்டுகளை திரிபிடகம் கொண்டுள்ளது. அவை: சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவையாகும். இந்த மூன்று பிடகங்களில் அடங்கிய இருபத்தொன்பது நூல்களையும் பௌத்த சமயத்தின் மூல நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற் கூறப்படும் சமயக்கொள்கைகளே தேரவாதம் என்று கருதப்படுபவை.] அட்டகதாவையும் [அட்டகதா, பண்டைய இந்தியா மற்றும் இலங்கையின் சமூகம், கலாச்சாரம் மற்றும் மத வரலாறு பற்றிய பல தகவல்களை வழங்கும் பாலி பௌத்த நியதியின் வர்ணனைகள். / atthakatha, commentaries on the Pali Buddhist canon that provide much information on the society, culture, and religious history of ancient India and Sri Lanka.] புத்தக வடிவில் எழுதினார். ஆனால், இவை எந்த மொழியில் எழுதப்பட்டன என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் கட்டாயம் சிங்கள மொழியில் இல்லை, காரணம் அப்பொழுது சிங்கள மொழி என்று ஒன்று உலகிலேயே இல்லை.

மகசுழி மகாதிஸ்ஸ [மகசுழி மகாதீசன் / Mahaculi Mahatissa], வட்டகமணியின் மரணத்திற்குப் பிறகு, பதினான்கு ஆண்டுகள் நீதியாகவும் நேர்மையாகவும் ஆட்சி செய்தார். அவரும் பல நல்ல வேலைகளைச் செய்திருப்பதாகத் தோன்றியது. எனினும் அவருடைய பூர்வீகம் தீபவம்சத்தில் கூறப்படவில்லை. பின்னர் வட்டகமணியின் மகன் சோரநாகன் [Chora Naga also known as Coranaga or Mahanaga] பன்னிரண்டு ஆண்டுகள் கொள்ளையனாக ஆட்சி செய்தான். சோரநாகாவிற்குப் பிறகு, மகசுழி மகாதீசனின் மகன் குட்ட திச்சன் அல்லது குட திச்சன் [Kuda Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

பின்னர் அரசன் முதலாம் சிவன் அல்லது சிவா [Siva I] அனுலாவுடன் இணைந்து ஓராண்டு இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தான். பின்னர் ஒரு வெளிநாட்டில் இருந்து வடுகன் [வடுகா / Vatuka / அனுலாவின் இன்னும் ஒரு துணைவன். பின்னர் அவளால் விஷம் கொடுக்கப்பட்டார். இவர் முதலில் அனுராதபுரத்தில் தச்சராக இருந்தார்.] என்ற பெயருடைய ஒரு ராஜா, ஒரு தமிழன், ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். இங்கு வடுகா ஒரு தமிழன், 21 - 27, வெளிநாட்டிலிருந்து வந்தவன் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் ஒரு தமிழன் வெளிநாட்டிலிருந்து வந்ததாக உள்ள ஒரே ஒரு உதாரணம் இதுதான்!. அதன் பிறகு, திஸ்ஸ [தருபாதுக திச்சன் / Darubhatika Tissa] என்ற விறகு வெட்டுபவன் ஒரு வருடம் ஒரு மாதம் ஆட்சி செய்தான். அப்போது தமிழ் மன்னன் என்றழைக்கப்படும் நிலயா [நிலியன் / Nilaya or Niliya] என்ற நபர் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். இந்த தமிழ் மன்னன் இந்தியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படவில்லை. அனுலா என்ற பெண் இந்த சிறந்த மேற்கூறிய நபர்களைக் கொன்று நான்கு மாதங்கள் இறுதியாக தானே ஆட்சி செய்தாள். அந்த சிறந்த மனிதர்கள் யார் என்று துல்லியமாக கூறப்படவில்லை என்றாலும், அவர்கள் திஸ்ஸ, சிவா, வடுகா, (மற்றொரு) திஸ்ஸ, மற்றும் நிலயா [Tissa, Siva, Vatuka, (another) Tissa, and Nilaya] என்று தெரிகிறது, சோரநாகன் ஒரு கொள்ளைக்காரனைப் போல ஆட்சி செய்ததால் சோரநாகனை சிறந்த நபராக விவரிக்கப்பட மாட்டார் என்று எண்ணுகிறேன். பின்னர் மகசுழி மகாதீசனின் இரண்டாவது மகன் குடகன்ன திஸ்ஸன் அல்லது குடகன்ன தீசன் [Kutakanna Tissa, also known as Makalan Tissa] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அத்தியாயம் 21: குடகன்ன தீசனின் மகனான இளவரசர் பாதிகாபய அபயன் அல்லது பட்டிகாபய அபயா (Bhatikabhaya Abhaya), பிக்குகளுக்கும் புத்த மதத்திற்கும் நிறையச் நம்மை செய்து இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். குடகன்ன தீசனின் மற்றொரு மகன், இளவரசர் மகாதாதிக மகாநாகன் [Mahadathika Mahanaga], இவனும் பிக்குகளுக்கும் புத்த மதத்திற்கும் நிறையச் செய்தார். அவர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். குடகன்ன தீசன் மற்றும் மகாநாகன் என்ற பெயர்கள் குறிப்பிடுவது போல், இவர்களும் தமிழர்களாக இருக்கலாம்? மகாதாதிக மகாநாகனின் மகன் அமந்தகாமினி அபயன் [Amandagamani Abhaya, also referred as Aḍagamunu] ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆட்சி செய்தான். தட்டிக [Dathika] என்பது தமிழ்ப் பெயர், 20-18 ஐப் பார்க்கவும், எனவே மகாதாதிக [மகாதட்டிக] என்பதும் தமிழ்ப் பெயர். இவர் விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அமந்தகாமினி தமிழரான மகாதாதிகாவின் மகன். எனவே அமந்தகாமினியும் தமிழர்தான். எனவே, அவரது தம்பி கனிராஜனு திஸ்ஸனும் [Kanirajanu Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த தமிழனாகத் தான் இருக்க வேண்டும். அமந்தகாமினியின் மகன் சூலபாயன் [Chulabhaya] ஓராண்டு ஆட்சி செய்தான். அமந்தவின் (அமந்தகாமினியின்) மகள் , சிவாலி ரேவதி [Sivali] நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். அமந்தகாமினியின் சகோதரியின் மகன் இளநாகா [Ilanaga, also known as Elunna] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

Part: 58 / Appendix – Dipavamsa / 'The first queen to rule Sri Lanka was Anula [Anuladevi]'

Vattagamani caused the three Pitakas and the Atthakatha to be written in book form. The language in which these were written is not specified. Mahaculi Mahatissa reigned, after the death of Vattagamani, fourteen years justly and righteously. He seemed to have done many meritorious works too. His ancestry is not given in the Dipavamsa. Then Coranaga, son of Vattagamani, ruled like a robber for twelve years. After Coranaga, Mahchuli’s son, Tissa, ruled three years. Then king Siva cohabited with Anula and ruled for one year and two months. Then a king from a foreign country, Vatuka by name, a Damila, ruled for one year and two months. This is clearly stated that Vatuka is a Damila, 21 – 27, and came from a foreign country. This is the only instance in the Dipavamsa that a Damila came from a foreign country. Then a wood cutter by the name Tissa ruled for one year and one month. Then a person called Nilaya, known as the Damila king, ruled for three months. It is not stated that this Damila king came from India. A woman, Anula, killed these excellent persons and ruled for four months. Though it is not stated precisely who those excellent persons are, but it seems that they are Tissa, Siva, Vatuka, (another) Tissa, and Nilaya, as Coranaga wouldn’t have been described as excellent person because he ruled like a robber. Then Mahachuli’s second son, Kuttikannatissa ruled for twenty two years.

Chapter 21: Prince Abhaya, the son of Kuttikanna, did quite a lot to the Bikkhus and to the Buddhism. He ruled for twenty eight years. Another son of Kuttikanna, prince Naga, also did quite a lot to the Bikkhus and the Buddhism. He reigned for twelve years. Kuttikanna and Naga could be Tamils as their names indicate. Amandagamani, the son of Mahadathika ruled for nine years and nine months. Dathika is a Tamil name, see 20-18, and therefore Mahadathika is also a Tamil name. He forbade the killing of animals. Amandagamani is the son of Mahadathika who is a Tamil. Therefore Amandagamani is also a Tamil. His younger brother Kanirajanu must also be a Tamil, ruled for three years. Amandagamani’s son, Culabhaya ruled for one year. The daughter of Amanda (gamani?), Sivali Revathi ruled for four months. Illanaga, a son of Amanda’s sister ruled six years.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 59 தொடரும் / Will follow

துளி/DROP: 1931 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 58]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32716283924686832/?

  • Replies 91
  • Views 3.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் பு

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil &

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 59

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 59 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'சந்தமுகன் சிவா ஒரு தமிழனும் ஒரு சைவனுமே!'

சந்தமுகன் சிவா [Chandamukha Siva] எட்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தார். தமிழாதேவி [Damilidevi / Damiladevi] என்று அழைக்கப்படும் அவரது ராணி மனைவி கிராமத்திலிருந்து கிடைத்த தனது வருவாயை தனது கணவர் மன்னனால் கட்டப்பட்ட அரமாவிற்கு [Arama / பௌத்தத்தில் அரமா என்பது ஒரு துறவற இல்லம்] வழங்கினார். கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார்.[five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன்?. இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன்.


மேலும் பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon]

மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது.

இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.

"பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு." (குறள்-1015)

எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக,
மதுரைக்காஞ்சி 494 - 498

"நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்து,
பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த"

என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த[சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது , மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது.

யசலாலக்க என்ற குடும்பப்பெயர் கொண்ட திஸ்ஸ மன்னன் (Yassalalaka Tissa) எட்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தான். முந்தைய இரண்டு ஆட்சிகளின் நீளம் ஒரேயளவாக, எட்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் என்பது விசித்திரமானது. அதன் பின் வாசல் காவலாளியின் [royal gatekeeper] மகன் சுபகராஜன் அல்லது சுபா [Subha] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அத்தியாயம் 21-ல் உள்ள மேற்கண்ட அரசர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்கலாம்.? தமிழர் என்பதை அவர்களின் பெயர்களிலும் மற்றும் சிவா என்ற பெயர்களின் மூலம் சைவ மதத்தையும் காண்கிறோம்.

Part: 59 / Appendix – Dipavamsa / 'Chandamukha Siva is a Tamilian and a Shaiva or Shaivite!'

Siva Candamuki ruled for eight years and seven months. His queen consort who is known as Damiladevi bestowed her revenues from the village to the Arama built by her husband king. King Tissa with surname Yasalala ruled for eight years and seven months. It is strange that the lengths of the two previous reigns are eight years and seven months. Subha, the son of a doorkeeper, ruled for six years. All the above kings in the chapter 21 could be Tamils.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 60 தொடரும் / Will follow

துளி/DROP: 1932 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 59]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32721565764158648/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 60 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சம் என்பது ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவு மட்டுமே, வேறு எதுவும் இல்லை!'

அத்தியாயம் 22: வசபா மன்னர் [வசபன் / king Vasabha] பல புத்த கட்டிடங்களையும், நீர்ப்பாசனப் பணிகளையும் கட்டினார். அவர் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். வசபாவின் மகன் திஸ்ஸன் [வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் / Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I, also known as Gajabahuka Gamani] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவன், பிரபல சேர (இன்றைய கேரள) மன்னன் செங்குட்டுவன் அழைப்பின் பேரில் இந்திர விழாவில் பங்கேற்க தமிழகம் சென்றார். அவர் திரும்பியவுடன் பத்தினி வழிபாட்டைக் இலங்கைக்கு கொண்டுவந்து, பத்தினி கண்ணகியைப் போற்றும் வகையில் பெரஹெரா விழாவைத் [Perahera festival] தொடங்கினார்.

சயாமிலிருந்து [தாய்லாந்து / Thailand அல்லது முன்னர் சயாம் / Siam ] வந்த துறவிகளின் தூண்டுதலின் பேரில் 1775 கி.பி.க்குப் பிறகுதான் புத்தரின் பல் தாது [Buddha’s tooth relic] திருவிழாவுடன் தொடர்புடையது. பதினெட்டு நூற்றாண்டு பழமையான பத்தினி வழிபாடு மற்றும் பெரஹெரா திருவிழாவுடன் ஒப்பிடும் போது, இந்த பிக்குகள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அத்தியாயங்களை மிக சமீபத்தில் தான் உருவாக்கினர். தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் பெரஹெரா விழா முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிய இராச்சியத்தின் தமிழ் மன்னன் சயாமிலிருந்து (தாய்லாந்து) இந்த துறவிகளை அழைத்தார் என்றும் மற்றும் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பிரிவுகளின் துறவிகள் தான் பெரும்பாலும் அடுத்தடுத்து இலங்கை அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளில் கொடூரமான பங்கைக் கொண்டிருந்தனர் என்பது அண்மைய வரலாற்று உண்மை.

கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகுவின் [Gajabahukagamani or Gajabahu I ] மாமனார் மகல்லக்க நாகன் [Mahallaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். கஜபாகுவின் மகன் பதிக திச்சன் [Bhatika Tissa] இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதன் பின், பதிக திச்சனின் இளைய சகோதரர் திஸ்ஸ (கன்னிததிஸ்ஸ / Kanittha Tissa) பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது மகன் குச்சநாகன் அல்லது சூளநாகன் [Cula Naga, or Khujjanaga, also known as Kuhun Na] தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது இளைய சகோதரர் குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் [Kuda Naga or Kunchanaga] தனது சகோதரனைக் கொன்று ஓராண்டு ஆட்சி செய்தார். முதலாம் சிறிநாகன் [Sirinaga] குஞ்சநாகாவை தோற்கடித்து பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகன் அபயா [Abhaya] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் [22 - 37. The son of Sirināga, the royal lord called Abhaya, .... 38. ... This king governed twenty-two years.] அவரது இளைய சகோதரர் திச்சன் [திஸ்ஸாக / Tissaka] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [22 - 39. His younger brother, known as king Tissaka, ... 45. This royal ruler governed twenty-two years.] . திஸ்ஸாகவின் மகன் இரண்டாம் சிறிநாகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [46. Tissa’s own son, known by the name of Sirināga, reigned full two years over the Island.]. ஆனால், மகாவம்சத்தில், முதலில் திஸ்ஸாக [Tissaka] வையும் அடுத்ததாக அபயா [Abhaya] வையும் ஆட்சி செய்ததாக கூறுகிறது? இரண்டாம் சிறிநாகனின் மகன் விசயகுமாரன் [Vijaya Kumara] தந்தை இறந்த பின் ஒரு வருடம் ஆட்சி செய்தார். முதலாம் சங்க திச்சன் [Sangha Tissa I] நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். இவன், விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன் ஆவான். அதன் பிறகு விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த மற்ற இரு அமைச்சர்களான சிறிகங்கபோதி [Siri Sangha Bodhi I, also known as Siri Sanghabodhi] இரண்டு ஆண்டுகளும், அதன் பின் மற்ற அமைச்சரான கோதாபயன் அல்லது மேகவண்ணாபயன் அல்லது அபய மேகவன்னா [Gothabhaya, also known as Meghavannabhaya, Gothakabhaya, Abhaya Meghavanna and Goluaba,] பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவருடைய மகன் ஜெத்ததிஸ்ஸ [சேட்டதிச்சன் / Jettha Tissa I also referred to as Detu Tiss, Kalakandetu Tissa, and Makalan Detu Tissa] பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். சேட்டதிச்சனின் தம்பியான மகாசேனன் [Mahasena, also known in some records as Mahasen] இருபத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவரது ஆட்சியில் ஒருவித மத மோதல்கள் நடந்தன. உதாரணமாக, மகாசேனன் மற்றும் முதலாம் சேட்டதிச்சன் ஆகிய சகோதரர்கள் இருவரும் சங்கமித்ரர் என்ற சோழ நாட்டு மகாயான பௌத்தம் என்ற பௌத்தப் பிரிவு மதத்தலைவரின் சீடர்களாவர். சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான முதலாம் சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் சங்கமித்ரர் முதலாம் சேட்டதிச்சனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார். ஆனால் மகாசேனனோ தன் அண்ணன் போல் அல்லாமல் சங்கமித்ரர் மகாயான பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு பேருதவிகளை செய்தான். சங்கமித்ரர் கையாலேயே இவனுக்கு முடிசூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவன் காலத்தில் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. மேலும் மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்திருக்கிறான். இன்னும் ஒன்றையும் கவனியுங்கள் இங்கு சங்கமித்ரர், தமிழ் பேசும் ஆண் புத்த பிக்கு, இவரின் பெயர் பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா வுடன் தொடர்பு படுகிறது. அந்த நேரம் தமிழர்களும் மகாயான பௌத்த தழுவியவர்கள் என்பதும் வெள்ளிடை மலை. இதை இலங்கையில், வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வு என்று இன்று ஈடுபடும் முழுக்க முழுக்க சிங்கள நபர்களைக்கொண்ட ஆய்வாளர்களுக்கு புரியாதது எனோ? அல்லது அவர்களுக்கு சரியான நேர்மையான அறிவு இல்லையா ? யாம் அறியேன் பராபரமே! ஆனால் ஒன்று மட்டும் உண்மை, மகாசேனன் மாதிரி, சைவக் கோயில்களை இடித்து அழிப்பதில் மட்டும், பச்சை, நீலம் அல்லது சிவப்பு கொடிகளை ஏந்தினாலும், கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

மொத்தம் 105 பக்கங்களில், அத்தியாயம் 18 முதல் அத்தியாயம் 22 வரை உள்ள சுமார் 16 1/2 பக்கங்களில் மட்டுமே மொத்தம் 61 மன்னர்களில் 54 மன்னர்கள் பற்றி, அதாவது சுமார் 89 சதவீத மன்னர்கள் பற்றி பேசுகிறது. மீதமுள்ள, ஆரம்ப ஆட்சியாளர்கள், நாம் முன்பே விளக்கமாக கூறியது போல, கண்டுபிடிக்கப்பட்ட மன்னர்களாக இருக்க வேண்டும்? எனவே தான் அதற்கான கதைகளை சோடிப்பதற்காக, பல பக்கங்களை எடுத்துள்ளார்கள் போலும்? மேலே காட்டப்பட்டுள்ள அரசர்களில் பெரும்பாலோர், பெயர்களின் அடிப்படையில், ஏற்கனவே விவரிக்கப்பட்ட வாறு, தமிழர்களுடன், தமிழ் பண்பாட்டுடன் தொடர்பு உடையவர்களாகவே தெரிகிறது. மேலும் தீபவம்சத்தின் பெரும்பாலான பக்கங்கள் வரலாற்றை விட, நம்பிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. அதனால்த் தான் மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க் [Hermann Oldenberg] தீபவம்சத்தை "ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவுகள்" என்று அழைக்கிறார். இது பௌத்தத்திற்கு ஆதரவானதே தவிர, என்றும் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. இருபதாம் நூற்றாண்டின் அல்லது அதற்குப் பிறகு, பெரும்பாலான மிகவும் பேராசை கொண்ட துறவிகளும் அரசியல்வாதிகளும், இந்த விசுவாசப் பதிவை, விஷமிகுந்த தமிழர் விரோதமாக மாற்றினார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கு அடியெடுத்து கொடுத்தது, இதன் பின் 150 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மகாவம்சமாக இருக்கலாம்?

Part: 60 / Appendix – Dipavamsa / 'The Dipavamsa is just an ancient Buddhist historical record & nothing else!'

Chapter 22: The king Vasabha constructed many Buddhist buildings, and irrigation works. He ruled forty four years. The son of Vasabha, Tissa, ruled for three years. His son, Gajabahukagamani, ruled twenty two years. He went to Tamilnadu to participate in the Indra Vill(zz)a festival on the invitation of the famous Chera (present day Kerala) king Senggutuvan. He brought the Pattini cult on his return and initiated the Perahera festival to honour the Pattini, Kannagi. Buddha’s tooth relic came to be associated with festival only after 1775 A. D. on the instigation of the monks who came from Siam. These monks formed the Malwatte and the Askiriya Chapters of very recent origin when compared with the eighteen century old procession of the Pattini worship, and the Perahera festival. Perahera festival is first recorded in the Tamil Epic Silappthikaram. Ironically, the Tamil king of Kandyan kingdom invited these monks from Siam (Thailand) and the monks of the Malwatte and the Askiriya Chapters played diabolical role in the anti Tamil pogrom perpetrated by the successive Sri Lankan Governments.

Mahallakanaga, father in law of Gajabahukagamani, ruled for six years. His, Gajabahu’s, son, Bhatutissa, ruled for twenty four years. Younger brother of Bhatutissa, Tissa (Kannithatissa), ruled for eighteen years. His son Khujjanaga ruled for two years after the death of his father. His younger brother Kunjanaga put his brother to death and ruled for one year. Sirinaga defeated Kunjanaga and ruled for nineteen years. His son Abhaya ruled for twenty two years. His younger brother Tissaka ruled for twenty two years. His son Sirinaga ruled for two years. His son Vijayakumara ruled for one year after death of his father. Samghatissa reigned for four years. The king Samghabodhi reigned for two years. Abhaya Meghavanna ruled for thirteen years. His son Jetthatissa ruled ten years. Mahasena, the younger brother of Jetthatissa, ruled for twenty seven years. Some sort of religious conflict took place in his reign.

About 16 pages and a half page, from the Chapter 18 to the Chapter 22, out of the 105 pages speaks about 54 kings out of 61 kings, about 89 percent of the kings. The rest, the purported initial rulers, must be invented kings. Quite a large proportion of the kings, as shown above, are Tamils. The most of the pages of the Dipavamsa are devoted to the Faith than to the history. That is why the translator, Hermann Oldenberg, calls the Dipavamsa as “An ancient Buddhist Historical Records”. It is pro Buddhism, but not anti Tamil. Avaricious and greedy monks and the politicians of the twentyieth century and afterwards without any compunction turned this record of Faith into venomous anti Tamil hatred.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 61 தொடரும் / Will follow

துளி/DROP: 1934 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32744509148530976/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 61

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 61 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம்

மகாவம்சத்தில் குறிக்கப்ட்ட விடயங்களில், என் கருத்துக்களில் இருந்து, உங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் / நம்பிக்கைகள் அல்லது வேறு சான்றுகள் இருக்கலாம். நான் கேள்விகள் அல்லது கருத்துகள் அல்லது பதில்களை இட்ட இடங்களில், உங்களுக்கு வேறுபாடு இருப்பின், அதற்கான உண்மையான ஆதாரங்களுடன் உங்கள் மதிப்புமிக்க கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. இது நமது புரிதல் / அறிவை மேலும் மேம்படுத்துவதோடு நமது எண்ணங்களை / செயல்களையும் சரி செய்யும். நான் எந்த ஒரு குறிப்பிட்ட நபரையும் / நம்பிக்கையையும் விமர்சிக்கவில்லை, மகாவம்சத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமே எனது எண்ணங்களை அங்கு அறிவியல் ரீதியாக பகிர்ந்து கொள்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.

மகாவம்சமானது பாளி மொழியில் வேண்டுமென்றே, தேர்ந் தெடுக்கப்பட்ட நீக்குதல்கள் மற்றும் தாராளவாத சேர்த்தல்களுடன், தீபவம்சத்தின் மறுசீரமைப்பாகக் கருதப்படலாம். கி.பி. நான்காம் நூற்றாண்டில், தீபவம்சம் தொகுக்கப்பட்டு, நூற்று முதல் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மகாவம்சம் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) , Ph. D., 1912 இல் மகாவம்சத்திதினை மொழிபெயர்ப்பு செய்தார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு 271 பக்கங்களைக் கொண்டது. மகாவம்சம் தீபவம்சத்தின் அதே காலகட்டத்தை உள்ளடக்கியிருந்தாலும், தீபவம்சத்தை அடிப்டையாகக் கொண்டு தொகுத்து இருந்தாலும், அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மன்னன் மூலம், தமிழர் விரோத விடயத்தை விதைக்க அதிக எண்ணிக்கையிலான பிரிவுகள் அல்லது அத்தியாயங்கள் ஆக்கப்பட்டு, மிகவும் பெரிதாக்கப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் இருபத்தி இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளன. ஆனால் அதே காலகட்டத்தை உள்ளடக்கிய, மகாவம்சத்தில் முப்பத்தேழு பிரிவுகள் உள்ளன.

துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் விவரிப்பு அத்தியாயம் 22 முதல் அத்தியாயம் 33 வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது; மகாவம்சத்தில் அத்தியாயங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் அது தான். பூர்வீகப் பெண்மணியான இயக்கர் குலம் சேர்ந்த [யக்கினி] குவேனி என்றும்‌ சொல்லப்படும்‌ குவண்ணாவின் அத்தியாயமும் மகாவம்சத்தில் கூடுதலாக உள்ளது. இந்த யக்கினி குவண்ணா பற்றி ஒரு அத்தியாயமும் கூட தீபவம்சத்தில் இல்லை. கதை மற்றப்படி ஒன்றுதான், ஆனால் தமிழருக்கு எதிரான நோக்கம் மகாவம்சத்தில் வலுக்கட்டாயமாக, வெளிப்டையாகக் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

அத்தியாயம் 1: 1-20 ‘... இந்த அத்தியாயத்தில், இயக்கர்களால் (Yaksha) நிரம்பிய இலங்கை நாட்டில், தனது நம்பிக்கையை நிரந்தரமாக நிலை நிறுத்த வேண்டும் என்றால், இயக்கர்கள் (முதலில்) விரட்டப்பட வேண்டும் என்று ஞானம் பெற்ற புத்தரின் இதயத்திலிருந்து வருகிறது. ஆகவே தான் புத்தர், இயக்கர்களை விரட்ட இலங்கை சென்றார். இயக்கர்கள் இலங்கையின் பல பூர்வீக குடிகளில் ஒரு குழுவாக அன்று இருந்தனர். மேலும் இந்த மகாவம்சத்தில், ஞானம் பெற்ற புத்தர், தனது நம்பிக்கையை நிலைநிறுத்த அவர்களை தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்ற விரும்பினார் என்று கூறுகிறது. தீவின் பூர்வீக குடிகளான இயக்கர்களை, அவர்கள் பாரம்பரியமாக ஒன்றுகூடிய போது, கனமழை, இருள், புயல் போன்றவற்றை உருவாக்கி, அவர்களின் இதயத்தில் பயங்கரத்தை உண்டாக்கி, தனது நம்பிக்கைக்காக, நிலத்தை கைப்பற்றுவதற்காக, அவர்களை பயமுறுத்தினார் என்கிறது. ஆதிவாசிகளான இயக்கர்கள், பயத்தில் மூழ்கி, கருணையுள்ள, அன்புவடிவான? புத்தரின் கட்டளைப்படி, கிரிதீபா [Giridipa] என்ற வேறு ஒரு தீவுக்கு [இடத்திற்குச்] செல்ல ஒப்புக்கொண்டனர். இதை 1-17 முதல் 30 வரை மகாவம்சத்தில் பார்க்கவும். இரக்கமுள்ள புத்தரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது அவரின் பலவந்தத்தின் கீழ், தீவின் பூர்வீக குடிகள் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டனர். உலகப் புகழ்பெற்ற உலகத்தை துறந்த புத்தரால், இப்படித்தான் இலங்கைத் தீவு நம்பிக்கைக்குக் கொண்டுவரப்பட்டது என்கிறது?

தமிழர்களுக்கு எதிரான முதல் விஷம் 1 - 41 இல் இருந்து 43 வரை ஏப்பம் விடுகிறது; உதாரணமாக 1 - 41: ' துட்டகாமினி மன்னன் தமிழர்களுடன் போரிட்டபோது, இந்த இடத்தில் தங்கியிருக்க நேரிட்டது. அப்போது இந்தச் சேதியத்தை [ஒரு பௌத்த தூபி அல்லது நினைவுச் சின்னத்தை] எண்பது முழ உயரமுள்ளதாகக் கட்டினான். இந்த விதமாக, மஹியங்கனை தூபம் [Mahiyangana-thupa / மஹியங்கன தூபம் இலங்கையில் உள்ள ஒரு புனித பௌத்த தூபியாகும். இந்த இடம் தான், புத்தர் முதன்முதலாக இலங்கைக்கு வருகை தந்த இடமாக நம்பப்படுகிறது?] இறுதியாக பூர்த்தி ஆயிற்று என்கிறது.

தீபவம்சம் எல்லாளன் என்ற அரசனை தமிழன் என்று அடையாளப் படுத்தவில்லை, ஆனால் மகாவம்சம் துட்டகாமினியின் தமிழர் மீதான போர் என்று கூறுகிறது. தீபவம்சம் எல்லாளனை சோழ நாட்டிலிருந்து வந்தவன் என்று அடையாளம் காட்டவில்லை. அது மட்டும் அல்ல, தென் இந்தியா வரலாற்று குறிப்புகளோ அல்லது இலக்கிய குறிப்புகளோ சோழ இளவரசர்களில் ஒருவரான எல்லாளன் இலங்கைக்குச் சென்று நீண்ட காலம் ஆட்சி செய்ததாகக் எந்த பதிவுகளும் இல்லை. கரிகால் சோழன் [Karikaal Cholan] தமிழர்களின் அன்புக்குரிய மன்னன், நாம் அனைவரும் அறிந்த மூத்த சோழ மன்னன். கரிகால் சோழனுக்கு முந்தைய பிற சோழர்கள் வெறும் இதிகாச அல்லது புராணக்கதை மன்னர்களே [legendary kings]. இருப்பினும், இங்கு எல்லாளன் மன்னன் கரிகால் சோழன் மன்னனுக்கும் முந்தையவன். எனவே, மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமா சோழர்களின் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார் என்று எண்ணுகிறேன்? கரிகால் சோழன் கிபி 90 இல் இருந்தான், ஆனால் எல்லாளன் கி மு 145 முதல் 101 வரை இருந்தான். இன்னும் ஒன்றையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மகாசேனன் (கி பி 277 - 304) காலத்தில் தான் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. இதற்கு முக்கிய காரணம், மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவரான சங்கமித்ரர் ஆகும். இவர், கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார் என்பது வரலாறு. ஆகவே அதன் பின் மகவாசம் எழுதிய தேரவாதத்தை சேர்ந்த மகாநாமாவுக்கு, கட்டாயம் சோழர்கள் மேலும் தமிழர்கள் மேலும் ஒரு வெறுப்பு இருந்து இருக்கும். அதன் விளைவு தான், அவர் கண்டுபிடித்த, பெரிது படுத்தப்பட்ட , தமிழ் சோழ மன்னனும் துட்டகாமினி போரும் என்று எண்ணுகிறேன்?



Part: 61 / Appendix – Summary of the Mahavamsa /

You may have different opinions / beliefs or evidences from me. Where ever I have arised Questions or posted comments / Answers, your valuable comments with true evidences are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought based on the incidents mentioned in each chapters of Mahavamsa, nothing more than else.

The Mahavamsa can be considered as the intentional re-arrangement of the Dipavamsa with selective deletions and liberal additions in choice Pali language. It is believed to be composed in the beginning of the sixth century, about one hundred to one hundred and fifty years after the compilation of the Dipavamsa. Any references given below is, unless stated otherwise, to the translation of the Mahavamsa by Wilhelm Geiger, Ph. D., 1912. The English translation runs into 271 pages. Though the Mahavamsa is covering the same period as the Dipavamsa, it is much enlarged to have greater number of Sections or Chapters to sow the seeds of anti-Tamil venom through a selected king. There are only twenty two Sections in the Dipavamsa, but there are thirty seven sections in the Mahavamsa, covering the same period. The narrative of Dutthagamani is elaborated from Chapter 22 to Chapter 33; the main reason for the increase in the chapters in the Mahavamsa. The episode of the native lady, Yakkhini Kuvanna, is also an addition in the Mahavamsa. This Yakkhini Kuvanna episode is not in the Dipavamsa. The story is otherwise the same, but the anti-Damila intent is forcefully expressed in the Mahavamsa.

Chapter 1: 1-20 ‘…Lanka filled with the Yakkhas, the Yakkhas must (first) be driven forth’; this is from the heart of the enlightened Buddha. The Buddha went to Lanka to drive out the Yakkhas to win Lanka for the Faith. The Yakkhas was one group of the many original inhabitants of Lanka, and the enlightened Buddha wanted to drive them out of their homeland to establish his Faith. He terrorized the original inhabitants of the island, the Yakkhas, just to win their land for his Faith, when they were having their traditional gathering, by causing terror into their heart by producing heavy rain, darkness, storm etc. The Actions of the Buddha, as described in the Mahavamsa, are despicable acts of terrorism to subdue the original inhabitant of the island. The Yakkhas, the original inhabitants, were overwhelmed by fear and agreed to go to another place as commanded the benevolent Buddha, to Giridipa, 1- 17 to 30. The original inhabitants of the Island were compelled to relocate under duress by the compassionate Buddha. This is how the island Lanka was won to the Faith by the renowned world renouncing Lord Buddha. The first venom against Tamils is belched in the 1 - 41; 'The king Dutthagamani, dwelling there while he made war upon the Damilas, built a mantle cetiya over it eighty cubits high.'

The Dipavamsa does not identify the king Elara as Damila, but the Mahavamsa says Dutthagamani’s war upon Damilas. The Dipavamsa does not identify Elara as from the Cola country. There are no records in the Cola annals that one of their princes, Elara by name, went to Lanka and ruled for a long time. Karikaal Cholan is a beloved king of Tamils, and he is the oldest Chola king we all know. Other Cholas prior to Karikaal Cholan are mere legendary kings. However, the king Elara is even earlier to the king Karikaal Cholan. Mahanama, the author of the Mahavamsa, created a new history of Cholas. Karikaal Cholan is around 90 A. D. but Elara is 145 to 101 B. C.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 62 தொடரும் / Will follow

துளி/DROP: 1935 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 61]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32760849530230271/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 62

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 62 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

புத்தர், இந்த பயங்கரவாத செயலுக்குப் பிறகு வட இந்தியாவில் உள்ள உருவேலவுக்குத் [Uruvela] திரும்பினார். இலங்கையின் பூர்வீகக் குடிகளை விரட்டியடிக்கும் இந்த அத்தியாயத்தின் முடிவு எளிமையாகச் சொல்லப்படுகிறது அல்லது விளக்கப்பட்டுள்ளது: 1 - 42 & 43 பார்க்கவும் : "இவ்வாறு மஹியங்கனை-தூபம் முடிந்தது. அவர் [புத்தர்] எங்கள் தீவை மனிதர்களுக்குத் தகுந்த வசிப்பிடமாக மாற்றியதும், வலிமை மிக்க ஆட்சியாளரும், வீரம் மிக்க வீரருமான புத்தர் உருவேலவுக்குப் புறப்பட்டார்" என்று முடிகிறது. "என்ன ஒரு உருமறைப்பு [camouflage] இது!" அதாவது, வாசிப்பவர்களின் புலனுக்கெட்டாத வகையில், உண்மையை மறைப்பதற்கான ஒரு உத்தியாக இது தெரிகிறது. அதே நேரம், தீபவம்சத்தில், உண்மையை உண்மையாகவே, "இங்கே இயக்கர்களின் அடிபணிதல்" என்று வெளிப்படையாக முடிவு விவரிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில், குறிப்பாக இன்றைய பீகாரில், கௌதம புத்தர் ஞானம் பெற்ற பகுதிக்கு உருவேலா என்பது ஒரு பண்டைய பெயர், இது இப்போது புத்த கயா என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு முக்கிய பௌத்த யாத்திரைத் தளமாகும்.
தொலைதூரத்தில் இருந்து வந்த ஒருவரால் அல்லது வேறு ஒரு நாட்டில் இருந்து வந்த ஒருவரால், இலங்கையின் பூர்வீக மக்களை அடிபணித்தலும் வெருட்டி பாரம்பரிய இடத்தில் இருந்து அகற்றுவதும் கட்டாயம் அது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். இதை ஞானம் பெற்ற புனித புத்தர் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!. என்ன பாவம் செய்தாரோ புத்தர் நான் அறியேன்?

இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)] என்பவரே இனப்படு கொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். இனத்தை [இனம், தேசம் அல்லது பழங்குடி] குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை ["கொலை, நிர்மூலமாக்கல்"] குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து 1944 ஆம் ஆண்டு "கைப்பற்றப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் ஆக்ஸிஸ் ஆட்சி" [Axis Rule in Occupied Europe] என்ற புத்தகத்தில் உருவாக்கப்பட்டது. ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும்.


இது முதலில் "ஒரு தேசம் அல்லது ஒரு இனக்குழுவின் அழிவு" [“the destruction of a nation or an ethnic group”] என்று பொருள் கொள்ளப்பட்டது. 1946 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் (UN) பொதுச் சபையானது, தீர்மானம் 96 இல் சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படு கொலையை ஒரு குற்றமாக உறுதி செய்தது, அதில் "கொலை என்பது தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வதற்கான உரிமையை மறுப்பது போல, இனப்படுகொலை என்பது முழு மனித குழுக்களின் இருப்பு உரிமையை மறுப்பதாகும்; இவ்வாறு, மனித இருப்பதற்கான உரிமையை மறுப்பது, உண்மையில் மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்றாகும். மேலும் தார்மீக சட்டத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உணர்வுக்கும் மற்றும் நோக்கங்களுக்கும் முரணானது ஆகும். டிசம்பர் 9, 1948 இல், ஐ.நா பொதுச் சபை தீர்மானம் 260A நிறைவேற்றப்பட்டு, அல்லது இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை பற்றிய மாநாடு நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 12, 1951 இல் இவை நடைமுறைக்கு வந்தது [December 9, 1948, the UN General Assembly adopted Resolution 260A, or the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, which entered into force on January 12, 1951.]

"வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் இனப்படுகொலை மனிதகுலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்று தீர்மானம் குறிப்பிட்டது. இனப்படுகொலையை தடுப்பது தொடர்பான உடன்படிக்கையின் 2ஆம் கட்டுரையின் படி:

ஒரு தேசிய, கலாச்சார, இன அல்லது சமயத்தின் மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்தில் செய்யப்படும் பின்வரும் செயல்கள்:

(அ) அந்த இன அல்லது குழுவின் உறுப்பினர்களைக் கொல்லுதல்;

(ஆ) இன உறுப்பினர்களுக்குக் கடுமையான உடல் அல்லது மனதிற்குத் தீங்கு விளைவித்தல்;

(இ) இனத்தின் இருப்பு சார்ந்த வாழ்க்கையை அழிப்பதற்கான சூழ்நிலையைத் திட்டமிட்டு ஏற்படுத்துதல் .... மற்றும் பலவற்றைக் கூறுகிறது.

அப்படியானால், (ஆ) & (இ) வின் படி, இலங்கையின் பூர்வீக குடிகளை விரட்டியடிக்கும் மேற்கண்ட புத்தரின் செயல் நிச்சயமாக மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். ஆனால், நிச்சயமாக இன்றைய நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்த புத்தர் இந்தச் செயலைச் செய்யமாட்டார். ஆனால், மகாவம்ச ஆசிரியர் தான் புத்தரை முன்னிறுத்தி இந்த செயலுக்கு அத்திவாரம் போட்டுள்ளார் என்பதே உண்மை!

Part: 62 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

The Buddha, after this terrorist act, returned to Uruvela, in North India. The end of this episode of driving away the original inhabitants of Lanka is simply said or glossed over as: "Thus was 42 the Mahiyangana-thupa completed. When he had thus made 43 our island a fit dwelling-place for men, the mighty ruler, valiant as are great heroes, departed for Uruvela. 'Here ends the Visit to Mahiyangana' ”. What a camouflage it is! The same visit is described as “Here ends the subjection of Yakkhas” in the Dipavamsa. The subjection of the native people of Lanka by a person from a faraway place is simply titled as a ‘Visit to Mahiyangana’ in the Mahavamsa. It is a crime against humanity.

The term “genocide”, made from the ancient Greek word genos (race, nation or tribe) and the Latin caedere (“killing, annihilation”), was first coined by Raphael Lemkin, a Polish-Jewish legal scholar, in his 1944 book Axis Rule in Occupied Europe. It originally means “the destruction of a nation or an ethnic group”. In 1946, United Nations (UN) General Assembly affirmed genocide as a crime under international law in Resolution 96, which stated that “Genocide is a denial of the right of existence of entire human groups, as homicide is the denial of the right to live of individual human beings; such denial of the right of existence shocks the conscience of mankind … and is contrary to moral law and the spirit and aims of the United Nations.” On December 9, 1948, the UN General Assembly adopted Resolution 260A, or the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, which entered into force on January 12, 1951. The Resolution noted that “at all periods of history genocide has inflicted great losses on humanity”. Article II of the Convention clearly defines genocide as any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group. If so, the above act of driving away the original inhabitants of Lanka, Will definitely a crime against humanity. But Definitely The Buddha who was born in Lumbini, in what is now Nepal, would not do this act.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 63 தொடரும் / Will follow

துளி/DROP: 1937 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 62]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32792834707031753/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 63


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 63 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

புத்தர், ஞானமடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் இரண்டு நாகர் அரசர்களுக்கு இடையே இரத்தின அரியணை [சிம்மாசனம்] தொடர்பாக போர் ஏற்படப் போவதை உணர்ந்தார். உடனே, புத்தர் இலங்கைக்கு பறந்து சென்று, நாகர்களை பயமுறுத்தி, தனக்காக அந்த அரியணையைப் பெற்றார். இங்கு, உலகைத்தை துறந்த புத்தரின் கொள்கையை, மகாவம்சம் வெளிப்படையாக மீறுகிறது. புத்தர், தனது 29 வயதில், தனது சொந்த அரியணையைத் துறந்து, தனது இளம் மனைவி, மற்றும் பிறந்த குழந்தை ராகுலன் [ராகுலா / Rahula] மற்றும் அரச அரண்மனை வாழ்க்கையின் சுகம் போன்றவற்றை விட்டு வெளியேறினார். புத்தர் பிம்பிசார மன்னரின் [King Bimbisara] தலைநகரான ராஜகஹாவுக்கு [ராஜகஹா, ராஜ்கிர் என்றும் அழைக்கப்படுகிறது, இது மகத இராச்சியத்தின் தலைநகராக இருந்த இந்தியாவின் ஒரு பண்டைய நகரமாகும். / Rajagaha, also known as Rajgir, was an ancient city in India that was a capital of the Magadha kingdom.] கால்நடையாகச் சென்றார். அங்கு பிம்பிசார புத்தருக்கு தனது அரசை வழங்கினார். புத்தர் இந்த வாய்ப்பை நிராகரித்தார். எனவே புத்தர் இரண்டு முறை அரியணையைத் துறந்தார், புத்தர் ஞானம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிம்மாசனத்தை ஏற்றுக்கொண்டார் என்பது அபத்தமானது. 1- 58, 59 & 60 பார்க்கவும். போர்க் களத்துக்கு மேலாக வானவெளியில் சஞ்சரித்த வண்ணம் மன இருளை அகற்றும் மகானாகிய குருநாதர், நாகர்கள் மீது அடர்ந்த இருள் கவியச் செய்தார். பீதியினால் துயரமுற்றவர்களைத் தேற்றி மீண்டும் அங்கு ஒளி ஏற்படச் செய்தார். அருள் ஞானியைக் கண்டதும் அவர்கள் களிப்புடன் அவர்தம் பாதத்தைப் போற்றினர். பின்னர் அச்சந் தீர்க்கும் அண்ணல், அவர்களுக்குச் சமாதான நெறியைப் போதித்தார். போரிட்ட இரண்டு நாகர்களும் மகிழ்வுடன் ஒன்று பட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாக இருந்த சிம்மாசனத்தை புத்தருக்கே அளித்தனர். புத்தர் கீழே இறங்கி அங்கிருந்த அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாம தேரர், புத்தரின் புனிதம் அல்லது தெய்வீக ஒளியைக் குறித்துக் காட்டிட, வரையப்படும் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டப் படத்தை உண்மையில் களங்கப்படுத்துகிறார். அது மட்டும் அல்ல, இந்த நிகழ்வும், "நாகதீப வருகை இதோ முடிவடைகிறது" என்று முடிவுக்கு வருகிறது. அதே நிகழ்வு தீபவம்சத்தில், "இங்கு நாகர்களை வெல்வது முடிவடைகிறது.". அதாவது தீபவம்சம் வெளிப்படையாக நாகர்களை அடக்கி வெல்வதை மறைக்காமல் கூறும் அதே நேரத்தில், மகாவம்சம், அதே நிகழ்வை, [புத்தரின்] நாக தீப வருகை முடிவுக்கு வருகிறது என்று முடிகிறது. மகாநாம தேரர், இராஜதந்திர வசனங்களால் குற்றச் செயல்களை மறைப்பதை எவரும் உணரமுடியும்? அது தான் நாம் இன்றும் இலங்கை அரசிடம் காண்பது?

நாக மன்னன் மணியக்கிகன் [Maniakkhika] புத்தரை கல்யாணியில் [Kalyani / இலங்கை பௌத்த மரபின்படி, இலங்கையில் "கல்யாணி" என்பது களனிப் பகுதியைக் குறிக்கிறது] உள்ள தனது இராச்சியத்திற்குச் வரும்படி கேட்ட அழைப்பை ஏற்று, புத்தர் தான் ஞானமடைந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கைக்கு மூன்றாம் தடவையாக, நாகத்தின் சக்தியின் இருப்பிடமான கல்யாணிக்குச் ஐந்நூறு தேரர்களுடன் பறந்து சென்றார். அங்கே இரத்தினங்கள் பதித்த மண்டபத்தின் கீழே பிக்குகளுடன் அமர்ந்தார். பின்னர், இரக்கமே உருவான பகவான், அங்கு உபதேசம் செய்த பின்பு எழுந்து அங்கிருந்து புறப்பட் டார் என்று மகாவம்சம் கூறுகிறது. இன்னும் ஒன்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது புத்தரின் மூன்றாவது வருகையும் போதனையும் ஆகும்.

அவ்வாறாயின், புத்தரின் மூன்றாம் வருகையின் பொழுது, புத்தருடன் ஐந்நூறு தேரர்கள் ஏற்கனவே வருகை தந்து, கூடியிருந்த பெரும் கூட்டத்திற்கு சமய உரை நிகழ்த்தி, அனைவரையும் பௌத்த மதத்திற்கு மாற்றியபின், சுமார் இருநூற்று முப்பது வருடங்களின் பின்னர், இலங்கையில் புத்த மதத்தை போதித்து நிலை நாட்டிட, மகிந்த தேரரின் வருகையின் அவசியம் என்ன? ஒருவேளை தேரர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான சுற்றுலாப் பயணமாக இருக்கலாம்! மகிந்த தேரர் ஒரு கற்பனையில் கண்டுபிடித்த நபர் என்பதற்கு இந்த நம்பமுடியாத நிகழ்வும் ஒரு காரணமாகும். மகாவம்சத்தின் அத்தியாயம் 1 புத்தரின் மூன்று இலங்கை வருகைகளை உள்ளடக்கியது. புத்தரின் காற்றில் பறந்து வரும் மூன்று பயணங்கள் வெறுமனே கற்பனையான நிகழ்வுகளாகத் தான் இருக்க வேண்டும். மேலும் இந்த அத்தியாயம் இலங்கை வரலாறுகளுடன் எந்த தொடர்பும் இல்லை. புத்தர், மனிதனாக இருந்ததால், 500 தேரர்களுடன் சேர்ந்து காற்றில் பறக்கும் திறன் இருந்திருக்க முடியுமா? 'பறவையை கண்டான்.. விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான்' இது தான் நான் அறிந்தது.

எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது லட்சக்கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டால், அவர்களுக்கு என்ன ஆனது? மீண்டும் அவர்களை மதமாற்றம் செய்ய மகிந்த தேரர் அனுப்பப்பட்டது ஏன் ? அல்லது புத்தர் சரியாக போதிக்கவில்லையா?

கேவத்தா (கேவாத்தா என்றும் உச்சரிக்கப்படுகிறது / Kevatta) புத்தரைப் பின்பற்றிய நாலந்தாவைச் சேர்ந்த ஒரு வீட்டுக்காரராக பௌத்த நூல்களில் கூறப்படுகிறது. இவர் புத்தரை அணுகி, மக்களில் நம்பிக்கையைத் தூண்டுவதற்காக அற்புதங்களைச் செய்ய தனது துறவிகளை ஊக்குவிக்குமாறு பரிந்துரைத்தார். இருப்பினும், புத்தர் இந்த யோசனையை நிராகரித்தார், அமானுஷ்ய சக்திகளின் அற்புதக் காட்சிகள் ஞானத்தின் உயர்ந்த வடிவம் அல்ல என்று விளக்கினார்.

அதற்கு பதிலாக, புத்தர் மிகப்பெரிய அதிசயம் "அறிவுரையின் அதிசயம்" என்று கற்பித்தார் - ஞானம் மற்றும் புரிதல் மூலம் மற்றவர்களை அறிவொளியை நோக்கி கற்பிப்பதற்கான திறன். அது என்றார்.

அதாவது,

புத்தர் பதிலளித்த போது, அங்கே மூன்று வகையான அமானுஷ்ய நிலைகள் இருப்பதாக கீழே உள்ளவற்றைக் கூறினார்:

1. பல மனிதர்களாகத் தோன்றுவது, கண்ணுக்குத் தெரியாமால் தன் உருவத்தை மறைப்பது, சுவர்களைக் கடந்து செல்வது, காற்றில் பறப்பது, தண்ணீரில் நடப்பது போன்ற அமானுஷ்ய சக்தியின் அற்புதம். இவை அனைத்தும் சாதாரண மக்களால் செய்ய முடியாத உடல் ரீதியான செயல்கள்.

2. மற்றவர்களின் மனதைப் படிக்கும் அதீத சக்தி.

3. மனிதர்களின் மனவளர்ச்சிக்கு ஏற்ப, அவர்களின் நலனுக்காக, அவர்களுக்கு ஏற்ற தகுந்த முறைகளைப் பயன்படுத்தி வழிகாட்டும் அமானுஷ்ய சக்தி.

மக்களைக் கவர்வதற்காக முதல் இரண்டு அமானுஷ்ய சக்திகளை தங்கள் சொந்த நலனுக்காக வெளிப்படுத்தும் ஒரு துறவி, ஒரு ஷாமன் [ஒரு ஷாமன் என்பவர் அமானுஷ்ய சக்திகளை பாவித்து ஆன்மீக குணப்படுத்துபவர் மற்றும் அதை பயிற்சி செய்பவர் / A shaman is a spiritual healer and practitioner] அல்லது ஒரு மந்திரவாதியின் செயல்பாட்டிலிருந்து வேறுபட்டவர் அல்ல என்று அவர் கற்பித்தார். இவ்வாறான உலக அதிசயங்களைச் செய்யும் துறவி, அவமானம் மற்றும் அருவருப்புக்கு ஆளாவதாக புத்தர் கூறினார். ஏனென்றால், இத்தகைய செயல்கள் மதம் மாறுபவர்களையும் பின்பற்றுபவர்களையும் ஈர்க்கலாம் மற்றும் வெற்றி பெறலாம், ஆனால் அவை அவர்களின் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவாது. அதனால்த் தான், இதுபோன்ற அற்புதங்களின் ஆபத்தை கண்டு, நான் அவற்றை வெறுக்கிறேன், நிராகரிக்கிறேன், ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

இப்போது சொல்லுங்கள், புத்தர் மழை, இருள் மற்றும் பலவற்றால் அவர்களின் இதயங்களை பயமுறுத்தி, தீவின் பூர்வீக குடிமகனை விரட்டியடிப்பாரா? மேலும் அவர் பல சகோதர, தேரர்களுடன் வான்வழியாக இலங்கைக்குச் பறந்து செல்வாரா? நீங்களே முடிவெடுங்கள்.

Part: 63 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

The Buddha, after five years of his enlightenment, perceived the potential war about to occur between two Naga kings in Lanka over a gem set throne. The Buddha, flew to Lanka, and terrorized the Nagas, and got the throne for himself. The Mahavamsa violates the principle of the Buddha who renounced the world. The Buddha, when he was 29 years of age, renounced his own throne and walked away leaving his young wife, and the just born infant son Rahula, the comfort of the Royal palace life etc. The Buddha went on foot to Rajagaha, the capital of King Bimbisara where Bimbisara offered his kingdom to the Buddha. The Buddha declined the offer. The Buddha therefore renounced throne twice and it sounds absurd that the Buddha accepted a throne again, five years after attaining the enlightenment, Please check, 1- 58, 59 & 60 [58 Hovering there in mid-air above the battlefield the Master, who drives away (spiritual) darkness, called forth dread darkness over the nagas. Then comforting those who were distressed 59 by terror he once again spread light abroad. When they saw the Blessed One they joyfully did reverence to the Master's feet. Then preached the Vanquisher to them the 60 doctrine that begets concord, and both [nagas] gladly gave up the throne to the Sage]. Mahanama, the author of the Mahavamsa, is really tarnishing the halo image of the Buddha hollow. This event is described as; “Here ends the Visit to Nagadipa”. The same event is described in the Dipavamsa as; here ends the conquering of the Nagas. Mahanama is camouflaging the criminal actions with diplomatic verses.

The Naga king Maniakkhika invited the Buddha to visit his kingdom at Kalyani, and the Buddha visited Kalyani, the seat of Naga’s power, eight years after his enlightenment. The Buddha again flew to Lanka along with five hundred brotherhoods, Theras. If so, What is the need for the visit by Mahinda Thera after about two hundred and thirty years as five hundred Theras have already visited, along with the Buddha and deliver religious address to an assembled large group of people to convert all of them to buddhism? Perhaps it was a pleasure trips for the Theras! This is also an indication that Mahinda Thera, is an invented personality. The Chapter 1 of the Mahavamsa covers the three visits of the Buddha to Lanka. The Buddha’s three flying visits are simply imagined events, and have no historical relevance to Ceylon. As the Buddha, being a human, couldn’t have had the ability to fly at all along with 500 Theras?

What I still don't understand is, if millions of souls were converted to Buddhism when the Buddha visit to Srilanka, what happened to them? Why was Mahinda sent to convert them again ? or did the Buddha not teach correctly?

When Buddha replied, "Kevatta, He said that there were three kinds of supernormal levels:

1. The marvel of supernormal power to appear as many persons, to pass through walls, to fly through the air, walk on water. All these are physical actions the ordinary people cannot perform.

2. The supernormal power to read other people's minds.

3. The supernormal power to be able to guide people according to their mental development, for their own good, using suitable methods that fit these people.

He taught that a monk who displays the first two supernormal powers for their own sake in order to impress people, is no different from the performance of a shaman or a magician. The Buddha said that a monk who practices such worldly miracles is a source of shame, humiliation and disgust. This is because such actions may impress and win converts and followers, but they do not help them put an end to their suffering. He further said That is why, seeing the danger of such miracles, I dislike, reject and despise them. Now tell me will Buddha struck terror to their hearts by rain, darkness and so forth & chased away the original inhabitant of the island? and further will he fly through air with many number of brotherhoods, Theras to Lanka?

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 64 தொடரும் / Will follow

துளி/DROP: 1938 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 63]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32800741409574416/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 64

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 64 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

புத்தர், கேவத்தா (கேவாத்தா) வுக்கு கூறிய கேவத்தா சுத்தத்தில் (Kevatta (Kevaddha) Sutta), தெளிவாகக் தன் நிலைப்பாட்டை கூறியிருக்கிறார்.
புத்தர், தான் மறைக்கப்பட்ட, இரகசியமான மற்றும் மர்மமான, குறிப்பாக இயற்கைக்கு அப்பாற்பட்ட [அமானுஷ்ய] சக்தியின் அற்புதங்களையும் தொலைமனமுணர்தலையும் [டெலிபதியின்] அதிசயத்தையும் [the miracles of psychic power and miracle of telepathy.] விரும்பவில்லை, நிராகரிக்கிறேன் மற்றும் வெறுக்கிறேன் என்று தெளிவாகக் கூறுகிறார். அது மட்டும் அல்ல, புத்தர் இரக்க குணம் கொண்டவர், மனிதர்களிடையே அரிதாகவே காணப்பட்டார். அவரது அனுதாபம், அனைத்தும் தழுவியதாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது. புத்தரின் போதனையானது அனைத்து உயிர்களிடத்தும் உலகளாவிய அன்பு மற்றும் இரக்கத்தின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வத்தூபம சூத்தம் (மஜ்ஜிம நிகாயம் / Majjhima Nikaya 7) என்றால், ஒரு பொருளுக்குப் (வத்து) ஒப்பீடு (உபமா) என்பதாகும். சங்கத்தின் ஒரு உறுப்பினரான உத்திய சந்தி மிகவும் தற்பெருமை கொண்டவனாக இருந்தான். புத்தர் அவருக்கு இந்த உபதேசத்தை வழங்கினார். இதில் முக்கிய கருத்து என்னவென்றால்:

தர்மத்தை உணர மனம் தூய்மையாக இருக்க வேண்டும்.
தற்பெருமை, ஆசை, கோபம் ஆகியவற்றை விடுதல் வேண்டும்.
புத்திசாலித்தனம் மட்டும் போதாது, நல்ல பண்புகளும் வேண்டும்.
நல்ல எண்ணங்களைக் கொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

என்பதாகும். அதேபோல, லக்ஷண சூத்தம் (Digha Nikaya 30) என்றால், லக்ஷண என்றால் அம்சங்கள் அல்லது தனிப்பட்ட இலட்சணங்கள் என்பதாகும். இந்த சூத்தத்தில், புத்தரின் 32 விசேஷ உடல் அம்சங்கள் பற்றிய விளக்கத்தைக் காணலாம்.

புத்தர் ஒரு மாபெரும் ஒளிவாய்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தார். அவருடைய அழகிய மற்றும் விசேஷமான உடல் அமைப்பு பலரையும் கவர்ந்தது. துறவிகள், அரசர்கள், மற்றும் பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது, புத்தர் இந்த 32 இலட்சணங்கள் அவருடைய முந்தைய நல்ல கர்மங்களின் விளைவாக வந்தன என்று கூறினார். சுருக்கமாக, லக்ஷண சூத்தம் எதையும் அமானுஷ்யமாக பார்க்காமல், நல்ல செயல்களின் மூலம் உயர்ந்த நிலை பெறலாம் என்று உணர்த்துகிறது. புத்தர் ஒரு மாமேதாவியாக, மாபெரும் போதகராக ஆனது அவரது நல்ல மனநிலை, தர்ம வழி, மற்றும் கடந்த பிறவிகளில் செய்த கர்மங்களின் பலனாகும் என்கிறார்.

பௌத்தம் உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றாகும் என்பதையும், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் அவரின் உண்மையான போதனை வழியில், மனித வாழ்க்கை துன்பம் நிறைந்தது என்றும், தியானம், ஆன்மீகம் மற்றும் உடல் உழைப்பு மற்றும் நல்ல நடத்தை ஆகியவை ஞானம் அல்லது நிர்வாணத்தை அடைவதற்கான வழிகள் என்றும் பௌத்தர்கள் நம்புகிறார்கள். இதைத்தான் புத்தபிக்குகள் கடைபிடிக்கவேண்டும். ஒழுகவேண்டும். சாதாரண பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும். அப்படி எத்தனை புத்த பிக்குகளை இலங்கையில் பர்மாவில் காண்கிறீர்கள்?

அப்படியானால், அவரின் இலங்கைக்கான மூன்று வருகைகளிலிருந்தும் நீங்கள் என்ன நல்ல நடத்தைகளைக் கற்றுக் கொண்டீர்கள்? இது உண்மையான புத்தரின் வருகையா அல்லது வெவ்வேறு நோக்கங்களுக்காக இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தயவு செய்து சிந்தித்து முடிவு செய்யுங்கள்?

இன்னும் ஒரு வரலாற்று உண்மையையும் நான் கூறவேண்டும். கடவுளைப் பற்றி அவர் [புத்தர்] அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அதோடு, தானே கடவுள் என்றும் அவர் ஒருபோதும் உரிமை பாராட்டவில்லை. பார்க்கப்போனால் தன் சீடர்களுக்கு அவர் இப்படி சொன்னதாக குறிப்பிடப்படுகிறது: “ஒருவேளை கடவுள் என்று ஒருவர் இருந்தாலும், அவருக்கு என்னுடைய அன்றாட வாழ்க்கை மீது அக்கறை இருக்குமென்று கற்பனை செய்யக்கூட முடியவில்லை, மனிதனுக்கு உதவி செய்ய விருப்பமுள்ள அல்லது அதற்குரிய சக்தியுள்ள எந்தக் கடவுளும் இல்லை.”நிச்சயமாகவே கடவுள் நம்பிக்கையை கற்பிக்கவுமில்லை, அது அவசியம் என்று சொல்லவும் இல்லை” என்கிறார்.

புத்த மதத்தை பின்பற்றுகிற சராசரி நபர்கள் இப்போது விக்கிரகங்களையும் நினைவுச் சின்னங்களையும், கடவுட்களையும் பேய்களையும், ஆவிகளையும் முன்னோர்களையும் வணங்குவதிலேயே மூழ்கிப்போயிருக்கிறார்கள்; அதோடு புத்தர் கற்பிக்காத அநேக சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதிலுமே மூழ்கிப்போயிருக்கிறார்கள்.

இலங்கையில் இயக்கர்கள், நாகர்கள், என்ற இரு குழுக்கள் இருந்ததாகவும், இயக்கர்கள் எலு மொழியையும் நாகர்கள் தமிழையும் பேசியதாகவும் எலு மொழி பாளியுடன் கலந்து சிங்கள மொழியாக மாறியதாகவும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் எலு, பாளியுடன் கலந்ததற்கும் அது சிங்களமாகப் பரிணாமம் அடைந்ததற்கும் எந்தவொரு தர்க்கரீதியான வரலாற்று ஆதாரங்களும் காணப்படவில்லை. 12ம் நூற்றாண்டுக் காலப் பகுதிவரை தமிழ் - சிங்களம் என்ற மொழி ரீதியான முரண்பாடு இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்களை யாரும் குறிப்பிட்டதில்லை.

17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டி அரசனால் சிறைப் பிடிக்கப்பட்ட Robert Knox என்ற ஆங்கிலேயர், அங்கிருந்து தப்பி வடக்கு நோக்கிச் சென்ற போது அனுராதபுரத்தை அடைந்தார். பின்னர் 1681இல Historical Relation of the Island of Ceylon என்ற நூலை அவர் வெளியிட்டார். இந்த நூலில், அனுராதபுரத்தை அடைந்த Robert Knox அந்த மக்களுக்குச் சிங்களம் விளங்கவில்லை என்றும், அவர்கள், தன்னை தலைவனிடம் தான் கூட்டிச் செல்லப்பட்ட போது, அவனுடன் உரையாடுவதற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது என்றும் அங்கிருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் எழுதியிருந்தார்.

இலங்கையில் பௌத்த மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுராதபுரத்திலேயே சிங்களமொழி பரந்தளவில் பேசப்படாது இருந்திருக்குமானால், இந்த மொழியின் பரந்துபட்ட வளர்ச்சி என்பது மிகவும் அண்மைக் காலத்துக்குரியது என்று புலனாகின்றது

Part: 64 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Please note that In the Kevaddha Sutta (Digha Nikaya Sutta 11 in Maurice Walshe’s translation), The Buddha says, He dislikes, rejects and despises the miracles of psychic power and miracle of telepathy. The Buddha was possessed of a quality of compassion, seldom seen among men. His sympathy was all embracing and spontaneous. The Buddha’s teaching is based and built on a conception of universal love and compassion for all living beings.

In the Vatthupama Sutta (Majjhima Nikaya 7) the Buddha says, “he abides pervading that all-encompassing world with a mind imbued with loving kindness, abundant, exalted immeasurable, without hostility, without ill will. He abides pervading one quarter with the mind imbued with compassion.” and
“In the Lakkahan Sutta (Digha Nikaya sutta 30) it is stated, “the Tathagata rejects harsh speech, abstains from it, spoke what was blameless, pleasing to the ear, agreeable, reaching the heart, urbane, pleasing and attractive to the multitude.”

Please note that Buddhism is one of the world's largest religions and originated 2,500 years ago in India. Buddhists believe that the human life is one of suffering, and that meditation, spiritual and physical labor, and good behavior are the ways to achieve enlightenment, or nirvana. If so, What good behaviors you have learnt from all three visits. Please think and decide Whether this would be a real Buddha's visits or fabricated one for different purposes ?

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 65 தொடரும் / Will follow

துளி/DROP: 1941 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 64

https://www.facebook.com/groups/978753388866632/posts/32842378748744015/?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் வாசிக்க நேரம் போதவில்லை

இணைப்புக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 65

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 65 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

அத்தியாயம் 2 புத்தரின் குலத்தைப் பற்றியது, இலங்கையில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகள் பற்றியது அல்ல. புத்தரின் உடனடி முன்னோர்களின் பெயர்கள் மற்றும் அவரது தந்தையின் சகோதரர்களின் பெயர்களும் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மாயா அல்லது மகா மாயா [Maya] என்பவள் சித்தார்த்தாவின் [Siddhattha] தாய் என்றும், புத்தர் பிறந்த சில நாட்களில் மாயாதேவி இறந்து விட்டதால், வளர்ப்புத் தாயாக, பஜாபதி [மகாபிரஜாபதி கௌதமி /Mahāprajāpatī Gautamī / Mahāpajāpatī Gotamī or Pajapati] பராமரிப்பாளர் ஆனார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. சித்தார்த்தா பத்தகச்சனை [யசோதரை / Yaśodharā or Yashodhara or Bhadrakātyāyani] மணந்தார், ராகுலன் [Rahula] அவர்களின் மகன், 2-24 இல் போதி சத்துவராகிய [Bodhisatta / அதாவது "அறிவொளிக்கான அல்லது ஞானத்துக்கான பாதையில் இருப்பவர்" - அடிப்படையில் மற்றவர்கள் அறிவொளியை அடைய உதவுவதற்காக தங்கள் சொந்த நிர்வாணத்தை தாமதப்படுத்துவதன் மூலம் புத்தராக மாற முயற்சிப்பவர்; இது பௌத்தத்தில் ஒரு முக்கிய கருத்தாகும்.] இளவரசர் சித்தார்த்தருடைய ராணி [மனைவி] பத்தகச்சனா; அவரது மகன் ராகுலா என குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், "The harvard oriental series volume 28 buddhist legends" என்ற புத்தகத்தில், பக்கம் 2 இல் சித்தார்த்தா தனது பத்தொன்பது வயதில் தனது உறவினரான யசோதராவை மணந்தார் என்று கூறுகிறது. வேறு சில ஆவணங்களின் படியும் யசோதரா என்பது சித்தார்த்தாவின் மனைவியின் பெயராகத் தெரிகிறது. என்றாலும், சித்தார்த்தாரின் மனைவியின் பெயர் பத்தகச்சனாவா அல்லது யசோதராவா என்பது முக்கியமல்ல. இருப்பினும், இந்த முரண்பாடுகள் நாளிதழிலில் உள்ள வேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகின்றன.

கௌதம புத்தரின் சரியான பிறப்பு மற்றும் இறப்பு தேதிகள் நிச்சயமற்றவை, ஏனெனில் வெவ்வேறு புத்த மரபுகள் அவற்றை வித்தியாசமாக பதிவு செய்துள்ளன.

அவைகளில் இரண்டு முக்கிய காலக்கெடு:

[1] நீண்ட காலவரிசை ["long chronology"] / இலங்கை & தென்கிழக்கு ஆசியா:

இது இலங்கை வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டது (சூளவம்சம் அல்லது சூலவம்சம் மற்றும் மகாவம்சம் போன்றவையை / as per the Culavamsa, the continuation of the Mahavamsa.).

பேரரசர் அசோகரின் முடிசூட்டு விழாவுக்கு 298 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் பிறந்தார், அதற்கு 218 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார், மற்றும் கிமு 326 இல் அசோகர் அரசரானார் என்று இந்த நூல்கள் கூறுவதால், புத்தரின் தேதிகள்:

பிறப்பு: கிமு 624
மரணம் (பரிநிர்வாணம் / parinirvana): கிமு 544

[பௌத்த சமயத்தில் பரிநிர்வாணம் என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும்]

[2] குறுகிய காலவரிசை ["short chronology"] / இந்திய மற்றும் திபெத்திய ஆதாரங்கள்:

புத்தர் அசோகரின் முடிசூட்டுக்கு 180 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார், அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார், மற்றும் கிரேக்க பதிவுகளின் அடிப்படையில், அசோகரின் உண்மையான முடிசூட்டு விழா கிமு 268 இல் நடந்தது எனக் கணிக்கப்பட்டது. இதனால் புத்தரின் தேதிகள்:

பிறப்பு: கிமு 448
இறப்பு: 368 கி.மு

எதுவென்ன வென்றாலும், பொதுவாக, பாரம்பரியமாக, கி மு 544 ஐ எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே இலங்கை, மியான்மர் மற்றும் இந்தியாவில், புத்த சகாப்தத்தை (BE) ஆண்டு 1 அல்லது கிமு 544 என தேதியிடுகிறது. அதாவது பிந்தைய தேதியிலிருந்து புத்த சகாப்தத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அதேவேளை, தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸில், அதை ஆண்டு 0 அல்லது கிமு 543, எனக் கணக்கிடுகிறார்கள்.

எனவே, சுருக்கமாக, இலங்கை பாரம்பரியத்தின் படி:

புத்தர் கிமு 624 இல் பிறந்தார்.
35 வயதில் (கிமு 589) ஞானம் அடைந்தார்.
கிமு 544 இல் காலமானார்.

இது புத்த நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

Part: 65 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

The chapter2 is about Buddha’s clan and not about any real historical events that took place in Lanka. The names of the Buddha's immediate forefathers and the names of his father’s brothers are also given in this chapter. Maya was the mother of Siddhattha and she died soon after the marriage and Pajapati became the caretaker mother. Siddhattha married Bhaddakaccana and Rahula was the son, 2-24 [24 The consort of the prince Siddhattha, the Bodhisatta, was Bhaddakaccana ; her son was Rahula.]. However The Reference "The harvard oriental series volume 28 buddhist legends" says on page 2 that Siddhattha married his cousin Yasodhara when he was nineteen years of age. Yasodhara seems to be the name of the wife of Siddhattha as per some other documents too. It is not very important whether the name of the wife of Siddhatta is Bhaddakaccana or Yasodhara. However, these anomalies are there to indicate the deficiencies in the chronicle.

The dates of Gautama's birth and death are uncertain. Buddhist texts present two chronologies which have been used to date the lifetime of the Buddha. The "long chronology," from Sri Lankan chronicles, states that the Buddha was born 298 years before the coronation of Asoka, and died 218 years before his coronation. According to these chronicles Asoka was crowned in 326 BCE, which gives the dates of 624 and 544 BCE for the Buddha [as per the Culavamsa, the continuation of the Mahavamsa.] which are the accepted dates in Sri Lanka and South-East Asia. Indian sources, and their Chinese and Tibetan translations, contain a "short chronology," which place the Buddha's birth at 180 years before Asoka's coronation, and his death 100 years before Asoka's coronation. Following the Greek sources of Asoka's coronation, this dates the Buddha at 448 and 368 BCE. So, According to the traditional dating the Buddha was born in 624 BC, attained Awakening 35 years later in 589 BC and entered Parinibbāna in 544 BC. It is from the latter date that we take the Buddhist Era (Thailand, Cambodia and Laos date it as year 0 or BC 543, Sri Lanka, Myanmar and India as year 1 or BC 544).

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 66 தொடரும் / Will follow

துளி/DROP: 1942 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 65

https://www.facebook.com/groups/978753388866632/posts/32853127131002510/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 66

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 66 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

அத்தியாயம் 3 இந்தியாவில் நடந்த முதல் பௌத்த பேரவையைப் பற்றியது, அது இலங்கையுடன் நேரடி வரலாற்றுத் தொடர்பு இல்லை. புத்தர் இறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, அதாவது பரிநிர்வாணத்திற்குப் பிறகு, இந்த சபை தொடங்கப்பட்டது. இந்த முதலாம் பேரவை ஏழு மாதங்கள் தொடர்ந்து நடந்தது.

இந்த பேரவை அல்லது சபை பிம்பிசாரரின் [Bimbisara] மகனான அஜாதசத்துரு (Ajatashatru) மன்னனின் [the king Ajatasattu, the son of Bimbisara] தலைமையில் நடந்தது. இங்கே 3-1 & 2 இப்படி கூறுகிறது:

இணையிலாதவராகிய பகவான் - ஐந்து கண்களேப் பெற்றிருந்த அண்ணல் - எண்பத்து நான்கு வருடங்கள் வாழ்ந்து உலகில் தமது கடமைகள் அனைத்தையும் எல்லாவிதத்திலும் நிறைவேற்றி முடித்ததும், குஸிகாகரத்தில் இரண்டு சால விருட்சங்களுக்கு இடையேயுள்ள புனிதமான இடத்தில், வைசாக பெளர்ணமி தினத்தன்று உலக ஜோதி அணையலாயிற்று. இங்கு வைசாக பெளர்ணமி என்பது, புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) (Wesak) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளாகும்

இங்கே ஐந்து கண்கள் என்பது,

[1] சாதாரணக் கண் – மனிதர்களுக்கு பொதுவான கண், உட்புற உலகைப் பார்க்கும் திறன்.

[2] தெய்வீகக் கண் – இது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன் ஆகும், இது தொலைதூர இடங்கள், மறைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் இருப்பின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள உயிரினங்கள் உட்பட மனித உலகத்திற்கு அப்பால் பார்க்க அனுமதிக்கிறது. இது கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளைப் பார்க்கவும் உதவும் சக்தி.

[3] ஞானக் கண் – ஞானம் வாய்ந்த பார்வை, எல்லா விடயங்களின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ளும் திறன்.

[4] அகில பார்வைக் கண் – பிரபஞ்சத்தில் உள்ள மற்றும் நடக்கும் அனைத்தையும் அறியும் புத்தரின் திறமை இதுவாகும். இது முழுமையான மற்றும் வரம்பற்ற அறிவைக் குறிக்கிறது.

[5] முத்திக் கண் – முத்தியின் (நிர்வாணம் / மோட்சம்) உண்மை பாதையை அறிந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் அறிவு.

என்றாலும், மகாவம்சத்தின் தொடர்ச்சியான சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தின் படி, புத்தர் எண்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்று கணக்கிடுகிறது [624 - 544 = 80]. எனினும் புத்தர் எண்பது அல்லது எண்பத்து நான்கு ஆண்டுகள் வாழ்ந்தாரா என்பது இந்த ஆய்வின் நோக்கம் அல்ல. ஆனால் ஒரு முரண்பாடு இங்கு தெரிகிறது. எது என்னவென்றாலும், புத்தர் எண்பது வயது வரை வாழ்ந்தார் என்பது பொதுவாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது.

அத்தியாயம் 4 & 5 இரண்டாவது மற்றும் மூன்றாவது பௌத்த சபை பற்றியது. புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது பௌத்த பேரவை நடைபெற்றது. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் பல தந்தை கொலைகள் [parricides] பதிவாகியுள்ளன. அத்தியாயம் 4 இப்படி ஆரம்பிக்கிறது:

1,அஜாதசத்துருவினுடைய [Ajatashatru / Ajatasattu] மகன் உதயபத்ரகன் [Udayin or Udayabhadra அல்லது உதயணன்], இத் துரோகி தந்தையைக் கொன்றுவிட்டு பதினறு வருடம் ஆண்டான்.

2. உதயபத்ரகனுடைய மகன் அனுருத்திரன் [Anurudhha] தனது தந்தையைக் கொன்றான். அனுருத்திரனுடைய மகன் முண்டன் [Munda] என்பவனும் அதே போல் செய்தான்.

3. துரோகிகளும் முட்டாள்களுமான இந்த குமாரர்கள் ஆட்சி நடத்தினர். இந்த இரண்டு பேர்களுடைய ஆட்சியில் எட்டு வருடங்கள் கழிந்தன.

4. முண்டனுடைய மகன் நாகதாசகன் [Nagadarshaka ] தனது தந்தையைக் கொன்றான். இந்தக் கொடுமையைச் செய்தவன் பிறகு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினன்.

5. பிரஜைகள் வெகுண்டெழுந்தனர். "தந்தையைக் கொல்பவர்கள் வம்சமாக அரசு இருக்கிறதே" என்று.

பிறகு, சிசுநாகன் [Shishunaga] என்ற பெயருடைய மந்திரியை அரசனாக்கினார். அவருடைய மகனும் பின் அரசனுமான கலாசோக [கலாசோகர் / Kalashoka or Kakavarna] தலைமையில் தான் இரண்டாவது பௌத்த பேரவை நடந்தது, மேலும் அது எட்டு மாதங்கள் தொடர்ந்தது. எனினும் இந்திய வரலாற்று ஆதாரங்கள் எதிலும், உதாரணமாக, சமகால இந்திய கல்வெட்டுகளோ அல்லது நூல்களோ கலாசோகர் என்ற பெயரில் ஒரு அரசனைக் எங்கும் குறிப்பிடவில்லை . சில அறிஞர்கள் கலாசோகனை ஒரு கற்பனை அரசராகக் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இந்த அத்தியாயம் இலங்கைக்கு எந்த வரலாற்றுத் தொடர்பும் இல்லை.

Part: 66 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Chapter 3 is about the First Buddhist Council that took place in India, and it has no direct historical connection with Lanka. This council commenced four months after the Buddha’s death, Mahaparinirvana, and continued for seven months. The Council took place under aegis of the king Ajatasattu, the son of Bimbisara. Here 3-1 says: WHEN the Conqueror the incomparable, he who has the five eyes [The five eyes possessed by the Buddha are the bodily eyes (mamsacakkhu), the heavenly eye (dibba ) by which he sees everything that comes to pass in the universe, the eye of understanding (knowledge), the eye of omniscience, and finally the Buddha-eye by means of which he beholds the saving truth.] / had lived eighty-four years and had fulfilled all his duties in the world. The detail given in the Culavamsa, the continuation of the Mahavamsa, works out that the Buddha lived for eighty years [624 - 544 = 80]. It is irrelevant to the purpose of this analysis whether the Buddha lived for eighty or eighty four years, but there is an anomaly. It is generally agreed that the Buddha lived to the age of eighty.

Chapter 4 & 5 are about second and third Buddhist Council. The Second Buddhist Council was took place in India one hundred years after the Buddha’s death. Many parricides are reported at the start of this chapter. [Chapter 4 / WHEN Ajatasattu's son Udayabhaddaka had slain him he, the traitor, reigned sixteen years. Udayabhaddaka's son Anuruddhaka slew (his father) and Anuruddha's son named Munda did likewise. Traitors and fools, these (sons) reigned over the kingdom; in the reign of these two (kings) eight years elapsed. Hun-la's son Nagadasaka slew his father and then did the evildoer reign twenty-four years. & so on] This council took place under the aegis of the king Kalasoka, and continued for eight months. There is no reference to a king by the name Kalasoka in any of the Indian sources. Some scholars consider Kalasoka a fictitious king. However This chapter also has no historical relevance to Ceylon.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 67 தொடரும் / Will follow

துளி/DROP: 1943 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 66

https://www.facebook.com/groups/978753388866632/posts/32868952312753325/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 67

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 67 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

அசோக மன்னனின் தலைமையில், இரண்டாம் புத்தமத சபைக்கு நூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது சபை நடந்தது. மூன்று பௌத்த சபைகளும் தேரவாத பௌத்தம் மற்றும் பல்வேறு பிரிவுகளைப் பற்றியவை.

அசோகனின் தந்தையான பிந்துசாரனுக்கு நூற்றியொரு பெருமைமிக்க பிள்ளைகள் இருந்தனர். இவர்கள் எல்லோரிலும் வீரத்திலும், பலத்திலும், புகழிலும், அதிசய சக்திகளிலும் சிறந்தவனான அசோகன் என்பவன் விளங்கினான். பல்வேறு தாய்மார்களுக்குப் பிறந்த தொண்ணுாற்றி ஒன்பது சகோதரர்களையும் கொன்றபோது, அனைத்து ஜம்புத் தீவின் [Jambudvīpa] மீது பிரிக்கப்படாத இறையாண்மையை வென்றார் என்று 5-20 கூறுகிறது. ஜம்புத் தீவு என்பது உள்ளூர் மக்களாலும் அருகில் உள்ள இலங்கை போன்ற தீவு மக்களாலும் தீபகற்ப இந்தியாவைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட ஒரு பெயராகும்.

இதனால், அசோகா மன்னன் ஆரம்பத்தில் பொல்லாத அசோகன் என்று அழைக்கப்பட்டான். அதிகாரம் 5 - 189 பார்க்கவும். அது, அவனுடைய கொடுஞ்செயல்களின் காரணமாக முன்பு அவனைச் சண்டாள அசோகன் என்று அழைத்தனர். பின்னல் அவனுடைய பக்திச் செயல்களின் காரணமாக அவன் தர்ம அசோகன் எனப் பெயர் பெற்றன் என்கிறது. அதாவது பௌத்தத்தைத் தழுவுவதற்கு முன்பு ஒருவர் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அந்த நபர் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட தருணத்தில் அனைத்து பாவங்களும் கழுவப்படுகின்றன என்பதை இங்கு காண்கிறோம். என்றாலும் இங்கு நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக இந்த தர்க்கம் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல, இலங்கை காலவரிசை வரலாறு அல்லது காலக்கோவையில் பல்வேறு இடங்களில் இந்த தர்க்கம் மீண்டும் மீண்டும் வருவதையும் காண்கிறோம்?

துட்டகாமினி & எல்லாளன் கதைக்கு போனோம் என்றால், இதற்கு இணையான தர்க்கத்தை அங்கு மீண்டும் காணலாம். இங்கு துட்ட என்பது "கீழ்ப்படியாமை" என்பதைக் குறிக்கிறது.


மகாவம்சத்தில், துட்டகாமினி இலங்கையை ஒரே பௌத்த ஆட்சியின் கீழ் இணைக்க தமிழ் மன்னன் எல்லாளனுக்கு எதிராகப் போரிட்டார். எல்லாளன் ஒரு நியாயமான மற்றும் நேர்மையான ஆட்சியாளராக இருந்த போதிலும், ஒரு இந்து என்பதால், இதை ஒரு நீதியான போராக வரலாற்றாசிரியர்கள் வடிவமைத்தனர்.

ஒரு கடுமையான போரில் வயதில் மிகவும் மூத்த எல்லாளனை தோற்கடித்த பின்னர், துட்டகாமினி இரத்தம் சிந்தியதற்காக மிகவும் வருந்தினார், குறிப்பாக ஒரு நீதியுள்ள அரசன் எல்லாளன் உட்பட ஏராளமான மக்களைக் கொன்றதால்.

பௌத்த துறவிகள் துட்டகாமினிக்கு ஆறுதல் கூறி, பௌத்த மதத்திற்கு சேவை செய்த அவரது நடவடிக்கைகள் நியாயமானவை என்று கூறினர்.

துட்டகாமினி உண்மையில் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றார் என்று மகாவம்சம் கூறுகிறது - அவர் கொன்ற "உண்மையான" நபர்கள் ஆன்மீக வளர்ச்சியை அடைந்தவர்கள் மட்டுமே, மீதமுள்ளவர்கள் "வெறும் நம்பிக்கையற்றவர்கள்" அதாவது இந்துக்கள். (அவர்களின் மரணம் குறைவான தார்மீக எடையைக் குறிக்கிறது).

இதைத் தொடர்ந்து, அவர் ருவன்வெலிசாய ஸ்தூபியை நிர்மாணித்தல் உட்பட பல புண்ணிய செயல்களில் ஈடுபட்டார், பௌத்தத்தைத் தழுவுவதும் அதன் பிரச்சாரத்திற்காக உழைப்பதும் கடந்த கால தவறுகளில் ஒன்றைத் தூய்மைப்படுத்துகிறது என்ற கருத்தை மேலும் உறுதிப்படுத்தியது. இப்படி பல உதாரணங்கள் காட்டலாம்.

புகழ் பெற்ற அசோகன் பிரிவினையற்ற அரசுரிமையை அடைந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு, பாடலிபுத்திர நகரத்தில் தன்னை மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். முடிசூட்டிக் கொண்ட பிறகு அவனுடைய ஆணை நேரடியாக ஆகாயத்திலும் பாதாளத்திலும் கூட ஒரு யோசனை அளவுக்குப் பரந்திருந்தது. நாள் தோறும் தேவர்கள் அனோதத [Anotatta] ஏரியிலிருந்து எட்டு மனிதச் சுமை நீர் கொண்டு வரு வார்கள். அரசன் அதைத் தன்னுடைய குடி மக்களுக்குக் கொடுப்பான். இமாலயத்திலிருந்து தேவர்கள் பல ஆயிரம் பேர்களுக்குப் போதுமான நாகக் கொடியின் குச்சிகளைப் பல் துலக்கக் கொண்டு தருவார்கள். நிறத்தாலும் மணத்தாலும் சுவையாலும் நிறைவுற்ற, உடல் நலனுக்கு உகந்த மாம்பழம் முதலான கனிகளையும் அங்கேயிருந்து கொண்டு வருவார்கள். மாருத தேவதைகள் பஞ்சவர்ணத்தாலான உடைகளையும், [ஐந்து வண்ண ஆடைகளையும்] துடைப்பக்குட்டைகளுக்கான [napkins] மஞ்சள் பொருளையும், சந்திரகாந்த ஏரியிலிருந்து தேவ பானத்தையும் [celestial drink from the Chaddanta-lake] கொண்டு வந்தார்கள். நாக நாட்டிலிருந்து நாகர்கள் மல்லிகை மலர் போன்றதும் இழை தெரியாததுமான உயர்ந்த ஆடைகளையும், தெய்விகத் தாமரை மலர்களையும், சாந்து வகைகளையும் கொண்டு வருவார்கள். கிளிகள் தினந்தோறும் சந்திர காந்த [Chaddanta-lake] ஏரியிலிருந்து தொண்ணுாருயிரம் வண்டி பாரம் நெல் மணிகளைக் கொண்டு வந்தன. சுண்டெலிகள் இந்த நெல்மணிகளை உமி நீக்கித் தவிடு போக்கி நொறுங்காமல் சுத்தமான அரிசியாகச் செய்தன. அதைக்கொண்டு அரச குடும்பத்தினருக்கு உணவளிக்கப்பட்டது. தேனீக்கள் இடைவிடாது அவனுக்காகத் தேனைச் சேகரித்துத் தந்தன. பட்டறைகளில் கரடிகள் சம்மட்டி அடித்தன. ஒயிலும் இனிய குரலும் படைத்த காரவிகப் பறவைகள் வந்து அரசனுக்கு இன்னிசை அளித்தன. தான் அரசனுனதும் அசோகன் தன் தாய் வயிற்றில் பிறந்த தம்பியான தீசனை ராஜப் பிரதிநிதியாக நியமித்தான். பத்திமானான அசோகனின் பட்டாபிஷேகம் இங்கு முடிகிறது. என்று 5 - 22 தொடக்கம் 33 வரை மகாவம்சம் கூறுகிறது.

பொதுவாக, அதிசயமான நிகழ்வுகள், யாரோ ஒருவரின் சில நல்ல செயல்களைப் பாராட்டும் வகையில், தெய்வீக செயல்களால் ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது. அசோகனால் சுமார் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கொல்லப்பட்ட பின்பும், இவ்வளவு அதிசயமான நிகழ்வுகளால், தெய்வீக ஆசீர்வாதத்துடன், அசோகன் கௌரவிக்கப்பட்டார் என்பதை அறியும் பொழுது, ஆச்சரியப்படாமல் யாராவது ஒருவர் இருப்பாரா? ஆனால் இருந்துள்ளது? அது தான் மகாநாம தேரரின் எழுத்தாற்றல்!

மேலும், தீபவம்சத்தின்படி தேவநம்பியதிஸ்ஸரின் முடிசூட்டு விழாவின் போதும் இதே போன்ற அதிசயங்கள் நடந்தது தெரிய வருகின்றன. தீபவம்சம் 11 - 14 முதல் 24 வரை பார்க்கவும்.

அந்த மன்னனின் (அதாவது அசோகனின்) பதினேழு வருடங்களும், அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களும் கழிந்தபோது, குளிர்காலத்தின் இரண்டாவது மாதத்தில், புனிதமான ஆசாஹா நட்சத்திரக் கூட்டத்தின் கீழ் [under the most auspicious Nakkhatta of Asāḷhā], தேவானம்பியதிஸ்ஸ தம்பபாணியின் (இலங்கை) ஆட்சியாளராக முடிசூட்டப்பட்டார். சாட்டா மலையின் [Chāta mountain] அடிவாரத்தில், மூன்று குறிப்பிடத்தக்க மூங்கில் கம்புகள் காணப்பட்டன - முதலாவது - தங்க கொடியுடன் வெள்ளி போன்ற வெண்மையாக பளபளக்கிறது, இரண்டாவது - பல்வேறு வண்ணங்களில் மலர் போன்ற உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மூன்றாவது - பறவைகள் மற்றும் விலங்குகளை, அவற்றின் இயற்கையான சாயல்களில் காட்டுகிறது.

மேலும் குதிரை முத்து, யானை முத்து, தேர் முத்து [horse pearl, elephant pearl, chariot pearl] மற்றும் பிற உட்பட எட்டு வகையான அரிய முத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது முடிசூட்டு விழாவின் ஆடம்பரத்தால் ஈர்க்கப்பட்ட மலைப்பகுதி மற்றும் கடல் மக்கள் இந்த விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை ஏழு நாட்களுக்குள் மன்னரிடம் கொண்டு வந்தனர். அரிய மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினங்களால் மிகவும் மகிழ்ச்சியடைந்த தேவானம்பியதிஸ்ஸ, ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், உன்னதமானதாகவும் உணர்ந்து, தனது நேர்மையான செயல்களின் வெகுமதிகளாகக் அவ்வற்றைக் கண்டார். இந்த பொக்கிஷங்களைப் பெறுவதற்குத் தகுதியுடையவர், தனது அன்புக்குரியவர்களில்-தன் பெற்றோரா, உடன்பிறந்தவர்களா, உறவினர்களா அல்லது நண்பர்களா, யார் என்று அவர் ஆச்சரியப்பட்டார். பின்னர் இளவரசர் அசோகனை நினைவு கூர்ந்தார் என்கிறது.

Part: 67 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

The Third Council took place one hundred and eighteen years after the Second Buddhist Council under the aegis of the king Asoka. All the three Buddhist Councils are about the Theravada Buddhism, and various sects.

It is stated here that Bindusara, Asoka’s father, had one hundred and one glorious sons, and Asoka killed ninety nine of them, his half brothers, 5-20 [He, when he had slain his 20 ninety-nine brothers born of different mothers, won the undivided sovereignty over all Jambudlpa.] The King Asoka was initially known as wicked Asoka, 5 - 189, [189 Dhammasoka might be converted. Candasoka (the wicked Asoka) was he called in earlier times, by reason of his evil deeds ;] and then became Dhammasoka, 5 - 190 [he was known as Dhammasoka (the pious Asoka) afterwards because of his pious deeds]. This hidden logic, as stated elsewhere, is running throughout the Lanka chronicles: However bad one might be prior to embracing the Buddhism, all the sin are washed off the moment that person embraced the Buddhist Faith.

Asoka assumed the power by killing some or all of his brothers, consolidated his hold over the country, and then formally consecrated four years after assuming the power. That means he was a confirmed murderer when he was consecrated, but quite a lot of miraculous things happened on his coronation; see 5 – 24 to 33 [22 Four years after the famous (Asoka) had won for himself the undivided sovereignty he consecrated himself as king in 23 the city Pataliputta. Straightway after his consecration his command spread so far as a yojana (upward) into the air and downward into the (depths of the) earth. 24 Day by day did the devas bring eight men's loads of water of (the lake) Anotatta ; the king dealt it out to his people. 25 From the Himalaya did the devas bring for cleansing the teeth twigs of naga-creeper, enough for many thousands, 26 healthful fruits, myrobalan and terminalia and mango fruits from the same place, perfect in colour, smell, and 27 taste. The spirits of the air brought garments of five colours, and yellow stuff for napkins, and also celestial drink 28 from the Chaddanta-lake. Out of the naga-kingdom the nagas (brought) stuff, coloured like the jasmine-blossom and without a seam, and celestial lotus-flowers and colly rium and 29 unguents; parrots brought daily from the Chaddanta-lake 30 ninety thousand waggon-loads of rice. Mice converted this rice, unbroken, into grains without husk or powder, and 31 therewith was meal provided for the royal family. Perpetually did honey-bees prepare honey for him, and in the forges bears 32 swung the hammers. Karavika-birds, graceful and sweet 33 of voice, came and made delightful music for the king. And being consecrated king, Asoka raised his youngest brother Tissa, son of his own mother, to the office of vice-regent. Here ends the Consecration of the pious Asoka ].

Usually miraculous happenings, it is believed, are by divine acts in appreciation of some meritorious work by someone. One may wonder whether the murder of his brothers to the tune of about one hundred by Asoka had the divine blessings to be honoured with such miraculous happenings! Coincidentally, similar wondrous things happened during the coronation of Devanampiyatissa as per the Dipavamsa; see 11 – 14 to 24

[14. When seventeen years of that king (that is, Asoka) and six months of the next year had elapsed, in the second month of the winter season, under the most auspicious Nakkhatta of Asāḷhā, Devānampiya was installed in the kingdom of Tambapaṇṇi. 15. At the foot of the Chāta mountain three bamboo poles were to be found. (The first was) white like silver; its creeper shone like gold. 16-17. There was also (the second), the flower pole, (whereon most beautiful,) delightful (figures) like the shapes of flowers (presented themselves), dark blue, yellow, red, pure white, and black; and so also (the third), the bird-pole on which birds (appeared), each with its natural colours, and also quadrupeds. 18. The eight descriptions of pearls (also presented themselves), viz. the horse pearl, the elephant pearl, the chariot pearl, the myrobalan pearl, the bracelet pearl, the signet pearl, the Kakubha pearl, the Sadisa (Pākatika?) pearl. 19. When Devānampiya had succeeded to the throne, (the people,) moved by the splendour of his coronation, brought the three kinds of gems from the Malaya country, the three bamboo poles from the foot of the Chāta hill, and the eight kinds of pearls from the sea-shore. 20. Great crowds brought in the space of seven days, in consequence of Devānampiya’s merit, the gems which were produced in Malaya and which were worthy of a king. 21. When the king saw these costly, precious treasures, the unequalled, incomparable, wonderful, rare treasures, 22-23. he spoke with a heart full of joy: “I am high-born, noble, the chief of men; such is the reward of my righteous deeds; look at the treasures I have gained, which are worth many lacs and are produced in consequence of my merit. Who is worthy to receive the donation of these treasures, ]

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 68 தொடரும் / Will follow

துளி/DROP: 1945 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 67

https://www.facebook.com/groups/978753388866632/posts/32906137132368176/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 68

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 68 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

சுருக்கமாக நாம் முன்பே விபரித்த படி, தேவநம்பியதிஸ்ஸ என்பது அசோகரின் ஒரு பிரதி என்று கூறலாம்.

"அசல்ஹா விண்மீன்கள்" / Nakkhatta of Asāḷhā என்ற சொல் பண்டைய இந்திய சந்திர நாட்காட்டி மற்றும் ஜோதிடத்துடன் தொடர்புடையது. அசல்ஹா மாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் நட்சத்திரங்கள் இங்கே குறிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் Pūrva Āṣāḍhā (Purvashada) – பூராடம், Uttara Āṣāḷhā (Uttarashada) – உத்திராடம் மற்றும் Mūla (Moola) – மூலம் போன்ற பல நட்சத்திரங்கள் நிகழ்கின்றன. Asāḷhā (சமஸ்கிருதத்தில் Āṣāḍha) என்பது பாரம்பரிய இந்து நாட்காட்டியில் ஒரு சந்திர மாதமாகும், இது கிரிகோரியன் நாட்காட்டியில் தோராயமாக ஜூன்-ஜூலைக்கு ஒத்திருக்கிறது. இது பௌத்த மற்றும் இந்து மரபுகளில் குறிப்பிடத்தக்க ஆஷாட [Āṣāḷhā / Āṣāḍha] மாதத்தின் முழு நிலவுடன் தொடர்புடையது.

இந்து சந்திர நாட்காட்டி சந்திரனின் இயக்கத்தைப் பின்பற்றுகிறது, எனவே மாதங்கள் சந்திர சுழற்சிகளின் அடிப்படையில் தொடங்கி முடிவடைகின்றன. தமிழ் நாட்காட்டி சூரியனைப் பின்பற்றுகிறது, சூரியன் ஒரு புதிய ராசியில் (ராசி) நுழையும் போது மாதங்கள் தொடங்கும்.

எனவே, இந்த வேறுபாடுகள் காரணமாக, இந்த குறிப்பிட்ட சந்திர மாதம் (Āṣāḍha) ஒரு சூரிய மாதத்துடன் (ஆணி அல்லது ஆடி) சரியாகப் பொருந்தவில்லை - மாறாக, அது இரண்டிலும் பாதி பாதி சேர்க்கிறது. [instead, it overlaps both Aani & Aadi partially]

தீபவம்சம் அத்தியாயம் 11 இல் குறிப்பிடப்பட்டுள்ள சாட்டா மலை நவீன புவியியலில் துல்லியமாக அடையாளம் காணப்படவில்லை. சில அறிஞர்கள் இது தீவின் மத்திய அல்லது தெற்குப் பகுதிகளில் உள்ள, விலைமதிப்பற்ற ரத்தினங்களுக்கு பெயர் பெற்ற, இயற்கை வளங்கள் நிறைந்த மற்றும் தனித்துவமான வடிவங்களைக் கொண்ட மூங்கில் கம்புகள் [மரங்கள்] கொண்ட மலை நாடாக இருக்கலாம் என்கின்றனர்.

இருப்பினும், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பெரும்பாலும் குறியீட்டு அல்லது கவிதை விளக்கங்களைப் பயன்படுத்துகின்றன. எனவே சாட்டா மலையானது ஒரு சரியான இயற்பியல் இருப்பிடத்தைக் காட்டிலும் ஒரு புராண இடமாகக் கூட இருக்கலாம்?.

தீபவம்சம் (VI.18), அசோகரின் மதமாற்றத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: 'அசோகர் சிறந்த நகரங்களில் சிறந்ததாக, பாடலிபுத்திரத்தில் [Pāṭaliputra, இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னாவின் பழைய பெயர் ஆகும்.] ஆட்சி செய்தார்; அவரது முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் புத்தரின் நம்பிக்கைக்கு மாற்றப்பட்டார். மகாவம்சத்திலும் அவ்வாறே. இருப்பினும், அசோகர் தனது பதின்மூன்றாவது கல்வெட்டு கட்டளையில், கலிங்கத்தை வென்ற பிறகு, தம்மத்தின் மீது ஒரு வலுவான விருப்பத்தை உணர்ந்ததாகக் கூறுகிறார், மேலும் அவர் முடிசூட்டப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆணையின்படி கலிங்கப் போர் நடந்தது. எனவே, இந்த அத்தியாயம், அசோகரின் பதின்மூன்றாவது பாறை ஆணையில் உள்ள செய்தியின் உள்ளடக்கத்துடன் நேரடியாக முரண்படுகிறது. தீபவம்சம் அல்லது மகாவம்சத்தின் ஆசிரியர், அசோகரைப் பற்றி நல்ல அறிவைக் கொண்டிருந்தார் என்று கூறினாலும், அசோகா பாறைகள் மற்றும் தூண்களில் பதித்த கல்வெட்டு செய்திகளைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் இங்கு நிக்ரோதா, மொகாலிபுத்த தீசர் [Nigrodha, Moggaliputtatissa / நிக்ரோதா மௌரியப் பேரரசர் அசோகரை பௌத்த மதத்திற்கு மாற்றிய துறவி ஆவார், மேலும் மொக்கலிபுத்த திஸ்ஸா மூன்றாவது பௌத்த சபைக்கு தலைமை தாங்கிய பௌத்த பெரியவர் ஆவார்] மற்றும் பல புராணக் கதை உள்ளது. எதுவும் நம்பத்தகுந்த கதைகள் அல்ல, அனைத்தையும் நிதானமான வரலாறு என்று கருத முடியாது. மேலும், இந்த கதைகள் இலங்கையுடன் தொடர்புடையவை இல்லை. அசோகர் எண்பத்தி நான்காயிரம் விகாரைகளை மூன்றே ஆண்டுகளில் கட்டினார் என்று கூறுகிறது. ஆனால், இது அவரது அரசின் பரந்த பரப்பளவில் நிறைவேற்ற முடியாதது.

அசோகர் பௌத்தத்துடன் நெருக்கமாக அல்லது ஆழமாக இணைய விரும்பினார். ஆனால், மொகாலிபுத்த தீசர் தனது மகனையோ மகளையோ மத ஒழுங்கில் நுழைய அனுமதிப்பவர் மட்டுமே அப்படியாக முடியும் என்று கூறினார். மன்னன் அசோகர் தனது மகன் மகிந்த, இருபது வயது, மற்றும் மகள் சங்கமித்தா, பதினெட்டு வயது, இருவருக்கும் பப்பாஜ்ஜி நியமனம் [Pabbajji ordination / புத்த மதத்தில் புத்த பிக்கு அல்லது பிக்குணி ஆகும் புதிய நியமனம்], செய்தார். அதனால் அவர் புத்த மதத்தின் உறவினராக [kinsman of Buddha’s religion] இருக்க முடிந்தது.

தான் புத்த மதத்தின் ஒரு நெருங்கிய உறவினராக மாறவேண்டும் என்பதால், ஒரு தந்தை தனது இரு சிறு குழந்தைகளையும், அதிலும் ஒருவர் இளம் தாயாக இருந்தும், அவர்கள் இருவரையும் குருத்துவத்தை ஏற்கச் சொல்வது மிகவும் தகுதியற்றது மற்றும் தாராளமற்றது. ஏனெனில் இதே தந்தை, அழகிய பெண்கள் நிறைந்த அந்தப்புரத்தை, அரண்மனையில் பராமரித்துக் கொண்டு, கோட்பாட்டின் உறவினர் ஆக இந்த நடவடிக்கை எடுப்பது விந்தையிலும் விந்தையே!.

இதை எப்படிச் சொல்வேன், ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும், 18 அகவை சங்கமித்தாவின் இளம் மகனும் [ஒன்றோ இரண்டு அகவை இருக்கலாம்? அல்லது கட்டாயம் எப்படியாகினும் ஐந்து அகவைக்குள் தான்] மதகுருவாக வருவதற்கான பாதையில் புதியவராக நியமிக்கப்பட்டார். உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களில் குழந்தைப் படையினருக்காக வருந்துவதும் கண்டனம் செலுத்துவதையும் காண்கிறோம். ஆனால் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அற்ற, அறிவு முழுமை பெறாத குழந்தை பிக்குகள் பற்றி ஒரு வார்த்தை கூட ஊடகங்களில் இருந்து வருவதே இல்லை?. மகிந்த தேரர் இங்கு இலங்கையை மாற்றுபவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த அத்தியாயம் இந்தியாவில் நடந்த மூன்றாவது பௌத்த பேரவையை பற்றியது மற்றும் இலங்கையுடன் எந்த வரலாற்றுத் தொடர்பும் இல்லை. மேலும் பல அறிஞர்கள் இன்று இந்த சபை நடக்கவில்லை என்று நினைக்கிறார்கள். முதல் பேரவை ஐந்து பக்கங்களாகவும், இரண்டாவது பேரவை ஏழு பக்கங்களாகவும், ஆனால் மூன்றாவது பேரவை இருபத்தைந்து பக்கங்களாகவும் இருக்கிறது. ஏனெனில் நம்பமுடியாத பல கதைகள் அதில் கட்டமைக்கப்பட்டுள்ளன. பிந்துசாரருக்கு நூற்றி ஒரு மகன்கள் இருந்த கதை மகாபாரத இதிகாசத்தில் இருந்து திருடப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் மொகாலிபுத்த தீசர் மற்றும் மூன்றாம் பேரவையின் நம்பாத் தன்மை ஏற்கனவே விரிவாக அலசியுள்ளோம்.

Part: 68 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Devanampiyatissa is the copy of Asoka in concept.

The Dipavamsa (VI.18) speaks of Ashoka’s conversion as : 'Asoka ruled in Pāṭaliputta, best of towns; three years after his coronation he was converted to Buddha’s faith.' Similarly in Mahavamsa too. However, Asoka, in his thirteenth rock edict, says that he came to feel a strong inclination towards Dhamma after conquering Kalinga, and the Kalinga war took place, as per the same edict, eight years after his coronation. This chapter is, therefore, in direct conflict with the content of the Asoka’s message in his thirteenth rock edict. The author of the Dipavamsa or Mahavamsa, had pretty good knowledge about Asoka, but was clueless about Asoka’s messages on rocks and pillars to his beloved subjects. There is a legendary story of Nigrodha, Moggaliputtatissa, and many more. None are believable stories and all cannot be considered as sober history. Also, The stories are not connected with Lanka. Asoka built eighty four thousand Viharas in three years which is quite impossible to accomplish in the vast expanse of his kingdom.

Asoka wanted to be the kinsman of Buddha’s religion, and Moggaliputtatissa said that only a person who lets his son or daughter to enter the religious order could become the kinsman. The King Asoka asks his son Mahinda, twenty years of age, and the daughter Sanghamitta, eighteen years of age, to obtain the Pabbajji ordination [pabbajjā, (Pāli: “to wander forth”, ) Sanskrit Pravrajyā, Buddhist rite of ordination by which a layman becomes a novice (Pāli sāmaṇera; Sanskrit śrāmaṇera)], so that he could be kinsman of Buddha’s religion. It is very unworthy and ungenerous of a father to ask his two very young children to adopt priesthood because the father could become a kinsman of the doctrine, while maintaining his harem of ladies. Still more tragic is that Sanghamitta was already a mother with a son. That young son of Sanghamitta was also condemned to become a novice on the path to priesthood. There were so much cries of child soldiers in the media, local and international. but not a word came from the media about the child monks. The child monks are in fact deliberate castration of young kids. Mahinda Thera is named here as the converter of Lanka. This chapter is about the Third Buddhist Council that took place in India and had no historical relation with Lanka, and many scholars think this council never took place. The First Councils runs into five pages, the Second council runs into seven pages, but the Third council runs into twenty five pages because many unbelievable stories are built into it. The story of Bindusara having one hundred and one sons must have been plagiarised from the Ithigas Mahabharata.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 69 தொடரும் / Will follow

துளி/DROP: 1946 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 68]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32915911191390770/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 69

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 69 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

6வது அத்தியாயம் விஜயன் இலங்கைக்கு வருவதைப் பற்றியது. பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த நாடுகளில் ஒன்றான வங்க நாட்டு மன்னன் [Vanga king] கலிங்க மன்னனின் [Kalinga king] மகளை மணந்தான். அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவள் சிங்கத்துடன் இணைந்து வாழ்ந்து சீகபாகு / சிங்கபாகு [Sihabahu / Sinhabahu] என்ற ஆண் மகனையும், சீகவலி [Sinhasivali or Sihasivali] என்ற மகளையும் பெற்றெடுத்தாள். [மகனின் கை, கால்கள் சிங்கத்தைப் போல உருவானதால் அவனுக்கு சீகபாகு என்று பெயரிட்டாள். ஆனால் மகளுக்கு சீகவலி என்று பெயரிட்டாள்.] ஒரு மனிதப் பெண் மற்றும் மிருக சிங்கத்தின் இணைப்பிலிருந்து சந்ததிகளைப் பெறுவது உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது. இது ஏற்கனவே விரிவாக விவரிக்கப் பட்டுள்ளது. பின் சீகபாகு தனது சொந்த சகோதரியை திருமணம் செய்து, பதினாறு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தான். அதில், விஜயனும் சுமித்தாவும் [Vijaya and Sumitta] முதல் இரட்டையர் ஆகும்.

விஜயன் வன்முறையாளர், பொல்லாதவர் மற்றும் தீய நடத்தை உடையவர். அவருக்கு அதே குணாதிசயங்களைக் கொண்ட எழுநூறு நண்பர்களும் இருந்தனர். விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் கப்பலில் ஏற்றி, தங்கள் பூர்வீக நிலத்தில் அவர்கள் செய்த குற்றச் செயல்களின் காரணமாக, நாடு கடத்தப்பட்டனர். அவர்களது மனைவிகளும் மற்றும் குழந்தைகளும் வெவ்வேறு கப்பலில் ஏற்றி கடலில் நாடு கடத்தப்பட்டனர். குழந்தைகளையோ தாய்களையோ அவர்களின் தந்தை அல்லது கணவன் செய்த குற்றங்களுக்காக, அதுவும் குழந்தைகளையும் தாய்களையும் தனித்தனியாக வேறு வேறு கப்பலில் ஏற்றி நாடு கடத்துவார்களா? மேலும் குழந்தைகளின் வயது சுழியத்திலிருந்து [பூஜ்ஜியத்திலிருந்து] பத்து அல்லது பன்னிரெண்டு வரை வேறு படலாம் ? குறைந்த பட்சம் குழந்தைகளாவது தாயுடன் இருக்க வேண்டும் அல்லவா? இது ஒரு அதீத கற்பனை போல், நம்பும்படியாகவும் இல்லை. 700 + 01 பேரும் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாய்மரம் மற்றும் துடுப்புகளின் உதவியுடன் ஒரே கப்பலில் பயணம் செய்தனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது? இருப்பினும் கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஏறக்குறைய ஆயிரம் பேரை அல்லது குறைந்தது எழுநூறு பேரை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு கப்பல் இந்தியப் பெருங்கடலில் எங்கும் இருந்ததாக ஒரு வரலாறும் இல்லை.

நீண்ட காலமாக, இந்தியாவில், படகுகள் சிறியதாக இருந்தன, மேலும் பாய்மரக் கம்பம் மிக உயரமாக இருந்ததுடன் அரிதாகவே நிலத்தை விட்டு, வெகுதூரம் வெளியேறியது. இருப்பினும், கடலில் செல்லும் கப்பலுக்கு, துடுப்புகளும் இருந்தன. கடலில் காற்று குறையும் போது அது பயன்படுத்தப்பட்டன. மேலும் துடுப்புகள் துறைமுகங்களுக்குள் கப்பலை அங்கும் இங்கும் வசதியின் படி திருப்ப மற்றும் முன்னோக்கி, பின்னோக்கி செலுத்த பயன்படுத்தப்பட்டன. இல்லையெனில் கப்பல் காற்றின் உதவியுடன் மட்டுமே பொதுவாக பயணித்தது. பிந்தைய வேத காலத்தில் (கி.மு. 600 முதல் 200 வரை), கடல் பயணங்கள், படகுகள் மற்றும் பாதைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் கடல்சார் நடவடிக்கைகளின் ஆரம்ப குறிப்பு ரிக் வேதத்தில் உள்ளது; அக்கினியை வேண்டி, ரிக் வேதம் மண்டலம் ஒன்றில், சூக்தம் 97 இல் வசனம் 7 & 8 யிலும் கப்பலைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 7 - "எங்கும் முகமுள்ள நீ, எங்களுடைய பகைவர்களை - அக்கரைக்குச் செல்லும் கப்பல் போல் செலுத்தவும், அவனுடைய ஒளி எங்களுடைய பாபத்தை நீக்குக", 8 - நீ எங்களை, எங்களுடைய நலத்துக்காக [ஷேமத்துக்காக], கப்பலிலே கடலுக்கப்பால் செலுத்தவும். அவனுடைய ஒளி, எங்களுடைய பாபத்தை நீக்குக" என்கிறது.

கிமு 200 வாக்கில், கப்பல்கள் பெரிய பெரிய அளவுகளில் கட்டப்பட்டன. ஒரு கப்பலை பெட்டிகளாகப் பிரிக்கும் ஒரு பகிர்வுகளின் [bulkhead] எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது; ஒரு கப்பலில் உள்ள ஒரு bulkhead [பல்க்ஹெட்] என்பது மேலோட்டத்திற்குள் [கப்பல் கூடுக்குள் / hull ] உள்ள ஒரு செங்குத்துச் சுவராகும், இது கப்பலை தனித்தனி பெட்டிகளாகப் பிரிக்கிறது, முதன்மையாக மேலோட்டத்தில் உடைப்பு ஏற்பட்டால் நீர் பரவுவதைத் தடுக்க உதவுகிறது, இதனால் நீர் புகாத பகுதிகளை உருவாக்குவதன் மூலமும் சேதம் ஏற்பட்டால் வெள்ளத்தைக் குறைப்பதன் மூலமும் கப்பலின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. இதனால், அந்தக்காலத்தில், கப்பல்களின் பக்கங்களில் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த, சிலர் இவற்றில் [bulkheads] 13 வரை வைத்திருந்தனர். அத்துடன், அந்தக் காலத்தில் 100 பேரை ஏற்றிச் செல்லும் 200 டன் எடையுள்ள கப்பல்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட மரம் முக்கியமாக மலபார் தேக்கு [Malabar teak] ஆகும். இது வெளிநாட்டு கப்பல்களில் பயன்படுத்தப்படும் கருவேலமரத்தை [oak] விட நீடித்து நிலைத்ததாக இருந்தது.

விஜயனும் அவரது தோழர்களும் முதலில் சுப்பரா [சுப்பராகா / Suppara / Supparakka] என்ற இடத்தில் இறங்கினர். அவர்கள் அங்கும் முன்போலவே தவறாக நடந்து கொண்டனர். இதனால், கப்பல் மூலம் தப்பி ஓட வேண்டியிருந்தது. பின்னர் அவர்கள் புத்தர் பரிநிர்வாணத்தை அடைந்த நாளில் இலங்கையில் தரையிறங்கினார்கள். இது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு என்பது வெள்ளிடைமலை. விரிவான விபரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மனைவிகள் மகிழடிபாகத்திலும் [Mahiladipaka], குழந்தைகள் நாகதீபத்திலும் [ Naggadipa] இறங்கினர். மனைவிகள் மற்றும் குழந்தைகளின் தலைவிதியைப், அதாவது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் புறக்கணித்து வரலாற்றை [கதையை] மகாவம்சத்தில், மகாநாம தேரர் எழுதியுள்ளார். விஜயன் தனது சொந்த நாட்டில், தனது நடத்தையில் ஒரு குற்றவாளியாக இருந்தார். தங்கள் தங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பதை அறிய விஜயன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அவர் முதலில் தரையிறங்கிய சுப்பராவிலும், அப்படியே குற்றமாக நடந்து கொண்டார். எனினும், இப்படியான மற்றும் சிங்கத்தின் வாரிசான, 'விஜயன் வருகை' யைத்தான் இலங்கை தங்களுடையது என்ற சிங்கள பௌத்தர்களின் கூற்றுக்கு அடிப்படையாக்குகிறார்கள். இருப்பினும், வில்ஹெல்ம் கெய்கர் தனது தீபவம்சம் மற்றும் மகாவம்சம் பற்றிய தனது ஒப்பீட்டு ஆய்வில் விஜயனின் வருகை ஒரு கட்டுக்கதை என்று கூறியுள்ளார், குறிப்பு "The Dipavamsa And Mahavamsa And Their Historical Development In Ceylon, In German by Wilhelm Geiger in 1905, and the English translation by Ethel M Kumaraswamy, ஆனால் அந்த அறிக்கை மரபியல் அல்லது உயிரியல் அடிப்படையை தவிர்த்து, வேறு காரணங்களைக் கூறுகிறது. எனினும் மரபியல் அல்லது உயிரியல் அடிப்படை ஒரு வெள்ளிடை மலையாகும்.

எது எப்படியாகினும், இந்த அத்தியாயம் இலங்கையின் கடற்கரையில் தரையிறங்கியதாகக் கூறப்படுவதைத் தவிர, இலங்கையில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல.

Part: 69 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Chapter 6 is about coming of Vijaya: A Vanga king married the daughter of a Kalinga king. She gave birth to a beautiful daughter. She cohabited with a lion and gave birth to one boy, Sihabahu, and a daughter, Sihasivali. Sihabahu killed the father lion when he was about sixteen years of age, and created a new kingdom, Sihapura. It is biologically impossibile to have offspring out of the union of a human lady and a lion. Sihabahu incestuously married his own sister, and gave birth to sixteen twins. Vijaya and Sumitta is the first twin. Vijaya was violent, wicked and of evil conduct and he had seven hundred friends of same characters. Vijaya and his seven hundred companions were put on a ship and exiled because of their criminal conducts in their native land. Their wives were also put on another ship and allowed to drift in sea. Their children were also put in yet another ship and allowed to drift in sea. Would any sensible person or king punish kids for the crimes committed by their fathers? Anything is fine when it helps Buddhism! Vijaya and his companions first landed at a place called Supparakka. They misbehaved there, and had to flee by ship. Then they landed in Lanka on the day Buddha attained Parinirvana, a deliberate concocted happy coincidence. Wives landed in Mahiladipaka and the children landed in Naggadipa. The Mahavamsa, rather Mahanama, just ignored the fates of the wives and the children. Vijaya was a criminal in his behaviour in his native country and also criminally behaved where he landed first, Supparaka. This is the basis of the claim of the Singhalese Buddhists that Lanka is theirs. It is a criminal concept and a frivolous claim. Even Wilhelm Geiger has stated that Vijaya’s arrival is a myth in his comparative study of Dipavamsa and Mahavamsa, Reference 11, but that statement was not based on genetics or biology. This Chapter is also not about historical events which happened in Lanka, except the alleged landing on the shores of Lanka..

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 70 தொடரும் / Will follow

துளி/DROP: 1948 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 69

https://www.facebook.com/groups/978753388866632/posts/32947323861582836/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 70 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

மகாவம்சத்தின் ஆசிரியர், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் தம்பபன்னி [இலங்கை] என்ற பகுதியில் கிமு 543 இல் புத்தர் காலமான அதே தினத்தில் வருகை தந்ததாக, ஒரு மத முக்கியத்துவம் கொடுப்பதற்காக, செயற்கையாக நிர்ணயித்தார். அதற்காக, அதாவது இந்த சூழ்ச்சியால், விஜயனுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர்களின் ஆட்சிக் கால இடைவெளியை நிரப்புவதற்காக ஆட்சிக்காலத்தை சிலருக்கு நீட்டப்படுள்ளது. உதாரணமாக, அபயனின் மருமகன் பண்டுகாபயா [பண்டுகாபயன் / King Pandukhabaya, nephew of Abhayan] கிமு 377 முதல் கிமு 307 வரை, அதாவது 70 ஆண்டுகள் என நீடிக்கப் பட்டுள்ளது. பண்டுகாபயாவின் மகன் மூத்தசிவா 60 ஆண்டுகள் ஆட்சி செய்தார் (கி.மு. 307 - கி.மு. 247) இவ்வாறு தந்தையும் மகனும் 130 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்! மேலும் விஜயனின் வருகை பற்றிய கதை கிபி 6 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுக்கு கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், விஜயன் ஒரு பௌத்தர் அல்ல. ஆனால் ஒரு இந்து, சிங்களவர் அல்ல, ஆனால் பெங்காலி - கலிங்க வம்சாவளி! மற்றது உலகில் சிங்களம் என்ற மொழியே இல்லை! புத்தர் இறந்த மாதத்தில், கட்டாயம் இலங்கை வந்து அடைய முடியாது என்பதை விபரமாக, காற்றின் படங்களுடன் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது.

7வது அத்தியாயம் விஜயனின் முடிசூட்டு விழாவைப் [பட்டாபிஷேகம்] பற்றியது. விஜயன் இலங்கையைச் சேர்ந்த குவேணி [Kuveni / Kuvanna
/ குவண்ணா] என்ற இயக்கர் பெண்ணை [யட்சினி / Yakshini] சந்திக்க நேர்ந்தது. அவன் அவளை மணந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அவளின் உதவியுடன் இயக்கர்களை (Yaksha) கொன்றான். என்றாலும் விஜயனுக்கு இலங்கையின் அரசனாவதற்கு ஒரு உன்னதமான பெண் தேவைப்பட்டது. அப்போது மதுரை மன்னனின் மகளும், விஜயனின் 700 தோழருக்கான மதுரை தமிழ் பெண்களும், பணியாட்கள் மற்றும் வணிகர்களுடன், தமிழ்நாட்டின் பாண்டிய அரசின் ஒரு பகுதியான மதுரையில் இருந்து, வரவழைக்கப் படடனர். எனவே இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அந்த நேரத்தில் தமிழர்களாக இருக்க வேண்டும். முதல் மனைவி குவண்ணாவை விஜயன் விரட்டியடிக்கும் பொழுது, அவனது சொந்தக் குழந்தைகள் இருவரும் தாயுடன் சென்றனர். குவண்ணாவின் சொந்த மக்கள் உடனடியாக அவளைப் பழிவாங்கும் வகையில் கொன்றனர். எனினும் குழந்தைகள் சுமனகுட்டா [Sumanakutta] வழியாக மலைநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். அதனால், அவர்களின் சந்ததியினர் மலைநாட்டில் குடியேறினர் பெருக்கினார். விஜயன், பாண்டிய மன்னனுக்கு ஆண்டுக்கு இருமுறை நூறாயிரம் (பணத்துண்டுகள்) மதிப்புள்ள சிப்பி முத்துக்களை [shell pearl ] அனுப்புவது வழக்கம் ஆகியது. 'சிப்பி முத்து' என்பது சிப்பி ஓடுகளின் உட்புறப் புறணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, இது முத்தின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. [Shell Pearls are made from the inner lining of oyster shells, also known as Mother of Pearl.] மேலும் விபரத்துக்கு 7 - 67 முதல் 74 வரை பார்க்கவும்.

மகாவம்சம், அத்தியாயம் 7, வசனங்கள் 67-74 / மலைகளுக்கு தப்பி ஓடுதல் மற்றும் முடிசூடல் [சுருக்கம்]:

விஜயன் மற்றும் குவேனியின் இரு பிள்ளைகளான, சகோதரனும் சகோதரியும் பாதுகாப்புக்காக சுமனகூடத்திற்கு (ஆதாமின் சிகரம்) தப்பி ஓடினர். அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றனர். அவர்கள் அங்கு உள்ள மன்னரின் அனுமதியுடன் மலாயா பகுதியில் (இலங்கையின் மலைப்பகுதியான மத்திய பகுதியில்) வாழ்ந்தனர். அவர்களின் சந்ததியினர் தான் புலிந்தர்கள் என்றும், "புலிந்தர்கள்" என்பது காட்டுமிராண்டித்தனமான (நாகரிகமற்ற) பழங் குடியினருக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் என்றும் விவரிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த சூழலில், "புலிந்தர்கள்" என்பது இலங்கையின் பூர்வீக மக்களான வேடர்களைக் குறிக்கிறது. அத்துடன் இந்த பகுதி, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மலைப்பகுதிகளுக்கு இடையே உள்ள உள்நாட்டின் பகுதி, இப்போது சபரகமுவ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட, வேடர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் "புலிந்த" என்பது பண்டைய இந்திய மற்றும் இலங்கை வரலாற்றில் காட்டு அல்லது நாகரிகமற்ற மலைவாழ் பழங்குடியினருக்கான பொதுவான பெயராகும்.

விஜயனின் தூதுவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, பாண்டிய தமிழ் மன்னன், தன் மகளுக்கு [மதுரை இளவரிசிக்கு] ஏராளமான ஆடையணிகளுடனும் பிரயாணத்துக்குத் தேவையான எல்லா பொருள்களுடன் அனுப்பி வைத்தான். தேர்ந்தெடுத்த இதர [700] பெண்களுக்கும் ஆடை அணிகளை வழங்கினான். அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற வகையில் யானைகள், குதிரைகள், வாகனங்கள் அனுப்பவும் ஏற்பாடும் செய்தான். கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் அவர்களுடன் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. அவர்களிடம் வெற்றி வீரனான விஜயனுக்கு ஓர் செய்தியையும் அனுப்பினன். இந்தப் பெருவாரியான மக்கள் கப்பலில் புறப்பட்டு இலங்கைத்தீவில் மகாதிட்டு எனப்படும் இடத்தில் கரையேறினர். இந்தக் காரணத்ததாலேயே அவர்கள் இறங்கிய இடம் மகாதிட்டு [the ancient port of Mahatittha / now Mantota opposite the island Manaar.] எனப்படுகிறது.

மாதோட்டம் என்பது, இலங்கைத் தீவில், மன்னார் பகுதியில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஆகும். பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை மாதொட்ட அல்லது மகாதித்த என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் மாந்தை என்றும் மாதோட்டம் என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய துறைமுகமாக இது விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும், போசலின் [Porcelain] பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் அகழ்வாய்வுகள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அதன் பின், விஜயன் தமிழ் பாண்டிய இளவரசியை மணந்து மன்னனாக முடிசூடினான். அதேபோல மற்ற 700 பேரும் மதுரை தமிழ் பெண்களை மணந்தனர். அத்துடன் விஜயன் தனது அமைச்சர்களுக்கு செல்வத்தை வழங்கினார். அது மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆண்டும், தனது மனைவியின் தந்தைக்கு மதிப்புமிக்க முத்துக்களை அனுப்பினார். தனது கெட்ட வழிகளை மாற்றிய பிறகு, இலங்கையை தம்பபன்னி நகரில் (இன்றைய வடமேற்கு இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகிறது?) 38 ஆண்டுகள் அமைதியாகவும் நியாயமாகவும் ஆட்சி செய்தார் என்று இந்த பகுதி கூறுகிறது.

Part: 70 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Chapter 7: This is about consecrating of Vijaya. Vijaya happened to meet with Kuvanna, a Yakkhini, native of Lanka. He married her and she bore two kids to him. He slew the Yakkhas with her help. Vijaya needed a noble woman to marry to become the king of Lanka. Then the daughter of the king of Mathura, along with ladies for the 700 companions and with attendants and trades people came from Mathura, part of the Pandya Kingdom in Tamil Nadu. The majority of the people in Lanka, therefore, should be Tamils by that time. Vijaya chased away the first wife Kuvanna, and his own children went with her. Kuvanna’s own peopled promptly killed her in revenge, and the kids fled to the hill country through Sumanakutta. Their offspring populated the hill country, Malaya. Vijaya used to send a shell pearl worth twice a hundred thousand (pieces of money) to the Pandya king annually, 7 - 73. Vijaya ruled 38 years.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 71 தொடரும் / Will follow

துளி/DROP: 1950 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70

https://www.facebook.com/groups/978753388866632/posts/32955016070813615/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 71

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]



பகுதி: 71 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

701 வங்காளி வாலிபருக்கு 701 தமிழ் குமாரி பெண்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பணியாட்களுடனும் வணிகர்களுடனும் திருமணம் செய்ய இலங்கை வருவதால், எல்லா வகையிலும், தமிழர்களுக்கு இலங்கை மீது அதிக உரிமை இருப்பதே தெரிகிறது.

அன்றைய காலக்கட்டத்தில், ஒரு உதாரணத்துக்கு. விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளாக தோணியில் நாடு கடத்தப் பட்டு, இலங்கையில் கரை ஒதுங்கிய மொத்தம் 701 பேரின் வங்காள ஆரிய ரத்தமும் மற்றும் அவர்கள் அனைவரினதும் தமிழ் மனைவிமாரினதும் , அவர்களுடன் அவர்களுக்கு பணி புரிய வந்த தமிழ் கூட்டாளிகள், வேலையாட்களினதும் மொத்தம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் இரத்தமும் ஆரம்ப காலத்தில் முதலில் கலக்கிறது. இப்ப சொல்லுங்கள் யாரின் இரத்தம் கூடுதலாக இருக்கும்? யாருக்கு இலங்கை மீது அதிக உரிமை இருக்கும்? மற்றும் அவர்கள் வரும் பொழுது ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஆதி நாகர், இயக்கர் குடிகளின் இரத்தமும் கட்டாயம் நாளடைவில் சேர்ந்து இருக்கும். எனவே சிங்கள வம்சத்தின் கலப்பு எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை? ஆனால் அதை அவர்கள் புரியும் பக்குவத்தை மகாவம்ச, ராஜவலிய கதைகள் தடுத்துக்கொண்டே இருப்பது தான் உண்மை.

இயல்பிலேயே தனது சொந்த நாட்டில் ஒரு குற்றவாளியான விஜயனும் அவனது தோழர்களும் தங்கள் தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் வெவ்வேறு கப்பலில் தவிக்க விட்டுவிட்டு, விஜயன் தனது முதல் அல்லது இரண்டாவது மனைவியை [இலங்கையின் பூர்வீக குடியான குவண்ணாவை] வேறொரு வெளிநாட்டுப் பெண்ணைத் [மதுரை தமிழ் இராசகுமாரியை] திருமணம் செய்து கொள்ள, தனது பிள்ளைகளுடன் துரத்தினார் என்கிறது மகாவம்சம். இந்த நிலையில், விஜயனை இலங்கையின் முதல் நாகரிக குடிமகன் என்று சொல்லமுடியுமா ? அல்லது இலங்கையின் உரிமைகோரலின் அடிப்படை எதையும் அவன் உருவாக்க முடியுமா? அது மட்டும் அல்ல பௌத்தம் கூட அப்போது இலங்கையில் நிறுவப்படவில்லை. சிங்கள மொழி என்று ஒன்று உலகிலேயே இல்லை? அது, சிங்கள மொழி ஆரம்பிக்க தொடங்கியதே, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே! இலங்கையில் இருந்தது சிவா, நாக வழிபாடு மட்டுமே!! இன்னும் ஒன்றைக் கவனியுங்கள், விஜயன் தனது தூதர்களை தமிழ் நாட்டுக்கு அனுப்புகிறான், செய்திகள் பரிமாறப்படுகின்றன, தமிழ் புரியாத இலங்கையாக இருந்து இருந்தால், தன் மகளையும், 700 தோழிகளையும் அங்கு எப்படி திருமணம் செய்து வாழ ஒரு வீரமிக்க, செல்வந்த அரசன் அனுப்பினான்? செய்திகளை எப்படி பொதுமக்களிடம் பரிமாறினர் ? கொஞ்சம் சிந்தியுங்கள்?

மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள குவண்ணாவின் முழு அத்தியாயமும் தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கவேண்டும், பாண்டிய நாட்டு மன்னன் தன் மகளை சமீபத்தில் இலங்கையில் வந்து ஒரு துணை மானிடப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று வாழ்ந்து வரும் அறியப்படாத ஒரு பொல்லாத, நாடுகடத்தப்பட்ட ஒருவனிடம் அனுப்பியிருப்பானா? அப்படி அனுப்பினான் என்று மகாநாமா கூறினால், கட்டாயம் எதோ ஒன்றில், எதோ ஒரு நோக்கில் பைத்தியமாக இருக்க வேண்டும்? அதே நேரம், தென் இந்தியா வரலாற்று குறிப்புகளில், பாண்டிய அரசிலோ அல்லது தமிழ்நாட்டிலோ, ஒரு இளவரசி, தோழிகள் சகிதம், தனது உதவியாளர்களுடனும் வணிக மக்களுடனும் இலங்கையில் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ வாழ்வதற்காக வந்ததாக எந்த குறிப்புகள் எதுவும் இல்லை.

அத்தியாயம் 07, தொடக்கத்தில் தெளிவாகக் கூறுகிறது: உலகின் வழிகாட்டியாகிய புத்தபெருமான் அகில உலகத்தின் மீட்டெழுவதற்கான செயல்களைச் செய்து முடித்ததும், தெய்விக அமைதியின் உச்ச நிலையை அடைந்தவராக, பேச்சாற்றல் மிக்கவர்களில் பெரியவரான அவர், பெரிய தேவர் கூட்டத்தின் நடுவில், தம்முடைய நிர்வாண [முத்தி] நிலையில் படுக்கையில் இருந்த பொழுது, தனது அருகில் நின்ற சக்கனிடம் (Sakka / தேவர்களின் அரசன் இந்திரன்) பேசினார்: "சீகபாகு / சிங்கபாகு" வின் மகன் விஜயன் லால நாட்டி லிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வருகிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவகற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்கிறார். ததாககர் [மனதில் நிறைநிலை அடைந்தவர் / புத்தபெருமான்] கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீல தாமரை மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த *தேவனிடம் [நீல வண்ணமுடைய - விஷ்ணு] ஒப்படைத்தான்.

புத்த சமய தெய்வ பக்தர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்வுகளுக்காகத் [‘serene joy and emotion of the pious’] தான் மகாவம்ச கதையை தொகுத்ததாக ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வெளிப்படையாக கூறி இருப்பதால், ஏன் மகாநாம தேரர் புத்தரின் அமானுஷ்ய சக்திகள் மற்றும் இந்து கடவுள்களுக்கு கட்டளையிடும் அவரது திறன் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் புனைவுகளை அறிமுகப்படுத்துகிறார் என்பது வெளிப்படையாக எமக்குப் புரிகிறது. புத்தர் கடவுளைப் பற்றி அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அத்துடன் இந்து கடவுள்களை வழிபடுவதையோ அல்லது பிராமண பூசாரிகளால் இந்து கோவில்களில் செய்யப்படும் விழாக்களையோ மற்றும் சடங்குகளையோ நம்பவில்லை என்ற உண்மை அவரின் போதனைகளிலும் வாழ்விலும் செயல்களிலும் எங்கும் பறந்து விரிந்து இருந்தபோதிலும், மகாநாமதேரர் இப்படியான தரவுகளை புகுத்தியிருப்பது வேடிக்கை மட்டும் அல்ல, புத்த மதத்தின் உண்மைக்கும் களங்கம் விளைவிக்கிறது, எதோ பக்திமான்கள் மகிழட்டும் என புத்தரையும் கூத்து போட வைப்பது சரியா? ஒன்று மட்டும் ஞாபகப் படுத்துங்கள், புத்தரைப் பின்பற்ற உலகத்திலிருந்து, அதாவது ஆசையில் இருந்து, முழுமையாக ஓய்வு பெறுவது அவசியம். இப்ப சொல்லுங்கள், எந்த புத்தகுரு அல்லது புத்த பத்திமான் இப்படி இலங்கையில் வாழ்கிறார்? அப்படி வாழ்ந்தால், ஏன் வடக்கிலும் கிழக்கிலும், தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில், அவர்களின் காணியை பறித்து, புத்தர் சிலையாக எழும்புவாரா?

இப்போது என் நினைவுக்கு வருவது என்னவென்றால், புத்தருக்கு, நாடு கடத்தப்பட்ட, கெட்ட நடத்தை கொண்ட விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தனிப்பட்ட ஆர்வம் இருந்தால், மற்றும் புத்தர் ஏற்கனவே இலங்கை உயிர் வாழ் இனங்களுக்கு, தனது போதனையை போதித்து இருப்பதாலும், விஜயனும் அவனது கூட்டாளிகளும், ஏன் இலங்கையில் அரசை நிறுவியபோது அல்லது அதற்குப் பின்னாவது, தனது 38 ஆண்டு ஆட்சி காலத்தில், எப்போதாவது, பௌத்தர்களாக இருக்கவில்லை? மேலும், இலங்கையில் அவர்களின் முதல் வாழ்க்கை இயக்கர்களிடையே [சமஸ்கிருதம்: यक्ष yakṣa; பாலி: yakkha / உருவமற்ற, மனிதரல்லாதவர்கள்] தொடங்குகிறது , புத்தர் யாரை பயமுறுத்தி, இலங்கையில் வாழத் தகுதியற்றவர் என்று விரட்டி, வேறு ஒரு தீவுக்கு அகற்றினாரோ, அப்படிப்பட்ட இயக்கர்களைத் தான் முதலில் விஜயன் சந்திக்கிறான்?, அப்படி என்றால், புத்தர் தன் பழைய கதையை மறந்து விட்டாரா? ஏன் - தான் தேர்ந்தெடுத்த, பெருமைக்குரியதாக அவராலேயே கருத்தப்பட்ட, துர்நடத்தை கொண்ட விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகளைச் சந்திக்க, இயக்கர்களை அனுமதித்தார்? அது மட்டுமின்றி, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு புத்தருடன் மிகவும் நட்பாக, அவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது வருகையில் இருந்த நாகர்களை, விஜயனும் அவரது கூட்டாளிகளும் ஏன் சந்திக்கவே இல்லை? பல ஏற்பாடுகளை செய்த புத்தருக்கு ஏன் இவைகள் ஞாபகம் வரவில்லை? மற்றொன்று, மகாவம்சத்தின் பிந்தைய அத்தியாயத்தில், விஜயனுக்குப் பிறகு இலங்கைக்கு புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதுவும் இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அசோகரின் மகன் அல்லது தூதுவர் மூலம்? அது மட்டுமின்றி, புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்பியது அசோகர் மட்டுமே! சிங்களம் என்ற இனம் ஆரம்பிப்பதற்கு விஜயன் என்ற உருவம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்ததே தவிர, அவர் ஒன்றும் சாதிக்கவில்லை ! இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கான எந்தவொரு முயற்சியையும் தொடர அவருக்கு ஒரு பெருமைமிக்க உரித்தான குழந்தைகள் கூட இல்லை. இந்துவாக பிறந்து இந்துவாகவே இறந்தான்!

Part: 71 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37



As of that time, by all counts, Tamils had a larger claim on Lanka as ladies came with attendants and trade people. Vijaya, a criminal by nature in his own country, chased away his first wife to marry another woman cannot form the basis of claim of Lanka for Buddhists. Even the Buddhism was not established in Lanka at that time. The entire episode of Kuvanna is not in the Dipavamsa. Would the king of Pandya country have sent his daughter to an unknown person who recently landed in Lanka and living with a sub-human woman? Mahanama must be crazy! There are no references to this in the Pandya kingdom from which the princess came with her attendants and trades people.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 72 தொடரும் / Will follow

துளி/DROP: 1952 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 71

https://www.facebook.com/groups/978753388866632/posts/32969445186037370/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 72

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 72 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

எட்டாம் அத்தியாயம், பண்டு வாச தேவன் பட்டாபிஷேகத்தில், சிங்கபுரத்தில் [Sihapura or sinhapura] சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.அவர்களில் இளையகுமாரன் பண்டு வாச தேவன் [Pandu Vasudeva]. மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள். மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜய சிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் பண்டு என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டு வாசதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படு கின்றன.

விஜயன் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார். மேலும் தனது, கடைசி காலத்தில், தனது சகோதரன் சுமித்தாவுக்கு [Sumitta] செய்தி அனுப்பினார், அவரை ஆட்சியை பொறுப்பேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.விஜயனிடமிருந்து வந்த தூதர்கள் கடிதத்தை அரசனிடம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தை படிக்கக் கேட்டதும் அரசன் தன் மூன்று பிள்ளைகளையும் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான்: 'அன்புடையவர்களே! எனக்கோ வயதாகி விட்டது. எ ன து சகோதரனுக்கு உரியதான அழகிய இலங்கைத் தீவுக்கு உங்களில் ஒருவர் போக வேண்டும். அங்கே அவனுடைய மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்' என்றான். ஆனால் அந்த செய்தியை அனுப்பிய உடனேயே விஜயன் இறந்து விட்டார். மன்னன் சுமித்தாவிற்குப் பதிலாக, அவரது இளைய மகன் பண்டுவாசுதேவன், மன்னரின் அமைச்சர்களின் முப்பத்திரண்டு மகன்களுடன் பிச்சைக்காரத் துறவிகள் வேடத்தில் இலங்கைக்கு வந்தார். தீபாவம்சம் மன்னர் பண்டுவாசுதேவனை (கிமு 504-474) பண்டுவாச / Pandu Vasa என்று அழைக்கிறது. இது பாளி அல்லது பிராகிருத மொழியில் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் என்று பொருள்படும். ஒருவேளை பாண்டிய அரசைச் சேர்ந்த அவரது தாயாரால் இருக்கலாம்?இருப்பினும், பண்டுவாச, விஜயனுடன் எவ்வாறு தொடர்புடையவர் என்பது தீபவம்சத்தில் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. மகாவம்சத்தில் மட்டுமே அவர் விஜயனின் சகோதரரான சுமித்தாவின் இளைய மகன் என்று கூறுகிறது? .

மன்னரின் அழைப்பின் பேரில் வந்த அவர்கள், ஏன் மாறுவேடத்தில் வர வேண்டும் என்று ஒருவர் யோசிக்கலாம்? ஆனால், எனோ, அப்படித்தான் வந்தார்கள். அதேநேரத்தில், மற்றொரு மன்னன் சக்க இளவரசர் பாண்டுவின் இளைய மகள் கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசி, முப்பத்திரண்டு இளம் கன்னிப் பெண்களுடன் ஒரு கப்பலில் கடலில் மிதக்க விட்டிருந்தனர். முப்பத்திரண்டு மகன்களும் முப்பத்திரண்டு மகள்களும் ஒரே காலத்தில் நிகழ்வது, என்ன ஒரு தற்செயல் நிகழ்வு [What a coincidence]! அவர்களும் விஜயனைப் போல இலங்கையை அடைந்தனர்! பண்டுவாசுதேவ பத்தகச்சனை மணந்து இலங்கையின் அரசரானார். அதேபோல 32 மந்திரி மார்களின் மகன்களும், 32 பத்தகச்சனாவின் தோழிகளை மணந்தனர். சித்தார்த்தாவின் (கௌதம புத்தரின்) தந்தை சுத்தோதனனுக்கு (Suddhodana) நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில், அமிதோதனா [Amitodana] இளையவர் ஆவார். இவரின் மகன் தான் சக்க பாண்டு [Sakka Pandu]. எனவே புத்தரின் தம்பியின் பேத்தி தான் பத்தகச்சனா ஆகும். ஆகவே வலிந்து கட்டிக்கொண்டு புத்தருடனான உயிரியல் தொடர்பு இந்த அத்தியாயத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், புத்தர் பிறந்த பூமியில், இதில் எதுவுமே அவர்களின் வரலாற்று நிகழ்வில் பதியவில்லை.

மகாநாம தேரர் தனது மகாவம்சத்தின் மூலம் இலங்கையை 'தம்ம தீபமாக' [‘Dammadeepa’]’ சித்தரித்தார்; அதாவது, புத்தர் தர்மத்தைப் பாதுகாக்கவும் பிரச்சாரம் செய்யவும், தேர்ந்தெடுத்த நிலம் இது என்கிறார். அத்துடன் அவர், மகாநாம தேரர், (புத்தர் அல்ல), பௌத்தம் ஐயாயிரம் ஆண்டுகளாக மேலோங்கும் என்றும், சிங்களவர்கள் மட்டுமே அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

தென்னிந்தியத் தமிழர்கள் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் உட்பட இந்தியாவில் பௌத்தம் அதன் செல்வாக்கை இழக்கத் தொடங்கிய ஒரு நேரத்தில், மகாவிஹார துறவிகள், குறிப்பாக மகாநாம தேரர் பீதியடைந்திருக்கலாம், எனவே பௌத்தத்தைப் பாதுகாக்க, இலங்கையை ‘பௌத்த நாடாக’ மாற்ற முடிவு செய்திருக்கலாம். இவ்வாறு, சிங்கள-பௌத்த என்ற இந்த ஒரு ‘உச்ச’ இனத்தை உருவாக்க, பல்வேறு பழங்குடியினர் மற்றும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து, சிங்கள இனத்தை அப்பொழுது தான் உருவாக்கினார்; எனவே, இந்த புது மொழியில் தேர்ச்சி பெறாத சராசரி பௌத்த பாமர மக்கள், திரிபிடகத்திற்கும் மகாவம்சத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். திரிபிடகம் என்பது மூன்று முக்கிய வகை நூல்களைக் கொண்டுள்ளது, அவை கூட்டாக பௌத்த நியதியை உருவாக்குகின்றன: சூத்திர பிடகம், வினய பிடகம் மற்றும் அபிதம்ம பிடகம் ஆகும். எனவே பௌத்த துறவிகள் மகாவம்சத்தைப் பிரசங்கித்தபோது, அந்தத் துறவிகள் கூறிய அனைத்தையும் புத்தரின் உண்மையான வார்த்தைகள் என்று பாமர மக்கள் ஏற்றுக்கொண்டனர். அன்று முதல் இந்நாட்டின் பௌத்த மதகுருமார்கள், பௌத்த தத்துவத்தை சிங்களவர்களின் ‘இன’மதமாக மாற்றி, மகாவம்சத்தின்படி அதனைப் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறாக, கடந்த 1400 முதல் 1500 வருடங்களாக, இந்த நாட்டில் பௌத்தர்கள், நமது பௌத்த மதகுருமார்களாலும், அவர்களின் 'பைபிள்' என்ற மகாவம்சத்தாலும் தவறாக வழிநடத்தப்பட்டு, வழிகாட்டப் பட்டு, பொய் சொல்லப்பட்டுள்ளனர்!

Part: 72 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Chapter 8: This is about consecrating of Panduvasudeva. Vijaya ruled for 38 years, and sent a message to his brother Sumitta inviting him to come and take over the reign. Vijaya died soon after sending the message. Instead of Sumitta, his youngest son Panduvasudeva came to Lanka with thirty two sons of the ministers of the king in disguise of mendicant monks. One may wonder why they should come in disguise when they were on the invitation of the king! Coincidentally, Bahaddakaccana, the youngest daughter of another king Sakka Pandu was set to drift in sea on a ship along with thirty-two young maidens. What a coincidence to have thirty-two sons and thirty-two daughters! They too reached Ceylon, like Vijaya: what a coincidence! Panduvasudeva married Bahaddakaccana and became the ruler of Lanka. The Sakka Pandu was the son of Amitdodana who was the youngest brother of Suddhodana, the father of Gautama Buddha. Biological connection with Buddha is invented in this chapter.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 73 தொடரும் / Will follow

துளி/DROP: 1955 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 72

https://www.facebook.com/groups/978753388866632/posts/33000992909549264/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.