Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலனாய்வுத் தகவலைப் பரிமாற ஆசியான், சார்க் நாடுகள் இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வுத் தகவலைப் பரிமாற ஆசியான், சார்க் நாடுகள் இணக்கம்

தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிடமிருந்து கிடைத்த மிக முக்கியமான புலனாய்வுத் தகவல்களே, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கை கடற்படையினர் தாக்கியழிப்பதற்கான பிரதான காரணங்களாயிருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆசியான் மற்றும் சார்க் பிராந்திய நாடுகளுக்கு தற்போது கடல் வழிப் பயங்கரவாதச் செயற்பாடுகள் பெரும் அச்சுறுத்தலாயிருப்பதால் இவை தொடர்பாக புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைக் காலங்களில் இலங்கை கடற்படையினர் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கெதிராக மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல்கள் பற்றிக் கூறுகையிலேயே இதுபற்றி அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக `இந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரிகை கூறியுள்ளது.

இது குறித்து இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தஸநாயக்கா கூறுகையில்;

கடந்த 13 மாதங்களில் இலங்கை கடற்படையினர் புலிகளின் எட்டு பெரிய கப்பல்களையும் 11 ரோலர்களையும் 6 அல்லது ஏழு படகுகளையும் நாட்டின் வடக்கு, வடமேற்கு மற்றும் தெற்கு கடற் பரப்புகளில் வைத்து அழித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் இராணுவப் பொருட்களை சிறிய படகுகளில் கடத்திவந்து நடுக்கடலில் நங்கூரமிட்டிருக்கும் தாய்க்கப்பல்களில் அவற்றை நிரப்புவர்.

இந்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு சமீபமாக வந்ததும் அவற்றிலிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் மீன்பிடி ரோலர் படகுகளுக்கு மாற்றப்பட்டு பின்னர் அவற்றிலிருந்து சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு மாற்றப்பட்டு பொருத்தமான இடங்களில் அவை தரையிறக்கப்படும்.

`உள்ளக மற்றும் வெளியக சிறந்த புலனாய்வுத் தகவல்கள் மூலம் கிடைப்பவற்றையும் துணிச்சலாகவும் புதுமையாகவும் மேற்கொள்ளப்படும் தாக்குதல் திட்டங்கள் மூலம் சிறிய இலங்கைக் கடற்படையினரால் சிறந்த வேலைகளைச் செய்ய முடிகிறது'.

`இதுவரை அவர்கள் மேற்கொண்டதாக வெளியுலகுக்கு அறிவித்தவற்றை விட அவர்களால் மேலதிகமாகச் செய்ய முடிந்துள்ளதாக' நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான மீன்பிடி ரோலர்களை அவர்கள் மன்னார் வளைகுடாவுக்கும் தமிழ் நாட்டுக்குமிடையிலான கடற்பரப்பில் வைத்து பிடித்துள்ளனர்.

எனினும் பெரிய கப்பல்கள் நாட்டின் தென் பகுதியில் தெய்வேந்திரமுனைக் கடலுக்கு அப்பால் பல நூறு கடல் மைல் தூரத்தில் வைத்து தாக்கப்படுவதாகவும் கொமடோர் தஸநாயக்க தெரிவித்தார்.

இதேநேரம், இலங்கை கடற்படையினரால் அழிக்கப்பட்ட சுமாத்திரா போன்ற சில கப்பல்கள் உண்மையிலேயே புலிகளின் ஆயுதக் கப்பல்களாயிருந்தாலும் இவர்களால் அழிக்கப்பட்ட ஏனைய கப்பல்கள் இந்தக் கடற் பிராந்தியத்தில் ஆழ்கடலில் சுற்றித்திரியும் கடற் கொள்ளையர்களின் கப்பல்களாக இருக்கலாமெனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதேநேரம், மன்னார் வளைகுடாவில் சிலாவத்துறை மற்றும் அரிப்புக்கு அப்பால் `இந்தியர்களின் தொடர்புகள்' உள்ளதா என ஆய்வாளர்களிடம் கேட்கப்பட்டபோது, பிடிபட்ட பொருட்களில் பெரும்பாலானவை தடைசெய்யப்படாத பாவனைப் பொருட்களெனத் தெரிவித்தனர்.

உதாரணமாக போல்ஸ் குண்டுகளை எடுத்துக் கொண்டால் சைக்கிள்களுக்கு அவற்றை பயன்படுத்தினால் நன்மைபயக்கும். அவற்றை கண்ணிவெடிகளுக்கு பயன்படுத்தினால் அது தீமையை விளைவிக்கும். போல்ஸ் குண்டுகளை உற்பத்தி செய்வது சட்டவிரோதமானதென சட்டமில்லை. அத்துடன், இந்தியாவில் மட்டுமல்ல எங்கும் அவற்றை வர்த்தக ரீதியில் தாராளமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவை கொள்வனவு செய்யப்பட்டு பின் கடத்தப்படலாம்.

எனினும், இவற்றைத் தடுப்பதற்காக இந்திய மற்றும் இலங்கைப் படைகள் தங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியக் கடற்பரப்பிற்கிடையில் இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திய, இலங்கை கடற்படையினருடன் இந்திய கரையோரக் காவல் படையினரும் மிகவும் விழிப்பாகச் செயற்படுகின்ற போதும், கடத்தலைத் தடுப்பதற்கான முழு அளவிலான நடவடிக்கைகள் எதுவுமில்லையெனவும் தெரிவித்தார்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.