Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்­கையில் கால் நூற்­றாண்­டுக்கும் மேலாக நீடித்த உள்­நாட்டு யுத்தம், நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளையும் பாதித்­தது. இந்த யுத்­தத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் சந்­தித்த இழப்­புக்­களும், அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களும் பெரும்­பாலும் போதி­ய­ளவு ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது கவலை தரும் உண்­மை­யாகும். உயிர் மற்றும் உடைமை இழப்­புக்கள், பள்­ளி­வாசல் படு­கொ­லைகள், வடக்கு முஸ்­லிம்­களின் வெளி­யேற்றம், குருக்­கள்­மடம் படு­கொலை என பல சம்­ப­வங்கள் முஸ்­லிம்­களின் வர­லாற்றில் ஆழ­மான தழும்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

யுத்தம் முடி­வ­டைந்து பல வரு­டங்கள் கடந்த பின்­னரும், இந்த இழப்­புக்கள் பற்­றிய முழு­மை­யான பதி­வுகள், ஆவ­ணங்கள் எல்­லோரும் அணுகக் கூடிய வகையில் இல்லை என்பதே யதார்த்தமாகும். ஆய்வாளர் மர்ஹூம் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்கள் முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களை ஆவ­ணப்­ப­டுத்­துவதில் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனினும், அவ­ரது மறை­விற்குப் பின்னர், இந்த முக்­கி­ய­மான பணி தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இது ஒரு பாரிய இடை­வெ­ளியை உரு­வாக்­கி­யுள்­ளது. முஸ்லிம் தகவல் நிலை­யமும் இது­போன்ற பணி­களை முன்­னெ­டுத்­த போதிலும் சமூ­கத்­தி­ட­மி­ருந்து போதியளவு ஆத­ர­வுகள் கிடைக்கப் பெறா­ததால் அந்த முயற்­சியும் கைவி­டப்­பட்­டது.

இந்த சூழ்­நி­லையில், இளம் ஆய்­வாளர் சட்­டத்­த­ரணி சர்ஜூன் ஜமால்தீன் போர் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட இழப்­புகள், அஷ்­ரபின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் ஆகிய விடயப் பரப்­பு­களில் அண்­மையில் மூன்று நூல்­களை வெளி­யிட்­டுள்ளார். இது மிகவும் பாராட்­டப்­பட வேண்­டிய ஒரு முயற்­சி­யாகும். இத்­த­கைய ஆய்­வுகள் முஸ்லிம் சமூ­கத்தின் வர­லாற்றைப் பாது­காப்­ப­தற்கும், எதிர்­கால சந்­த­தி­யினர் தமது கடந்த காலத்தை புரிந்­து­கொள்­வ­தற்கும் அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை.

ஆனால், ஒரு சில தனி­ந­பர்களின் முயற்­சியால் மட்டும் இந்தப் பாரிய பணியை முழு­மை­யாக நிறை­வேற்ற முடி­யாது. இலங்கை முஸ்­லிம்கள் யுத்­தத்தில் இழந்­தவை குறித்து முழு­மை­யான, விரி­வான ஆய்வு மற்றும் ஆவ­ணப்­ப­டுத்­தலை மேற்­கொள்­வ­தற்கு ஒரு நிரந்­த­ர­மான ஆய்வு மற்றும் ஆவ­ணப்­ப­டுத்தல் மையம் உட­ன­டி­யாக ஸ்தாபிக்­கப்­பட வேண்டும். இந்த மையம், சாட்­சி­யங்­களைப் பதிவு செய்தல், ஆதா­ரங்­களைச் சேக­ரித்தல், ஆய்­வு­களை மேற்­கொள்­ளுதல் மற்றும் வர­லாற்றுப் பதி­வு­களைப் பாது­காத்தல் போன்ற பணி­களை மேற்­கொள்ள வேண்டும்.

இந்த விட­யத்தில் தமிழ் சமூகத்தை ஒரு முன்னுதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ள முடியும். யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் அனு­ப­வங்கள், இழப்­புக்கள் மற்றும் அவர்­களின் கலை, கலா­சாரப் பாரம்­ப­ரி­யங்கள் குறித்து பல ஆய்­வுகள், ஆவ­ணப்­ப­டங்கள், நூல்கள் மற்றும் நினைவுச் சின்­னங்கள் மூலம் ஆவ­ணப்­ப­டுத்தும் முயற்­சி­களை அவர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது ஒரு சமூ­கத்தின் நினை­வு­களைப் பாது­காப்­ப­தற்கும், நீதி கோரு­வ­தற்கும் எதிர்­கா­லத்­திற்குப் பாட­மாக அமை­வ­தற்கும் மிகவும் அவ­சி­ய­மாகும். தமிழ் சமூகம் மேற்­கொண்ட இத்­த­கைய முயற்­சி­களை முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு, முஸ்லிம் சமூ­கமும் தமக்­கான ஒரு ஆவ­ணப்­ப­டுத்தல் பொறி­மு­றையை உரு­வாக்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் இன ரீதி­யான அர­சியல் கட்­சிகள், இந்த முக்­கி­ய­மான ஆவ­ணப்­ப­டுத்தல் பணியில் கவனம் செலுத்தத் தவ­றி­விட்­டன என்­பது கசப்­பான உண்­மை­யாகும். அர­சியல் அதி­கா­ரத்­திற்­கா­கவும் பத­வி­க­ளுக்­காவும் போரா­டிய இந்தக் கட்­சிகள், சமூ­கத்தின் நீண்­ட­கால வர­லாற்றுப் பதி­வு­களைப் பாது­காப்­ப­தற்­கான ஒரு ஸ்திர­மான திட்­டத்தை வகுக்­கவோ, நடை­மு­றைப்­ப­டுத்­தவோ தவ­றி­விட்­டன. மர்ஹூம் அஷ்ரப் அவர்­களால் உரு­வாக்­கப்­பட்ட தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கம் கூட இது விட­யத்தில் காத்­தி­ர­மான பங்­க­ளிப்­பு­களை வழங்­க­வில்லை என்­பதும் கசப்பான உண்மையாகும்.

இது ஒரு சமூ­க­மாக நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய ஒரு தோல்­வி­யாகும். அர­சியல் தலை­வர்கள் குறு­கிய கால நலன்­களைத் தாண்டி, நீண்ட கால நோக்கில் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்­கான அடித்­த­ளத்தை அமைப்­பதில் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், சிவில் சமூக அமைப்­புக்­களும் இந்த விட­யத்தை ஒரு தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த பணி­யாகக் கருதி செயற்­பட வேண்டும். இத்­த­கை­ய­தொரு மையத்தை ஸ்தாபிப்­ப­தற்கும், அதற்குத் தேவை­யான நிதி­யையும், மனித வளத்­தையும் வழங்­கு­வ­தற்கும் அவர்கள் முன்­வர வேண்டும். கடந்த காலத்தை ஆவ­ணப்­ப­டுத்­து­வது என்­பது வெறும் கடந்த காலத்தைப் பதிவு செய்­வது மட்­டு­மல்ல; அது எதிர்­கா­லத்தில் இத்­த­கைய துய­ரங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான ஒரு முக்கியமான பாடமாகும்.
முஸ்லிம் சமூகம் யுத்தத்தில் இழந்தவற்றின் முழுமையான ஆவணப்படுத்தல் என்பது ஒரு நீதிசார்ந்த கோரிக்கையுமாகும். இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அங்கீகரிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ஆறுதலை அளிப்பதற்கும் உதவும். எனவே, உரிய தரப்பினர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/19611

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.