Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11 AUG, 2025 | 11:22 AM

image

காசா நகரத்தின் அல்சிபா மருத்துவமனைக்கு அருகில்  இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையின் முன்வாயில் தாக்கப்பட்டபோது அந்த பகுதியில் கூடாரத்திலிருந்த அனஸ் அல்-ஷரீப் மற்றும் முகமது க்ரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌஃபல் மற்றும் மோமன் அலிவாஆகியோர் கொல்லப்பட்டனர் என  அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இந்த "இலக்கு வைக்கப்பட்ட படுகொலை" ஊடக சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு அப்பட்டமான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/222297

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட அல்ஜசீரா ஊடகவியலாளர் ஹமாஸ் உறுப்பினர் - இஸ்ரேலிய இராணுவம் குற்றச்சாட்டு

11 AUG, 2025 | 02:04 PM

image

அல்ஜசீரா ஊடகவியலாளர் அனாஸ் அல் ஷரிவை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஹமாஸ் உறுப்பினர் என தெரிவித்துள்ளது.

அனாஸ் அல் ஷரிவ் ஹமாசின் உறுப்பினர் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் அவர் பெற்ற பயிற்சி விபரங்கள், சம்பள பட்டியல்கள் போன்றவை  அந்த ஆவணத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அவருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதை இந்த ஆவணங்கள் மீண்டும் உறுதி செய்கின்றன என  இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் இந்த விடயத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் 2013 இல் ஹமாஸ் அமைப்பில் இணைந்தார் என தெரிவித்துள்ள இஸ்ரேலியஇராhணுவம் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ரொக்கட் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் குழுவின் தலைவர் இவர் எனவும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/222310

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் இடம்பெறும் யுத்தத்தின் முகமாக மில்லியன் கணக்கானவர்களிற்கு அனஸ் அல் ஷரீவ் மாறினார் - பின்னர் இஸ்ரேல் அவரை கொன்றது

Published By: RAJEEBAN

13 AUG, 2025 | 01:54 PM

image

cnn

காசாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தவேளை அனாஸ் அல் ஷரீவ் தொலைக்காட்சியில்  தனது பாதுகாப்பு சாதனங்களை அகற்ற தொடங்கினார். மகிழ்ச்சியுடன் காணப்பட்ட மக்கள் ஆராவரித்தனர். அன்றைய நாளுடன் காசா பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு மில்லியன் மக்களின் துயரங்கள் முடிவிற்கு வந்துவிடும் என நம்பினார்கள்.

GyFR-fVXAAALU4u.jpg

இதற்கு ஏழு மாதங்களிற்கு பின்னர் காசா நகரத்தில் மேற்கொண்ட தாக்குதல் ஒன்றின் மூலம் இஸ்ரேல் அல்ஜசீரா ஊடகவியலாளரையும் அவரது சகாக்கள் நால்வரையும் கொலை செய்தது.

காசாவில் அதிகம் அறியப்பட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர் யுத்தத்தின் போது இஸ்ரேலால் கொல்லப்பட்ட பல பத்திரிகையாளர்களில் ஒருவர். - அல் ஷரீவின் மரணம் சர்வதேச கண்டனங்களை மீண்டும் கிளறிவிட்டுள்ளதுடன் பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள்களும் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் காசாவிற்குள் சர்வதேச ஊடகங்கள் செல்வதற்கு தடைவிதித்திருந்த சூழ்நிலையில் மில்லியன் கணக்காண மக்களிற்கு காசாவின் கதையை தெரிவித்ததன் மூலம் 28 வயது அல் ஷரீவ் பிரபலமானவராக மாறினார்.

யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிகம் அறியப்படதவராக காணப்பட்ட இவர் காசா குறித்த அந்த மக்களின் துயரங்கள் குறித்த நாளாந்த செய்திஅறிக்கையிடல் காரணமாக அராபிய உலகின் வீடுகளில் பேசப்படும் ஒரு பெயராக மாறினார்.

மோதலின் மிக முக்கியமான தருணங்களின் நேரடி தகவல்களை அவரது செய்திகள் வழங்கின. காசாவின் குறுகிய காலம் நீடித்த யுத்த நிறுத்தம் குறித்தும் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலை குறித்தும் உலகினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள பட்டினி குறித்தும் அவர் செய்திகளை வெளியிட்டார்.

2023 இல் தனது சொந்த நகரமான ஜபாலியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் குறித்த அவரது வீடியோ வைரலானதை தொடர்ந்து அல்ஜசீரா ஷெரீவை இணைத்துக்கொண்டது. அவ்வேளை புகைப்படப்பிடிப்பாளராக விளங்கிய இவர் ஆரம்பத்தில் தயங்கினாலும் சகாக்களின் வற்புறுத்தல்களால் போர் முன்னரங்கில் தனது முகத்தை காண்பித்தார். அவர் விபரிக்க முடியாதது என வர்ணித்த அனுபவம் அது.

"நான் உள்ளுர்சனல்களில் கூட தோன்றியதில்லை" என கடந்த பெப்ரவரியில் இவர் சொடுர் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார். "தற்போது உயிருடன் இல்லாத எனது தந்தையே இதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்"  என அவர் தெரிவித்திருந்தார்.

அல்ஷரீவ் தொலைக்காட்சியில் தோன்ற ஆரம்பித்த சில காலத்தின் பின்னர் ஜபாலியாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் விமானக்குண்டுவீச்சில் தந்தை கொல்லப்பட்டார்.

GyGQ0WbWUAAU_6B.jpg

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஷரீவ் அல்ஜசீராவிற்காக பணியாற்ற ஆரம்பித்த பின்னர்  24 மணித்தியாலத்தில் இரண்டு தடவையாவது தொலைக்காட்சியில் தோன்றினார்.

'ஊடகவியலாளர்களாகிய நாங்கள் மருத்துவமனைகளில் உறங்கினோம், வீதிகளில் வாகனங்களில் அம்புலன்ஸ்கள் முகாம்களில் இடம்பெயர்ந்த மக்களுடன் உறங்கினோம். நான் 30 அல்லது 40 இடங்களில் உறங்கியிருப்பேன்' என அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரியில் அவர் தனது பாதுகாப்பு சாதனங்களை அகற்றியவேளை மக்கள் அவரை தங்கள் முதுகில் சுமந்துசென்றனர்.

GyGQ0WkWgAAIxba.jpg

"என்னை சோர்வடையச் செய்த தலைக்கவசத்தையும் என் உடலின் நீட்சியாக மாறிய இந்தக் கவசத்தையும் நான் கழற்றுகிறேன்" என்று அவர் அப்போது அல் ஜசீராவில் நேரலையில் கூறினார். காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சக ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அல்-ஷெரீப்பின் அறிக்கைகள் இஸ்ரேலிய இராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது மேலும் அவர் கூறுகையில் அல் ஜசீராவிற்கான தனது பணியை நிறுத்துமாறு எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த வலையமைப்பு ஏற்கனவே காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகளால் பல ஊழியர்களை இழந்த ஒரு வலையமைப்பாகும். இதில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட இஸ்மாயில் அல் கோல் மற்றும் மார்ச் மாதத்தில் கொல்லப்பட்ட ஹோசம் ஷபாத் ஆகியோர் அடங்குவர்.

இறுதியில் (இஸ்ரேலிய இராணுவம்) எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு குரல் குறிப்புகளை அனுப்பியது... ஒரு உளவுத்துறை அதிகாரி என்னிடம்... 'நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறி தெற்கே சென்று அல் ஜசீராவிற்கு செய்தி அனுப்புவதை நிறுத்த சில நிமிடங்கள் உள்ளன' என்று கூறினார்... நான் ஒரு மருத்துவமனையில் இருந்து நேரலையில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தேன்."

சில நிமிடங்கள் கழித்து இருந்த அறை தாக்கப்பட்டது அறை தாக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.

GyGQ0WiWkAAVVx9.jpg

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்  இன் கருத்துக்கு பதிலளிக்கவில்லை.

இப்போது ஏன்?

10 மாதங்களுக்கு முன்பு அல்-ஷெரீஃப் ஹமாஸுடன் தொடர்புடையவர் என்று இஸ்ரேல் முதலில் குற்றம் சாட்டியது. இப்போது அவரை குறிவைக்க முடிவு செய்தது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தமிழில் - ரஜீவன்

https://www.virakesari.lk/article/222408

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

10 மாதங்களுக்கு முன்பு அல்-ஷெரீஃப் ஹமாஸுடன் தொடர்புடையவர் என்று இஸ்ரேல் முதலில் குற்றம் சாட்டியது. இப்போது அவரை குறிவைக்க முடிவு செய்தது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

காலங்கடந்தாலும் நல்ல முடிவுதான்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.