Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 AUG, 2025 | 02:16 PM

image

(எம்.நியூட்டன்)

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்"  கையொப்பப் போராட்டம்  சனிக்கிழமை (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.

தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம்" எனும்,  கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம்  காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி  பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர்  ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின்  ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும்.  

இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250823-WA0027.jpg

IMG-20250823-WA0014.jpg

IMG-20250823-WA0024.jpg

IMG-20250823-WA0016.jpg

IMG-20250823-WA0015.jpg

IMG-20250823-WA0018.jpg

https://www.virakesari.lk/article/223185

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் தொடர்கிறது

Published By: VISHNU

24 AUG, 2025 | 08:17 PM

image

தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

rs__4_.jpeg

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது சனிக்கிழமை (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

rs__6_.jpeg

இரண்டாவது நாளாக மக்கள் கையெழுத்துப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (24) நாவிதன்வெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது .

இக்கையெழுத்து சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளையும் வழங்கித் தமது கையொப்பங்களையும் இட்டதுடன் அங்கு கலந்து கொண்ட இந்துசமய குரு தனது கருத்துகளையும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இன்றைய நிகழ்வில் இந்த நிகழ்வை ஒருங்கமைத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும்  கலந்து கொண்டிருந்ததோடு பொதுமக்கள், இளைஞர்களிடமும்  இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள், பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

https://www.virakesari.lk/article/223273

செம்மணி புதைகுழி விடயத்தில் தாயகத்திலுள்ள மனித உரிமை, சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை.

வெளிநாடுகளில் பயனற்ற விடயங்களுக்குப் போராட்டங்கள் நடத்துபவர்கள் இந்த முக்கியமான போராட்டத்தில் தாயகத்துக்கு உறுதுணையாக எதுவும் செய்யவில்லையா அல்லது இது தொடர்பான செய்திகளை நான் பார்க்கவில்லையா ? செம்மணி விவகாரத்தை சரியாகப் பயன்படுத்தினால் இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதைப் பதிவு செய்ய முயற்சிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதி கோரி ஆலையடிவேம்பில் “நீதியின் ஓலம்” கையெழுத்துப் போராட்டம்

28 Aug, 2025 | 11:58 AM

image

சர்வதேச நீதி கோரும் போராட்டமான 'நீதியின் ஓலம்' (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த சனிக்கிழமை (23) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பமானது. 

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  நேற்று (27) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச ஆரியதாச மற்றும் பிரதி தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி, பிரதேச சபை உறுப்பினர்களான கதிகரன் (சீனு), சுமந்தி எம்.எஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவிக்கையில், இது, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் செம்மணி போன்ற அவலங்களுக்கும் வீரமுனை, திராய்க்கேணி, உடும்பன்குளம், கல்முனை, காரைதீவு போன்ற பல இடங்களில் நடந்த படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கும், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறைகள்தான் பொருத்தமானது. 

எனவே எமது மக்களும் அதைத்தான் கோருகிறார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் மக்களின் கையெழுத்துகளுடனான கோரிக்கைகளை ஐ.நா மன்றத்திற்கு அனுப்புவதற்கானதே இந்த கையெழுத்துப் போராட்டம் எனத் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/223565#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா செல்கின்றது 'நீதியின் ஓலம்'

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் 'நீதியின் ஓலம்' ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் வடக்கிற்கான இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார்.

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து 'நீதியின் ஓலம்' கையொப்பப் போராட்டம் கடந்த 23 ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஆரம்பமானது.

குறிப்பாக இப்போரட்டத்தின் பிரதான நிகழ்வு மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணத்தின் செம்மணியில் ஆரம்பமாகி இன்று (28) முற்பகல் 10.30 மணிக்கு அதே இடத்தில் நிறைவுற்றது.

தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி அந்த 5 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட 'நீதியின் ஓலம்' எனும், கையொப்பப் போராட்டம் இன்றுடன் நிறைவுக்கு வந்தது.

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்படன. எழுமாறாக பெறப்பட குறித்த கையொப்ப போராட்டத்தில் சுமார் 130 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டிருந்தனர் என்றும் தெரிவித்தார்.

முன்பதாக கடந்த ஐந்து நாட்களாக தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்ட இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://web.facebook.com/Deranatamil/posts/1328305695965374?ref=embed_post

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmev4eiea002kqplpdp813ifx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்

30 Aug, 2025 | 12:09 PM

image

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.

அந்தவகையில் இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் சனிக்கிழமை (30) நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கையொப்பங்களை பதிவு செய்தனர்.

IMG-20250830-WA0022.jpg

IMG-20250830-WA0018__1_.jpg

IMG-20250830-WA0020__1_.jpg

IMG-20250830-WA0019.jpg

IMG-20250830-WA0015.jpg

https://www.virakesari.lk/article/223764

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.