Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

24 AUG, 2025 | 11:46 AM

image

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மேற்பார்வையில் கீழ் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆயுதங்கள் "சிறந்த போர் திறன்" மற்றும்"தனித்துவமான தொழில்நுட்பத்தைப்" கொண்டவைகள்  என கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை, ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட "பல்வேறு வான் இலக்குகளை அழிக்க இரண்டு வகையான ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் பொருத்தமானவை என்பதை நிரூபித்துள்ளன" என  கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடுகளைப் பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை (DMZ) சிறிது நேரம் கடந்த வட கொரிய வீரர்கள் மீது செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தென் கொரியா உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு இடையேயான பலத்த பாதுகாப்புடன் கூடிய எல்லையை சுமார் 30 வட கொரிய துருப்புக்கள் கடந்து சென்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளை தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் திங்கட்கிழமை முதல் இப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

வொஷிங்டனில் திங்கட்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை சந்திக்க உள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி, கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரச்சாரம் செய்தார்.

இருப்பினும், கிம்மின் சகோதரி லீயின் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளை நிராகரித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் கிம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் கண்டித்து, அவற்றை "மிகவும் விரோதமான மற்றும் மோதல் நிறைந்தவை" என விவரித்தார்.

வட கொரியத் தலைவர் நாட்டின் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் தனது நோக்கத்தை விரைவுபடுத்துவதாக சபதம் செய்தார்.

ஜனவரியில், வட கொரியா ஒரு ஹைப்பர்சோனிக் போர்முனையுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவுவதாகக் கூறியது, இது "பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளரையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்" என கூறியது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பை ஆதரிக்க துருப்புக்களை அனுப்புவதற்கு ஈடாக வட கொரியா ரஷ்ய ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பெறுவது குறித்து தென் கொரிய மூத்த அதிகாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/223244

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏன் செய்தி?

ஈரானுக்கு பின், ஒப்பந்தம் (treaty ஆக இருந்தாலும்) போட்டாலும், சகுனி ஆட்டம் மேற்கு ஆடாது எனபதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இரானுங் ஒப்பந்தம் செய்து பாதுகாப்பு சபை, நிரந்தர அங்கத்தவரால் தனித்தனியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட JCPOA ஐ முறித்த அமெரிக்கா, அதை தொடர்ந்து பிரித்தானிய பிரான்ஸ்.

(ஈரான் 1 வருடத்துக்கு மேலாக காத்து இருந்தது, இந்த அடாவடிக் கூட்டங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவர்ட்கள் என்று)

இப்போது , ஓர் பக்கத்தால் தாக்குதல், இன்னொரு பக்கத்தால் JCPOA இல் உள்ள snapback தடையை பிரித்தானிய, பிரான்ஸ் கொண்டுவர முனைகின்றன, அதை ருசியா, சீன மறுத்து விட்டன. ஆயினும், சர்வதேச சட்டத்தையும் மீறி தடையை கொண்டுவர பிரித்தானிய, பிரான்ஸ் வாலுகள் முயற்சிக்கின்றன.

பிரித்தானியா, பிரான்ஸ் வாலுகள் snapback தடை கொண்டவர எத்தனிப்பதை, சீனா, ருசியா சினமாகவும், சர்வதேச சட்ட அடிப்படையிலும், UN சாசன அடிப்படையிலும் எதிர்ப்பதை எந்த மேற்கு முன்னிலை ஊடகமும் மூச்சு விடமால், தமது மக்களின் சிந்தனையை, தாம் செய்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறாரக்ள் என்ற மனநிலையையே உருவாக்குகின்றன.

எனவே, நாடுகள் பலத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை.

இதில் குறிப்பாக, ஈரானை இங்குள்ள சிலர் பேயர் ஆக்குவது - ஈரானுக்கு என் அணுத்துறை என்று - அப்போது எண்ணையில் குளிக்கும் அமெரிகாவுக்கு, ருசியா போன்றவைக்கு ஏன் அணுத்துறை?

ஈரான் வெளியில் இருந்து அணுத்துறையை பெறலாம் - ஈரான் என்ன பேயனா?, 1ம் முறை நம்பி இருக்கலாம், அணுத்துறை முழுவதும் அகற்றி விட்டு பின் ஒன்றுமே கொடுக்கப்படாது, மற்றும் இரான் மரபுவழி ஆயுதங்களை வாங்க, உற்பத்தி செய்ய முனையும் போது தாக்குவது.

இதில் முக்கியமா, இரான் அதன் அணுத்துறையை அதுவாக கட்டி எழுப்பியது (வெளியில் இருந்து அறிவு, உதவிகள் பெற்று இருக்கலாம்). திருடி இருந்தால் , இரான் மீள கட்டி எழுப்ப முடியாது இப்போதைய தாக்குதலில் முழுமைக்காயாக அழிக்கப்பட்டு இருந்தால். அனால், மேற்கே சொல்கிறது இரானிடம் கட்டி எழுப்புவதற்கு அறிவுமும், கட்டுமானமும் இருக்கிறது என்று, இதானால் தான் இரான் விஞ்ஞானிகளை, மேற்கு, இஸ்ரேல் உடன் சேர்ந்து போட்டு தள்ளுவது. அதன் பல்துறை தொழிற்சாலைகளை குறிவைப்பது.

அதெ போலவே, இரானின் ஏவுகணை தொழில்நுட்பமும். (இதையும் விட வேண்டும் என்கிறது மேற்கு)

(இதுவே, ஈரானுக்கும், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் வேறுபாடு. மற்ற நாடுகள் தொழில்நுட்பம் / விஞ்ஞானத்தை முழுமையாக வெளியில் இருந்து பெறுவது. )

இங்கு சிலர் அரைகுறையாக, மேற்கின் பிரச்சாரத்தை ஒப்புவிப்பது, எந்த வித தேடுதல், சரி பார்த்தால் இல்லாமல். அல்லது மேற்கு சொல்வதை வேதவாக்காக எடுப்பது.

அப்படி மேற்கை விட வேறு எவரும் பொதுவாக தொழில்நுட்ப / பவிஞ்ஞான துறையில் முன்னேற கூடாது, அப்படி முன்னேறினாலும் மேற்றகில் தங்கி இருக்க வேண்டும், அப்படி தங்கி இருக்க வைக்க வேண்டும் என்பதற்கே மேற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறது.

இந்த பாதி எரிந்த பிரேதே சிந்தனையால், மேற்கு அதன் அந்திசாயும் காலத்தை, எல்லோருக்கும் அந்திம கிரியை தகனக் காலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறது.

(இஸ்ரேல் க்கு கூட இதை US செய்தது, இஸ்ரேல் 1980 களின் முற்பகுதியில், அகதிர் என்ற பெயரில்அன்றைய தொழிநுட்ப போர் விமானத்தை வடிவமைத்து, உடற்பதி செய்ய முயல, அமெரிக்கா தடுத்து விட்டது. சில வருங்குகள் பின் சீன அதை வாங்கி, அதையும் கொன்டு வடிவமைது, உற்பத்தி செய்து, இப்போதைய தொழில் நுட்பத்துக்கு தரமுயர்த்தியதே, அண்மையில் பாவிக்கப்பட்ட ஜே -10 ம் அதன் அடிப்படை வடிவமைப்பு, உற்பத்தியும். அனால், இஸ்ரேலுக்கு அமெரிக்கா கேட்டதை பொதுவாக கொடுக்கும்.

அப்படி இஸ்ரேல் கேட்ட ரேடார் தொழில்நுட்பத்தை (அந்த நேர (Synthetic) Aperture Radar தொழில்நுட்பம்) அமெரிக்கா கொடுக்காமல், இஸ்ரேல் திருட முயன்று, இஸ்ரேல் இன் உளவாளி பிடிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிறை கண்ட வரலாறும் இருக்கிறது)

Edited by Kadancha

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.