Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்!

-- ---- -----

*இவர்கள் தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள்.

*செம்மனி பேசும் நிலையில் ரணில் கைது

*முறிந்த பனைமரக் குழுக்களின் தொடர்ச்சி

*ஜெனீவா கூட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில்...

-- ---- ---

மாற்றுக் கருத்து என்ற போர்வையில் தமிழர்களின் "அரசியல் விவகாரம்" என்ற பிரதான இலக்கை திசை திருப்ப - மலினப்படுத்த பலர் பலவிதமான விடயங்களைக் கையில் எடுக்கின்றனர்.

2009 இற்குப் பின்னர் இத் தன்மை வெவ்வேறு வடிவங்களில் உருவெடுத்து முளைத்துள்ளது.

முறிந்த பனைமரக் குழுக்களிடம் இருந்து 1980 களில் ஆரம்பித்தது தான் இந்த மாற்றுக் கருத்து.

உண்மையில், விடுதலை வேண்டி நிற்கும் இனம் ஒன்றுக்குள் வரக் கூடிய மாற்றுக் கருத்து என்பது, அந்த இனத்தின் விடுதலை உணர்வுக்கு மற்றொரு வகிபாகத்தில் அறிவுசார்ந்து உரமூட்டுவதாக அமைதல் வேண்டும்.

ஆனால் ஈழத்தமிழர்களை சிதைப்பதற்கே மாற்றுக் கருத்து - ஜனநாயகம் - என்று கட்டமைக்கப்படுகிறது.

இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் யார் என்று பார்த்தால்----

A) தமிழ் பேசத் தெரியாத ஆங்கிலம் பேசும் தமிழர்களாக இருப்பர்.

B) அல்லது சிங்களம் கலந்த தமிழர்களாக இருப்பர்.

C) அல்லது புலி எதிர்ப்பாளர்களாக இருப்பர்.

D) அல்லது கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள இடதுசாரி - முற்போக்கு வாதம் பேசும் தமிழர்களாக இருப்பர். முற்போக்குத் தமிழ் இலக்கியவாதிகள் சிலரும் இந்த மாற்றுக் கருத்தாளர்களுக்குள் அடங்குவர்.

இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் என்ன செய்வார்கள் என்றால்----

தமிழ்த் தேசிய நோக்கு நிலை எப்போது எழுச்சி அடைகிறதோ அல்லது தீவிரமாக பேச ஆரம்பிக்கப்படும் சூழல் தென்பட்டால், உடனடியாக யாழ்ப்பாணத்துக்குப் படையெடுப்பார்கள்.

அல்லது கொழும்பு அரசியலில் ஏதேனும் திடீர் அரசியல் சர்ச்சைகள் நடக்கும் (Sudden Political Controversy)

உடனடியாக நடந்த சில உதாரணங்கள் --

1) செம்மணி விவகாரம் கொழும்பில் உள்ளக ரீதியாக பேச ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிலையில்தான் ரணில் கைது நடந்திருக்கிறது.

2) இச் சூழலில்தான் மாற்றுக் கருத்தாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறார்கள்.

3) கொழும்புத் துறைமுக மனித புதை குழி பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இது பற்றி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது. துறைமுக மனித புதை குழி பற்றி தூதுவர்களுக்கும் விளக்கமளிப்பது இந்த மாற்றுக் கருத்தாளர்கள் தான்.

4) இந்த மாற்றுக் கருத்தாளர்கள்தான் ஜேவிபி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருடன் சமப்படுத்தி வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் பற்றிய நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட தயார்படுத்தி வருகின்றனர்.

4) ஆணையாளரின் உருப்படியில்லாத உள்ளக விசாரணை என்ற, அரசாங்கத்தைக் காப்பற்றும் முன்னோடி அறிக்கையைக் கூட (Pioneer Report to Protect the Government) நீர்த்துப் போகச் செய்யும் நோக்கில், மாற்றுக் கருத்தாளர்களின் கூட்டங்கள் - ஆய்வுகள் யாழ்ப்பாணத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து நடக்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஆகவே இலங்கைத்தீவில் மாற்றுக் கருத்தாளர்கள் என்பதன் பொருள், ”ஈழத்தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள்” (Political Tools)

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்

https://www.facebook.com/amirthanayagam.nixon

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.