Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

AFGHANISTAN EARTHQUAKE

கட்டுரை தகவல்

  • ஹஃபிசுல்லா மரூஃப்

  • பிபிசி ஆப்கன் சேவை

  • 31 நிமிடங்களுக்கு முன்னர்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன.

சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், கிட்டத்தட்ட 400 கி.மீ தூரத்தில் உள்ள பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

AFGHANISTAN EARTHQUAKE

பட மூலாதாரம், US Geological Survey

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல, மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது.

AFGHANISTAN EARTHQUAKE

பட மூலாதாரம், Getty Images

உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்

நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர். அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பேரழிவு "பரவலாக" இருப்பதால் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன.

இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது.

உதவி கோரும் தாலிபன் அரசு

தொலைதூர மலைப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தாலிபன் அரசு அதிகாரிகள் உதவி வழங்கும் அமைப்புகளை வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இப்பகுதிக்கான சாலைகள் அணுக முடியாத அளவுக்கு இருப்பதாக என்று குனார் மாகாண காவல்துறைத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணிகளை விமானம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

தாலிபன் அதிகாரிகள் தங்களிடம் குறைவான வளங்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய ஹெலிகாப்டர்களை வழங்க சர்வதேச அமைப்புகளின் உதவியைக் கோருவதாகவும் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cev2r7pkzv9o

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-3.jpg?resize=750%2C375&ssl=1

ஆப்கானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 20 பேர் உயிரழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குனார் மாகாணத்தின் நோர்கல் மாவட்ட மசார் பள்ளத்தாக்கில் பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் புதைந்துவிட்டதாக தலிபான் அரசாங்கத்தின் பல வட்டாரங்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடரும்போது இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேநேரம், மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து அவசர உதவிக்கு தலிபான் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சில கிராமங்களை விமானம் மூலம் மட்டுமே அடைய முடியும்.

இப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.

அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி இடிந்து விழுந்த கட்டமைப்புகளில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

2023 ஒக்டோபர் மாதம் மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இது அண்மைய ஆண்டுகளில் ஆப்கானை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445443

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

September 1, 2025 11:15 am

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 500ஐ கடந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. 6.0 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

காபூலில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை பல கட்டிடங்களை நிலநடுக்கம் உலுக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட இந்தியாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கத்திற்குப் பின்னர் முறையே நான்கு தசம் ஐந்து முதல் ஐந்து தசம் இரண்டு வரை ரிக்டர் அளவில் மூன்று பின்அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள குனார் மாகாணத்தின் நோர்கல் மாவட்டத்தில் நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் இமயமலையின் அருகிலுள்ள பகுதிகளில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அதிகரித்து வருவது புவியியலாளர்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய-யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம்தான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://oruvan.com/afghanistan-earthquake-death-toll-rises-to-250/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கன் நிலநடுக்கத்தில் 610 பேர் உயிரிழப்பு, 1300 பேர் காயம் - பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு

AFGHANISTAN EARTHQUAKE

பட மூலாதாரம், Reuters

கட்டுரை தகவல்

  • ஹஃபிசுல்லா மரூஃப்

  • பிபிசி ஆப்கன் சேவை

  • 1 செப்டெம்பர் 2025, 01:37 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது என்று தாலிபன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக தாலிபன் அரசு எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தற்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள மாகாணங்களிலிருந்து ஆதரவு குழுக்களும் விரைந்துக் கொண்டிருக்கின்றன, "என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் நூற்றுக்கணக்கானோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

AFGHANISTAN EARTHQUAKE

நிலநடுக்கம் எங்கு ஏற்பட்டது?

8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் நாட்டின் ஐந்தாவது பெரிய நகரமான ஜலாலாபாத்திலிருந்து 17 மைல் (27 கி.மீ) தொலைவில் இதன் மையப்பகுதி இருந்தது.

இந்த நிலநடுக்கம் குனார் மற்றும் லக்மான் மாகாணங்களையும் பாதித்துள்ளது. மேலும் 140 கி.மீ (87 மைல்) தொலைவில் உள்ள நாட்டின் தலைநகர் காபூலில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன.

AFGHANISTAN EARTHQUAKE

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல, மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது.

AFGHANISTAN EARTHQUAKE

பட மூலாதாரம், TALIBAN GOVERNMENT

குனார் மாகாணத்தின் சவ்காய் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 35 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பாளர்கள் இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுத்து வருவதாக பிபிசிக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன.

பிபிசி பார்த்த ஒரு வீடியோவில், பொதுமக்கள் சிலர் மலைகளால் சூழப்பட்ட ஒரு திறந்த பகுதியில் கூடியுள்ளனர். காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் செல்லப்படுகின்றனர், குழந்தைகள் கதகதப்புக்காக போர்வைகளால் போர்த்தப்பட்டு தரையில் கிடத்தப்படுகின்றனர்.

AFGHANISTAN EARTHQUAKE

பட மூலாதாரம், TALIBAN GOVERNMENT

படக்குறிப்பு, காயமடைந்தவர்களை தரை வழியாகவும், வான் வழியாகவும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு தாலிபன் அரசு அனுப்பி வருகிறது.

நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர்.

தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று காலையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பேரழிவு "பரவலாக" இருப்பதால் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன.

இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cev2r7pkzv9o

  • கருத்துக்கள உறவுகள்

l15820250901111728.webp?resize=750%2C375

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு (31) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மக்கள் பலரும் நகங்கர் மாகாணத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 800ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் நிலை கவலைக்கிடமாக இருப்பதனால் உயிரிழப்பு எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

கட்டிடங்கள் குலுங்கி, பல வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் பல அப்பாவி குழந்தைகளும் அடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்தடுத்து நிகழ்ந்த 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரையிலும் உணரப்பட்டன.

https://athavannews.com/2025/1445573

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.