Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 Nov, 2025 | 04:24 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத கடவைகளால் மஹவ  முதல் ஓமந்தை வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய புகையிரதத்தால் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம், வடக்கு புகையிரத வீதியின் புகையிரதக் கடவைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

வடக்கு புகையிரத வீதியின் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பகுதியில் உள்ள புகையிரதக் கடவைகள் பயன்படுத்தப்பட முடியாத வகையில் இருப்பது தொடர்பிலும், வவுனியா புளியங்குளம் பிரதேசங்களில் புகையிரத கடவைகள் கடுமையாக சேதமடைந்துள்ளமை தொடர்பிலும் மற்றும் அவற்றினூடாக பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புகையிரத கடவைகளே சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த கடவைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பான புகையிரத பாதைகள் பொருத்தமான நிலைமையில் இருக்கின்றன.

வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கடவைகள் மட்டுமே பொலிஸாரால் பராமரிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள சட்டவிரோத புகையிரதக் கடவைகளை அகற்ற வேண்டியுள்ளதால் அவை புகையிரத திணைக்களத்தால் பராமரிக்கப்படுவதில்லை. அவை பிரதேச மக்களால் கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் புகையிரத திணைக்களத்தால் பொறுப்பேற்க முடியாது.

இதேவேளை மஹவ – ஓமந்தை புகையிரத பாதை வேலைத்திட்டத்தின் கீழ் புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளமையினால் புகையிரதங்கள் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தாலும் பாதுகாப்பற்ற வகையிலான கடவைகளால் அந்த வேகத்தில் பயணிக்க முடியாமையினால் அந்த கடவைகளை அகற்ற வேண்டியுள்ளது.

ஆனால், மக்களின் போக்குவரத்துக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். இதன்படி புகையிரதப் பாதையில் இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான கடவை வரையில் சமாந்திரமான வீதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாம். அதேபோன்று கடவைகளில் மேம்பாலத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/229999

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஒரு தீர்வு உள்ளது. புகையிரத பாதையின் இருமருங்கிலும் இரும்பு வேலி அடைக்க வேண்டும். குறிப்பாக மக்கள் செரிந்து வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடவைகள் உள்ள இடத்தில் பாதையின் இருமருங்கும் இரும்பு வேலி அமைக்கப்படவேண்டும். வெளிநாடுகளில் இப்படித்தான் செய்கின்றார்கள். இரும்பு வேலி சேதப்படாமல் கண்காணிப்பது காவல்துறையின் கடமை. கண்காணிப்பு கமெராவும் போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மங்குனி அமைச்சர் 😂.

வவுனியா-புளியங்குளம் இடையான துரம் 26 கிமி. இதற்கு 2 கடவை மட்டும்தான் எண்டால் மக்கள் சராசரியாக தொடரூந்து பாதைக்கு அந்தப்பக்கம் போக, வர 13+13=26 கிமி யாவது பயணிக்க வேண்டும்.

கடவைகளின் எண்ணிக்கையை வெள்ளைகாரன் போட்ட அளவில் (அப்போ இதெல்லாம் வெறும் காடு)வைத்திருக்காமல் சனத்தொகை வளர்சி நகரமயமாதலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.

இந்தாள் பேக்கதை கதைக்குது.

அக்மார்க் ஜேவிபி மூளை😂

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்போது கணித்து பார்த்தேன். வவுனியா புகையிரத நிலையம் தொடக்கம் புளியங்குளம் புகையிரத நிலையம் வரை கிட்டத்தட்ட 25 கிலோமீற்றர் தூரம் வருகின்றது. இது கிட்டத்தட்ட காங்கேசன் துறை தொடக்கம் சாவகச்சேரி வரையான தூரம். புளியங்குளம் பக்கம் பெருமளவு வயல்/தோட்டங்கள் என்றாலும் இரண்டு அங்கீகாரம் பெற்ற புகையிரத கடவைகள் போதாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை; பிமல் ரத்னாயக்க

11 Nov, 2025 | 02:38 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரச துறை மற்றும்  கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள  சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (10) தமிழரசுக் கட்சி எம்.பி பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

சத்தியலிங்கம் எம்பி தமது கேள்வியின் போது, சுமார் பத்தாயிரம் தற்காலிக, அமைய அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ரயில் கடவை காப்பாளர்களும் உள்ளடக்கப்படுகின்றனரா என வினவினார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதவளிக்கையில்,

ரயில் கடவை காப்பாளர்களுக்கு அவர்கள் இதுவரை பெற்று வந்த 7500 ரூபா கொடுப்பனவை பதினையாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

எனினும் அதன் மூலம் ரயில்வே கடவைகளில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை முழுமையாக நிவர்த்தியடையும் என நாம் கூற முடியாது. அதற்கு நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

அரசாங்கமானது நிரந்தரமற்ற சேவை நிலையில் உள்ளவர்களை ஒவ்வொரு மட்டத்தில் சேவைகளுக்காக நியமித்துள்ளது. அந்த வகையில் சுமார் 9,800 பேரை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் சில தொழில்துறைக்காக இணைத்துக் கொள்ளும் போது அவர்கள் தேவையான கல்வித் தகைமையைக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த வகையில் ரயில் கடவைக் காப்பாளர்கள் மட்டுமன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களைக் குறிப்பிடும்போது அவர்களில் 700 பேருக்கு நாம் நியமனங்களை வழங்கினோம் மேலும் 300 பேர் உள்ளனர்.

அவர்கள் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும். சித்தியடைந்தமை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

அதன் பிரகாரம் ரயில் கடவை காப்பாளர்களுக்கும் அவ்வாறான தகைமை கோரப்படுகிறது. அந்த வகையில் அனைவரையும் அரசாங்கம் நிரந்தரமாக்கும் என்பதை என்னால் கூற முடியாது. எனினும் பொதுவாக சுமார் 10,000 நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரச துறை மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள தற்காலிக மற்றும் அமைய என நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/230062

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.