Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கார் வெடிப்பு, 3 மருத்துவர்கள் கைது,

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, செங்கோட்டை அருகே நடந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டது.

கட்டுரை தகவல்

  • சையத் மொஸீஸ் இமாம்

  • பிபிசி செய்தியாளர்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

நவம்பர் 10 ஆம் தேதி மாலை, டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கார் வெடித்து, குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

கார் வெடிப்புக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்தில் பலரை கைது செய்தது. மேலும் பலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குமார் குப்தா இதுகுறித்து கூறுகையில், "இது, கடந்த 15 நாட்களாக நடந்த கூட்டு நடவடிக்கையின் விளைவு. இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது," என்றார்.

ஆனால், இந்த கைது நடவடிக்கைகள் டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து போலீசார் இதுவரை எதுவும் கூறவில்லை.

இந்நிலையில் டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தின் விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை

ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டவரின் பணியிடத்தில் இருந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சஹரன்பூர் மற்றும் லக்னௌ பகுதிகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஃபரிதாபாத் காவல்துறையினர் அளித்த தகவலின்படி, அல் ஃபலா பல்கலைக்கழகம் மற்றும் ஃபரிதாபாத்தின் பல இடங்களில் சுமார் 800 போலீஸ் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அல் ஃபலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்துக்கு முன்பாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஏழு பேரை கைது செய்ததாக தெரிவித்தனர்.

அவர்கள் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் கூறினர்.

ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மருத்துவர் அதீல், மருத்துவர் முஸம்மில் ஷகீல் மற்றும் ஷாஹீன் சயீத் ஆகியோருக்கு இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய பாதுகாப்பு அமைப்புகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன.

டெல்லி கார் வெடிப்பு, 3 மருத்துவர்கள் கைது,

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்த இடத்தில் ஆதாரங்களை சேகரிக்கும் புலனாய்வுக் குழு.

சந்தேகத்துக்குரிய நபர்களின் பட்டியலில் மருத்துவர் உமர் நபி

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி, டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பு வழக்கில் சந்தேகத்துக்குரிய நபராகக் கருதப்படுகிறார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவர் உமர் குற்றமற்றவர் என்றும், கடந்த சில மாதங்களாக அவர் தனது பணியில் முழுமையாக ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

விசாரணை அமைப்புகளின்படி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அருகே வெடித்த வெள்ளை ஹூண்டாய் ஐ20 காரை ஓட்டிச் சென்றவர் 34 வயதான மருத்துவர் உமர் நபி என்று கூறப்படுகிறது.

இந்தத் தகவலை பிபிசி உறுதிப்படுத்தவில்லை.

அந்த காருக்கும் ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஃபரிதாபாத்தில் காவல்துறையினர் அதிக அளவிலான வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (Ansar Ghazwat-ul-Hind) போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய வலையமைப்புடன் மருத்துவர் உமர் நபிக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நபியின் உறவினர் முசம்மிலா, தான் வெள்ளிக்கிழமை நபியுடன் பேசினேன் என்றும், பின்னர் போலீசார் தனது கணவர், மாமியார் மற்றும் மைத்துனரை அழைத்துச் சென்றனர் என்றும், அதனைத் தொடர்ந்து நபியின் தந்தையையும் கைது செய்தனர் என்றும் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் மருத்துவர் கைது

மருத்துவர் அதீல் அகமது ராதர் நவம்பர் 7-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் கைது செய்யப்பட்டார் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தகவல் வழங்கியுள்ளது.

ராதரின் ஆதார் அட்டையில் அனந்த்நாக் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

சஹரன்பூரில் அம்பாலா சாலையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக மருத்துவர் அதீல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவர் அதீல், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அவர், அனந்த்நாக் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமதுவை ஆதரிக்கும் சுவரொட்டிகளை ஒட்டியதாக போலீசார் கூறுகின்றனர்.

விசாரணையின் போது ஸ்ரீநகர் போலீசார் பெற்ற சிசிடிவி காட்சிகளில், அவர் சுவரொட்டிகளை ஒட்டுவது பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த காட்சிகளின் அடிப்படையில், அவர் சஹரன்பூரில் கைது செய்யப்பட்டார்.

மருத்துவர் அதீல் கடந்த மூன்று ஆண்டுகளாக சஹரன்பூரில் வசித்து வந்துள்ளார். மங்காமோவ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்த அவர், அந்த இடத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்தார் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு, அவர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவராக பணியாற்றியுள்ளார். அக்டோபர் 24, 2024 வரை அவர் அங்கு பணியில் இருந்துள்ளார்.

உத்தரபிரதேச போலீசார் சஹரன்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அவர் குறித்த தகவல்களை ஆய்வு செய்து, ஊழியர்களிடம் விசாரித்தனர். அதீலுக்கு அம்பாலா சாலையில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மருத்துவர் அதீல், அக்டோபர் 4, 2025 அன்று ஜம்மு காஷ்மீரில் திருமணம் செய்து கொண்டார். செப்டம்பர் 26-ஆம் தேதி விடுப்பில் சென்ற அவர், சில பணியாளர்களுக்கு திருமண அழைப்பிதழ்களையும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அவரது கைது செய்தி வெளிவந்ததையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது பெயர்ப் பலகையை அகற்றியது.

மருத்துவமனை நிர்வாகம் என்ன சொல்கிறது?

டெல்லி கார் வெடிப்பு, 3 மருத்துவர்கள் கைது,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகரிலும் பல மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரபல மருத்துவமனையின் மேலாளர் மனோஜ் மிஸ்ரா கூறுகையில், "ஜனவரி–பிப்ரவரி 2025 இல் மருத்துவமனையில் மருத்துவர் பதவி காலியாக இருந்தது. அப்பதவியில் மார்ச் மாதத்தில் அதீல் நியமிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனை அவரது சேவையை நிறுத்தியுள்ளது." என்றார்.

உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சஹரன்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் வ்யோம் பிண்டால் ஊடகங்களிடம் பேசுகையில், "இது ஜம்மு–காஷ்மீர் காவல்துறையின் வழக்கு. உத்தரபிரதேச காவல்துறை ஒத்துழைப்பு மட்டுமே அளித்துள்ளது." என்றார்.

அதே சமயம், சஹரன்பூரில் மருத்துவர் அதீல் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர் அதீல் அகமது ராதர் முன்பு சஹரன்பூரில் உள்ள வி பிரதர்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

அதன் நிர்வாகியான மருத்துவர் மம்தா வர்மா கூறுகையில், "மருத்துவர் அதீல், மருத்துவ நிபுணராக இங்கு சுமார் நான்கு மாதங்கள் பணியாற்றினார்." என்றார்.

பின்னர், அவர் பிப்ரவரி 28-ஆம் தேதி விலகி பிரபல மருத்துவமனைக்கு மாறியுள்ளார்.

அவருடன் பணியாற்றிய சிலர், பெயர் வெளியிட விரும்பாத நிலையில் இதுகுறித்து பேசினர்.

அப்போது, 'அதீல் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அவரது வருங்கால மனைவியும் ஜம்மு–காஷ்மீரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் என்றும் கூறியிருந்தார்' எனத் தெரிவித்தனர்.

அவருடன் பணியாற்றிய சக மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'அதீலுக்கு மருத்துவம் குறித்த அறிவு மிக நன்றாக இருந்தது. நாங்கள் அவ்வப்போது அதைப் பற்றி விவாதிப்போம். ஆனால், தனிப்பட்ட தொடர்பு மிகவும் குறைவாக இருந்தது' என்றார்.

அவர் எங்கு தங்கியிருந்தார் என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.

ஆனால், வழக்கமாக ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்து, உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கம் என்று அவரது சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் மருத்துவர் கைது

ஹரியாணா மாநிலம் தௌஜில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த மருத்துவர் முசம்மில் ஷகீல், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கூட்டு நடவடிக்கையின் போது, மருத்துவர் முசம்மிலிடமிருந்து ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினர்.

மருத்துவர் முசம்மில் அக்டோபர் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது வாடகை வீட்டில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குப்தா கூறுகையில், "முசம்மில் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் கற்பித்து வந்தார். அவரிடமிருந்து ஒரு கலாஷ்னிகோவ் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு டைமர் கைப்பற்றப்பட்டுள்ளன." என்றார்.

ஷாஹீன் சயீத் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் காவல்துறை தகவல் அளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஷாஹீனும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

"360 கிலோ எடையுள்ள எளிதில் தீப்பிடிக்கும் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அது ஆர்.டி.எக்ஸ் அல்ல," என்று சதேந்திர குப்தா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மருத்துவர் முசம்மிலின் தாயார் நசீமா, பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "அவர் கைது செய்யப்பட்டது குறித்து நாங்கள் மற்றவர்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டோம். அவரைச் சந்திக்க முயன்றோம், ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை," என்றார்.

முசம்மில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஃபரிதாபாத்தில் ஷாஹீன் சயீத் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, முசம்மிலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கார் ஷாஹீனுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், புல்வாமாவில் உள்ள மருத்துவர் முசம்மிலின் சகோதரர் ஆசாத் ஷகீல், 'என் சகோதரர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அவரைச் சந்திக்க எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை' என்று பிடிஐக்கு தெரிவித்தார்.

அவர் வருடத்திற்கு இரண்டு முறை வீட்டிற்கு வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கார் வெடிப்பு, 3 மருத்துவர்கள் கைது,

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் வாகன சோதனை மேற்கொள்கின்றனர்.

லக்னௌவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை

செவ்வாய்க்கிழமை, ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாஹீன் சயீத்தின் லக்னௌ வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மருத்துவர் ஷாஹீன் சயீத்தின் குடும்பம் லக்னௌவின் லால் பாக் பகுதியில் உள்ள கந்தாரி பஜாரில் வசிக்கிறது.

அவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவரது மூத்த சகோதரர் ஷோயிப் சயீத்தின் தந்தையுடன் வசிக்கிறார், இளையவர் பர்வேஸ் சயீத் ஐஐஎம் மதியான்வ் அருகே வசிக்கிறார்.

அவரது தந்தை சையத் அகமது அன்சாரி கூறுகையில், "எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஷாஹீன் சயீத் என் இரண்டாவது மகள். அவர் அலஹாபாத் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி பட்டம் பெற்றுள்ளார்," என்றார்.

மேலும், "நீங்கள் சொல்வதை (சட்டவிரோத நடவடிக்கைகள்) என்னால் நம்ப முடியவில்லை. இதுவரை போலீசார் என்னைத் தொடர்புகொள்ளவில்லை," என்று சையத் அகமது அன்சாரி கூறினார்.

சஹரன்பூர் மற்றும் லக்னௌவிலுள்ள ஷாஹீன் சயீத்தின் சகோதரர் பர்வேஸ் அன்சாரியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். நவம்பர் 11-ஆம் தேதி உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவும், ஜம்மு–காஷ்மீர் காவல்துறையினரும் ஷாஹீன் சயீத்தின் தந்தையின் வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சையத் அன்சாரி கூறுகையில், 'நான் பர்வேஸுடன் ஒவ்வொரு வாரமும் பேசுவேன். அவர் இன்டக்ரல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஷாஹீனுடன் நான் ஒரு மாதத்திற்கு முன்பு பேசினேன், அவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்தேன்' என்றும் தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், "ஷாஹீன் சயீத் பல ஆண்டுகளாக இங்கு வசிக்கவில்லை. அவர் இங்கே வருவது மிகவும் அரிது," என்றார்.

டெல்லி கார் வெடிப்பு, 3 மருத்துவர்கள் கைது,

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் சந்தையில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

முன்வைக்கப்படும் கேள்விகள்

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, தாங்கள் ஒரு பெரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்தக் கூட்டு நடவடிக்கை உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணா காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, "இந்த நடவடிக்கை நீண்டகால கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது."

இந்தக் குழு ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே தீவிரமாகச் செயல்பட்டு வந்தது என்றும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்து, இளைஞர்களைத் தூண்டியது என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தது என்றும் விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கூறுகிறது.

காஷ்மீர் காவல்துறை அளித்த தகவலின்படி, சோதனைகளின் போது பல டிஜிட்டல் சாதனங்கள், சுவரொட்டிகள் மற்றும் மின்னணு பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சித்தாந்தத்தைப் பரப்பி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், அதாவது UAPA வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூடான் பயணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோதி, டெல்லி வெடிப்புச் சம்பவம் குறித்து கூறுகையில், "இந்த வெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் சதி செய்தவர்கள் தப்ப முடியாது. இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்," என்றார்.

மறுபுறம் இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், "தேசிய தலைநகர் டெல்லியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டுமே ஃபரிதாபாத்தில் 360 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது அங்கே எப்படி சென்றது? அது எவ்வளவு பெரிய பேரழிவாக மாறியிருக்கும்?" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"சுமார் ஏழு மாதங்களுக்கு முன்புதான் பஹல்காமில் ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இப்போது டெல்லியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு? உள்துறை அமைச்சர் எங்கே? பிரதமர் எங்கே?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c15pyyvpn0yo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.