Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

16 Nov, 2025 | 01:41 AM

image

(நெவில் அன்தனி)

கத்தார், தோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட்டின் ஏ குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 3 விக்கெட்களால் இலங்கை ஏ அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது.

யாழ். மைந்தன், மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சில் 3 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பிரகாசித்தபோதிலும் அது பலனற்றுப் போனது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

மிலன் ரத்நாயக்க (41), நுவனிது பெர்னாண்டோ (39), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (33), விஷேன் ஹலம்பகே (28) ஆகிய நால்வரே துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

dunith_wellalage.jpg

ஆப்கான் பந்துவீச்சில் பிலால் சமி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஏ.எம். கஸன்பார் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதில் சிதிக்குல்லா அத்தல் 54 ஓட்டங்களையும் இம்ரான் 34 ஓட்டங்களையும் அணித் தலைவர் தார்விஷ் ரசூலி 32 ஓட்டங்களையும் காய்ஸ் அஹ்மத் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: பிலால் சமி

https://www.virakesari.lk/article/230450

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய 'A' அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பங்களாதேஷ் 'A'!

Nov 21, 2025 - 09:06 PM

இந்திய 'A' அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பங்களாதேஷ் 'A'!

தொடரின் மிகவும் சவால் மிக்க அணியாகக் கருதப்பட்ட இந்திய 'A' அணியை வீழ்த்தி, 'ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்' T20 கிரிக்கெட்த் தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் 'A' அணி இன்று (21) தகுதி பெற்றது. 

தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியின் வெற்றியாளர் 'சுப்பர் ஓவர்' (Super Over) மூலம் தீர்மானிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். 

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களைப் பெற்றது. இதற்குப் பதிலளித்தாடிய இந்திய அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு அதே 194 ஓட்டங்களைப் பெற்றது. 

இந்திய அணியின் வெற்றியீட்ட இறுதிப் பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதன்போது பங்களாதேஷ் வீரர்களின் மோசமான களத்தடுப்பு காரணமாக இந்தியாவால் 3 ஓட்டங்களைப் பெற முடிந்ததால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. 

வெற்றியாளரைத் தீர்மானிக்க வீசப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் முதல் இரண்டு பந்துகளிலேயே ஆட்டமிழந்தனர். 

இதனையடுத்து வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டும் முதல் பந்திலேயே வீழ்ந்தது. எனினும், வீசப்பட்ட இரண்டாவது பந்து அகலப் பந்தாக அமைந்ததால் பங்களாதேஷ் அணி வெற்றியீட்டியதுடன், இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

https://adaderanatamil.lk/news/cmi90w82c01uyo29nmo1tklrz

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை சுப்பர் ஓவரில் வீழ்த்தி ஆசிய கிண்ண உதயத் தாரகைகள் சம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் சூடியது

Published By: Vishnu 24 Nov, 2025 | 06:09 PM

image

(நெவில் அன்தனி)

கத்தார் தேசத்தின் தோஹாவில் அமைந்துள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச விளையாட்டரங்கில் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகைள் (Rising Stars) இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணியை சுப்பர் ஓவரில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த எண்ணிக்கையைப்  பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் பங்களாதேஷ் 3 பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றது.

சுப்பர் ஓவரில் 2 விக்கெட்களையும் போட்டியின்போது 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றிய அஹமத் தானியல் ஆட்டநாயகனானார்.

பதிலளித்து பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது.

இந்தியா ஏ அணியுடனான அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ  அணி   சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் சாத் மசூத் 38 ஓட்டங்களையும் அரபாத் மின்ஹாஸ் 25 ஓட்டங்களையும் மாஸ் சதாகத் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டல் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரக்கிபுல் ஹசன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஹபிபுர் ரஹ்மான் சொஹான் 26 ஓட்டங்களையும் ரக்கிபுல் ஹசன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சுபியான் முக்கீம் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அராபத் மின்ஹாஸ் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஹமத் தானியல் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/231321

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.