Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 Nov, 2025 | 11:12 AM

image

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த படகில் இருந்த 6 இலங்கையர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 15 பொதிகள் படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (20) காலை தங்காலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கைப்பற்றல்! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் ஆறு பேர் கைது!

21 Nov, 2025 | 04:29 PM

image

இலங்கை கடற்படையால், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் 06 சந்தேக நபர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பல நாள் மீன்பிடிக் கப்பலும் சந்தேக நபர்களும் கடந்த 20 ஆம் திகதி தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய நிபுணர் பரிசோதனையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 18  பொதிகளில் 261 கிலோகிராமை விட அதிகமான ஐஸ் மற்றும் 115 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், போதைப்பொருள் கையிருப்புடன், ரிவால்வர் வகை மற்றும் பிஸ்டல் வகை  02 துப்பாக்கிகள் மற்றும் 02 மெகசின்களுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை கண்காணிப்பதில் பங்கேற்றனர்.   

இந்த போதைப்பொருள் கையிருப்பை கண்காணிப்பதில் பங்கேற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது கருத்துக்களைத் தெரிவித்ததோடு, “போதையற்ற நாடு - ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின்  கீழ் முழு நாட்டையும் உள்ளடக்கிய போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வரும் கடத்தல்காரர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார்.

மேலும், தேசிய பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தி, பாதுகாப்பான நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல மூலோபாய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பதற்காக குறிப்பாக செயல்படுத்தப்பட்ட 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருள் சோதனைகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக நடத்துவதற்கு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு எப்போதும் வாய்ப்பளிப்பதன் மூலம், ஒரு நாடாக நாம் வெற்றிகரமான முடிவுகளைக் காண முடிகிறது என்றும் அவர் கூறினார்.

கௌரவ ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், அரச புலனாய்வு சேவை உட்பட அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுடனும், பிற சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகளுடன் ஒருங்கிணைந்து போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மூலோபாயத் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கையாள்வதில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை, பிற படைகளுடன் இணைந்து, இலங்கை பொலிஸ், பொலிஸ் அதிரடிப் படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட்டு, கடந்த சில மாதங்களில் மிகவும் வெற்றிகரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏராளமான கைதுகளைச் செய்து வருவதாக கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கண்ணியமான வாழ்க்கை அசைக்க முடியாத நாடு என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, நாட்டின் குழந்தைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கும், தாய்நாட்டை இந்த சமூகப் பேரழிவிலிருந்து விடுவிப்பதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இலங்கை கடற்படையின் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர்,  இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு வழங்குமாறு மீனவ சமூகத்தினரிடையே கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பொறுப்பான ஊடக அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்கையும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகு, 261 கிலோகிராமை விட அதிகமான ஐஸ், 115 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின், 02 துப்பாக்கிகள், 02 மெகசின்களுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் ஆறு (06) சந்தேக நபர்களும் மேலதிக  விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 

போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் ஆறு பேர் கைது! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.