Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்

Dec 23, 2025 - 10:55 AM

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளார். 

தற்போது இரு தரப்புக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று (22) பிற்பகல் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmji55eeq030yo29nacm6ad4j

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை கொஞ்சம் சிக்கல் போலத்தான் இருக்குமோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

Published By: Digital Desk 3

23 Dec, 2025 | 03:41 PM

image

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இன்று (2025 டிசம்பர் 23) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இலங்கை மீளக்கட்டியெழுப்பும் பணிகளை ஆரம்பித்துள்ள இத்தருணத்தில், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாகவே இந்தச் சந்திப்பு அமைந்தது.

d8035533-8f6c-46ee-b40c-6988b79ff806.jpg

இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளக்கட்டியெழுப்புதல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், வலுவான சட்ட, நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளின் ஆதரவுடன், பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறைகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினரும் தற்போதைய நிவாரண முயற்சிகளை மீளாய்வு செய்ததுடன், மீட்பு நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னரான மீட்புச் செயற்பாடானது, உடனடி நிவாரண முயற்சிகளுக்கு அப்பால் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது எனக் குறிப்பிட்ட பிரதமர், இதன்போது இந்திய அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காகத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதன் ஓர் அங்கமாகவே பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். அனர்த்த நேரத்தின்போது வெளிப்பட்ட மக்களின் ஒற்றுமை, அவர்களின் தன்னார்வத் தொண்டு மற்றும் கூட்டுச் செயற்பாடுகளைப் பாராட்டிய பிரதமர், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம், அனர்த்தங்களுக்குள்ளாகும் தன்மையைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். 

இச்சந்திப்பில் இந்தியத் தூதுவர் திரு.Santosh Jha , இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் (IOR) திரு.Puneet Agrawal, இணைச் செயலாளர் திரு.Sandeep Kumar Bayyapu, பிரதித் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேSatyanjal Pandey ஆகியோரும், இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாணிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தெற்காசியா) திரு. சமந்த பத்திரண மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திருமதி டயானா பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

b29279bb-d8a4-4fb1-8e9c-4638d98547dd.jpg

https://www.virakesari.lk/article/234196

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

Published By: Vishnu

23 Dec, 2025 | 06:53 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

WhatsApp_Image_2025-12-23_at_18.50.58.jp

இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் இலங்கை எதிர்கொண்டு வரும் மீள்கட்டுமான சவால்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கருத்துப் பரிமாறிக்கொண்டனர்.

குறிப்பாக, சூறாவளி தாக்கத்தால் சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்தியா முன்மொழிந்துள்ள மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டுமான உதவித் தொகுப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேரிடர் காலங்களில் அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்கான நீண்டகால முயற்சிகளில் இந்தியா வழங்கவுள்ள ஆதரவு குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் தொடர்ச்சியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி சர்வதேச ஆதரவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பு, டித்வா சூறாவளி பின்னணியில் இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் அரசியல், மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி ஆதரவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் - இலங்கை வெளிவிவகார அமைச்சர் இடையில் சந்திப்பு!

23 Dec, 2025 | 04:19 PM

image

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் செவ்வாய்க்கிழமை (22) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக, இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, 'திட்வா' சூறாவளியால் இலங்கை பாதிப்பட்ட போது முதல் நாடாக விரைந்து வந்து இந்தியா வழங்கிய உதவிகளையும், 'சாகர் பந்து' நடவடிக்கையையும் பாராட்டி, மீட்பு பணிகளின் அடுத்த கட்டத்திலும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/234210

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்

Published By: Vishnu

23 Dec, 2025 | 07:16 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

WhatsApp_Image_2025-12-23_at_18.58.41.jp

இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp_Image_2025-12-23_at_18.58.544.j

“டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது.

WhatsApp_Image_2025-12-23_at_18.59.03.jp

அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். 

குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான உடனடி நிவாரணம் முதல் நீண்டகால புனர்வாழ்வு வரை இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். அத்துடன், அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்கு மிக அவசியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/234241

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.