Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26  ஆண்டில் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்

Published By: Digital Desk 3

23 Dec, 2025 | 04:13 PM

image

(எம்.மனோசித்ரா)

சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்ற மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வசதியளிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படுத்தியுள்ள 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் கோப்பரேசன் ஜெனரல் லிமிட்டட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்மூலம், அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 40 இலட்சம் மாணவர்களுக்கு சுகாதாரக் காப்புறுதி, விபத்துக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி வகுதிகளின் கீழ் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும் போது அடையாளங் காணப்பட்டுள்ள பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் திருத்தங்களை உட்சேர்த்து, 'சுரக்ஷா', மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை 2025ஃ26 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதற்கமைய, ஏற்புடைய சுற்றறிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வெளியிடுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, அதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

2025/26 ஆண்டுக்குரிய 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டம் 2026.08.31 வரை நடைமுறைப்படுத்தல், பெற்றார் உயிரிழப்பின் போது வழங்கப்படும் அனுகூலங்களை வழங்கும் போது கருத்தில் கொள்ளப்படும் குறைந்த வருமானம் கொண்ட வகுதியின் ஆண்டுக்கான வருமானம் 180,000ஃ- ரூபா தொடக்கம் 240,000 ரூபாவாக திருத்தம் செய்தல், விகாரமடைந்த முதுகெலும்பை நேர்த்தி செய்வதற்கு அணிகின்ற கருவி மற்றும் செவிப்புலக் கருவிக்கு 75,000ஃ- ரூபா வரை அனுகூலங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீவிர நோய் வகுதிக்குட்பட்ட நோய்களுக்காகவும், மேலும் அடையாளங் காணப்பட்ட 07 நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சைகளைப் பெற்று வரும் மாணவர்களுக்கு 20,000ஃ- ரூபா வரை அனுகூலங்களை வழங்கல், தீவிர நோய் வகுதிகளுக்கான Pneumothorax, Encephalitis, Thalassemia, Hereditary spherocytosis kw;Wk; Sickle cell anemia போன்ற நோய்களை புதிதாககச் சேரத்துக் கொள்ளல், 2025.09.01 ஆம் திகதி தொடக்கம் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை விண்ணப்பங்கள் ; ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் கோப்பரேசன் ஜெனரல் லிமிட்டட் இன் எந்தவொரு பிராந்திய அலுவலகத்தின் மூலம் வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/234209

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.