Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரா - ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்

Dec 28, 2025 - 09:43 PM

ஆந்திரா - ஒடிசா எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்

இந்தியாவின் ஆந்திரா - ஒடிசா எல்லையைப் பயன்படுத்தி இலங்கைக்கு முன்னெடுக்கப்படும் கஞ்சா கடத்தல் தொடர்பான தகவல்களை இந்தியப் பொலிஸார் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் ஆந்திரப் பகுதியில் கைது செய்யப்பட்டதை அடுத்து இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெண் ஒருவரினால் இந்தக் கடத்தல் வழிநடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதுடன், வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் கஞ்சாவை களஞ்சியப்படுத்தி வைத்து இவ்வாறு இலங்கைக்கு கடத்தி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, குறித்த வீட்டிலிருந்து 74 கிலோ கிராம் கஞ்சா, கார் ஒன்று, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

https://adaderanatamil.lk/news/cmjpxhnw8037qo29n9mtton6u

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு கஞ்சா கடத்தல் ; இந்தியாவில் 08 பேர் கைது

Published By: Digital Desk 3

28 Dec, 2025 | 02:50 PM

image

இந்தியாவின், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அனகாப்பள்ளி மாவட்டம் நாதாவரம் பொலிஸார், உயர்தர சீலாவதி வகை கஞ்சாவை நர்சிபட்டினம் பகுதியில் இருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு கடத்தி வந்த கும்பலைச் சேர்ந்த 08 பேரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் அடங்குவார்.

ஆந்திர–ஒடிசா எல்லைப் பகுதிகளில் விளையும் கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபராக 28 வயதுடைய காடே ரேணுகா என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாகப்பட்டினம் மாவட்டம் சாந்தகாவிட்டி பகுதியைச் சேர்ந்த ரேணுகா, பயக்கராபேட்டை, நர்சிபட்டினம், சலூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததால், ‘லேடி டான்’ என அழைக்கப்பட்டுள்ளார்.

ரேணுகா மற்றும் அவரது நண்பரான சூர்யா கலிதாஸ், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு அனுப்புவதற்காக நர்சிபட்டினத்தில் வாடகை வீட்டில் தங்கி செயல்பட்டு வந்துள்ளனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் ஸ்ருகாவரம் கிராமம் அருகே கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 74 கிலோ உலர் கஞ்சா, ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் விசாரணையில், ரேணுகா பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் வாடகை வீடுகளை எடுத்து தனது கடத்தல் வலையமைப்பை விரிவுபடுத்தியிருந்தது தெரியவந்துள்ளது. அடூரி பிரசாத் என்பவரின் உதவியுடன், ஒடிசாவின் பாலிமேலா மற்றும் சித்ரகொண்டா பகுதிகளில் உள்ள பழங்குடியினரிடமிருந்து கிலோக்கு இந்திய மதிப்பில் ரூ.5,000 வீதம் கஞ்சா வாங்கி வந்துள்ளார்.

சாரதிகளான மதன் குமார் மற்றும் நாக முத்து, கஞ்சா பொதிகளை ராஜாநகரம் நெடுஞ்சாலை சந்திப்புக்கு கொண்டு வந்து, அங்கிருந்து தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கும்மபல் தமிழ்நாட்டில் சிறு பொட்டலங்களாகவும் கஞ்சா விற்பனை செய்துள்ளதோடு, மாநில அளவிலான கடத்தல்காரர்களுடன் உள்ள தொடர்புகளை பயன்படுத்தி இலங்கைக்கு கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/234586

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.