"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 130 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"
இலங்கை வரலாற்று நூல்கள் நாகர்களை மனித மற்றும் பாம்பு வடிவம் கலந்த உயிரினங்கள் என விவரிக்கின்றன. ஆனால், இது ஒரு புராண வர்ணனை அல்லது தவறான புரிதல் எனக் கருதுகிறேன். ஏனெனில் நாகர்கள் உண்மையில் காந்தாரதேசம் (Ghandhara / Northern Pakistan and Afghanistan) முதல் இலங்கை வரை பரந்த பரப்பில் வாழ்ந்த உயர்ந்த நாகரிகம் கொண்ட, நன்கு வளர்ந்த சமூகமாகம் ஆவார்கள். கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு, நாகர்கள் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதற்கும், காலப்போக்கில், அவர்கள் ஆரம்பகால தமிழ் மக்களுடன் இணைந்திருக்கலாம் என்பதற்கும் கணிசமான சான்றுகள் உள்ளன. இது வரலாற்று, தொல்பொருள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது அல்லது ஆதரிக்கப்படுகிறது.
பழமையான தமிழ் காவியம் சிலப்பதிகாரம் நூலில், புகார் (அல்லது காவேரிப்பட்டினம்), சோழ நாட்டின் தலைநகரமாகக் கூறப்படுகிறது. அது கடல் வெள்ளத்தால் (சுனாமி) சேதமடைவதற்கு முன்பு அல்லது அழிவதற்கு முன்பு, தென்னிந்தியாவின் மிகப் பெரிய நகரமாக இது இருந்தது. சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் / 1. மங்கல வாழ்த்துப் பாடலில், புகார் நகரம் நாக நாட்டின் நீண்ட நாக நகரத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது நாகர்கள் உயர்ந்த நாகரிகத்தினை கொண்டவர்கள் அல்லது நன்கு வளர்ந்த மக்கள் என்ற புரிதலை வெளிப்படுத்துகிறது. இது இலங்கை வரலாற்று நூல்களில் காணப்படும் 'பாதி மனிதர் பாதி பாம்பு உருவம் கொண்ட மனிதர் அல்லாத உயிரினம்' என்ற கருத்தை முற்றிலும் புறக்கணிக்கிறது. இதை கட்டாயம் ஒரு வகையான பண்டைய கால இனவெறியின் வெளிப்பாடு என்று கூறலாம் என்று உணர்கிறேன்.
"ஆங்கு,
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்,
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,"
[1. மங்கலவாழ்த்துப் பாடல்]
இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை என்கிறது.
அதாவது ‘நெடிய நாக நகரோடும் நாக நாட்டுடனும் வைத்து எண்ணத்தக்க நீண்ட போகமும் புகழும் பொருந்திய புகார் நகர்’ என்கிறது
கீழே உள்ள பாடல் வரிகள் சிலப்பதிகார காவியத்தில் இந்திர விகாரை என்ற பெயரில் புத்த விகாரையைப் பற்றி குறிப்பிடுகின்றன. சீன சமயப்பயணர்கள் [யாத்ரீகர்கள்] இதை பேரரசர் அசோகரின் தம்பி மகேந்திரனால் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர். கோவலனின் பெற்றோர் தங்கள் செல்வம் மற்றும் உடைமைகள் அனைத்தையும் நன்கொடையாக அளித்து விட்டு இந்த விகாரையில் ஓய்வு பெற்றனர். தமிழர்கள் அந்த நேரத்தில் பல மதங்களைப் பின்பற்றி இருந்தனர். உதாரணமாக, சமணம், புத்தம், சைவம் மற்றும் பல. எனினும் கி.பி ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் சைவ மதம் எழுச்சி கொண்டது. எனவே பௌத்தர்கள் பெருமளவில் இலங்கையில் முகாமிட்டிருக்க வேண்டும். சமணம் கிட்டத்தட்ட அதன் அடித்தளத்தை இழந்துவிட்டது. சைவமும் வைணவமும் மீண்டும் காலூன்றின. ஆனால், இவை இரண்டும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளால், இந்து மதத்தின் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்டது அல்லது இணைக்கப்பட்டது, உண்மையில் அவர்களின் நிர்வாக, அரசியல் மற்றும் சமூக உத்திகளின் [administrative, political, and social strategies] காரணத்தால் ஆகும். இது துணைக் கண்டத்திற்குள்ளும் உலக அளவிலும் இந்திய மதங்கள் எவ்வாறு அன்று அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காட்டுகிறது. அதாவது, சைவம் (சிவன் வழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), சக்தி (தேவி வழிபாடு) மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான மரபுகளை ஒரே இந்து சமயம் என்ற குடையின் கீழ் தொகுப்பதன் மூலம், அவர்கள் மக்கள்தொகையை சிறப்பாக வகைப்படுத்தலாம், வரி விதிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம் என்பதால் இருக்கலாம்? சுருக்கமாக, இது அவர்களின் வசதிக்காகவோ அல்லது அவர்களின் அறியாமையினாலோ நடைபெற்றது என்று கருதலாம்.
"அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து
பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி"
[10. நாடுகாண் காதை]
பாம்பின்மீது பள்ளிகொண்டிருந்த மணிவண்ணன் கோயிலை வலப்புறமாகச் சுற்றி வந்தனர். ஐந்து முரசுகளுடன் பசுமையான இலைகளைக் கொண்ட அரச மரத்தடி நிழலில் இருந்து அறம் சொன்ன அறவோன் புத்தனின் மாணவர்கள் அறம் உரைக்கும் ஏழு இந்திர விகாரைகள் வழியாகச் சென்றனர் என்கிறது இந்த பாடல் வரிகள்.
Part: 130 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"
The Ceylon chronicles depicts Nagas as kind of semi human semi snake variety. Nagas must be people living in the East or to the east of India, and a well developed community known from Ghandhara (Afghanistan) to Ceylon. Ceylon can also be considered east of Tamil Nadu. The ancient city of Puhar was very famous in the olden days and it was then the capital of Chola country. It must have been damaged during a deluge, perhaps due to Tsunami. It was the grandest city in the southern India before it was damaged by the deluge. In the verses given below, in the Epic Silappathikaram, the city of Puhar is compared with the lengthy Naga city of the Naga country. The few verses below are the comparison of the City of Puhar with the Naga city. These verses are in the Canto 1 of the Tamil Epic Silappathikaram. Nagas are well developed people as per this Tamil epic, but they are half snake and half human in the Ceylon chronicles, kind of ancient day racism.
அதனால்,
நாகநீள்நகரொடுநாகநாடு-அதனொடு
போகம், நீள்புகழ்மன்னும்புகார்-நகர்அது-தன்னில்
The above lines can be summarised as ‘The city of Puhar is comparable with the lengthy Naga city and the Naga country’.
The verses below mention about a Buddhist Vihara with the name Indra Vihara in the Epic Silappathikaram. Chinese pilgrims mention this as built by Mahendra, the younger brother of the Emperor Asoka. Parents of Kovalan donated all their wealth and belongings and retired to this Vihara. The Tamils were following many religions; Jainism, Buddhism, Saivism and many more. There was Saiva upheaval in the sixth and seventh centuries A. D. and the Buddhists must have decamped to Ceylon en-mass. Jainism almost lost its footing. Saivism and Vainavam took foothold, both of which were bracketed into Hinduism by the eighteenth century British Colonial officers for their convenience or because of their ignorance.
பணைஐந்துஓங்கியபாசிலைப்போதி
அணிதிகழ்நீழல்அறவோன்திருமொழி
அந்தர-சாரிகள்அறைந்தனர்சாற்றும்
இந்திர-விகாரம்ஏழ்உடன்போகி-
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி / Part: 131 தொடரும் / Will follow
துளி/DROP: 2088 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130
https://www.facebook.com/groups/978753388866632/posts/34257765697205306/?
By
kandiah Thillaivinayagalingam ·