Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறைப்பிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படும் - கடற்றொழில் சங்க பிரதிநிதி

சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படுமென ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்க பிரதிநிதி எமரால்ட் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர்.

குறிப்பாக தனுஷ்கோடி கடற்பரப்பில் இரவு பகலாக தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் படகுடன் கடற்றொழிலாளர்களை மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து 

ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, மாவட்ட கடற்றொழிலாளர்கள் வாரத்தில் மூன்று நாட்களும், நாட்டு படகுகள் நான்கு நாட்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படும் - கடற்றொழில் சங்க பிரதிநிதி | Boat Captured Karaikal Fishermen Will Be Released

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கடற்றொழில் விசைப்படகுகள் கடலில்10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடியில் ஈடுபட்டு வருவதால் தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பாதிக்கப்படுகின்றது.

காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று கரையோரம் மீன்பிடியில் ஈடிபடுவதுடன், இலங்கை கடற்றொழிலார்களின் உடமைகளை சேதப்படுத்தால் கடற்றொழிலார்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் ஊடாக தமிழக கடற்றொழிலார்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் காரைக்கால் பகுதி கடற்றொழிலார்கள் பாக் ஜலசந்தி, தனுஷ்கோடி கடற்பரப்பில் மீன் பிடிக்க கூடாது என கடந்த மாதம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்ட கடற்றொழிலார்கள் தங்கச்சிமட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி பாக் ஜலசந்தி கடற்பரப்பில் தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் மீன்பிடி விசைப்படகளை கடலில் வைத்து சிறை பிடிப்பதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு காரைக்கால் கடற்றொழில் விசைப்படகையும், அதிலிருந்த 14 கடற்றொழிலாளர்களையும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பு

சிறை பிடித்து அழைத்து வந்த கடற்றொழிலாளர்கள் 14 பேரையும் வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததுடன், மீன்பிடி விசைப்படகை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படும் - கடற்றொழில் சங்க பிரதிநிதி | Boat Captured Karaikal Fishermen Will Be Released

இது தொடர்பாக காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவகின்றனர்.

தனுஷ்கோடி கடற்பரப்புக்குள் காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் வருவதை நிறுத்திக் கொள்வதுடன் கடலில் தங்கி மீன் பிடிப்பில் ஈடுபடக் கூடாது என முடிவு செய்த பின் படகு ஒப்படைக்கப்படும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நடுக்கடலில் காரைக்கால் மீன் பிடிப்படகை கடற்றொழிலாளர்களுடன் ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் சிறைபிடித்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

26-696a6f81142b8.webp

26-696a6f81bc9d8.webp

26-696a6f826cfce.webp

https://tamilwin.com/article/boat-captured-karaikal-fishermen-will-be-released-1768581787

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.