Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்காலிக விசா வைத்துள்ளவர்கள் கனடாவை விட்டு வெளியேறுகிறார்களா ? – கண்காணிப்பு முறையை அமுல்படுத்த கனடா அரசு தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக விசா வைத்துள்ளவர்கள் கனடாவை விட்டு வெளியேறுகிறார்களா ? – கண்காணிப்பு முறையை அமுல்படுத்த கனடா அரசு தீர்மானம்

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 09:52 AM

image

தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார்.

கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) மற்றும் கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கக்கூடியதாக இருந்தாலும், தற்காலிக விசாவுடன் உள்ளவர்கள் எத்தனை பேர் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என்பதைக் கணக்கிடுவதற்கான எளிய முறை தற்போது இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குடிவரவு துறையின் தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் சுமார் 19 இலட்சம் தற்காலிக விசாக்கள் (வேலை மற்றும் கல்வி அனுமதிகள் உட்பட) காலாவதியாக உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 21 இலட்சத்துக்கும் அதிகமான தற்காலிக விசாக்கள் காலாவதியாகியுள்ளன.

“உலகின் பல நாடுகள் ஏற்கனவே இத்தகைய கண்காணிப்பு முறைகளை பயன்படுத்துகின்றன. கனடாவும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து,” என லீனா டியாப் கனடியன் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

CBSA-வின் புலனாய்வு மற்றும் அமுலாக்க பிரிவின் துணைத் தலைவர் ஆரன் மெக்ரோரி, கடந்த ஒக்டோபர் 21 அன்று நாடாளுமன்ற குழுவில் வழங்கிய சாட்சியத்தில், கனடாவை விட்டு வெளியேறும் நபரின் பயண முறை, பிறந்த திகதி மற்றும் பயண ஆவணங்களை கண்காணிக்க முடியும் என்றார்.

ஆனால், விசா காலாவதியான காரணத்தால் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுகிறாரா என்பதை தானாகவே கண்டறியும் வசதி தற்போது இல்லை என்றும், அவ்வாறு சரிபார்ப்பது ஒவ்வொரு வழக்காக மேற்கொள்ள வேண்டிய கடினமான செயல்முறை என்றும் அவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் தற்காலிக விசாவுடன் கனடாவுக்கு வந்தவர்களால் அகதி கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன. அந்த ஆண்டில் 1,12,000-க்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்களும் சுமார் 22,000 மாணவர் விசா வைத்திருந்தவர்களும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இதில் தற்காலிக குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்களில் 14 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர் விசா வைத்திருந்தவர்களில் 20 சதவீத விண்ணப்பங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அகதி கோரிக்கைகளை பயன்படுத்தி கனடாவில் தங்கும் காலத்தை நீட்டிக்கும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில், எல்லை பாதுகாப்பு சட்டமூலம் C-12 கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் படி, 2020 ஜூன் 24க்குப் பிறகு கனடாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்கியிருப்பவர்கள் தாக்கல் செய்யும் அகதி விண்ணப்பங்கள், அகதி விசாரணைக்குழுவு்கு அனுப்பப்படமாட்டாது.

குடிவரவு முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே அரசின் இலக்காக இருப்பதாக அமைச்சர் லீனா டியாப் கூறினார். 2024 இல் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான இலக்கு 4,85,000 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 3,93,500 பேர் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒன்லைன் கடவுச்சீட்டு புதுப்பிப்பு திட்டம் (2024 டிசம்பரிலிருந்து) மற்றும் டிஜிட்டல் விசா முயற்சி (2025 நவம்பர் 27 முதல் மொராக்கோ பயணிகளுக்கு) ஆகிய இரண்டு புதிய டிஜிட்டல் திட்டங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“எங்கள் குடிவரவு அமைப்பு பழமையானது. அதை நவீனமயமாக்குவது ஒரு பெரிய சவால். ஆனால் அந்தப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என லீனா டியாப் மேலும் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/237860

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.