Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்பது எமது கொள்கையே ; தேசிய பாதுகாப்பின் பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியம் - லக்மாலி ஹேமசந்திர எம்.பி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்பது எமது கொள்கையே ; தேசிய பாதுகாப்பின் பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியம் - லக்மாலி ஹேமசந்திர எம்.பி தெரிவிப்பு

15 Feb, 2026 | 01:54 PM

image

ஆர்.ராம்

நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது எமது கொள்கையாகும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருப்பினும், நாட்டின் தேசிய பாதுகாப்பு சார்ந்த பங்காளர்களுக்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அவசியமாகின்றது என்பதாலேயே அதுபற்றி கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, ஊடக ஒழுக்கநெறி மற்றும் சுதந்திரத்துக்கான நிலையம், இன்சைட் நியூஸ் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மாதந்த கலந்துரையாடலின்போது, மக்கள் விடுதலை முன்னணியானது, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றபோது பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டுமெனக்கோரியது. பின்னர்கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆகியவற்றுக்கான கலந்துரையாடல்களில் கூட பங்கேற்றிருக்கவில்லை.

அவ்விதமான நிலையில் தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை தயாரித்து மக்கள் கருத்துக்களை கேட்டறிவதற்கு இம்மாதம் 28ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தததும் கொள்கை ரீதியாக திடீரென்று மாற்றம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஊடகவியலாளரால் கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பது தற்போதும் எமது கொள்கையாகவே உள்ளது. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அரசுக்கு தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பங்காளர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்வதற்கு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடு அவசியமாகின்றது என்பது கோரிக்கையாக உள்ளது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் பயங்கரவாதத்தின் அனுபவங்களை 15வருடங்களுக்கு முன்னதாக கொண்டிருந்தாரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவும் நாம் பயங்கரவாத வெளிப்பாட்டின் விளைவுகளை அனுபவிக்கின்றோம்.

அவ்விதமான நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பங்காளர்களின் கோரிக்கையை எவ்வாறு நிராகரிக்க முடியும். நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்காது என்று எவ்வாறு உறுதிப்படுத்த முடியும். ஆகவே சட்டத்தின் தேவையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

ஆனால், கடந்த காலத்தில் பங்கரவாத தடைச்சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட விளைவுகளை நாம் அனுபவரீதியாகவே கண்டிருக்கின்றோம். ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கான நோக்கம் பற்றியே அதிகமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்ட வரைவே வெளியிடப்பட்டுள்ளது. இதனை சில தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கின்றார்கள். சிலர் நியாயமான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். எம்மைப்பொறுத்தவரையில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கே அந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் குறித்த வரைவு பற்றி முறையாக கலந்துரையாடப்படும். அதன்பின்னரேயே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகவே அதற்குரிய செயன்முறைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. தற்போதைய நிலையில் சட்ட வரைவு தொடர்பில் உங்களுடைய அபிப்பிராயங்களை சுட்டிக்காட்டி வெளியிடுவதன் ஊடாக அரசாங்கத்துக்கும் அதுபற்றி சீர்தூக்கிப்பார்த்து மாற்றியமைப்பதற்கு இலகுவானதாக இருக்கும்.

தற்போது இருக்கும் வரைவினையே அரசாங்கம் அமுல்படுத்தப்போகின்றது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கவில்லை. நெகிழ்ச்சித் தன்மையுடன் மாற்றங்களைஏற்படுத்துவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/238707

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.