Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கல்பட்டு: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செங்கல்பட்டு: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது

செங்கல்பட்டு : 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது

பட மூலாதாரம்,Getty Images

25 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மதுராந்தகம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் சிறுமி மற்றும் அவரது நண்பர்கள் சென்ற இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த சிலரால் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை அளித்துள்ள தகவல்படி, மதுராந்தகம் அருகே சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் வாகனத்தை இரண்டு பேர் தங்களின் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் வேகமாக வருவதைப் பார்த்து தனது வாகனத்தை சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது நிலை தடுமாறி சிறுவனும் சிறுமிகளும் கீழே விழுந்துள்ளனர். அப்போது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவர்களைத் தாக்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, சிறுமி பாலியல் வன்கொடுமை

குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து சென்றதும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார்.

அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையை மருத்துவர்களிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை மூலமாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் நேரடி தொடர்புடைய காக்கா பாலாஜி என்கிற பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்' எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

காக்கா பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், தாமு என்கிற தாமோதர பெருமாள் என்ற நபரை புதன்கிழமையன்று கைது செய்துள்ளதாக, காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, சிறுமி பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,Devaneyan

படக்குறிப்பு,குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு.

இதுதொடர்பாக மூன்று காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக ஆவடியில் வசித்து வரும் காக்கா பாலாஜியின் வீட்டுக்கு மேல்மருவத்தூர் போலீசார் சென்றுள்ளனர்.

அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். முடிவில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காக்கா பாலாஜியை காவல்துறை கைது செய்துள்ளது.

காக்கா பாலாஜியிடம் தனிப்படை காவலர்கள் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, புதன்கிழமையன்று தாமு என்கிற தாமோதர பெருமாளை கைது செய்துள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

"சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை, குழந்தைகள் நலக் குழு எனப் பலமுனைகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றொரு சிறுமியும் சிறுவனும் பற்றிய விவரங்கள் காவல்துறை விசாரணை முடிவில் விடை தெரியவரும்" எனக் கூறுகிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உதவி செய்வதற்குக் கூட ஆள் இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு சிறுமி நடந்தே சென்றதாகக் கூறியுள்ளார்.

இதே தகவலை சில நாளேடுகளும் வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக மதுராந்தம் டிஎஸ்பி தீபக் ரஜினியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால், அவரிடம் இருந்து உரிய விளக்கம் பெற முடியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98qvlpj42mo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.