Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து கனேடிய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

Featured Replies

சிறிலங்கா வான் படையினரால் 02.11.07 அன்று குண்டுவீசி படுகொலை செய்யப்பட்ட பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் படுகொலையினைக் கண்டித்து கனடா ரொறன்ரோவில் தமிழ் மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

20071116001.jpg

20071116002.jpg

20071116003.jpg

20071116004.jpg

20071116005.jpg

20071116006.jpg

தமிழ் மாணவர்கள் உண்ணாது, உறக்காது, வாய்பேசாது கவனஈர்ப்புப் போராட்டம்

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் படுகொலையை கண்டித்து கனேடிய தமிழ் மாணவர்கள் உண்ணாது, உறக்காது, வாய்பேசாது கவனஈர்ப்புப் போராட்டம் .

கனடா ரொரன்றோவில் அமைந்துள்ள யோர்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களும் எனைய தமிழ் மாணவர்களும் இணைந்து திங்கள்கிழமை நள்ளிரவு 12.30 மணி தொடக்கம் உணவின்றி, உறக்கம் இன்றி, வாய் பேசாது தமது கவனஈர்ப்பு போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் படுகொலை குறித்தும் அது பற்றி கனடிய அரசாங்கம் மௌனம் சாதித்து வருவது பற்றியும் தமது மிகக்கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் 40 மணி நேரம் தொடர்ந்து இப் கவனஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 13-11-07 திங்கள் நள்ளிரவு அரம்பமாகிய இவ் நிகழ்வு புதன் மாலை 4.30 வரை தொடரும் என இம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

20 பேர் கொண்ட இந்த மாணவர்கள் உண்ணாது, உறங்காது இருப்பதை கேட்டும் கண்டறிந்த சக பல்கலைக்கழக மாணவர்களும் சில பேராசிரியர்களும் சென்று அவர்களிம் உரையாடியதுடன் தமது ஆதரவையும் தெரிவித்தனர்.

இவ் கவனஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தமது வாயை கறுப்புத் துணியால் மூடி கட்டி 40 மணிநேரம் எவருடனும் பேசாமல் ஈழத்தில் மக்கள் படும் இன்னல்களையும் அவர்கள் மௌனிகளாக்கப்பட்டதையும் சித்தரிக்கும் வகையில் அங்கு இருந்தார்கள்.

அவர்களுடன் கூட இருந்த சக மாணவர்கள் ஈழத்தில் மக்கள் படும் அவல நிலையை பற்றியும் கனடிய அரசின் இலங்கை தொடர்பான பக்கச்சார்பு கொள்கை பற்றியும் வேற்றின மாணவர்களுக்கு வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

அத்துடன் தமிழர் தலைமை மீது சிலர் வைத்திருந்த தவறான அபிப்பிராயங்களை தெளிவுபடுத்தியும் வருகின்றனர்.

யோர்க் பல்கலைக்கழகத்தின் வேரி மண்டபம் எனும் இடத்தை தெரிவு செய்ததால் பெரும்தொகையான மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு மக்களின் அவலங்களையும் தமிழர் போராட்டத்தையும் பற்றிய பூரண விளக்கத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தாக அவர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தின் மூலமாக கனடிய மக்களையும் தம்முடன் சேர்த்து அதனூடாக கனேடிய அரசாங்கத்திற்கு எமது அழுத்தங்களை கொடுப்பதுவே எங்களின் நோக்கம் என தெரிவித்தனர். தொடந்த்து தமிழ் ஈழம் விடியும் அந்தப் பொன்னான நாள் வரை இப்படியான போராட்டங்கள் மற்றைய மாணவர்களாளும் தம்மாலும் முன்னெடுக்கப்படும் என அவர்கள் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.