Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இம்மாதம் 26ம் திகதி புலிகளின தலைவர் பிரபாகரன் விடுக்கப் போகும் மாவீரர் தினச் செய்தி குறித்து அரசு மிவும் அவதானமாக இருக்க வேண்டும் - ஐ.தே.க -சரத் ரணவக்க அரசுக்கு எச்சரிக்கை

Featured Replies

'பிரபாகரன் தனது உரையில் தமிழீழப் பிரகடனம் பற்றி அறிவிப்பார் என்றும் அதை சர்வதேச சமூகம் ஏற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது', என அவர் மேலும் கூறினார்.

நாடாளுமனறின் நேற்று இடம் பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சரத் ரணவக்க, இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு :-

புலிகள் தொடர்ந்தும் தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கான பாரிய தாக்குதல்களில் அவர்கள் ஈடுபடலாம்.

தமிழ்ச்செல்வனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழீழத்தை உடனடியாக நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இங்கு கூறுகின்றனர். இங்கு உரை நிகழ்த்திய மாவைசேனாதிராஜாவும் அதையே வலியுறுத்தினர்.

நவம்பர் 26ம் திகதி பிரபாகரன் மாவீரர் தின உரையை நிகழ்த்தவுள்ளனர். அந்தஉரையில் தமிழீழத்தை அமைப்பது குறித்து அவர் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, புலிகள் அதற்கான ஏற்பாட்டில் ஈடுபடலாம். ஆகவே, அரசு கவனயீனமாக இருந்து விடக்கூடாது. மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.எனது இந்தக் கூற்றை அரசு சர்வ சாதாரணமாக எடுத்து விடக்கூடாது. மிகவும் பொறுப்புடன் இருந்தால்தான் புலிகளின் அந்தத் திட்டத்தை முறியடிக்க முடியும்.

நன்றி : சுடர் ஒளி

என்ன தான் குத்து வெட்டு உள்ளே இருந்தாலும் இதில் மட்டும் கவனமாக ஒன்று சேர்ந்து விடும் பேரினம். அது சரி சரத் மாவீரர் உரை 26லா 27லா?

விமானப் படைத்தளபதி முந்தநாள்தான் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று அட்டகாசமான ஒரு அறிக்கை விட்டு இருந்தார். ஐ.தே.க -சரத் ரணவக்கவுக்கு அவரின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை போல இருக்கிறது. நாட்களை எண்ணுபவர்கள் ஏன் பிரபாகரனின் மாவீரர் தின உரை பற்றி கவலைப்படுறீனம்?

விமானப் படைத்தளபதி முந்தநாள்தான் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று அட்டகாசமான ஒரு அறிக்கை விட்டு இருந்தார். ஐ.தே.க -சரத் ரணவக்கவுக்கு அவரின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை போல இருக்கிறது. நாட்களை எண்ணுபவர்கள் ஏன் பிரபாகரனின் மாவீரர் தின உரை பற்றி கவலைப்படுறீனம்?

மாவீரர் தினம் அதன்போது விடுக்கப்படும் உரை இவைகளை முன்னிட்டுத்தான் அவ்வளவு கதைகளும். என்ன நடக்கப்போகிறது என்று எவருக்குமே தெரியாத நிலை. பொறுமையைச் சோதிக்கிறார்கள் என்றுதான் சொல்வார்கள். இங்கு என்னவென்றால் பொறுமைதான் மற்றவர்களைச் சோதிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.