Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதுதான் ராஜீவ் விருப்பம்! - உருகும் வீரமணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ராஜீவ் விருப்பம்! - உருகும் வீரமணி

‘விடுதலைப்புலி இயக்கத்தால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். தடை செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தை எந்தவகையில் புகழ்ந்து பேசினாலும் அது காங்கிரஸாரின் உணர்வுகளை புண்படுத்துவதாகவே அமையும். அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...’

காங்கிரஸ் தலைவி சோனியா தலைமையில், கடந்த 17&ம் தேதி டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இது, தி.மு.க. தலைமைக்கு மறை முகமாக சோனியா விடுத் திருக்கும் எச்சரிக்கை என்றுஅரசியல் நோக்கர்கள் அர்த்தம் சொல்கிறார்கள்.

இவ்விவகாரத்தில் தி.மு.க. மௌனம் காக்கும் நிலையில், சமீப காலமாக தி.மு.க&வின் குரலாகவே ஒலிக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் பேசினோம்.

‘‘இந்த மண்ணில் தங் களுடைய தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தில், காங்கிரஸ்காரர்கள் இப்படியரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். உண்மையில், இந்தத்

தீர்மானத்தால் இன உணர்வு கொண்ட கோடானுகோடி தமிழர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் நண்பர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ராஜீவ் படுகொலையை, மனிதநேயம் படைத்த யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியரு கோரமான, சோகமான சம்பவம் தமிழ் மண்ணில் நடந்திருக்கவே கூடாது. ராஜீவ் படுகொலையை இன்றைக்கு அல்ல, 17 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் கண்டித்திருக்கிறோம்.

இங்கே இருக்கும் காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். 1989&ம் ஆண்டு அம்பேத்கரின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அப்போது மத்தியில் இருந்த வி.பி.சிங் அரசு, இந்த விழாவுக்காக ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவில் இளையராஜா, ஐ.ஏ.ஏஸ். அதிகாரி பத்மநாபன், பத்திரிகையாளர் ராம் ஆகியோரோடு என்னையும் நியமித்திருந்தார்கள். அந்தக் குழுவின் கூட்டம் நாடாளுமன்ற வளாக அரங்கத்தில் ஒருநாள் முழுவதும் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தியும் அதில் கலந்துகொண்டார். உணவு இடைவேளையில் ராஜீவ் காந்தி என்னைப் பார்த்துவிட்டு, ‘மிஸ்டர் வீரமணி, வணக்கம்! உங்களிடம் பேசவேண்டும்’ என்று சொல்லி, என் தோளில் கைபோட்டுத் தனியாக அழைத்துப் பேசினார்.

‘இலங்கையில் இனப்படுகொலை நடப்பது மிகவும் கொடுமை. இதைப் பார்த்து நாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. அங்கே ‘நாப் பாம்’ (தீ வாயு குண்டு) வீசு கிறார்கள் என்று செய்தி வந்துகொண்டிருக்கிறது’ என்றார். உடனே நான், ‘உங்கள் தாயார் கடைசியாகத் தமிழகத்தில் தஞ்சாவூருக்கு வந்தபோது, இதே பரிவான வார்த்தைகளைத்தான் சொன்னார். இப்போது நீங்களும் அதையே சொல்கிறீர்கள். இது உங்களுக்குள் இருக்கும் மனிதாபிமானத்தையும் கருணையையும் காட்டுகிறது’ என்றேன். உடனே, ‘என் கவலையை உங்கள் முதல்வர் கலைஞரிடம் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் ராஜீவ்.

அப்போது தமிழகத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலை வராக வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார். அகில இந்திய காங்கிரஸில் மூப்பனார் முக்கிய பொறுப்பில் இருந்தார். அவர்கள் மூலம்கூட இந்த விஷயத்தை சொல்லாமல், என் மூலம் கலைஞரிடம் இந்தத் தகவலை சேர்க்கச் சொன்னார் ராஜீவ் காந்தி. அவர் கருத்தை உடனே கலைஞரிடம் சொன்னேன். அந்த அளவுக்கு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி. இதுதான் ராஜீவ் விருப்பம் என்பதை காங்கிரஸ் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ராஜீவ் கொலையையும்லட்சக் கணக்கான தமிழர்கள் 20 ஆண்டு களாக அனுபவிக்கும் துயரத்தையும் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றாகப் பார்த்தால், அது சரியாகவா இருக்கும்?’’

‘‘தங்கள் தலைவர் படு கொலையில் ஏற்பட்ட துயரத்தை காங்கிரஸார் தெரிவிக்கக் கூடாதா?’’

‘‘ராஜீவ் கொலையில் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு ஆதரவாக சோனியா காந்தியே இரக்கப்பட்டு கருத்துக்களை சொன்னார். அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதைப் பெருமைமிக்க எடுத்துக்காட்டாக காங்கிரஸ் கொள்ளவேண்டாமா? அவர்கள் கருத்தை வெளியிட உரிமை உண்டு. என்றாலும் கலைஞரின் அரசியல் எதிரிகளுக்கும், தனிப்பட்ட முறையில் எதிர்ப் போருக்கும், வெறும் வாயை மெல்லுபவர்களுக்கும் ‘இதோ, இந்த அவலையும் மெல்லுங்கள்’ என்று கொடுப்பதால் என்ன லாபம்? மத்தியில் உள்ள ஆட்சிக்கு மூலக் கல்லாக இருக்கும் தி.மு&கவை அசைத்துப் பார்த்தால் யாருக்கு நட்டம்?’’

‘‘வைகோ, நெடுமாறன் ஆகியோர் ஊர்வலம் நடத்தியபோது கைது செய்யப்பட்டிருக்கிறார்களே... ஒரு பக்கம் கவிதை& இன்னொரு பக்கம் கைது என்று முரண்பாடாக இருக்கிறதே..?’’

‘‘அவர்கள் ஊர்வலம் நடத்தியது, அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் முயற்சி. தடை உத்தரவு அமலில் இருக்கும்போது அதை மீறி ஊர்வலம் நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுத்துதானே ஆக வேண்டும்? இதனை அதோடு முடிச்சுப் போட்டுப் பார்க்கக் கூடாது.

இலங்கையில் அரசியல் தீர்வுக்காகப் போராடிக் கொண்டிருந்த சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு உலக நாடுகள் எல்லாம் தங்கள் இரங்கலை தெரிவித் திருக்கின்றன. இலங்கையில் அரசியல் தீர்வு காண வேண்டுமானால், விடுதலைப்புலிகளோடுதானே பேச முடியும்... அங்கே இருக்கும் தமிழ் எம்.பி&க்கள்கூட இதே கருத்தைதானே சொல்கிறார்கள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்படவில்லையே... அவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும் என்று அரசு நினைத்ததுதானே காரணம்? அப்படி அமைதி முயற்சியில் இறங்கிய சுப.தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு உலக நாடுகள் எல்லாம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும்போது, அதே உணர்வோடுதான் கலைஞரும் மனிநேயத்தோடு கவிதை வெளியிட்டிருக்கிறார்!’’

எம்.பரக்கத் அலி

- ஜூனியர் விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.