Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களை கொன்றொழித்த பெருமைக்கு விருது பெறவா ஜனாதிபதி உகண்டா பயணம்?

Featured Replies

'வடக்கு கிழக்கில் தமிழ்மக்களை கொன்று குவித்த பெருமைக்கான விருதை வாங்கவதற்காகவா ஜனாதிபதி உகண்டா செல்கின்றார்?' த.தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு சபையில் கேள்வி எழுப்பினார்.

வரவு செவவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவாஜிலிங்கம் இப்படிக் கேட்டடார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :-

கந்த 18 மாதங்களாக ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் யானை விலை, குதிரை விலைக்கு விற்கப்படுகின்றன.

இதனால் எமது மக்கள் பசி, பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கம் அசர படைகள் கிபீர் விமானங்கள் மூலம் நேரகாலம் இன்றி இரவு பகலாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் மீது குண்டுமழை பொழிகின்றன. தினசரி அப்பாவி தமிழ் மக்கள் அரச படையினரால் வேட்டையாடப்படுகின்றனர்.

இதனை தடுக்க வக்கில்லாத அமைச்சன் டக்ளஸ் இங்கே ஜனாதிபதியின் கால்களை நக்கிக் கொண்டு இருக்கிறார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழி ஏற்படுத்துவோம் என்று கூறிக் கொண்டு சர்வகட்சி மாநாட்டை கூட்டினார். அது ஒரு பம்மாத்து. அதனால் நடக்கப் போவது ஒன்றும் இல்லை.

வெளிநாடுகளுக்கு செல்லும் ஜனாதிபதி, இதோ தீர்வு கண்டுவிட்டோம் அதோ தீர்வு காணப் போகிறோம் என்று வெளி உலகை ஏமாற்றிக் கயிறு விட்டுக் கொண்டிருக்கின்றார்.

இலங்கை இந்திய உடன்படிக்கையின் மூலம் 1987 ஆம் ஆண்டு ஒன்றினைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் திட்டம் போhட்டு பிரித்துவிட்டனர்.

இதனைத் தடுக்கவும் தட்டிக் கேட்கவும் லாயக்கில்லாத டக்ளஸ் அதே அமைச்சரவையில் இருப்பது வெட்கம் கெட்டடத்தனமாகும்.

கிழக்கு மாகாணத்தைப் பிடித்து விட்டோம். அங்கே மீள் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றோம். என்று பீற்றித் திரிகின்றனர்.எங்கே உங்களுடைய வரவு செலவுத் திட்டத்தில் அதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டள்ளதா என்று பாருங்கள்.

அரச படைகள் பல லட்சம் மக்களைத் துப்பாக்கி முனையில் ஓட ஓட விரட்டியிருக்கின்றன. ஆனால் அந்த மக்களை மீளக்குடியமர்த்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை. அகதிகளாக இருந்தவர்களை அழைத்துக் கொண்டு போய் கூடாரங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

அவர்களுக்கு குடிதண்ணீர் இல்லை மலசல கூட வசதி இல்லை. ஒட்டு மொத்தமாக அடிபப்படை வசதி எதுவுமே இல்லை.

திருகோணமலை மாவட்டத்தில் 23கிராம சேவையாளர் பிரவுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மீனவர்களும், விவசாயிகளும் இன்றும் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றனர். சொந்த வீடுகளுக்கும், காணிகளுக்கும் அவர்கள் செல்ல இராணுவம் தடைவிதித்துள்ளது. கண்ணிவெடி அகற்றப்படவில்ல என்று காரணம் கூறுகின்றனா.

ஆனால்,அமைச்சர் டக்ளஸ் மாதாந்தம் பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து 80 இலட்சம் ரூபாவை வாங்கிக் கொண்டு அரசுக்கு வக்காலத்து வாங்குகின்றார். தமிழ் மக்களின் சாபத்திற்கு டக்களஸ் பதில் சொல்லியே ஆக வேண்டும். என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

நன்றி சுடர் ஒளி

இதனை தடுக்க வக்கில்லாத அமைச்சன் டக்ளஸ் இங்கே ஜனாதிபதியின் கால்களை நக்கிக் கொண்டு இருக்கிறார். - நன்றிக் கடன் வேறு என்ன செய்ய முடியும்? அப்படி நக்காவிட்டால் 80 இலட்சமும் அம்போ. பாதுகாப்பும் அம்போ. வெளிநாட்டுக்கு ஓடித் தப்பவும் முடியாது. அங்கு வந்தால் வரவேற்புக் கொடுக்க பார்த்தக் கொண்டிருக்கிறர்கள். முரளிக்கு நடந்தது தான் இவருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருகின்ற மாதம் ஜப்பானுக்கு போக போறதாய் ஒரு செய்தி உலாவுது. ஜப்பானில பெரிய வட்டம் வட்டமாய் ஏதோ வாங்க போறதா கதையும் அடிபடுது புதுசா :lol::lol::( இந்தியாவின் வட்டம் அவ்வளவு சரியில்லையாம் பாருங்கோ.........

Edited by tamillinux

யப்பானில் வட்டமும் வாங்கலாம் முட்டையும் வாங்கலாம். எல்லாமே பிச்சைக்குள் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யப்பானில் வட்டமும் வாங்கலாம் முட்டையும் வாங்கலாம். எல்லாமே பிச்சைக்குள் தான்

இந்த வட்டத்தை பற்றி இந்திய பாதுகாப்பு அமைச்சே ஒரு அறிக்கை விட்டிருந்தது சிறிது காலத்துக்கு முன்னால். அதே வட்டம் என்றால் ஈழ தமிழர் நிலை நெருக்கடிக்குள்ளாகும்.

புலிகளின் தொழில் நுட்ப பிரிவும் அதற்கேற்ப செயல்பட வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.