Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் சகாசங்களும் தந்திரங்களும் எதுவரை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் சகாசங்களும் தந்திரங்களும் எதுவரை?

மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராக அவருடைய பிறந்த நாளிலேயே பொறுப்பேற்றார். இப்போது பட்ஜெட் வாக்கெடுப்பும் அவருடைய பிறந்த நாளுடனேயே வந்திருக்கிறது. முன்னைய பிறந்தநாளை அவர் உச்ச மகிழ்ச்சியோடு கொண்டாடினார். இன்னொரு பிறந்த நாளில் அவர் பதற்றத்தோடு இருந்தார்.

பொதுவாகவே மகிந்த ராஜபக்ச ஒரு சாகசக்காரனைப் போலவே இருக்கிறார். அவர் அப்படித்தான் தன்னையும் கருதிக் கொள்கிறார். அதன்படியே அவர் நடந்தும் கொள்கிறார். ராஜபக்சவின் அரசாங்கம் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற மாதிரியே ஆட்சியிலிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் இந்தநிலையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. தன்னுடைய ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால் தொடர்ந்து பேரம் பேசியே தீர வேண்டும் என்ற கட்டத்துக்கு அவர் வந்துள்ளார். இது இலங்கைத்தீவைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட முன்னுதாரணமே.

மகிந்த ஆட்சிக்கு வந்தகாலத்தில் அவருக்கு அவருடைய சுதந்திரக் கட்சிக்குள்ளும் வெளியிலும் பெருத்த நெருக்கடிகளிருந்தன. கட்சியிலிருந்து குறிப்பிட்டளவானோர் அவரை வெளிப்படையாக பகைக்கவும் முடியாமல் ஆதரிக்கவும் இயலாமலிருந்தனர். இந்த அணியினருக்கு முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமை தாங்கினார். இது மகிந்த ராஜபக்சவுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த உள்வீட்டெதிர்ப்பையெல்லாம் அவர் எதிர்க்கட்சியினரில் ஒரு தொகுதியினரை விலைக்கு வாங்கி முறியடித்தார். இதற்காக அவர் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

அதேவேளை அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த ஜே.வி.பி யுடன் கடுமையாக முரண்படவும் வேண்டியிருந்தது. இந்த முரண்நிலை இன்னும் தீரவில்லை. ஆனால், இதெல்லாத்தையும் அவர் எப்படியோ சரிக்கட்டினார். ஆனால், ஒரு கட்டத்தில் இந்த உள்வீட்டெதிர்ப்பு காரணமாக அரசாங்கத்தின் அமைச்சர்களாகவும், கட்சியின் முக்கிய பொறுப்பிலுமிருந்த சிறீபதி சூரியாராய்ச்சியும் மங்கள சமரவீரவும் மகிந்த ராஜபக்சவை வெளிப்படையாக எதிர்த்துக் கொண்டு வெளியேறிப்போனார்கள்.

இந்தச் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் கடுமையாக ஊசலாடியது. அந்த நாட்களில் மகிந்த ராஜபக்ச துாக்கமேயில்லாமலிருந்தார் என்று அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் சொல்கிறார்கள்.

அப்போது மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல, ராஜபக்ச குடும்பமே கதிகலங்கிப் போயிருந்ததாகவும் அவர்கள் சொல்கிறார்கள். நீண்டகால அரசியல் வாழ்வில் பிறகு ராஜபக்ச குடும்பத்துக்குக் கிடைத்த அதிகாரமும் தலைமைத்துவமும் கிடைத்துவடனேயே பறிபோவதா என்று அவர்கள் கவலைப்பட்டார்களாம்.

ஆனால், மகிந்த ராஜபக்சவோ, கட்சியிலுள்ளவர்களும் வெளியாரும் எதிர்பார்த்ததை விடவும் அதிரடியாகவும், சாகசமாகவும் சில முடிவுகளை எடுத்து தன்னைக் காப்பாற்றினார்.

இந்தா கவிழுகிறது என்றிருந்த அரசாங்கம் ஆடித்தளம்பி பிறகு சுதாகரித்துக் கொண்டது. பிறகு ஜே.வி.பி யின் முரண்பாடுகள் வலுக்க அவர் ஏனைய கட்சிகளை வளைத்துப்போட்டு அரசாங்கத்தைப் பலமாக்கினார்.

அதற்காக அவர் இலங்கையின் வரலாற்றில் எப்போதுமே நடந்திராத அளவுக்கு அதிக அமைச்சுக்களையும் இலாகாக்களையும் உருவாக்கினார். இதற்காக பல விமர்சனங்களும் கண்டனங்களும் கேலிகளும் வெளிவந்தபோதும், அதனையிட்டு மகிந்த கவலைப்படவேயில்லை. அவர் கவலைப்படவில்லை என்பதைவிடவும் அவருக்கு வேறு வழிகளிருக்கவில்லை என்கிறார் ஒரு நண்பர்.

அது மட்டுமல்ல இப்போது அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் ஜே.வி.பி யினர் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைக் கேட்டால் அதற்கும் தயாராகவே மகிந்த இருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைப்பதற்காக அவர் எத்தகைய விட்டுக் கொடுப்புக

ளையும் செய்யத் தயாராக இருக்கிறார். அத்துடன் எத்தகைய விலைகளையும் கொடுக்கவும் ஆயத்தம். அவர்தான் சாகசக்காரனாயிற்றே எதையும் செய்வார். அவருக்கு நாடுகுறித்த தீர்க்க தரிசனப்பார்வையோ, பொறுப்போ கிடையாது.

அதையெல்லாம் பற்றிச் சிந்திக்கும் பண்புநிலையும் அவருக்கில்லை என்பதை அவருடைய இத்தகைய அணுகுமுறைகள் தெளிவாகவே காட்டுகின்றன.

இதேவேளை, அவருடைய குடும்ப ஆதிக்கம் அரசியலிலும் ஆட்சியிலும் அதிகமாகி விட்டதென்று பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சிறீலங்காவின் அரசாங்கம் என்பது ராஜபக்ச சகோதரர்களின் கொம்பனி என்றும், அவர்கள் படுமோசமான ஊழல் பேர்வழிகள் என்றும் கூட சனாதிபதியின் கண்ணில் படும்படி எழுதினார்கள்.

அவருடைய காதில் விழும்படியாக பலரும் இதைப் பகிரங்கமாகவே பேசினார்கள். ஆனால் மகிந்த ராஜபக்சவோ புலன்களை மெல்ல அடக்கிக் கொண்டு அமைதி காத்தார். அதனால் ஆட்சியையும் காத்தார்.

இதோடு மகிந்த அரசாங்கத்துக்கான சோதனைக்காலம் தீரவில்லை. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என மிகப்பெரிய கண்டன அலையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அரசாங்கத்துக்கெதிராக எழுப்பின. கூடவே ஐ.நா வின் மனித நேய அமைப்புகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் அரசாங்கத்தைக் குறைகூறின. இது அரசாங்கத்துக்கான நிதி மற்றும், ஆயுத உதவிகளை மட்டுப்படுத்தின. அரசாங்கம் இந்தத் தடைகளாலும் உதவிக் குறைப்புகளாலும் நெருக்கடிக்குள்ளாகியது.

இதை ஈடு கட்டுவதற்காக சனாதிபதி உதவி கோரிபிச்சை கேட்கும் கோலத்தில் சீனா, கியூபா, இந்தியா என்று பெரும் பரிவாரத்தோடு படையெடுத்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தளவு உதவிகள் கிடைக்கவில்லை. என்றபோதும் அவர் ஓய்ந்து விடவில்லை. தான் சீனாவுக்குப் போனபோது அவர் மிலிந்த மொறகொடவை அமெரிக்கா

வுக்கு அனுப்பியிருந்தார். துாரநின்ற மேற்குலகத்தை மிலிந்த மெல்லக் கிட்டக் கொண்டு வந்தார். ஆனால், இந்தக் காரியத்தை அவர் அதிக சலசலப்பில்லாமற் கொண்டு வந்திருக்கிறார். மிலிந்தவின் இந்த பங்களிப்பை அறிந்த ஐ.தே.கட்சியினர் அவரின்மீது நம்பிக்கையில்லாப்பிரேரணையை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.