Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரை தலைநிமிர வைக்கும் வெற்றி விரைவில்- திருப்பூர் மாநாட்டில் "உலகப் பெருந் தமிழர்" காசி ஆனந்தன் முழக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழரை தலைநிமிர வைக்கும் வெற்றி விரைவில்"

திருப்பூர் மாநாட்டில் "உலகப் பெருந் தமிழர்" காசி ஆனந்தன் முழக்கம்

தமிழர்களுக்கு உலகில் இரண்டு நாடுகள் தாய்நாடுகள். ஒன்று தமிழ்நாடு. மற்றொன்று தமிழீழ நாடு. மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயசு, மியான்மர், தென்ஆப்ரிக்கா போன்றவை எல்லாம் பிழைக்கப் போன நாடுகள். இருந்தாலும் தமிழ்த் தேசிய இனமாக தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழ் இனமாக மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு போன்ற நாடுகளிலும் நாம் வாழ்ந்து வருகிறோம். இரு தேசிய இனங்களாக வாழ்கின்ற இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் நடக்கின்ற நிகழ்வு எந்த அளவுக்கு பக்கத்தில் உள்ள நாட்டில் எப்படி உலுக்கும் என்பதைச் சிவாசிலிங்கம் அவர்கள் பேசியபோது நீங்கள் எழுப்பிய கரவொலி காட்டிய உணர்வலைகள் போன்ற வெளிப்பாடுகளை நான் பார்த்தேன். தொழில் வணிக மாநாடு என்று மட்டும் நடந்தால் நாம் இவ்வளவு ஆர்வத்தோடு கூடியிருக்க மாட்டோம். இது தமிழர் தொழில் வணிக மாநாடு. இது நம்முடைய மாநாடு. அதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு முன்பு கணினி, பங்குச் சந்தையில் பயன் உள்ள மக்களுக்குத் தேவையான ஆற்றல் உள்ளவர்களின் கருத்தரங்கு நடைபெற்றது. அவர்கள் அந்தக் கருத்தரங்கில் கூறிய கருத்துகளில் ஒரு கருத்தை நான் தொட வேண்டும். மாற்றம் இயல்பானது. மாற்றத்தை ஏற்க சிலர் மறுக்கிறார்கள் என்ற ஒரு கருத்தை அவர்கள் சொன்னார்கள். அது நமக்குத் தெளிவுபட வேண்டும். மாற்றம் தேவை என்று சொன்னால் எந்தவிதமான மாற்றம் தேவை. எந்த மாற்றம் தேவையற்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கணினி மாறுகிறது. அந்த மாற்றம் தேவை. அதே போல பங்குச் சந்தையில் புதிய தொழில் நுட்பங்கள் வருகின்றன. அந்த மாற்றம் தேவை. பழைய முறைகள் வேண்டாம். ஆனால் நம்மோடு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பேசப்படும் தமிழ் மொழி மாற வேண்டுமா? மொழியில் மாற்றம் வேண்டுமா? தமிழ் மொழி தமிங்கிலமாக மாற வேண்டுமா? தமிழ் பண்பாடு பாப் இசையாலும் பிரேக் டான்சு போன்றவற்றாலும் நொறுங்கிக் கொண்டிருக்கிறது திரையுலகில். அந்த மாற்றங்கள் தேவையா? ஐம்பது ஆண்டுகளுக்குள் இதன் முகம் மாறி முகவரி மாறி இந்த தேசிய இனம் தமிழீழ தேசிய இனமாகிப் போனால் அதற்குப் பிறகு ஒரு தமிழர் மாநாடு தேவை தானா? பயனுள்ளதாக இருக்குமா? என்றெல்லாம் நாம் எண்ணிப் பார்த்து தேவையானது எந்த மாற்றம் என்பதை உறுதியாக வரையறை செய்து கொள்ள வேண்டும்.

அந்த மாற்றத்தில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். மூளைவளம் மூலதனமாகிறது. இடையில் உழைப்பு சேர்ந்ததால் மூலவளம் மூலதனமாகிறது. இந்த நிலம் தமிழ்நாட்டு நிலம் மார்வாடி இங்கே வருகிறான், இங்கே வாங்குகிறான், இங்கேயே விற்கிறான். இங்கேயே தொழில் செய்கிறான். அது ஒரு உழைப்பு. நம்முடைய உழைப்பையே மூலதனமாக்கி அவன் பயனடைகிறான். நம் மண்ணை வாங்கி நம்மிடமே விற்கிறான். நம்முடய மண்ணை நமக்கே விற்கிறான். விற்கிறவன் நம்மவன் அல்ல. அதே போல தண்ணீர். நம்முடைய தண்ணீர் நம்முடைய மூலதனம். அந்த மூலதனம் நம்முடைய தண்ணீரை கொக்கோகோலாவாக மாற்றி நமக்கே விற்கிறான். நம்முடய குளிர் பானத்திற்கு இடமில்லை, தமிழனுடைய உழைப்பு ஒரு இடத்தில் கரும்பாகிப் போனது. இலங்கையில் தேயிலைத் தோட்டமாகிப் போனது. காலம் காலமாக தமிழ்த் திரைப்படம் தோன்றிய நாளிலிருந்து இன்றைய நாள் வரை ஈழத் தமிழன் அவனுக்கென்று ஒரு திரைப்பட உலகத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. அவன் பார்த்ததெல்லாம் தியாகராசபாகவதர் காலத்திலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம். ஆனால் அந்தத் திரைப்படத் துறை தமிழீழ மக்களிடமிருந்து வாங்கிய பணத்தை தன்னுடையதாக்கி இந்த மண்ணில் கொழுத்த திரைப்படத்துறை தமிழீழ மக்களுக்கு எதையும் தரவில்லை. அவன் கண்ணீர் சிந்திய போது தரவில்லை. அவன் செந்நீர் சிந்திய நேரத்தில் தரவில்லை. அந்தப் படங்களை எடுத்தவர்கள் யார்? அவர்கள் தமிழர்களா? அந்தத் துறை தமிழனிடம் இல்லை. அதனால் ஈழத் தமிழனின் கண்ணீர் அவர்களைத் தொடவில்லை. எண்ணிப் பாருங்கள். எங்கள் சொந்த உறவு அங்கே தேயிலைத் தோட்டத்திற்கு வந்தான். வெள்ளைக்காரன் காலத்தில் அவனுடைய வறுமை. அதனால் தோட்டத்திலே கூலியாக அமர்த்தப்பட்டான். என்னுடய உறவு என்னுடய குருதி. அந்த வெள்ளைக்காரன் போன பிறகு இன்று அந்த மண்ணில் கோடிகோடியாக தேயிலை ஒரு பெரிய செல்வம் - இலங்கையில். கோடிகோடியாக உழைத்துக் கொடுத்தான். நம்முடைய உறவு, நம்முடைய சொந்தம். இந்த மண்ணின் பிள்ளை. யாருக்குக் கொடுத்தான். இன்று தமிழனை அழித்துக் கொண்டிருக்கிற சிங்கள அரசுக்கு. சிங்களவன் அதே தமிழனைச் சாகடித்துப் புதைப்பதற்கு பயன்படுகிறது அந்த மண்ணின் வளம். பொருள் எப்படிப் போகிறது? ஈழ மண்ணில் தமிழன் கடலில் இறங்க முடியவில்லை. மீன்பிடி வளம் உள்ளது. ஆனால் கடலில் பிணங்களாகச் சுடப்பட்டு வீசப்படுகிறான். மீன்பிடித் தடை உள்ள. அந்த மண்ணில் உழவன் வயலுக்குப் போகமுடியவில்ல. அங்கே வயல் தீப்பற்றி எரிகிறது. அந்த மண்ணில் வணிக பொருளாதார நிலைகள் அனத்திலும் தமிழன் ஒடுக்கப்பட்டான். உங்களுக்குத் தெரியுமா? இலங்கத் தீவில் மூன்றில் ஒரு பகுதி தமிழீழம். ஆனால் சிங்களச் இலங்கையில் 800 தொழிற்சாலைகள். தமிழீழத்தில் மூன்றே மூன்று தொழிற்சாலைகள். அதில் இரண்டு தொழிற்சாலைகள் குண்டுவீசி அழிக்கப்பட்டுவிட்டன.

ஆக பொருளாதரத்துறையில் அனைத்துமாக நாங்கள் அங்கே நசுக்கப்பட்டோம். நாங்கள் ஒடுக்கப்பட்டோம். அதனுடய விளைவுகள். அந்த மண்ணிலே போராட்டமாக வெடித்தது. அந்த நேரத்தில் வெளிநாடுகளுக்கெல்லாம் ஈழத்திலிருந்து ஓடிப்போன ஏதிலிகள் சென்ற நாடுகள் அனைத்திலும் அவர்கள் பொருள் வளத்தைப் பெருக்கி வணிகத்தைப் பெருக்கி தொழிலைப் பெருக்கி, கோடிகோடியாகக் காசுகளைச் சேர்த்தார்கள். அதில் ஒரு உண்மையை நான் சொல்வேன். என்னுடய பிள்ளை ஆங்கிலம் படிக்க வேண்டாமா? வெளிநாடுகளுக்குப் போய் தொழில் பார்க்க வேண்டாமா? என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்களே, என்னுடய தமிழன் ஏதிலியாய் வெளிநாடு ஓடிப்போன நேரத்தில் இங்கிலாந்துக்குப் போனவன் தமிழீழத்தில் இங்கிலீசு படித்துவிட்டுப் போகவில்லை. பிரான்சுக்குப் போனவன் தமிழீழத்தில் பிரஞ்சு படித்துவிட்டுப் போகவில்லை. செர்மன் நாட்டுக்குப் போனவன் தமிழீழத்தில் செர்மன் மொழியைப் படித்துவிட்டுப் போகவில்லை. அவன் அந்தந்த நாடுகளுக்கு ஓடினான். தமிழோடு மட்டுமே ஓடினான். போன நாடுகளில் தேவைக்கேற்ப சூழலுக்கேற்ப அந்த நாடுகளின் மொழியைக் கற்றான். அப்படிக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை. கற்றான். வெளிநாடுகளுக்குப் போக வேண்டுமென்றால் ஆங்கிலம் படிக்க வேண்டுமென்று சொல்லுகிற முட்டாள்கள் திருந்த வேண்டும். (கைதட்டல்) வெளிநாட்டுக்கு ஓடினான் தமிழன். கோடிகோடியாகச் சேர்த்தான். வணிகத்தால் தொழிலால் பொருளீட்டினான். அந்தக் காசு தான் 18 விமானங்களச் சுட்டு வீழ்த்தியது. அந்த காசு தான் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம். யூத மக்கள் அடிமைகளாக உலகத்தின் நான்கு திசைகளிலும் அலைந்த நேரத்தில் கோல்டா மேயர் உலக நாடுகள் அனைத்திலும் சுற்றினார். வெளிநாடுகளுக்குச் சென்ற யூதர்கள் வணிகர்களாகத் தொழில் அதிபர்களாகக் கொழுத்தார்கள். பொருளீட்டினார்கள். அவர்களுடைய மொழியை எண்ணினார்கள். கோல்டா மேயர் அவர்களுடைய கையில் அவர்களுடைய பணம் சேர்ந்தது. இசுரேலினுடைய விடுதலையை உருவாக்குவதில் அந்தப் பணம் தான் உதவியது. அதை இந்த மாநாட்டில் ஏன் கூறுகிறேன் என்றால் இந்த மாநாட்டிற்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. உலகத் தமிழர் பேரமைப்பு ஒரு தேசிய இனத்திற்கு உரிய பேரெழுச்சி அலையாக எழுகின்ற நேரத்தில் அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டிய பெரிய பொறுப்பு தமிழ்நாட்டில் தமிழினத்தில் வாழ்கிற அனைத்து நிறுவனங்கள்- தொழிலதிபர்கள்-பொறுப்பாக இருக்கிற அனைவருக்கும் பெரிய பங்கு இருக்கிறது. மறந்து விடக்கூடாது. இந்த தேசிய இனத்தின் எழுச்சியில் இலக்கியவாதிகள், புலவர்கள், கலைஞர்கள், என்ற அளவில் அல்ல தொழிலதிபர்கள், வணிகர்கள், பொருளாதார வளர்ச்சியில் புதிய தொழில் நுட்பங்களைக் கையாள வேண்டும் என்று சொல்லுகின்ற நல்ல சிந்தனையாளர்கள் அனைவரும் சேர வேண்டும். அந்த சிந்தனை தனிப்பட்ட வளர்ச்சியாக அமையாமல் ஒரு தேசிய இனத்தின் வளர்ச்சியாக அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த மேடையில் ஒரு பணிவான கோரிக்கையை நான் உங்கள் முன் வைக்கிறேன். உலகத் தமிழர் பேரமைப்பின் ஒரு பகுதியாக, கிளையாக- தனித்தனி அமைப்பாக அல்ல-உலகில் உள்ள வணிகர்களிள், தமிழ் வணிகர்கள் அனவரும் இதனுடைய கிளை அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் இந்த உலகத் தமிழர் பேரமைப்பு இறங்க வேண்டும் என்ற என் பணிவான கருத்தை நான் வைக்கிறேன். சென்னையில் சென்று நடுவில் நின்று நான்கு பக்கங்களிலும் உங்கள் கண்களைச் சுழற்றினால் நீங்கள் தமிழ்நாட்டின் தலைநகரில் இருக்கிறீர்கள் என்ற எண்ணம் வராது. இங்கிலாந்தின் தலைநகரில் இருக்கிறீர்கள் என்ற எண்ணம் வரும். எங்கே பார்த்தாலும் ஆங்கில எழுத்துக்கள். பெயர்ப் பலகைகள். வைப்பவர்கள் யார்? வணிகர்கள். வணிகர்களில் எத்தனை பேர் மலையாளி? எத்தனை பேர் கன்னடத்தான்? எத்தனை பேர் தெலுங்கர்கள் என்றெல்லாம் நான் ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை.

இந்தியாவில் கூட பிற மாநிலங்களில் போய்ப் பார்த்தாலும் இந்த அளவு ஆங்கில எழுத்துகளை நீங்கள் பார்க்க முடியாது. வணிகம் செய்யும் போது தமிழைச் சொல்லி வணிகம் நடத்துகிறான். நாளேட்டுக்கு விளம்பரம் செய்கிறான். தமிழில் நம்பர் ஒன் நாளிதழ் என்று சொல்கிறான். அட தமிழில் எப்படி நம்பர் ஒன் நாளிதழாக இருக்க முடியும்? தமிழில் ஒன்று வரும், இரண்டு வரும், மூன்று வரும், நம்பர் ஒன் வருமா? அயோக்கியத்தனம் செய்கிறான். பச்சை அயோக்கியத்தனம் செய்கிறார்கள். அவர்களிடம் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். நம் பணத்தைக் கொண்டு உருவாக்கும் திரைப்படத்தில் நம் பண்பாட்டைச் சீரழிக்க-புதிதாக வீர உணர்ச்சியை ஒடுக்க-போராட்ட உணர்ச்சியைத் தடுக்க பெண், காதல், காமம், சேர்க்கை, புணர்ச்சி என்று போகிறது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த மொழி அழியப் போகிற 34 மொழிகளில் ஒன்று என்று ஐக்கிய நாட்டு அமைப்பின் அமைப்பு ஒன்று கூறியது. இல்லை என்று உறுதிப்படுத்திக் காட்ட நாம் தமிழ் மொழி காப்போம், தமிழ் தேசிய இனம் காப்போம். என்ற அந்த உறுதியோடு நாம் விரும்புகிற மாற்றம் நம் வளர்ச்சிக்கான திட்டமிடுதல் குறித்த மாற்றமாக இருக்க வேண்டுமே தவிர நம்மையே மாற்றிக் கொள்வதாக இருக்கக் கூடாது. நமக்குப் பக்கத்தில் களத்தில் வீறு கொண்டு போராடுகிற அந்த இளஞன் களத்தில் நின்று போராடுகிறான். ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். வரலாற்றில் ஒரு படை அணியில் முதன் முதலில் கழுத்தில் நஞ்சைக் கட்டிப் போராடிய இயக்கம் -தொடர்ந்து போராடுகிற இயக்கம். அந்த விடுதலை இயக்கம் தான். (பலத்த கர

வொலி).

இதுவரை எந்த இயக்கமும் கழுத்தில் நஞ்சு கட்டவில்லை. தெரிந்து கொள்ளுங்கள் பல விடுதலை இயக்கங்கள் இருக்கின்றன. முதல் முதல் வான்படை கொண்டு எதிரியைக் களம் கண்ட இயக்கம் எங்கள் இயக்கம் தான். இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். இதுவரை உலக விடுதலை இயக்க வரலாற்றில் ஒருவர் தற்கொலைப் போராளியாகப் போயிருக்கிறான். இருவர் போயிருக்கிறார்கள். மதரீதியான போராட்டமாக இருந்தாலும் அந்த பெரிய வணிகவளாகத்தைத் தகர்க்க ஏழு பேர் வரைதான் போனார்கள். இதுவரை நடைபெற்ற விடுதலைப் போராட்ட இயக்க வரலாற்றில் 21 புலிப்படைப் போராளிகள் களத்தில் இறங்கி தங்கள் உயிர்களைப் பலி தந்தது அந்தக் களம் தான். (பலத்த

கரவொலி).

அந்தக் களத்தில் அந்த உயிர்க் கொடையாளர்கள் எவ்வளவு வெகுமதியானவர்கள் என்பது எனக்குத் தெரியும் . அந்த உயிர்க் கொடையாளர்களின் உடல்களைத் தூக்கி ஆடைகளைக் களைந்தெறிந்து விட்டு குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறான். எகிப்து நாட்டில் செத்தவனுடைய பிணத்திற்கு இந்த நாட்டு துணி அனுப்பினான். எகிப்து நாட்டில் மம்மியாகிப் போன அந்த பழைய இறந்த மன்னர்களுடைய உடல் நிர்வாணமாக இருக்கக் கூடாது என்று போர்த்துவதற்கு தமிழ்நாட்டான்-நம்முடைய தமிழன் துணி அனுப்பினான். நம்முடைய தமிழன் பிணமாக விழுகிறான். அவனுடய உடையைக் களைந்விட்டு என்னுடய இனிய வெகுமதியான உயிர்களைப் பறித்த கொடியவர்கள் - அவர்களைக் குப்பைத் தொட்டிகளிலே போடுகிறார்கள். அந்த களத்தில் இறந்த புலிகளின்-வீரர்களின் மானத்தை முடிவு செய்வது உடையல்ல அவர்கள் செய்த கொடை என்பதை இந்தச் சின்னத்தனமானவர்கள் புரிந்கொள்ள மாட்டார்கள்.(பலத்த கரவொலி) அவர்களின் அருகில் நிற்கும் எந்தத் தகுதியும் இவர்களுக்குக் கிடையாது. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லி விடைபெற விரும்புகிறேன். உலகெங்கும் வாழ்கிற தமிழர்களின் நினைவாக நம்மையெல்லாம் மேலும் ஊக்கம் தந்து இந்த தமிழ் இனத்தை தலைநிமிர்ந்து நிற்கச் செய்வோம். தமிழ்த் தேசிய இனத்தை தலை நிமிர்த்தி வைக்கப்போகிற மிகப் பெரிய வெற்றியாக இந்த மண்ணின் வெற்றி அமையும். நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளலாம். மிகமிக விரவில் தமிழீழம் மலரும். தமிழீழம் மலரும்!

-தென் செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழரை தலைநிமிர வைக்கும் வெற்றி விரைவில்"

திருப்பூர் மாநாட்டில் "உலகப் பெருந் தமிழர்" காசி ஆனந்தன் முழக்கம்

-தென் செய்தி

நீங்க இப்படி பேசிக்கொண்டே இருங்க. அங்கே சிங்கள இராணுவம் பல்ஸ்மா முறையை பற்றி யோசிக்கிறாங்க.(அதே போல் இருப்பவை பற்றி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.