Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆதர் சி.கிளார்க்கின் ஆசையை நிறைவேற்றுவேற்றுவேன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆதர் சி.கிளார்க்கின் ஆசையை நிறைவேற்றுவேற்றுவேன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

[Monday December 17 2007 10:20:24 AM GMT] [யாழினி]

தாய் நாட்டின் பிரபல விஞ்ஞானியான சேர் ஆதர் சி. கிளார்க்கின் ஆசையை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். தாய் நாட்டின் பிரபல விஞ்ஞானியான சேர் ஆதர் சி. கிளார்க்கின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விசேட பாராட்டு விழா மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

சேர் ஆதர் சி. கிளார்க்கின் பிரதான மூன்று கனவுகள் குறித்து அவர் தெரிவித்திருந்தார். இலங்கையில் நிரந்தர சமாதானம் தோன்ற வேண்டுமென்பது அவற்றில் ஒன்று. எனது பதவிக்காலத்திற்குள் நிரந்தர சமாதானத்தைத் தோற்றுவிப்பேன். இதற்காக என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சேர் ஆதர் சி. கிளார்க் உலகப் புகழ்பெற்ற விண்வெளி தொடர்பான எழுத்தாளராகவும், விண்வெளி பயணங்கள் தொடர்பான தகவல்களை ஜனரஞ்சகப்படுத்துபவராகவும் விளங்குகிறார். 1960 ஆம் ஆண்டுகளில் இவர் தெரிவித்த கருத்துக்களும் புதுமையான விஞ்ஞான கருத்துக்களும் இன்று நிஜமாக்கப்பட்டுள்ளன.

சேர் ஆதர் சி. கிளார்க் 1956 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வாழ்ந்து வருகிறார். அரை நூற்றாண்டு காலமாக இங்கு வாழ்ந்து வரும் இவர், இலங்கையில் கல்வி அபிவிருத்தி, உயர் கல்வி வளர்ச்சி என்பவற்றுக்கு பல வழிகளிலும் உதவியளித்துள்ளார். 1979 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையில் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடமையாற்றிய இவர், தனது தேகாரோக்கியமற்ற நிலை காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

http://tamilwin.net/article.php?artiId=576...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.