Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. மீதான சேறு பூசல்கள் வேண்டாத விளைவுகளைத் தரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-12-18

ஐ.நா. மீதான சேறு பூசல்கள் வேண்டாத விளைவுகளைத் தரும்

இலங்கையின் தற்போதைய அரச நிர்வாகம் பல்வேறு சாதனைகளை வரிசையாகப் படைத்து வருகின்றது.

ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கான மிக மோசமான ஆபத்தான இடம் இலங்கை என்ற பெயரை இங்கு விஜயம் செய்து, விடயங்களை நேரில் கண்டறிந்த சர்வதேச ஊடக அமைப்புகளின் குழு இலங்கைக்குச் சூட்டியது.

அதேபோன்று, தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணி யாற்றுவதற்கு உலகிலேயே ஆபத்தான இடம் இலங்கை என்ற உண்மையை கடந்த ஓகஸ்ட்டில் இலங்கைக்கு விஜயம் செய்து இங்குள்ள அவல நிலையைப் பார்த்தறிந்த மூத்த ஐ.நா. அதி காரி ஒருவர் பகிரங்கமாக வெளியிட்டார்.

அப்படிக் கருத்து வெளியிட்டமைக்காக, மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி யான ஜோன் ஹோம்ஸ், இலங்கை அரசின் மூத்த அமைச்சர் ஒருவரால் "பயங்கரவாதி' என்றும் "புலிகளிடம் பணம் வாங்கி யுள்ளார்' என்றும் பட்டம் சூட்டப்பட்டார்.

இப்போது, அந்த ஐ.நா. உயரதிகாரி வெளியிட்ட அதே கருத்தை உலகெங்கும் பணியாற்றும் தமது 13 ஆயிரம் ஐ.நா. பணியாளர்களிடமும் ஐ.நாவின் சர்வதேச பொதுச் சேவைகள், பாதுகாப்பு மற்றும் சுயாதீன பணியாளர் அமைப்பு முன்னெச் சரிக்கைத் தகவலாகத் தெரிவிக்கவுள்ளது எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

உலகிலேயே தொண்டுப் பணியாளர்களுக்கு மிக ஆபத் தான பிரதேசமாக இலங்கை மாறியிருப்பதால், அங்கு பணியாற் றச் செல்வதைத் தவிர்க்குமாறு தனது 13 ஆயிரம் பணியாளர்களுக்கும் எச்சரிக்கை ஆலோசனையாக அந்த அமைப்பு தெரி விக்க இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.

சர்வதேசத்தை குறிப்பாக சர்வதேச தொண்டு அமைப்புகளை கையாளத் தெரியாத அரசின் பொறுப்பற்ற போக்கால் வந்த வினையன்றி இது வேறில்லை.

நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கும், நாட்டின் மக்கள் ஆதரவுக்கும் அல்லாடும் அரசுத் தலைமை, அதனால் தென்னிலங்கையில் பௌத்த சிங்கள மேலாதிக்கப் போக்குடைய பேரினவாதிகளின் காலில் வீழ்ந்து கிடக்கிறது. அவர்களின் இசைக்கு ஏற்ப தனது ஆட்சி நடனத்தை ஆடுகிறது.

சர்வதேசம் என்றாலே அந்தப் பேரினவாத சக்திகளுக்குப் பாகற்காய். அதனால் சர்வதேசத்தை அந்தச் சக்திகள் தூஷிக்க கேவலப்படுத்த அந்தப் பாதையில் அரசும் பயணித்துத் தனக் கும், இலங்கைத் தீவுக்கும் தலையில் மண் அள்ளிக் கொட்டிக் கொள்கிறது.

இப்போது உலகெங்கும் பணியாற்றும் ஐ.நா. பணியாளர் களை இலங்கைக்கு எதிராக உசுப்பேற்றிவிடும் அளவுக்கு இந் தச் சக்திகளின் வழிகாட்டல்கள் இந்த அரசை வழிப்படுத்தியி ருக்கின்றன.

ஐ.நா. அமைப்புகள் மீதும், அவற்றின் பிரதிநிதிகள் மீதும், பணியாளர்கள் மீதும் பொறுப்பின்றி, கேவலமாக, எள்ளி நகையாடும் விதத்தில், அரசுத் தரப்பிலிருந்தும் தென்னிலங்கையிலிருந்தும் சேறாக அள்ளி வீசப்படும் குற்றச்சாட்டுகளும், அதற்கு வாய்ப்பளித்துப் பார்த்திருக்கும் அரசுத் தலைமையின் விட்டேத்தியான போக்கும் ஐ.நா. பணியாளர்களை சீற்றமுற்றுக் கிளர்ந்தெழ வைத்திருக்கின்றன என்பதே உண்மை.

இலங்கையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டமையை அனைத்துலக சமூக மும், அனைத்து ஐ.நா. அமைப்புகளும் கண்டித்திருந்தன. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூட இந்தப் படுகொலை களைக் கண்டித்தமையுடன் இவை மோசமான படுகொலைகள் எனவும், இலங்கையில் வாழும் மக்கள் மற்றும் அங்கு பணியாற் றும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தொடர்பாகத் தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்தக் கொலைகளைக் கண்டித்து அமைதியாக நடந்த பேரணியில் ஐ.நாவின் "யுனிசெவ்' பணியாளர்கள் பங்குபற்றியமைக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசு வற்புறுத்தியிருப்பது என்ன நியாயம் என ஐ.நா. பணியாளர்கள் சீற்றத்துடன் கேள்வி எழுப்பி யிருக்கின்றனர்.

ஐ.நாவையும் அதன் பணியாளர்களையும் குறிவைத்துத் தாக்குவதிலேயே தென்னிலங்கை மும்முரமாக இருக்கிறது.

இதை விடுத்து செஞ்சிலுவைப் பணியாளர்கள் இருவர் மற்றும் 2006 இல் மூதூரில் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டமை குறித்து புலன் விசாரணை செய்து, அக்குற்றங்களைப் புரிந்தவர்களை சட்டத் தின் நீதியின் முன் நிறுத்துவதில் தென்னிலங்கை தனது கவ னத்தைத் திருப்பவேண்டும் என ஐ.நா. பணியாளர் அமைப்பு சுட்டிக்காட்டியிருப்பதும் நியாயமானதே.

இப்படி சர்வதேசப் பணியாளர்கள், இலங்கையின் பொறுப்பற்ற விட்டேத்தியான போக்குக் குறித்துச் சீறத் தொடங்கி யுள்ள பின்னணியில் அதை சமாளிப்பதற்கும் தென்னிலங் கையில் சில எத்தனங்கள் காட்டப்படுகின்றன.

இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்பான ஆலோசனைக்குழு கடந்த வாரம் கொழும்பில் இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நடத்திய தனது மாதாந்தக் கூட்டத்தில் இலங்கையில் ஐ.நா. செயற்பாட்டின் மீது முழு நம்பிக்கையும், ஆதரவும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது.

சர்வதேச அமைப்புகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முடிவுறும் வரை சம் பந்தப்பட்ட தரப்புகள் பகிரங்க அறிக்கை எதையும் விடுக்கக் கூடாது எனவும் அங்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.