Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலி விமானங்களுக்குப் பயந்து கூட்டு விமானப்படை ஒத்திகை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-12-22

புலி விமானங்களுக்குப் பயந்து கூட்டு விமானப்படை ஒத்திகை?

விடுதலைப் புலிகளின் விமானப் படையினால் ஏற்பட்டுள்ள வான் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் இலங்கையுடன் சேர்ந்து பல்வேறு கூட்டு விமானப்படை ஒத்திகையை மேற்கொள்ள இந்தியா தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயசிங் இவ்வார முற்பகுதியில் கொழும்பில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்த சமயம் விடுத்த அழைப்பை அடுத்தே இந்தக் கூட்டு விமானப்படை ஒத்திகைக்கு இணக்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சினதும் உள்துறை அமைச்சினதும் செயலாளர்கள் உள்ளிட்ட எட்டு உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று இலங்கைக்கு வந்து தங்கி நின்றது. அக்குழு இலங்கையில் பல்வேறு தரப்பினருடனும் உயர்மட்டத்தில் பேச்சுகளை நடத்தியிருக்கின்றது.

அத்தகைய பேச்சுகளுக்கு நடுவேயே இத்தகைய கூட்டு விமானப்படை ஒத்திகை குறித்தும் பேசப்படுகின்றது எனத் தெரியவருகின்றது.

இந்தக் கூட்டு விமானப்படை ஒத்திகைக்கான முன்யோசனை இந்தியத் தரப்பினால் பிரேரிக்கப்பட்டதாகவும்

கொள்கையளவில்இந்த யோசனைக்கு ஒப்புதல் தெரிவித்த இலங்கை அதிகாரிகள் எது எப்படியிருந்தாலும் இலங்கையின் உயர் பாதுகாப்புக் கவுன்ஸிலின் கூட்டத்தில் இந்த விடயத்தை விரிவாக ஆராய்ந்து, அங்கு ஒரு முடிவு எட்டப்பட்ட பின்னரே இவ்விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கமுடியும் எனத் தெரிவித்தனர் எனவும் செய்திகள் கூறுகின்றன.

ஆக, கூட்டு விமானப்படை ஒத்திகைக்கான யோசனை இந்தியத் தரப்பிடமிருந்து வந்துள்ளது. சாதகமாக அதைப் பரிசீலிக்க இலங்கை கோடிகாட்டியிருக்கிறது. இவ்வளவுதான் விடயம்.

புலிகளின் விமானப்பலத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டு விமானப்படை ஒத்திகை முயற்சி என்ற சாரப்பட இதற்குக் கொழும்பு ஊடகங்கள் சாயம் பூசுவதைப் பார்க்கும்போது மிக வேடிக்கையாக இருக்கின்றது.

புலிகளின் விமானப்படை வலிமை குறித்து இந்தியா கவலையும், சிரத்தையும், அச்சமும் கொண்டிருப்பது போலவும், அதன் காரணமாக முற்கூட்டயே பாதுகாப்புக்காக இலங்கையுடன் கூட்டு ஒத்திகை நடத்தித் திட்டங்களையும் வியூகங்களையும் வகுக்க இந்தியா துடிப்பது, போலவும் இந்தியாவின் இத்திட்டம் குறித்து பரிசீலித்துத்தான் இலங்கை முடிவு கூறும் என்பது போலவும் இந்தச் செய்திகள் வெளியிடும் கதைப் போக்கு அமைந்திருக்கின்றது.

அதுவல்ல உண்மை விவகாரம்.

புலிகளின் விமானங்களால் எழுந்துள்ள அச்சுறுத்தல்களை அடுத்துத் தனது வான் வலிமையை அதிகரிக்கத் துடியாய்த் துடிக்கும் இலங்கை அதற்காக "மிக் 29' ரக குண்டுவீச்சு விமானங்களைத் தருவிக்கக் கங்கணம் கட்டி நிற்கிறது. அந்த விமானங்களை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடமிருந்து குறைந்த பட்சம் குத்தகைக்குப் பெறவும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த பரகசியம்தான்.

இந்தியாவிடம் இருக்கும் ஆக வேகம் கூடிய தாக்குதல் குண்டுவீச்சு விமானங்கள் கூட ஏறத்தாழ இத்தகைய ரகத்தை ஒத்தவைதான்.

எனவே, புலிகளின் விமானப்படை அச்சுறுத்தல் என்ற பூச்சாண்டியைக் காட்டி இத்தகைய அதிவேகத் தாக்குதல் விமானங்களை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் குத்தகைக்குப் பெற்று, அந்த நாட்டு விமானிகளுடன் கொண்டுவந்து, இந்தியாவின் தென்மூலையில் பலாலிப் படைத்தளத்தில் இலங்கை நிறுத்துமானால் இந்தியாவின் கதி என்னவாகும்?

இந்தியாவின் வட மேற்கிலும், வட கிழக்கிலும் இருக்கும் அயல் தேச முரண்சக்திகளைத் தெற்கிலும் அதுவும் இந்தியக் கடலோரத்தில் இருந்து சுமார் இருபது மைல் தொலைவுக்குள் இந்தியாவின் கொல்லைக்குள் கொண்டுவந்து நிறுத்த அனுமதித்தால் அதன் விளைவு எவ்வாறானதாக இருக்கும்?

எனவே இத்தகைய அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்கும் முற்கூட்டிய முன்னெச்சரிக்கையான நடவடிக்கையாகவே இலங்கை விமானப்படையுடன், இந்திய விமானப்படை கூட்டு ஒத்திகை என்ற கயிறைவிட முனைகிறது இந்தியா. அதற்குப் புலிகளின் விமானப்படையால் எழுந்துள்ள அச்சுறுத்தல் என்ற பூச்சாண்டியைக் காரணம் காட்டுவது மிக வேடிக்கையானது.

"மிக் 29' போன்ற அதிவேகத் தாக்குதல் விமானங்கள் கண்மூடி, கண் திறப்பதற்குள் பல டசின் மைல்கள் தாண்டி குண்டுவீச்சை நடத்திவிட்டுத் திரும்பக்கூடியவை.

அத்தகைய விமானங்கள் தனது தென்கோடி மூலையில் இருப்பது தனக்கும் அச்சுறுத்தல் எனக் கருதும் இந்தியா, அத்தகைய விமானங்களை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் பங்களிப்புடன் இலங்கை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கச் செய்வதற்காக தடுப்பதற்காக தன்னுடைய தலையை இதற்குள் நீட்டப் பார்க்கின்றது. அத்தகைய எத்தனத்தின் ஓர் அங்கமே இத்தகைய கூட்டு விமானபப்படைப்பயிற்சி நடவடிக்கை யோசனையுமாகும்.

"புலிகளின் விமானப்படை அச்சுறுத்தல்' என்ற காரணம் அதற்கான பாசாங்கு. அவ்வளவுதான்.

http://www.uthayan.com/

இலங்கையுடன் இணைந்து கூட்டு வான் ரோந்தில் ஈடுபட இந்தியா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை சென்ற இந்திய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் குழு அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் விவாதித்துள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் தலைமையிலான உயர் மட்டக் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்தது. இந்தக் குழுவினர் இலங்கை முப்படைத் தளபதிகளையும், பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது விடுதலைப் புலிகளுடனான போர் குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கை அரசுக்கு என்ன மாதிரியான உதவிகள் வேண்டும் என்றும் அப்போது கேட்கப்பட்டது. மேலும் விடுதலைப் புலிகளின் வான் பலம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக, இலங்கையுடன் இணைந்து கூட்டு வான் ரோந்தில் ஈடுபட இந்தியா முன்வந்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலை முறியடிப்பதற்காக இந்த ஒத்துழைப்பைத் தர இந்தியா முன்வந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்த இந்திய குழு புதன்கிழமை தனது பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பியது.

இலங்கை அரசு ஏற்கனவே, இந்தியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து ரேடார் சாதனங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளிடமிருந்து விமான பாதுகாப்பு உதவிகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு வந்த இந்தியக் குழுவிடம், இந்தியாவுடன் இணைந்து வான் ரோந்தில் ஈடுபட இலங்கை விருப்பம் தெரிவித்தது. இதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து இலங்கை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இந்த முடிவு வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தியக் குழுவின் இலங்கை பயணத்தின்போது விடுதலைப் புலிகளின் விமான பலம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

திருவனந்தபுரத்திலிருந்து ..

இலங்கையுடனான கூட்டு வான் ரோந்து நடவடிக்கைகளை, திருவனந்தபுரம் விமானப்படை தளத்திலிருந்து இந்தியா மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. மேலும் தென் பிராந்தியத்தில் உள்ள விமானப் படை தளங்களையும் இந்தியா ஆயத்த நிலையில் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதுதவிர ரேடார் கண்காணிப்பையும் நவீனப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வான் எல்லைக்குள் விடுதலைப் புலிகளின் விமானங்கள் ஊடுறுவாமல் தடுக்க முடியும் என இந்தியா கருதுகிறது.

சமீபத்தில் ரஷியாவைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குழுவும் இலங்கை வந்தது. ரஷியாவிடமிருந்தும் இலங்கை பல்வேறு ராணுவ உதவிகளைப் பெறத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவரின் கோப்ரசன் நல்லாதான் வேலை செய்து

வலிக்காமல் வாழ்க்கையில்லை

வாழ்க்கையே வலியாகிவிட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(

பார்ப்பனிய அதிகார வர்க்கத்தின் உச்ச முயற்சிகள் அரங்கேறுகின்றன. திரைக்குப் பின்னாலிருந்தவர்கள் திரை கிழிந்ததால் அரங்கத்தில் தோன்றும் நிலை.

முன்னர் கடைப்படைக் கூட்டு ரோந்து, இப்ப ஆகாயப்படைக் கூட்டு ரோந்து!! தங்களது விமானங்களைத் (சிறிலங்கா - இந்தியா: விமானங்களை வீழ்த்தும் சுடுகருவிகளைத் தானே கொடுத்துவிட்டு தான் பறப்பதற்குப் பயம்கொள்கிறது.) தாங்களே சுட்டு வீழ்த்திவிடாமல் இருக்கப் படாதபாடுபடுகிறார்கள்.

தமிழர்ககளின் (பார்ப்பனியப் பாசையில் கூறினால் சிறிலங்காவிலுள்ள இந்துக்களை அழிக்க சிறிலங்கா பெளத்தத்துடன் இணைந்து செயற்படுகிறது இந்திய இந்துத்துவ அதிகாரவர்க்கம்) அழிவுபற்றி இவர்களுக்கு ஏது கவலை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.