Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''தமிழனுக்காக முதல்வர் பேசவே மாட்டார்!''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ விறுவிறு

''தமிழனுக்காக முதல்வர் பேசவே மாட்டார்!''

இலங்கை அரசுக்கு ராணுவத் தொழில்நுட்பங்களை வழங்க இந்திய அரசின் உயர்நிலைக் குழு ஒன்று கொழும்பு சென்றிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக தலைவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ காரசாரமாக எழுதிய கடிதத்தின் வரிகள் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய உரை ஆற்றப்போகும் வைகோ, புலிகள் விஷயத்தைக் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உளவுத்துறையின் பல்ஸை எகிற வைத்திருக்கிறது. நெல்லையில் இருந்த வைகோவிடம் அவரது கடிதம் தொடர்பாகவும், டெல்லி விசிட் சம்பந்தமாகவும் சில கேள்விகளை முன் வைத்தோம்.

''பிரதமருக்கு நீங்கள் எழுதியிருக்கும் கடிதத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?''

''இலங்கைத் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக இதுவரை இருபது கடிதங்களை

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியிருக்கிறேன். சில தடவைகள் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். என் கடிதங்களும், சந்திப்பும் ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகத்தான் இருந்தது.

இம்முறை, இலங்கைத் தீவில் தமிழர்களை இனப்படுகொலை செய்துவரும் இலங்கை அரசாங்கத்தின் ராணுவத்துக்கு உதவிட இந்திய ராணுவ நிபுணர்களை மத்திய அரசு அனுப்பியிருப்பதாக வரும் தகவல்கள் பதற வைக்கின்றன. 'ஆரம்பம் முதலே இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்' என்பதை சில உதாரணங்களோடு கடிதத்தில் பிரதமருக்குச் சொல்லியிருக்கிறேன். அதில் ஒரு உதாரணம்... மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றவுடன் இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அவரை நெருக்கினார்கள். அப்போது பிரதமரை நேரில் சந்தித்தேன். ஏற்கெனவே 87-ம் வருடம் இந்தியாவும் இலங்கையும் போட்டுக்கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையின் கொடூர முகத்தை அவருக்கு விளக்கினேன். எனது சந்திப்புக்குப் பிறகு, அதிகாரிகள் சொன்ன ஒப்பந்தத்துக்கு பிரதமர் சம்மதிக்கவில்லை.

ஆனால், அப்போது ஒப்பந்தம் போடப்படவில்லையே தவிர, இலங்கை ராணுவத்துக்கு மறைமுகமாக அத்தனை உதவிகளையும் இந்தியா செய்து வந்தது. அதன் அடுத்தகட்டம்தான் இப்போது இலங்கைகு இந்திய ராணுவ உயர்மட்டக் குழு சென்றிருப்பது. 'இலங்கை ராணுவத்துக்கு துப்பு கொடுப்பதையும் உதவி செய்வதையும் இந்தியா நிறுத்திக் கொள்ளாவிட்டால் காலப்போக்கில் அது தமிழர்களின் நெஞ்சங்களில் வெறுப்பையும், வேதனையையும், கோபத்தையும் விதைக்கின்ற செயலாகவே அமையும். இலங்கைத் தீவில் கொல்லப்படுகின்ற ஒவ்வொரு தமிழனின் உயிருக்கும் இந்தியா பொறுப்பு ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்' என்று கடுமையாகவே என் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.''

''டெல்லி தமிழ்ச்சங்கத்தில் நீங்கள் கலந்து கொள்ளும் இலக்கிய விழாவில்கூட இந்திய அரசைக் கண்டிக்கும் பேச்சு இடம்பெறும் என்று செய்திகள் பரவி இருக்கிறதே?''

''இலக்கிய விழாவில் நிச்சயமாக அரசை விமர்சித்தோ, இலங்கைத் தமிழர்களைப் பற்றியோ பேச மாட்டேன். நீண்ட காலத்துக்குப் பிறகு யமுனை நதிக்கரையில் இலக்கியம் பேசப் பேசப்போகும் நான் எடுத்துள்ள தலைப்பு 'பொன்னியின் செல்வன்' என்பதுதான்.''

''டெல்லி சென்றிருந்த தமிழக முதல்வர், இலங்கை அரசுக்கு இந்தியா செய்யும் ராணுவ உதவிகளை நிறுத்தச் சொல்லி பிரதமரிடம் கோரிக்கை வைத்தாராமே?''

''எழுதித் தருகிறேன்... அவர் நிச்சயம் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பிரதமரிடம் வாய் திறந்திருக்க மாட்டார். ஈழத் தமிழனைப் பற்றி முதலமைச்சர் பேச வேண்டாம், குறைந்தபட்சம் தமிழ்நாட்டு உரிமைகளைப் பற்றியாவது பேசலாமே? முல்லை பெரியாறு விவகாரத்தில் நம் உரிமையை இழந்து கொண்டிருக்கிறோம். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 'இனி முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தையே இல்லை' என்று வசனம் பேசினார். ஆனால், இப்போது என்ன நடக்கிறது? பிரதமர் சொன்னார் என்றவுடன் பழசையெல்லாம் மறந்துவிட்டு, பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறார். இப்படிப்பட்டவரா ஈழத் தமிழனுக்காகப் பேசப் போகிறார்?''

''தமிழகத்தில் உரத்தட்டுப்பாடே இல்லை என்று மாநில அரசு சொல்கிறது. ஆனால், நீங்கள் முழுமூச்சாக அதற்கான போராட்டங்களில் ஈடுபடுகிறீர்கள். வெறும் அரசியலுக்காக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறீர்களா?''

''தமிழகத்தில் உரத்தட்டுப்பாடே இல்லை என்று சொல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும்... தைரியம் இருந்தால் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் அதைச் சொல்லட்டும், பார்க்கலாம். நெல்லையில் உரத்தட்டுப்பாட்டை எதிர்த்து நான் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அதே ஏரியாவில் பிரபலமான உர வியாபாரியாக இருந்து அண்மையில் இறந்து போன முகம்மது சாலியின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்தப் போனேன். உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் தனது கடைசி காலத்தில் ரொம்பவே மனம் வெதும்பியிருக்கிறார் சாலி. அதன் தொடர்ச்சியே அவருடைய மரணம் நிகழ்ந்தது என்று அவர் மகன் சொன்னபோது இந்த அரசாங்கத்தின் அலட்சியத்தை நினைத்து வேதனைப்பட்டேன்.

தமிழகத்தில் இருக்கும் பிரபலமான உரத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அரசாங்கம் கொடுக்கவேண்டிய மானியத் தொகை கைக்கு வந்ததும், அந்த நிறுவனம் அதை தங்களது நிதி நெருக்கடிகளுக்கு செலவிட்டுக் கொண்டது. இதை அரசாங்கம் ஏன் தட்டிக் கேட்கவில்லை? இதுபோன்ற பல காரணங்களினாலும், அரசாங்கத்தின் செயலற்ற தன்மையாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது விவசாயிகள்தான். பருவத்தே பயிர் செய் என்பார்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் உரம் கிடைக்கவில்லையென்றால் விவசாயப் பருவம் போய்விடும். அதன்பிறகு விவசாயி என்ன செய்வான், எந்த வேலைக்குப் போவான்?''

http://www.vikatan.com/jv/2007/dec/26122007/jv0502.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.