Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை தோல்வியடையச் செய்யும் அதேவேளை அரசியல் தீர்வைக் காண்பதே அரசின் நோக்கம் நேபாள பிரதமருடனான சந்திப்பில் அமைச்சர் நிமால் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை தோல்வியடையச் செய்யும் அதேவேளை அரசியல் தீர்வைக் காண்பதே அரசின் நோக்கம் நேபாள பிரதமருடனான சந்திப்பில் அமைச்சர் நிமால் தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு

nimalhp1.gif

விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோல்வியடையச் செய்யும் அதேநேரம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண வேண்டுமென்ற செயற்பாட்டையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இது எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நேபாளத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அந்நாட்டு பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் அழை ப்பையேற்று

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேபாளத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நேபாள பிரதமரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது: எமது நாட்டின் வடக்கு கிழக்கு பிரச்சினையை தீர்ப்பதற்கு யுத்தமே ஒரே வழியென்ற நம்பிக்கையின்மையை நாம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதேவேளை புலிகளை யுத்தரீதியாக தோல்வியடைச் செய்ய வேண்டும். இதன்போது அரசியல் தீர்வையும் முன்னெடுக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைத்து புலிகளுக்கு தொடர்ந்து அழைப்புக்களை விடுத்தபோதும் பாதுகாப்பு படையினர் மற்றும் சிவிலியன்கள் மீது புலிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினார்கள். எனவே நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் பதில் தாக்குதல்களை நடத்த வேண்டிய நிலையேற்பட்டது.

அரசு படையினரின் பதில் தாக்குதல்களால் புலிகள் பலவீனமடைந்துள்ளதோடு கிழக்கு மாகாணம் படையினர் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டின் பொருளாதாரத்தை, சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பயங்கரவாதிகள் தடை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. நேபாள மாவோயிஸ்ட் தலைவர் அமைச்சர் சில்வா சந்திக்கவுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.