Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சுடர் ஒளி' க்கு மகேஸ்வரன் கூறியவற்றை நிரூபித்துக் காட்டியுள்ளது மஹிந்த அரசு - ஐ.தே.க

Featured Replies

'படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் எம்.பி. கடந்த வாரம் யாழ் செல்வதற்கு முன் 'சுடர் ஒளி' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியவற்றை இந்த அரசு அப்படியே நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டது. தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் இருக்கின்றன, போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன் கூட்டியே மகேஸ்வரன் பல முறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதனை அரசு உதாசீனப்படுத்தி அவருடைய உயிரையே பறித்துவிட்டது.' என்று அரசின் மீது குற்றம் சுமத்துகிறார் ஐ.தே..கட்சியின் ஊடகப் பேச்சாளரான நா.உ. கயந்த கருணாதிலக்க.

நேற்றுக்காலை எதிர்க்ட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலே இதனை அவர் தெரிவித்ததார்.

கடந்த 22ம் திகதி 'சுடர்ஒளி' பத்திரிகையில் வெளியான செய்தியை (சிங்கள மொழி பெயர்ப்பை) கயந்த கருணாதிலக்க ஊடகவியலாளர்களுக்கு வாசித்துக் காட்டினார். அதில் மகேஸ்வரன் பின்வருமாறு கூறியிருந்தார்.

'ராஜப்ஷ்சே அரசு வரவு செலவுத் திட்டத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் எதிராக வாக்களித்த சிறுபான்மை இன உறுப்பினாகளைத் தேடித் தேடிப் பழிவாங்க ஆரம்பித்து விட்டது'.

'ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.

ஆனால், இலங்கை அரசு என் செய்கின்றது? தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அப்பாவித் தமிழ் மக்களை விரட்டி விரட்டி வகை தொகையின்றிக் கைது செய்து சிறையில் அடைக்கின்றது. அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிறுபான்மை அரசியல் வாதிகளைத் தேடித் தேடிப் பழிவாங்குகின்றது."

'நாம் மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர்கள், எம்மை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். எங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் வேண்டும் என நாம் கேட்க வில்லை. எமக்குரிய பாதுகாப்பை வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்."

'மஹிந்த அரசியல் எதிரிகளைப் பழிவாங்க ஆரம்பித்துவிட்டார். எமக்கு ஏற்படும் விபரீதங்களுக்கு மஹிந்தவே பொறுப்பேற்க வேண்டும்.'

இப்படி மகேஸ்வரன் 'சுடர் ஒளி' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளார். அதனை இந்த அரசு ஊர்ஜிப்படுத்திக் காட்டிவிட்து.

யாழில் இருந்து திரும்பிய பின் 'சக்தி' தொலைக்காட்சியில் 'மின்னல்' நிகழ்சியில் கலந்து கொண்ட போதும் மகேஸ்வரன் இதனைப் பகிரங்கமாக் கூறினார்.

'யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. இராணுவம் சுற்றிவளைப்பு என்ற பெயரில் துணைப்படைகளின் சட்ட விரோத செயல்களுக்குப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். வியாபாரிகள் கடத்தப்படுகின்றனர். அவர்களிடம் கப்பம் அறவிடுகின்றன. பொதுமக்களின் வீடுகளுக்குள் பலவந்தமாகப் புகுந்து பெண்கள் மீது பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

'இவ்வாறான சட்ட விரோத செயல்களுக்கு கொழும்பில் இருந்து ஆட்களைக் கொண்டு போய் பயன்படுத்துகின்றனர். நான் யாழ்ப்பாணத்தில் புதுமுகங்கள் பலரை நேரில் கண்டேன். பலர் குறிப்பிட்ட அமைச்சர்களுடன் தொர்புடையவர்கள்.

'இவர்களின் பெயர்ப்பட்டியலை எதிர்வரும் எட்டாம் திகதி நாடாளுமன்றில் வெளியிடவுள்ளேன். யாழ். நிலவரம் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றேன். அதே தினத்தில் இந்த அறிக்கையையும் சபையில் சமர்ப்பிக்கவுள்ளேன்."

என்று மகேஸ்வரன் கூறியிருந்தார்.

மகேஸ்வரனின் அறிக்கை வெளியானால் பல உண்மைகள் அம்பலாகும் . பலருடைய முகமூடிகள் கிழிக்கப்படும் என்று பீதியடைந்தவர்களே மகேஸ்வரன் எம்.பி. யைக் கொலை செய்ததின் பின்னணியில் இருந்து செயற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றோம்.

ஆனால் தலைநகரில் ஆலயங்களுக்குப் போய் சுதந்திரமாக தெய்வவழிபாடு செய்யக்கூட இந்த அரசால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை. அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கேலிக்குரியாதாகிவிட்டன. என்றும்; கயந்த கூறினார்.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.